Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் இடமளிக்கமாட்டார்கள்- வீரவன்ஸ!

Featured Replies

அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் இடமளிக்கமாட்டார்கள்- வீரவன்ஸ!

Published on March 23, 2012-11:22 am ·

v128-150x150.jpgஜெனீவாவில் அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘”ஜெனீவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. ஆனால் இது இலங்கையில் நடக்கும் ஒரு சாதாரண தேர்தலல்ல. அது உலகில் மிகச் சிறிய நாடான எமது இலங்கையை எதிர்த்து உலகிலே மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா பெற்ற வாக்கு விகிதம் ஒப்பீட்டளவில் மிக குறைந்ததேயாகும்.

எமது நாட்டிலே பலர் மது விற்பனைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுள்ள போதும் அவர்கள் விரும்பிய இடங்களில் மது விற்பனை கடைகளைத் திறக்க பொதுமக்கள் அனுமதிப்பதில்லை.

அதுபோல் இன்று அமெரிக்கா உட்பட மேற்குலம் ஜெனீவாவில் பெற்ற அனுமதி பத்திரத்தை அமுல்படுத்த இலங்கை மக்களான நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.

உலகிற்கே பயங்கரவாதத்தை கொண்டு சென்ற விடுதலை புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் ஒரு நடவடிக்கையையே இன்று அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

அன்று ஒரு பிரபாகரனை உருவாக்கியது போல் அடுத்து ஒரு உருத்திரகுமாரனை உருவாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் தான் இது.

மூன்று தசாப்த காலம் நாம் இழந்திருந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுத்தந்த எமது யுத்த வீரர்களை உலக நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்நாட்டு மக்கள் அனுமதிக்க போவதில்லை.

அதேபோல் இது கால வரை பயந்து பயந்து யுத்தம் செய்த நாட்டு தலைவர்களையும் விட தைரியமாக முன்னின்று நாட்டில் இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுத் தந்த தலைவரை ஏகாதிபதியவாதிகள் முன் கைக்கட்டி நிற்க அனுமதிப்பதா? இவை இரண்டையும் எம் நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

அமெரிக்காவின் தீர்மானம் நாட்டுக்கெதிரானதல்ல. அது அரசாங்கத்திறகு எதிரானது என்று சிலர் கூறுவது போல அரசும் நாடும் வேறல்ல. இவை இரண்டும்; ஒன்றே.

எனவே இது எம் மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு விடயம். சிறிய நாடான கியூபாவால் அமெரிக்காவை எதிர்த்து வாழ முடியுமாயின் ஏன் எம்மால் முடியாது?

இந்த நாட்டு முஸ்லிம்களை நான் பாராட்டுகிறேன். நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்ட போது, முழு முஸ்லிம் சமூகமும் ஒரு தலைப்பட்ச கருத்தில் எதுவித சலனமுமின்ற அமெரிக்காவின் தீhமானத்திற்கு எதிர்பபு தெரிவித்தனர” என்றார்

http://www.thinakkathir.com/?p=33012

பின்னூட்டம்

தங்களின் கூற்று சரியானதே திரு விமல். ஏனெனில் அடுத்த மார்ச் எங்களின் இலக்கு பிரிந்து போவதை உலகம் அங்கீகரிக்க வேண்டும்.ஆகவே எதையும் நடைமுறை படுத்தாதீர்கள்.யாருடைய கால்களிலும் விழாதீர்கள்.உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் ஒரே கருத்தை வெளியிடுங்கள்.இவ்வளவும் போதும்.

சிங்கள மக்களின் நாட்டுப்பற்று என்பது தமிழர்கள் மீதான காழ்புணர்ச்சியே தவிர வேறெதுவும் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியின் ஆற்றாமையும் தமிழர் மீதான காழ்ப்புணர்ச்சியும் தான் இவரின் பேச்சில் தொனிக்கிறது.இவரின் பேச்சில் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி ஒரு சொல் கூட பேசவில்லை என்பதில் இருந்து தெரிகிறது இவரின் நாட்டின் மீதான அக்கறை,பற்று.

ஏன் உலக நாடுகள் இப்படி ஒரு நிலையை சிறிலங்காவுக்கு ஏற்படுத்தின என இந்த மூடர் சிந்திப்பாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்களின் நாட்டுப்பற்று என்பது தமிழர்கள் மீதான காழ்புணர்ச்சியே தவிர வேறெதுவும் இல்லை....

உண்மை நண்பா.  நாட்டுப்பற்றுக்கு நான் பார்த்ததில் யப்பானியரை அடிக்க முடியாது.

சிங்களவரிடம் சிங்கபூரிலும் பார்க்க நல்ல கட்டுமானத்துடன் நாட்டை விட்டு சென்றார் இராணியார். 

எழுபது வருடத்தில் பூமாலையை சிறி ராம வானரங்கள் சுருக்கு கயிறா மாற்றி வைத்திருகிறார்கள். 

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.