Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் இருந்து ஜெனீவா நோக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டில் வழிதவறிய நமக்கு தூரத்து வெளிச்சம் ஒன்று தெரிகிறது.இந்தத் தருணத்தில் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பிழைகளைத் திருத்திக்கொண்டு காலத்துக்கும் வல்லமைக்கும் பொருத்தமாக நகர்வது அவசியமாகும்.

சர்வதேச அரசியலுக்கு பொருளாதார/அரசியல் நலன்கள் அடிப்படை. ஆனாலும் நாடுகளின் அரசியல் நலன்களும் அவற்றின் பொது அரசியல் அவிப்பிராயங்களும் சர்வதேச அரசியலில் வலுவாகச் செயல்படுகிறது. இவற்றுக்குள்ளேதான் நம்போன்ற சிறு அமைப்புகள் செயல்படும் வெளியை கண்டடைய வேண்டி உள்ளது. மேலும் நமது அரசியல் அவர்களது நலன்களுக்கு குந்தகமானதல்ல என்பதை நாம்தான் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியும் உள்ளது.

நம் தொடர்பான சந்தேகங்களின் ஆதாயம் எப்பவும் எதிரிக்கே கிட்டுகிறது என்பதை நாம்தான் நினைவில் வைத்துச் செயல்பட வேண்டியுள்ளது..

2005ல் ஐரோப்பிய உதவி வெளிவிவகார அமைச்சர் ஒருவர் தனிப்பட்ட பேச்சில் “புலிகள் பயங்கரவாதிகள், ஆனால் இலங்கை அரசின் records அதைவிட சிறந்ததல்ல என்பது எமக்குத் தெரியும்.” என்று என் நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டார். பெரும்பாலான மேற்க்கு நாடுகளின் இராசதந்திரிகளின் நிலைபாடு அதுவாகத்தான் இருந்தது.

குறிப்பாக மேற்க்கு நாடுகளில் தற்கொலை தாக்குதல் சிறுவர் படையில் சேர்ப்பு போன்றவை அல்கைடா போன்ற அமைப்புகளுக்கு அறிவும் ஊக்கம் அழிக்கிறதுன் என்கிற கருதிருந்தது. இவற்றைக் கைவிடுவதுதவிர வேறு மார்க்கம் இல்லை என நான் வன்னியில் பலதடவை தெரிவிதிருக்கிறேன். புலிகள் மேற்குலகிற்க்குச் செவிகொடுக்காதபோது அதன் ஆதாயம் இலங்கை அரசிக்குக் கிடைத்தது.

ஜெனீவா பேச்சு முறிவடைந்த தருணத்தில் ஐரோப்பிய அமைச்சர் ஒருவர் என்னிடம் ”புலிகளின் முடிவின் தொடக்கம் ஆரம்பித்து விட்டது” என்று கூறினார். “பாலசிங்கத்தைத் தவிர வேறு யாருடனும் பேச முடியவில்லை ஆனால் இப்போ அவர் அரங்கில் இல்லையே.” என்றும் அவர் கூறினார். அப்பவே அவர்கள் புலிகளைச் செயல் இழக்கச் செய்யவேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இலங்கை அரசு எதையும் செய்துவிட்டு எப்போதும் புலிகளின் தவறுகளை முன்னிலைப் படுத்தியும் நாடுகளுக்கிடையில் சதுரங்கம் விழையாடியும் காரியம் ஆற்றலாம் என்று கருதியது.

புலிகள் இலங்கை அரசின் அநீதிகளை முன்னிலைப் படுத்துவதையே தன் அரசியலாக கொண்டிருந்தது. மேலும் சீனா இந்தியா அமரிக்கா நிலைகள் இப்படி இப்படி உள்ளன ஆகவே எப்படியும் எல்லோரும் எங்களிடம் வந்தே ஆகவேண்டும் என்கிற பிழையான ஆய்வுகளின் அடிப்படையில் தாங்கள் யாருக்கும் வளைந்து கொடுக்கத் தேவையில்லை என்றும் கருதியது. சங்க காலத்து பாரி மன்னனின் நாட்க்களில் இருந்தே பொதுவாக விடுதலை இஅயக்கங்கள் விடுகிற தவறுதான் இவை.

போர்க் குற்ற அறிக்கையில் இலங்கை அரசுடன் புலிகளு,ம் ஒரு தரப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். பெருப்பாலும் எல்லா நாடுகளுமே தமிழர் சார்பான தமது செய்ல்பாடுகளால் புலிகள் பலப் பட்டுவிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருந்தார்கள். புலிகளின் அழிவின் ஆதாயத்தை இலங்கைக்கு கொடுக்கவும் அவை விரும்பவில்லை. இந்தியா புறநடையாகச் செயல்பட்டபோதும் அங்கும் இதுபற்றி அழுத்தமான விவாதங்கள் இருந்தன.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது இப்ப ஜெனீவா அரங்கிலும் மேற்க்கு நாடுகளுக்கு தங்கள் செயல்பாடுகளின் ஆதாயம் புலிகளின் செயல்பாட்டாளர்களுக்கு போய்விடக் கூடாது என்கிற எச்சரிக்கை அணுகுமுறை இருக்கும் என ஊகிக்க முடிகிறது. இதனால்தான் அடக்கி வாசிப்பது நல்லது என வலியுறுத்தி வருகிறேன். இதுதொடர்பான அறிதலுடன் செயல்படுவதும் அவசியம்.

மேற்க்கு நாடுகள் தொடர்பாக பெரும்பாலான எங்கள் அரசியல் அறிஞர்களின் ஆய்வுகள் எல்லாம் நலம் சார்ந்த நேர்கோட்டு ஆய்வுகளாகவே உள்ளது.

நாடுகள் தமது நலன்சார்ந்த திசையை நோக்கி நகர்வது ஒரு அடிப்படை உண்மையாகும். ஆனாலும் அரசியல் பெரும்பாலும் நேர்கோட்டில் செயல்படுவது கிடையாது.. பொது அரசியல் அவிப்பிராயமும் விவாதங்களும்கூட சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விடயங்களை நாம் கருத்தில் இருத்துவது மேற்க்கு நாடுகளை புரிந்து கொண்டு செயல்படவும் உகந்த வெற்றிகரமான இராசதந்திர அணுகுமுறையை உருவாக்கவும் உதவும்.

Edited by poet

என்ன பண்ண சொல்றீங்க ஒண்ணுமே புரியல . ஆனால் புரியலன்னு சொன்னா திட்டுவீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகச் சிறந்த ஆக்கம். ....நான் வன்னியில் பலதடவை தெரிவித்திருக்கிறேன்..... யார் இந்த நான். தயவுசெய்து எழுதுபவர்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய தமிழ் புதியவனுக்கு. இந்த குறிப்பின் நோக்கம் வழிகாட்டுவதல்ல இது இந்த திசை எனன்று சொல்லுவதுதான். ஜெனீவா மாநாட்டின் பின்னணியில் உள்ள இயங்கியல் போக்கையே - dialectical trends - நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். கடந்த விவாதங்களில் பதிலுக்கு நானும் கோபித்தது தப்புத்தான் மன்னிக்கவும்.எ

நன்றி புலிகேசி அவர்களே எனது பெயர் வ.ஐ.ச.ஜெயபாலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.