Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம்

Featured Replies

நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம்

இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இத்தகைய சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெடுந்தீவில் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இத்தகைய எதிர்ப்பு காட்டப்பட்டது.

120316170647_women_protest_304x171_bbc_nocredit.jpg

'வடக்கில் அண்மைக்காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன, வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து இலகுவாக தப்பிச் செல்வதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்தினோம்' என்று போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜனி சந்திரசேகரம் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உரிய நீதியை வழங்கவும் தொடர்ந்தும் போராட்டம் நடத்தவேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயப் பொருட்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான உத்தரவை வழங்கிய நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றது.

கடந்த 3 ஆம் திகதி, நெடுந்தீவில் பருவமடையாத சிறுமி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் பிரதேசத்தில் மக்கள்

மத்தியில் பெரும் ஆத்திரத்தை உண்டு பண்ணியமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk...elfmurder.shtml

  • தொடங்கியவர்

நெடுந்தீவு மாணவி கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

யாழ். நெடுந்தீவில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபரை இம்மாதம் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வல்லுறவுக்குப் பின் கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் தமது தமது வாய்மூல வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். இதேவேளை நீதிபதியின் வேண்டு கோளுக்கு இணங்க ஊர்காவற்றுரை பொலிஸ் தடவையியல் நிபுணர்கள் தங்கள் வாக்குமூலத்தை நீதிமன்றில் சமர்பித்தனர்.

பாலியல் மற்றும் கொலைச் சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகாத காரணத்தால் சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆர்.வி.மகேந்திரராஜா உத்தரவிட்டார்.

இதேவேளை ஊர்காவற்துறை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் சுற்றி பெண்கள் அமைப்புக்கள் அமைதியான முறையில் இக்கொலைக்கு எதிர்வை வெளிப்படுத்தியுள்ளதாக ஊர்காவற்துறை நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/37740-2012-03-16-11-53-03.html

தமிழர் பிரதேசத்தில் தமிழர்களால் நடத்தப்படும் உரிமை மீறல்கள். தமிழரை அழிப்பதிலும் தாழ்த்துவதிலும் சிங்களவருக்கு தமிழன் குறைந்தவனில்லை என்று எடுத்துக் காட்டும் நிகழ்வுகள்.

120316170647_women_protest_304x171_bbc_nocredit.jpg

... இதில் நிற்கும் பெண்களின் நிலை எதிர்காலத்தில் என்ன ஆகுமோ???????? .... குத்தியின் காமுக கும்பல்கள் விட்டோ வைக்கப்போகிறார்கள்????????

  • தொடங்கியவர்

சிறுமியை கொன்ற நபருக்கு அதிஉயர் தண்டனை தாருங்கள் நீதிமன்றில் பெற்றோர் உருக்கம்

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு அதி உயர் தண்டனை வழங்கும்படி நேற்று நீதிமன்றில் வலியுறுத்தினர் சிறுமியின் பெற்றோர். நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சடலத்தை முதற்கண்ட சாட்சி ஆகிய மூன்று பேரினதும் சாட்சியங்கள் நேற்றுப் பதிவு செய்யப்பட்டன.

சாட்சியமளித்த பின்னர் மேலதிகமாக என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று மன்றில் பெற்றோரிடம் கேட்டபோது, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று கூறினர்.

நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுடைய ஜேசுதாசன் லக்சினி கடந்த 3ஆம் திகதி கொடூரமான பாலியல் வன்புணர்வின் பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்படும் கந்தசாமி ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் நேற்று மன்றில் முற்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அதன்போதே சந்தேக நபரின் இரத்த மாதிரியைப் பெற்று கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி பணிமனைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. சிறுமியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள் சான்றுப் பொருளாக எடுக்கப்பட்டிருந்தன. சடலம் காணப்பட்ட இடத்தில் நிலத்திலும் சிறுமியின் உடலிலும் இருந்த ஒருவகைத் திரவமும் சான்றுப் பொருளாக எடுக்கப்பட்டிருந்தன. அது சந்தேகநபரின் விந்தாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிறுமியின் மேற்சட்டையின் உள்ளும் புறமுமாக காணப்பட்ட இவ்விரண்டு முடிகள் மீட்கப்பட்டன. சடலத்துக்கு அருகேயிருந்து மீட்கப்பட்ட 250 மில்லிலீற்றர் மதுப்போத்தலில் பதிவாகியிருந்த கைவிரல் அடையாளத்தையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

சடலத்தின் ஒரு கையில் பற்கள் பதிந்த அடையாளம் காணப்பட்டது. அந்தத் தசைப் பகுதி வெட்டியெடுக்கப்பட்டிருந்தன. அது சந்தேக நபருடைய பல் அடையாளமா என்று ஆராய சந்தேக நபரின் பல் அமைப்பைப் பரிசோதனை செய்யவும் மன்று உத்தரவிட்டுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=36060907817438491

  • கருத்துக்கள உறவுகள்

அப்பேக்க அவை இருந்தினம் ஒன்று என்ரா தட்டி கேட்க்க , இப்ப உங்களை நீங்கள் தான் பாது காத்து கொள்ளனும்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.