Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Karnadaka & Jaffna & Africa

Featured Replies

கர்நாடகாவிலும் யாழ்ப்பாணத்திலும் ஆபிரிக்கப் பரம்பரையினர்!-க.வீமன்

3345622099_3f9c209a3b-300x199.jpgநம்புவதற்கு கடினமாக இருந்தாலும் ஒரு வரலாற்று உண்மையையும் அதற்கான தற்காலச் சான்றாதாரத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆபிரிக்கக் கண்டத்தின் மத்தியதரைக் கடலோர வடமேற்குப் பகுதி நாடுகளில் இருந்து யாழ்ப்பாண அரசர்களின் கூலிப்படையாக வந்தவர்களின் பிற்சந்ததியினர் இன்று குடாவிலும் தீவகத்திலும் வாழ்கின்றனர்.

ஆபிரிக்காவின் கொம்பு (Horn of Africa) என்ற பகுதி நாடுகளில் இருந்தும் வட மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் ஆபிரிக்க மக்கள் வர்த்தக நிமித்தம் தெற்கு ஆசிய நாடுகளின் கரை யோரங்களுக்கு வந்துள்ளனர். யாழ்ப்பாண மக்கள் இவர்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் மக்கள் பாரம்பரியக் கதைகளும் சான்றாக அமைகின்றன.

யாழ்ப்பாண மன்னர் காலத்தில் பாப்பரவர் என்று அழைக்கப்பட்ட ஆபிரிக்கர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் கூலிப் படையாக வந்ததாக யாழ்ப்பாண மன்னர் காலத்தில் எழுதப்பட்ட வையாபாடல் கூறுகிறது. தமிழ் நிகண்டுகளில் பாப்பரதீசம், பாப்பரவர் என்ற சொற்கள் ஆபிரிக்க மக்களின் ஒரு பகுதியைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றன.

நயினாதீவு அம்மன் கோயில் நிலத்தின் பெயர் பாப்பரவன் சல்லி. இதன் அர்த்தம் சிப்பி ஓடு காணப்படும் பாப்பரவனின் நிலம் என்பதாகும். ஊர்காவற்துறை (Kayts) சில காலம் பாப்பரவத் தீவு என்று அழைக்கப்பட்டது. சாளையின் வடக்குப் பகுதியின் பெயர் பாப்பரவப்பிட்டி.

ஆங்கிலம் உட்பட்ட மேற்கு ஐரோப்பிய மொழிகளில் மொறக்கோ, அல்ஜீரியா நாட்டவர்களின் பெரும் பகுதியினர் பேர்பர்கள் (Berbers) என்று அழைக்கப்பட்டனர். இந்த நாடுகளின் கடலோரம் பேர்பரி கடற்கரை (Berbery Coast) என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் செயற்பட்ட கடற் கொள்ளையர்கள் பேர்பரி பைரேட்ஸ் (Berbery Pirates) என்று அழைக்கப்பட்டனர்.

சமஸ்கிருத்தில் இந்த இனத்தவர்கள் பாப்புநூ (Bahbroo) என்றும் பழைய கிரேக்க மொழி அரபு மொழிகளில் பேர்பர் (Berber) என்றும் அழைக்கப்பட்டனர். ஜரோப்பியர்களுக்கு முன்பாகவே மொறக்கோ நாட்டுக் கடலோடிகள் வர்த்தகம், புதிய நாட்டுத் தேடல், இஸ்லாம் மதப் பரப்பல் ஆகியவற்றிற்காக ஆசிய நாடுகளுக்கு வந்துள்ளனர்.

இஸ்லாம் மத உட்பிரிவான தர்காக்கள் (Dargahs) தெற்கு இந்தியா, மாலைதீவு, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு மொறக்கோ நாட்டினரால் கொண்டுவரப்பட்டன. யாழ் தீவகத்தின் மண்கும்பான், ஊர்காவற்துறை, நயீனாதீவு ஆகிய இடங்களில் தர்காக்கள் காணப்படுகின்றன.

14ம் நூற்றாண்டில் யாழப்பாணம் வந்த இபின் பட்டுட்டா (Ibn Batuta) என்ற பயணி மொறக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்கும்பான் அமைந்துள்ள அல்லைப்பிட்டியில் சில ஆபிரிக்க நாட்டுக் கலைப் பொருள்கள் கிணறு வெட்டும் போது வெளிப்பட்டுள்ளன. பாப்பரவர்களின் பிற்சந்ததியினர் இன்று மீன்பிடித் தொழில் செய்கின்றனர்.

இந்தியாவின் கர்நாடகா, அரபிக் கடலை ஒட்டிய கிராமங்கள், கோவா புறநகர்ப் பகுதிகள், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் மலைப் பகுதிக் கிராமங்களில் சித்திகள் வாழ்கின்றனர். இந்தியாவை ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் எத்தியோப்பியா, தான்சானியா, கென்யா போன்ற பகுதி மக்களை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு இந்தியா வந்தனர்.

இன்று இந்த முன்னாள் அடிமைகள் எண்ணிக்கையில் பல இலட்சமாக இடம்பெறுகின்றனர். இவர்கள் சித்திகள் (Siddis) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். இந்திய அரசு அவர்களைப் பிற்பட்டோர் பிரிவில் சேர்த்து விட்டது. இவர்களிற் பலர் இந்து மதத்தைத் தழுவியபடியால் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதம் தழுவிய சித்திகள் இந்த மதங்கள் சார்ந்த உள்ளுர் மக்களோடு திருமண உறவு மூலம் கலக்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் பாடு பரவாயில்லை எனலாம. இன்னுமொரு வரலாற்றுக் குறிப்பு சித்திகள் பலர் இந்திய மன்னர்களின் படைகளில் சேர்ந்து பணியாற்றி உள்ளனர்.

மொகலாயப் பேரரசர் அவுரங்சிப்பின் படைத் தளபதிகளில் ஒருவரான யாக்கூட் கான் ஒரு சித்திக் இனத்தவராவார். இன்னொரு சித்திக் சொந்த இராணுவத்தை உருவாக்கி உள்ளுர் அரசர்களுக்கு உதவி இருக்கிறார். 1800ல் மூன்று சித்திகள் இந்திய அரசர்களாக முடிசூட்டிக் கொண்டுள்ளனர்.

என்றாலும் இன்றைய இந்தியாவில் கறுப்பு நிறம், சுருட்டைமுடி, சப்பை மூக்கு காரணமாக சித்திகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மொழி பேசும் இவர்கள் இந்து மதத்தில் இருக்கும் வரை சூனியமான எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றனர்.

சித்தி (Siddi) என்ற பெயர் அரபு மொழியில் இருந்து வந்தது. மரியாதைக்குரிய தலைவர் என்பது அதன் பொருள். கிறிஸ்தவ, இஸ்லாமிய சித்திகள் அப்படி இருக்கலாம். இந்து சித்திகள் தலித் என்ற பட்டத்துடன் தள்ளி வைக்கப்படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.