Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையார் தலைமையில் யாழ்.செயலகத்தில் விசாரணை

Featured Replies

பிள்ளையார் தலைமையில் யாழ்.செயலகத்தில் விசாரணை

வன்னியில் உயிரிழந்தவர்களின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விநாயகர் தலைமையிலான குழுவினர், ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக யாழ்ப்பாண செயலகத்தில் பேரணி நடத்திய அரச பணியாளர்களை இரகசியமான முறையில் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர். ஜெனிவாத்தீர்மானத்திற்கு எதிராக யாழ்.செயலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் பயத்தின் நிமிர்த்தமே நாங்கள் அவ்வாறு கலந்து கொண்டோம். உண்மையில் எங்களுக்கு அதில் விருப்பமே இல்லை. எங்கள் கைகளில் பதாகைகளைத் தந்து தூக்கிப்பிடியுங்கள் என்றார்கள்.

பதாகைகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் தந்த பதாகைகள் மூலம் எங்கள் முகத்தை மறைத்துக் கொண்டோம். அரச பணியைத் துறந்தால் எங்கள் குடும்பத்தின் நிலை பரிதாபமாகிவிடும் என்பதால் அந்த இறைவனுக்கு உண்மை தெரியும் என்ற நம்பிக்கையில் பேரணியில் கலந்து கொண்டோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. விநாயகர் தலைமையிலான குழு யாழ்ப்பா ணத்திற்கு வந்து விசாரணை நடத்துவதன் மூலம் நாங்கள் ஆறுதல் அடைகின்றோம். .

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசபணியாளர்கள் தெரிவித்தனர்.அரச பணியாளர்களிடம் அறியப்பட்ட விடயங்களோடு, குழுவினர் யாழ்.செயலகத்துக்குச் சென்றனர். விநாயகர், வீரபத்திரர், வைரவர், யமன், சித்திரகுப்தன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்க யாழ். செயலகத்தில் நிறைந்த கூட்டம். சிலர் மாலை மரியாதை செய்ய முற்பட்டனர். இன்னும் சிலர் மோதகம் கொடுத்து வரவேற்கக் காத்திருந்தனர்..

ஆனால் எதுவும் வேண்டாம். நாங்கள் சிவனின் கட்டளைப்படி விசாரிக்க வந்துள்ளோம். விசாரிக்க வந்தவர்கள் மாலை மரியாதையை ஏற்கக் கூடாது. மோதக பூசைக்கு ஆசைப்படக் கூடாது. இவற்றுக்கு ஆசைப்பட்டால் விசாரணைகளை எப்படி ஒழுங்காக நடத்த முடியும்? இவ்வாறு கேட்டபடி குழுவினர் யாழ்.செயலக சபா மண்ட பத்தில் அமர்ந்தனர். விசாரணை உடனடியாக ஆரம்பமாகியது. சித்திரகுப்தன் : யாழ்.அரச அதிபர்... அரச அதிபர்... அரச அதிபர். யாழ்.அரச அதிபர் : வணக்கம் சுவாமி. வீரபத்திரர் : ஆர்ப்பாட்டம் நடைபெற்றதா? அரச அதிபர் : ஆம் சுவாமி. யமன் : எதற்காக ஆர்ப்பாட்டம்? அரச அதிபர் : ஜெனிவாவில் அரசுக்கு எதிராகக்கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து. வைரவர் : ஆர்ப்பாட்டம் நீதியானது என்று நீங்கள் கருதுகிறீர்களா? அரச அதிபர் : (மெளனம்) யமன் : ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்ததுயார்? அரச அதிபர் : (மெளனம்) வீரபத்திரர் : (சற்றுக் கோபத்துடன் தன் கழுத் தில் கிடக்கும் மண்டையோடுகளை அசைத்தபடி) மெளனமாக இருப்பதை இந்த மன்று விரும்பாது. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது யார்? அரச அதிபர் : தொலைபேசி அழைப்பில்... சொல்ல... பட்டது... (விசாரணை நாளை தொடரும்)

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27404

  • தொடங்கியவர்

விநாயகர் தலைமையிலான குழு முல்லைத்தீவில் விசாரணை

கிளிநொச்சியில் தரையிறங்கிய விநாயகர் தலைமையிலான குழுவினர், அங்கிருந்து முல்லைத்தீவுக்குச் சென்றனர். ஜெனிவா வில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்து அங்கு நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அரச பணியாளர்களை சந்தித்தபோது, பொது நிர்வாக அமைச்சு அனுப்பிய சுற்று நிருபத்தின்படி, 29ஆம் திகதி அரச பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என பிரதேச செயலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயம் காரணமாக அரச பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று. முள்ளிவாய்க்காலில் தம் கணவன்மாரைப் பறிகொடுத்த பெண் அரச ஊழியர்கள், போர்க் கொடுமைக்கு தம் காலைத் தானமாக்கிய அரச பணியாளர்கள், பிள்ளைகளைத் தொலைத்து விட்டு வெதும்பும் பெற்றோர் ஆகியோரையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைத்த மிகப்பெரும் கொடுமை நடந்துள்ளதை விசாரணைக் குழு அறிந்து கொண்டது. பொதுமக்களுடனான தனது சந்திப்பை முடித்துக் கொண்டு விநாயகர் தலைமையில் வீரபத்திரர், வைரவர், யமன், சித்திரகுப்தன் உள்ளிட்ட குழு முல்லைத்தீவு செயலகத்தை அடைந்தபோது, அங்கு கூடி நின்றவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

விநாயகா! போர் நடந்தபோது நீயுமா எங்களைக் கைவிட்டாய் என்று கதறிக் கேட்டனர். போர்ப் பாதிப்புக்குள்ளான ஓர் அன்பர், விநாயகர் தலைமையிலான குழுவை இடைமறித்தார். நாங்கள் நம்பியவர்கள் எல்லோரும் எங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டனர். தமிழீழத் தாயகம் என்றவர் இப்போது பிரதி அமைச்சராக இருக்கிறார். முன்பு ஆயுதம் அனுப்பியவர் இப்போது அரசின் செல்லப்பிள்ளை. நாங்கள் புள்ளடி போட்டு அனுப்பியவர்கள் ஜெனிவாவுக்கு செல்ல மாட்டோம் என்கின்றனர். எங்களைக் காப்பாற்றும் என்று நம்பிய இந்தியா, எங்கள் கழுத்தறுக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டி நிற்கின்றது.

பரம வைரிகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எங்கள் பிரச்சினையில் மட்டும் ஒற்றுமையாக நின்று இலங்கை அரசுக்கு உதவுகின்றன. இப்படியயாரு கொடுமை எங்கும் நடந்ததுண்டா? நீங்களும் இலங்கை அரசுக்குத் தகவல் கொடுக்கத்தான் விசாரணைக்குழு என வந்தீர்களா? உங்களையும் எப்படி நம்புவது? இப்படி அந்த அன்பர் உணர்ச்சி வசப்பட்டு கதைத்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட குழு, அவரைச் சமாதானப்படுத்தியது. நீங்கள் பட்ட துன்பம், உங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் என்பவற்றால் எங்களையும் நீங்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறீர்கள்.

நம்பிக்கையை தளரவிடாதீர்கள் என வைரவர் ஆறுதல் கூற, முல்லைத்தீவு செயலக மண்டபத்தில் குழுவினர் அமர்ந்தனர். சித்திரகுப்தன்: முல்லைத்தீவு அரச அதிபர்... அரசஅதிபர்...(விசாரணை நாளை)

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27449

யாமாச்சுட்டார் வலம்புரி!

ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள் நின்ற இடம் பிழை.(அதாவது அரச உத்தியோகத்தில் மாட்டிவிட்டாரகள்).

இனி அவர்கள் ஆர்பாட்டத்திற்கு போனாலும் அரசு சந்தேகப்படும். போகாவிட்டாலும் சந்தேகப்படும்.

"கோழி மேச்சாலும் கோறணமேந்திலை மேய்க்க வேணும்" என்பது யாழ்ப்பாணப் பழ மொழி.

ஆனால் "இப்போ கோழி மேச்சாலும் கோறணமேந்து உத்தியோகத்திற்கு போகாதே" என்பதாகி விட்டது.

  • தொடங்கியவர்

வடமாகண அரசஅதிபர்கள் ஒற்றுமைப் பட வேண்டும்

விநாயகர் தலைமையிலான குழு, முல்லைத் தீவு அரச அதிபரிடம் விசாரணை நடத்திய அதே நேரம், கிளிநொச்சி அரச அதிபரையும் இணையத்தள வழியாக விசாரணை நடத்தியது.

வைரவர்: ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக அரச பணியாளர்களின் சம்மதம் பெறப்பட்டதா?

அரச அதிபர்கள்:இல்லை.

வைரவர்: அரச பணியாளர்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபடுத்துவது மனிதவுரிமை மீறல் அல்லவா?

அரச அதிபர்கள்: (மெளனம்)

வீரபத்திரர்: அரச அதிபர்களே மனிதவுரிமைகளை, சட்டத்தை மீறி நடந்து கொண்டால், நாட்டில் நீதி நிலவுமா?நிர்வாகம் ஒழுங்காக நடைபெறுமா?

அரச அதிபர்கள்: (மெளனம்)

யமன்: எல்லாவற்றுக்கும் மெளனமாக இருந்தால்..

அரச அதிபர்கள்: அரசாங்கத்தை எதிர்க்கும் வல்லமை எங்களிடம் இல்லை.பயத்தின் நிமிர்த்தம் அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றினோம்.

வீரபத்திரர்: பயம் என்று கூறிக் கொண்டு நிர்வாக விதிமுறைகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்றீர்களா?

அரச அதிபர்கள்: (மெளனம்)

விசாரணையைத் தொடர்ந்து வீரபத்திரர் தொகுப்புரை ஆற்றினார். போரில் பாதிக்கப்பட்ட அரச பணியாளர்களையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைத்தமை மகா தவறு. இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்களை அரச அதிபர்கள் மட்டுமல்ல, எந்த அரச நிர்வாகியும் செய்யக்கூடாது. தமிழ் மக்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் நடந்த இறுதிப் போரின் கொடூரம் ஜெனிவா வரை நிலைமையைக் கொண்டு சென்றுள்ளது. இலங்கை அரசிற்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவருவதாக இருந்தால் அதற்குப் பரிகாரம் காண வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்தினுடையதே அன்றி,அரச அதிபர்களினதோ அல் லது அரச பணியாளர்களினதோ அல்ல. எனவே வட பகுதியில் கடமையாற்றும் அரச அதிபர்கள், பிரதேச செயலர்கள், அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தமிழ் இனத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஒருபோதும் பாதகம் செய்யலாகாது.

அரச பயம் உங்களிடம் இருக்குமாக இருந் தால், வட பகுதியில் கடமையாற்றும் அரச அதிபர்கள், பிரதேச செயலர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் கூட்டாகச் சேர்ந்து அமைப்பொன்றை உருவாக் குங்கள். சட்டத்திற்கு முரணாக உங்களை வழிநடத்த யார் முற்பட்டாலும் நீங்கள் கூட்டாக நின்று எதிர்ப்புத் தெரிவியுங்கள்.எல்லாம் சரியாக வரும்.உங்களுக்குள் ஒற்றுமையில்லை.

நீங்களே! ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் நிலையில் இருக்கிறீர்கள். வடக்கு மாகாண சபையில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையிலுள்ள தமிழ் நிர் வாகிகள் ஒருவரை ஒருவர் அறுப்பதாகத் தகவல். அதுபோல நீங்களும் இருக்காதீர்கள்.

இவ்வாறு குழுவின் சார்பில் வீரபத்திரர் தொகுப்புரை வழங்கி முடிக்க, விசாரணைக் குழுவின் மிக நீண்ட அறிக்கை, பிரம்மசூடிப் புத்தகத்தில் பதியப்படுகிறது எனவும் அதனை வலம்புரி நாளிதழ் ‘கருத்துக்களம்’ என்ற தலைப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் விசாரணைக் குழுவின் தலைவர் விநாயகர் கட்டளையிட, குழுவினர் தேவலோகம் செல்ல நாம் கண்ட கனவும் கலைந்தது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27463

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.