Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலத்துவரும் கொத்துபாயா குழுவின் செயற்பாடுகள்.

Featured Replies

சனல் 4 தொலைக்காட்சியின் இரண்டாவது ஆவணப்படம் இன்று இரவு வெளிவரவுள்ள நிலையில் அது சிறீலங்கா அரசுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் தேசியத்தலைவர் சம்பந்தமாக ஏதோ வரப்போகிறது என்ற செய்தி கசிந்தவுடனேயே இவர்கள் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்திருப்பதுடன் சனல் 4 க்கு துரோகி பட்டம் கொடுக்கவும் தயாராகிவருகிறார்கள்.

தமிழ் சமூகத்ததை பிளவு படுத்தி போராட்டத்துக்கான வளங்களை அழித்து தேசியத்துக்காக உழைப்பவர் எல்லோருக்கும் துரோகி பட்டங்கொடுத்து விடுதலைப்புலிகளை தொடர்ந்து சர்வதேச சமூகம் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க செய்வதற்காக கொத்துபாயா ஒரு குழுவை களமிறக்கிறான் என்றும் இந்தக்குழுவினர் தாங்கள் தான் உண்மையான தேச பக்கதர்கள் என்றும் மற்வர்களை கேபி குழு துரோகிகள் என்றும் கூறியும் எழுதியும் வந்ததை நாங்கள் நீண்டகாலமாகவே சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம்.இந்தக் குழுவை திரைமறைவில் இருந்து இயக்கும் நண்டும்,சாம்ராட்சிய மன்னனும் கோத்தபாயவுக்கு விலைபோன கைக்கூலிகள் என்றும் நாங்கள் திரும்பத் திரும்ப செல்லி வந்திருக்கிறோம்

சனல் 4 இன்று வெளியிடவிருக்கும் இரண்டாவது ஆவணப்படம் சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியை கொடுக்க இருப்பதாகவும் சிறீலங்கா ஆட்சியாளர்கள் கொடுரமான போர் குற்றங்களுக்கு தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை இந்த அவணப்படம் கொடுக்கப் போவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பிரித்தானிய ஊடகங்களும் கூறிவரும் நிலையில் இதிலிருந்து தப்பவதற்காக அல்லது இந்த அழுத்தத்தை திசை திருப்புவதற்காக சனல் 4 தொலைக்காட்சின் ஆவணப்படத்தின் காட்சிகள் பொய் என்று தமிழர்களைக் கொண்டே சொல்ல வைக்கும் முயற்சியில் கொத்துபாயா இறங்கியிருக்கிறான்.சனல் 4 தொலைக்காட்சிக்கு துரோகி பட்டம் கொடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுதற்கும் காரணம் இதுவெயாகும்.

ஏமது இனத்துக்கு இழைக்பட்ட அநீதிகளையும் கொடூரங்கங்களையும் வெளிக் கொண்டு வந்து எமக்கான சர்வதேச ஆதரவை திரட்டியதில் சனல் 4 தொலைக்காட்சியின் பங்கு முக்கியமானது.

இந்தக் கும்பல் இன்று சனல் 4 தொலைக்காட்சி மீது சேறடிக்க முயல்வதன் மூலம் சிறீலங்கா அரசின் அதாவது கொத்துபாயாவின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே செயற்படுகிறது என்பதை இனங்காட்டியிருப்பதை கீழ்வரும் செய்தியை படிப்பதன் மூலம் இனங்கண்டுகொள்ளலாம்....

சனல் 4 தொலைக்காட்சி வெளியிடும் 'மிகக் கொடிய யுத்தக் குற்றங்களை' தாம் அடியோடு நிராகரிப்பதாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா உயர்ஆணையகம் தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்தும் சிறிலங்கா விவகாரம் தொடர்பில் போலியான, விரோதமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சி பீடத்திலுள்ள உள்ளவர்களையும் இராணுவத் தளபதிகளையும் குற்றம்சாட்டும் பாணியில் தொடர்ந்தும் பொய்யான, ஏற்றுக் கொள்ள முடியாத சாட்சியங்களை முன்வைப்பதாகவும், சிறிலங்கா உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சனல் 4 தொலைக்காட்சி 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள்' தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்து வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கை 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பயனுள்ள, உறுதிப்பாடான மீளிணக்கப்பாட்டு முயற்சிக்கு' பங்கம் விளைவிப்பதாக அமையும் எனவும் உயர் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்கா ஜெனோசைட் கூட்டம் பொய் சொல்கிறது என்று தெரிந்தும் ஏன் பேட்டி காண்கிறோம்? 

மாறி மாறி சனியடியுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.