Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் எந்த அளவுக்கு மடையர்களாக ஆக்கபடுகிறோம் தெரியுமா

Featured Replies

உலெகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே,

நாம் எந்த அளவுக்கு மடையர்களாக ஆக்கபடுகிறோம் தெரியுமா :( :( :(

ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்ததை அனவரும் பாராட்டி மகிழ்ந்து நாளையே நமக்கு நீதி கொடுக்கப்பட உள்ளது போல் அனைவரும் எழுதுகின்றனர்.

ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை. பிரேரணை தெளிவாக படித்தோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு தம்மை தாமே விசாரணை செய்வதாக உருவாக்கிய ராஜதந்திர முறையில் கூறப்படும் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ” அதாவது கொலைகாரன் தன்னையும் தனக்கு உதவியாக இருந்த சகாக்களையும் காப்பாற்ற தானே எழுதிய தீர்ப்பே / பரிந்துரைகளே அங்கெ காணப்படுகின்றது . நம்மை அழித்தவனை கொண்டே அவனை விசாரித்து தீர்ப்பு எழுதி அதை செயல் படுத்த பிரேரணை கொண்டு வருகிறார்கள்.

இதை வரவேற்று தமிழக முதலமைச்சர், பல கட்சிகள், பத்திரிக்கைகள், அறிக்கை, அதற்கு ஆதரவு அளிக்க சொல்லி இந்திய அரசுக்கு மன்றாடல் வேறு. நம்முடைய நோக்கமான சுயாதீன விசாரணை, சுதந்திர தாயகம். போன்றவற்றை சுத்தமாக அழித்தொழிக்கும் ஆபரேஷன் பீகான்னின் தொடர்ச்சியாக தான் நான் இதை பார்க்கிறேன்.

தாயகத்தில் இருந்து ஊடகங்களில் இருந்து வரும் செய்திகள் கூட இதில் தெளிவாக இல்லை பின் எவ்வாறு தமிழக மக்களுக்கும் இது போய் சேரும். பின் எவ்வாறு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழர் தாயகம் நோக்கி நடப்பது.

கவலையான உண்மைதான் இன்று தழிழர்கள் இருக்கும் நிலையில் இதுவும் இல்லையென்றால் கவலைக்கிடந்தான். கிடைப்பதை பெற்றுக்கொண்டு எம்மை பலப்படுத்தி எமது பாதையில் முன்னோக்கி நகரவேண்டும்.

இந்தக்குற்றச்சாட்டு இந்த களத்திலேயே பலரால் பல இடங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் என்பது இந்த பூவுலகில் எல்லோருக்கும் சமமானது என ஐ.நா. வால் எழுதப்பட்டாலும் சர்வதேச அரசியலில் ஒவ்வொரு பிரச்சனையும் ஒவ்வொருமாதிரி அணுகப்படுகின்றது. இதை நாம் முள்ளிவாய்க்காலில் மூன்று வருடத்திற்கு முன்னர் கண்டவர்கள்.

உலெகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே,

நாம் எந்த அளவுக்கு மடையர்களாக ஆக்கபடுகிறோம் தெரியுமா :( :( :(

ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை.

- 2009 ஆம் ஆண்டு இதே ஐ.நா. மனித உரிமைத்தொடரில் சிங்களம் வாழ்த்தப்பட்டது

- பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டது

- பின்னர் அந்த மூவர் கொண்ட அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது

- அடுத்து சர்வதேசத்தால் போர்குற்றங்கள் விசரிக்கப்பாடல் வேண்டும் என கேட்கப்பட்டது, அதற்கு சிங்களம் தானே விசாரிக்கின்றேன் என்றது

- நல்லிணக்க ஆணைக்குழு என்பதை சிங்களம் அமைத்தது. அறிக்கை வெளிவந்தது

- பலரும் அறிக்கை முழுமையானது இல்லை என்றாலும் பாராட்டி அதில் உள்ளதை அமுல்படுத்த கேட்டார்கள். சிங்களம் ஆறு மாதகலத்திற்கும் மேலாக கிடப்பில் போட்டது

இறுதியாக இந்த ஐ,நா. தொடரில் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல்படுத்த ஒருவருடம் கால அவகாசமும் அதன் இறுதியில் ஐ.நா. அறிக்கையும் சமர்பிக்கப்படல் வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

இது தான் இதுவரை நடந்துள்ளது. இது எமக்கு ஒரு வகையில் ஏமாற்றத்தை தருவதாய் உள்ளது. ஏன் எமது இனவழிப்பில் சர்வதேசம் அதிக அக்கறை காட்டவில்லை என்பதே அது. மறுபக்கத்தில் நாம் எமது உயிர்களுக்கு இந்த உலகம் தந்துள்ள மரியாதையை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப எமது இலக்கு நோக்கி நகரல்.

இந்தியாவால் தமிழர்கள் மடையர்கள் ஆக்கப்பட்டுகின்றார்களா?

சர்வதேச அரசியலில் ஒரு நாதியற்ற ஆதரவு அற்ற நிலையில் உள்ளோம். உலகில் அதி கூடிய தமிழர்கள் நாழும் நாடான இந்தியாவே எமக்கு எதிரான செயற்பாடுகளை மும்மரமாக எடுத்துவருகின்றது. எம்மால் ஒரு சிறு ஆதரவு தன்னையும் பெற முடியாமல் உள்ளது.

இஸ்லாமிய சகோதரர்களால் தமிழர்கள் மடையர்கள் ஆக்கப்பட்டுகின்றார்களா?

யாழில் இருந்து முஸ்லீம் சகோதரர்களை வெளியேற்றியது பிழை. காத்தான்குடியில் சகோதரர்கள் கொல்லப்பட்டது பிழை. ஆனால், எமது மக்கள் ஆயிரமாக கொல்லப்படும் பொழுதும் பேசாமல் இருந்தார்கள். இன்று அதற்கு அநீதி கேட்டு எல்லா இஸ்லாமிய நாடுகளையும் சிங்களத்திற்கு ஆதரவாக திருப்பியிள்ளனர்.

மேற்குலகம் தமிழர்களை மடையர்கள் ஆக்கியுள்ளனரா?

எமது ஆயுதப்போரட்டத்தை பயங்கரவாதம் என முத்திரையிட்டு அதை அழித்ததில் மேற்குலகத்திற்கு கணிசமான பங்குண்டு. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் புலம்பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவால் இங்கே இருந்துதான் ஒரு மாற்றத்தை கொண்டுவரக்கூடியதாக உள்ளது. பத்து தடவைக்கு மேலாகா பேசிய கூட்டமைப்பாலோ இல்லை ஆறு கோடிக்கு மேலாக வாழும் இந்தியாவாலோ இல்லை.

அமெரிக்கா தலைமயிலான மேற்குலகம், இன்றும் உலகில் முதலிடத்தில் உள்ள பலமான சக்தி. அவர்கள் நேர்மையானவர்கள் எமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே இதில் மூக்கை நுழைக்கின்றனர் என்றில்லை. அவர்கள் எதற்காக இதற்குள் வருகின்றனர் என்பதை நாடிபிடித்து துல்லியமாக கணித்து அதை பாவித்து எமது மக்களின் உரிமைகளை அதனூடாக பெறுவதே வரலாற்று தேவை, கடமை.

எம்மைப்பொறுத்தவரையில் சர்வதேச அரசியலில் இராஜதந்திரம் அதை வெல்வது என்பது கடினமானது. ஒரு பலமான சிங்கள அரசுக்கு எதிராக மாற்றங்களை கொண்டுவருவது இலகுவானது அல்ல, ஆனால் சாத்தியமானது.

முள்ளிவாய்க்காலின் பின்னர் எமக்கு ஆதரவாக நாடுகளை மற்றும் ஆர்வலர்களை திரட்டுவதில் சிறு சிறு வெற்றிகளை காணக்கூடியதாக உள்ளது.

418220_10151385750910008_856330007_23213321_600892562_n.jpg

1. @Anu Varathan

நாம் எதிபார்த்த வகையில் இல்லை தான்..... ஆனால் இதை ஐக்கியநாடுகள் சபையில் எமது விவகாரத்தை உள்வாங்கும் ஒரு முதல் படியாகவே பார்க்க வேண்டும். இத்தீர்மானம் நிறைவேற்று படுவதற்கு சகல நாடுகளாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய பிரேரணையாக ஒரு மென்போக்கை கையாளவேண்டிய நிலை அமெரிக்காவிற்கு உண்டு. இதை கூட நடைமுறைபடுத்த இலங்கையால் முடியாது என்பதும் அமெரிக்காவிற்கு தெரியும்.

இலங்கையை தானாகவே சர்வதேச போர்குற்ற விசாரணைக்குள் விழ வைக்க வேண்டும் என்றே அமெரிக்காவின் வியூகம் வகுக்க பட்டுள்ளது. எமது தொடர்ச்சியான போராட்டங்கள் , மற்றைய நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தங்கள் தான் எமது இலக்கையும், அமெரிக்காவின் அடுத்தடுத்த முன்னெடுப்புகளையும் விரைவுபடுத்த முடியும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

அத்தோடு இப் பிரேரணையின் படி ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைகளை ஏற்கவும் வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளது. அங்குதான் சர்வதேச தலையீடு உள்வாங்க படுகிறது. இதை ஒருபோதும் இலங்கையோ இந்தியாவோ ஏற்று கொள்ள போவதில்லை. நிச்சயம் சர்வதேசத்துடன் முரண்பட போகின்றன. அப்போதுதான் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கான பாதை திறக்க படும்.

http://www.yarl.com/...showtopic=99133

2. @ kamban tamil

ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சர்வதேச தலையீடு எப்படியாவது இலங்கைக்குள் கொண்டு செல்வதற்கு ஒரு திறவுகோலாக இப்போது அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் தீர்மானம் இலங்கைக்கு சாதகமானதாக இருக்கலாம்....உலகநாடுகள் எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி முதலில் இலங்கைக்கு சாதகமாக இலங்கையே ஏற்றுகொள்ளும்படியாக செயல்படலாம்.....ஆக அமெரிக்கா இப்படி சரியான பாதையில் இலங்கையை போற்குற்றதில் சிக்கவைக்க திட்டமிட்டு பயணிக்க செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது......

ஆனால் இந்த அமெரிக்காவின் தீர்மானத்தை ஹிந்திய-இலங்கை அரசுகள் உளவுத்துறை மூலம் தமிழர்களிடத்தில், வேறுமாதிரியாக இதை பயன்படுத்துகிறது அதாவது இந்த தீர்மானத்தில் ஒன்றுமில்லை இலங்கைக்கு சாதகமாக உள்ளது என்று சொல்லி தமிழரின் போராட்டத்தில் தொய்வை ஏற்படுத்துவதற்கும், நமக்காக முன்னெடுத்துசெல்லும் அமெரிக்காவை தமிழர்கள் வெறுத்து அமெரிக்காவை நம் பிரச்சனைக்கு ஆதரவாக இழுக்காமல் ஒதுக்குவதற்கும் திட்டமிட்டு செயல்படுவதாகவும் தோன்றுகிறது....

அத்தோடு இந்தியாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் நாம் இந்தியாவின் மீது அதிகம் வெறுப்பு கொள்ளமாட்டோம் ஏனெனில் இந்த தீர்மானத்தில்தான் ஒன்றுமில்லையே இலங்கைக்கு சாதகமாக உள்ளதே என்று நாம் நம்பு ஒதுங்கி விடுவோம் என்ற எண்ணத்திலும் ஹிந்திய உளவுத்துறை இந்த தீர்மானத்தை வேறுவிதமாக பயன்படுத்திகொள்ளலாம்....

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலெகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே,

நாம் எந்த அளவுக்கு மடையர்களாக ஆக்கபடுகிறோம் தெரியுமா :( :( :(

உங்கள் வரிகள் சொல்லவரும் அதே சங்கதிதான் உங்கள் உள்நோக்கத்தினதும் தானா? என்று வேறுபடுத்த புதிய பதிவர் என்ற உங்களது நிலை எனக்கு வசதியாய் இல்லை. ஒரு வேளை அதுவே உங்கள் நிலமைக்கு வசதியாக இருக்கலாம்! இருந்விட்டுப் போகட்டும்.

சரி விடயத்திற்கு வருவோம்.

முதலைப் போட்டால்தானே நட்டம் என்ற வார்த்தைக்கே பிறப்பு உண்டும்!

முதலே போடாமல் நான் நட்டப்பட்டு விட்டேன் என்று எவரும் சொல்லுவதுண்டா?

பாவத்திற்கு உதவி ஆனவனை மடயனாக்கிவிட்டான் என்று பழிசொல்ல முடியுமா அவனை.

சிங்களத்திற்கு ஒன்றுமே பலிக்க வைக்காத ஒன்றைக் கொண்டு புதுப்பகையை தான் வாங்கியது மட்டும் அல்லாமல் சிங்களத்திற்கு அதன் நண்பர்களின் உறவை பூசிக்கின்ற நிலமையையும் கொடுத்த இந்த நிலமை ஒன்றுக்காக உங்கள் வாதப்படி அமெரிக்காதான் தன்னைத்தானே மடயனாக்கிக் கொண்டது என்று சொல்ல வேண்டும்!

தமிழனுக்கு உலகப்பரப்பில் உறவு என்று சொல்லிக் கொள்ள ஒரு அரசு அது அநுதாபம் என்ற ஒன்றுதான். ஆனால் எதிரி என்று சொல்லிக் கொள்ள உலகம் எவரை தமிழனின் தந்தை, தாய் என்று எண்ணிக் கொள்கின்றதோ அந்த இரண்டுமேஆன நாடுகளே. அந்த வகையில் இந்தியா, இலங்கை இவ்விரண்டையும் எமது எதிரி என்று உலகம் அறியும் நிலைக்கு எமது சாதனை வளர்வது அதுவும் எமது வெற்றியேதான்.

மேனியின் காயத்தை தடவுதலில் இரண்டு வகையான நோக்கங்கள் உண்டு.

1. அந்த இடத்தின் வலியை ஆற்றுதல்.

2. அந்த வலியை ஞாபகப்படுத்துதல்.

எனவே தடவும் சக்தி நட்பானதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.