Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவையே ஆதரிப்போம்- ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இந்தியாவின் பிரகடனம்!

Featured Replies

சிறிலங்காவையே ஆதரிப்போம்- ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இந்தியாவின் பிரகடனம்!

Published on March 13, 2012-9:36 am ·

India-1.jpgஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசை இந்தியா முழுமையாக ஆதரிக்கும் என்றும், அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை இந்தியா ஒருபொதும் ஆதரிக்காது என்பது உறுதியாகி விட்டது. இதை இன்று இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் உறுதிபடத் தெரிவித்து விட்டார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.

சிறிலங்கா சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருந்த போது போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என கூறிய ஜெயலலிதாவும், சென்னை மெரினா கடற்கரையில் 3மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்திய கருணாநிதியும், ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு குரல் கொடுப்பதாக நாடகம் ஆடிய போதிலும் பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பார் மகிழ்ச்சியில் கொண்டாடி இருப்பார்கள். பணத்திற்காக மார்அடிக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டமும் வெறும் கண்டன அறிக்கைகளுடன் ஓய்ந்து விடுவார்கள்.

இன்று மக்களவை கூடியதும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஒப்பாரி வைத்தனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து, ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த ஒருநாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இதற்கு மேலும் வலியுறுத்தினால் இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரும் விளக்கம் அளிப்பார் என்றார்.

பிரணாபின் இந்த விளக்கம், இந்தியாவின் நிலை என்ன, மன்மோகன் சிங் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. நிச்சயமாக இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்காது என்பது அம்பலமாகி விட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்? தமிழகமோ, இந்தியாவோ ஈழத்தமிழர்களுக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதரிப்போம்- ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இந்தியாவின் பிரகடனம்!

http://www.thinakkathir.com/?p=32301

Edited by BLUE BIRD

தமிழினப் படுகொலைகளை கூடவிருந்து செய்த காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகள் சிதறி, அழிந்து, நாசமாகப் போகவேண்டும் என்பது தான் சூடு, சொரணை, மானம், ரோஷம், மனச்சாட்சி கொண்ட ஒவ்வொரு தமிழனதும், நீதி, நியாயங்களில் நம்பிக்கையுள்ள மனிதாபிமானம் உடைய ஒவ்வொரு மனிதனதும் விருப்பம், தினசரிப் பிரார்த்தனை.

தமிழக மக்கள் தங்களை இந்தியர் என்று அழைப்பதே வெட்ககேடு. எட்டு கோடி தமிழர் வாழ்வதே தேவையற்றது.

இதுதான் கூட்டாட்சி, உடையும் வெகுவிரைவில், உடையும், வட இந்தியனின் ஆதிக்கம் இல்லாமல் போகும்,

சோழமன்னன் வராமலா போக போகிறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.