Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. ரொய்டர்ஸ் மேலுள்ள கட்டுரையில் அப்படித்தான் கூறியுள்ளார்கள். 5 சதம் யுரோ நாணயத்தில், சீன மின் கட்டணம் 7 - 9 சதம் என நினைக்கிறேன் (தற்போதய ஜேர்மன் மின் கட்டணம் 9 சதத்திலிருந்து யுரோ சிறிது அதிகமாக உள்ளதென கருதுகிறேன் ச் அரியாக நினைவில்லை ஆனால் 2022 இற்கு முன்னர் இருந்த விலையில் 31% அதிகரிப்பு மட்டுமே என கூறப்படுகிறது. நிறுவனங்களுக்குதான் இந்த விலை கட்டணம் என நினைக்கிறேன், 0.09சதம் மானியத்தின் பின்னர் 0.05 சதம். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 0.40 சத யுரோ நாணயத்தில் என இணையம் குறிப்பிடுகிறது. இங்கு எரிசக்தி ஏற்றுமதி செய்யும் நாடாக அவுஸ்ரேலியா இருந்தாலும் சாதாரண வாடிக்கையாளர்கள் 0.31 அவுஸ்ரேலிய நாணயத்தில் செலுத்துகிறோம் (சிறிய நிறுவனங்களும் இதே தொகையினையே செலுத்துகிறது) (0.18 யுரோ).
  3. Zimbabwe: Sikandar Raza (c), Brian Bennett, Ryan Burl, Graeme Cremer, Bradley Evans, Clive Madande, Tinotenda Maposa, Tadiwanashe Marumani, Wellington Masakadza, Tony Munyonga, Tashinga Musekiwa, Blessing Muzarabani, Dion Myers, Richard Ngarava, Brendan Taylor
  4. மக்களின் வரிப்பணத்தில் வாழும் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒன்றுமில்லாத கெளரவ பட்டங்கள் (சேர் பட்டம் உள்ளங்க) தான் இவை. இதற்காகவே தான் தமிழினத்தை காட்டிக்கொடுத்து இன்று நடுவீதியில் நாடற்ற அகதிகளாக்கி விட்டுள்ளனர்.. இராமநாதன் போன்றவர்கள். கடந்த ஆண்டில் இந்த கெளரவ பட்டம் பெற்ற ஒருவர் தான்.. கொரோனா காலத்தில் அரசை தவறாக வழிநடத்தி பல்லாயிரம் உயிர்களை பாதுகாக்க தவறிவிட்டமை அண்மையில் விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டிருந்து. உண்மையில் சார்ள்ஸுக்கு இந்த கெளரவப் பட்டங்களை எதுக்கு வழங்கிறம் என்ற புரிதல் இருக்கோ தெரியாது, சிபார்சு செய்யப்படும் ஆக்களுக்கு குத்தி விடுது... இப்படி பல விமர்சனங்கள் பிரித்தானியர்கள் மத்தியில் உண்டு.
  5. தையிட்டி... வவுனியா திருகோணமலை... அரசியல்வியாதிகள் ஒட்டுக்குழு கூலிக்கொலைஞர்கள் கைதுகள் என்று மக்களைப் போக்கு காட்டிக் கொண்டு என் பி பி அரசும் ரணில் செய்ததை தான் செய்யினம்...
  6. Today
  7. ஏன் எல்லா நாட்டிலும் பாடத்திட்டங்களில் இது படிப்பிக்கப்படுகுது.. நிச்சயம் வினாக்களில் வினவப்படுகுது. அதுக்கு அப்புறமும் விளக்கல்லையாமா.. வீட்டில பறைஞ்சு பேச....! இந்த கட்டுரையாளர் பள்ளிக்கூடப் பக்கம் போகாத காட்டு வாசியா...??!
  8. வெடிச்ச குண்டுகள் ஒழுங்கா வெடிச்சிருந்தால்.. இந்த கைதுக்கும் இடமிருந்திருக்காது.. பல நூறு அப்பாவி உயிர்களும் ஒரு இனத்தின் அழிவும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். எல்லாம் காலக் கொடுமையின் தொடர்ச்சி.. இப்படியானதுகள் இன்னும் உயிர் வாழ்வது.
  9. முதலாவதும் இரண்டாவதும் சரியாக வருமா என்று தெரியவில்லை. உதவி செய்ப்பவர்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்புவதை விரும்புவார்களா என்பது ஒரு கேள்வி. அங்கெ அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் தெரிய வரலாம் மூன்றாவது சரியாக இருக்கும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய வங்கிக்கணக்கு இருந்தால் உதவி செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் உதவி செய்பவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரியப்படுத்தலாம் இல்லையா ? பெயர் உண்மையிலேயே வித்தியாசமான ஒரு நல்ல தமிழ்ப் பெயராக இருக்கின்றது. நல்லதொரு தெரிவு 👌 மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்போம் பலரும் முன்னோடிகளாக இருப்பதை விரும்புவார்கள்
  10. தமிழ் நாட்டில் மட்டுமே வாழ வைக்கப்பட்டிருக்கும் போலித் திராவிடம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்கில்லை. ஏன் இதே திரா(விட)த்தை கேராளாவில் பேசி தி மு க ஆட்சி அமைக்கவில்லை..??! கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை..??! தெலுங்கானாவில்.. ஆந்திராவில் ஆட்சி அமைக்க முடியவில்லை..??! எல்லாருக்கும் அரசியல் சவாரிவிட இழிச்சவாய் தமிழன் தான் கிடைச்சான் ஆக்கும். சீமானின் துணிச்சல் பாராட்டத்தக்கது. திராவிடப் பொய் கூச்சலும்.. தமிழ் மொழி.. இன எதிர்ப்பாளர்களான ஈ வே ரா போன்ற துரோகிகளின் பெயரை வைச்சு போலித் திராவிட ஆட்சி நடத்துவதற்கு முடிவு கட்டாமல்.. தெற்காசியாவில் தமிழரின் இருப்பை பாதுகாக்க முடியாது. தென்னிந்தியாவில் திராவிட.. பார்பர்னிய ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தேசம்.. இலங்கையில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தேசம். ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் தேசம் எங்கும் ஆக்கிரமிப்பும் இன அழிப்புப்புமே தொடர்கிறது. ஆனால் சிலர் இந்த விளக்கமின்றி அந்நியநாடுகளில் ஒட்டி வாழ்ந்து கொண்டு சீமானுக்கு வகுப்பெடுப்பது தான் வேடிக்கை விநோதமாக உள்ளது,
  11. சர்வதேச முக்கியம் பெற்ற போதும்.. இந்தப் படுகொலைகளுக்கு இன்று வரை தீர்வில்லை. இதில உக்ரைனில ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்கினம்.
  12. மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் கூறியது போல 50 வீதம் என்பது பிழையான தகவல் . இந்த வருடத்தில் கட்டணம் குறைவு என்பது ஒரு வருடம் ஒரு குடும்பத்தினருக்கு அதிக பட்சமாக 100 யுரோ விற்குள் தான் இருக்கும். அதை விட இங்கே மின்சார விநியோகம் பல நிறுவனங்களினால் கையாளப்படுகின்றது. வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்களின் மிசார விநியோக நிறுவனத்தை மாற்றும் முறையைக் கையில் வைத்துக் கொண்டால் அதாவது ஒப்பந்தம் வருட ரீதியில் செய்தால் ஒவ்வொரு வருடமும் குறைந்த விலையில் விநியோகிக்கும் நிறுவனங்களால் அதிக லாபம் பெற்றுக் கொள்ளலாம். இதில் விழிப்பாக இருக்க வேண்டும் வருடம் முடிவதற்குள் அடுத்தநிறுவனத்தை தெரிவு செய்து பழைய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் ஒப்பந்தப்படி இரண்டாவது வருடத்திற்கான அதிகப்படியான விலையைக் கொடுக்க வேண்டி வரும்
  13. சாதாரண சில சிங்களவர்களுக்கு புரிதல் வந்தாலும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸுக்கும்.. சிங்கள பெளத்த மேலாதிக்க சிந்தனை நிறைந்த சிங்கள பெளத்த பயங்கரவாதப் பிக்குகளுக்கும் இந்த விளம்பரங்களால் அறிவூட்ட விளைவது வீண் முயற்சியாக்கும். புலிகள் சிங்கள மக்களுக்கு புரிய வைக்க தமிழீழ வானொலியில் சிங்கள மொழி நிகழ்ச்சி நடத்தியது தான்.. நினைவுக்கு வந்து போகுது..! பலன்...??????!
  14. தமிழனக் கொலையாளிகளை பாதுகாக்க முனையும் தமிழினவழிப்பாளர்கள். இதில் வியப்பில்லை தானே. ஏவியவர்கள் விசுவாச அம்புகளை பாதுகாக்கவே செய்வர். இல்ல எல்லாரும் மாட்டுப்பட வேண்டி ஏற்படும்.. சங்கிலித் தொடராக.
  15. இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??! இவர் நயினாதீவில் அடாத்தாப் பிடிச்சதை எப்ப விடப்போறார்..????! இவர் இனக்கொலைஞன் மகிந்தவின் விசுவாசி...! இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதும் தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும். இல்ல இந்தப் பிரச்சனை தொடரும். புங்குடுதீவில் விகாரை,.. நாவற்குழியில் விகாரை... கிளிநொச்சியில் விகாரை.. யாழில் விகாரைகள் என்று.. தமிழர் தாயகம் எங்கும் விகாரைகள் தீர்வின்றி எதிர்ப்புகளையும் தாண்டி முளைத்தே வருகின்றன. இதற்கு முடிவு... சர்வதேச தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட தமிழர் தேசத்தை சர்வதேசத்தின் தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி நீதி நிர்வாக பொருண்மிய அதிகாரங்களை தமிழர்களிடம் வழங்குவது மட்டுமே ஆகும். மற்றும்படி.. இதற்கு நிரத்தர தீர்வை எவரும் பெற முடியாது என்பதே கள நிஜமாகும். இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!
  16. ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 1, 2025 7:52 PM GMT+10 அக்டோபர் 1, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 31, 2025 அன்று ஜெர்மனியின் லுயெட்டோ-வல்லுன் அருகே A24 மோட்டார் பாதைக்கு அருகில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் மின்சார தூண்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. REUTERS/Annegret Hilse/கோப்பு புகைப்படம் உரிமம் வாங்கும் உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் 50ஹெர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் GmbH ஆம்ப்ரியன் ஜிஎம்பிஹெச் டென்னெட் ஹோல்டிங் பிவி பெர்லின், அக்டோபர் 1 (ராய்ட்டர்ஸ்) - ஜெர்மனியின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மின்சார கட்டக் கட்டணங்களை அறிவித்தனர், இது அரசாங்க மானியங்களைப் பொறுத்து 57% குறைப்பைக் கணித்துள்ளது. இந்தக் குறைப்பு, ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மின்சாரச் செலவுகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . நாட்டின் தேசிய காலநிலை நிதியிலிருந்து 6.5 பில்லியன் யூரோக்கள் ($7.6 பில்லியன்) மானியம் மூலம், ஒரு கிலோவாட் மணிக்கு (kWh) 6.65 சென்ட்கள் / kWh ஆக கட்டணம் குறைக்கப்படும் என்று கிரிட் ஆபரேட்டர்கள் 50Hertz, Amprion, TenneT மற்றும் TransnetBW ஆகியவை புதன்கிழமை ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன. டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் சட்டத்தை அங்கீகரிப்பதைப் பொறுத்து இந்தக் குறைப்பு சாத்தியமாகும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஜெர்மனியின் மின்சார விலைகள் பரிமாற்றக் கட்டணங்கள், வரிகள் மற்றும் வரிகளால் உயர்த்தப்படுகின்றன, இது ஆற்றல் மிகுந்த தொழில்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. சராசரியாக, தனியார் நுகர்வோர் தற்போது ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு சுமார் 40 காசுகள் செலுத்துகிறார்கள் என்று எரிசக்தி தொழில் சங்கமான BDEW கூறுகிறது, இது ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் தூண்டப்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட 20% அதிகமாகும். மின்சார பரிமாற்றக் கட்டணங்களில் திட்டமிடப்பட்ட குறைப்புக்கு கூடுதலாக, சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸின் கூட்டணி அரசாங்கம், தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகள் உள்ளிட்டவற்றிற்கான மின்சார வரியை ஐரோப்பிய குறைந்தபட்சத்திற்குக் குறைக்க திட்டமிட்டுள்ளது. ($1 = 0.8509 யூரோக்கள்) தாமஸ் சேத்தல் அறிக்கை செய்தல் https://www.reuters.com/business/energy/german-power-grid-fees-set-drop-by-more-than-half-2026-2025-10-01/#:~:text=BERLIN%2C%20Oct%201%20(Reuters),and%20agricultural%20sectors%20among%20others. இது ஒக்டோபரில் வெளியான செய்தி, இந்த செய்தி பிரகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் பாதியாக குறையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது, இன்னொரு செய்தி ஒரு கிலோவாட்டிற்கு 5 சதத்திற்கு மின் கட்டணம் அறவிடப்படும் என கூறப்படுகிறது, இது சீனாவின் மின் கட்டணத்தினை விட குறைவானது, அண்மையில் சில நிறுவனங்கள் எரிபொருள் விலையேற்றத்தினை குற்றம் கூறி வெளியேறியுள்ளன அதில் ஒரு நிறுவனம் (BASF) சீனாவிற்கு இடமாறவுள்ளதாக கூறப்படுகிறது. ஜேர்மன் கள உறவுகளே! இந்த மின்சார கட்டண குறைப்பு அமுலுக்கு வந்து விட்டதா? அது எவ்வாறான தாக்கத்தினை பொதுச்செலவில் ஏற்படுத்துகிறது?
  17. 2009 இல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சபாரட்ணம் அருள்குமரன் இதே வகையான நைற் கௌரவம் பெற்று விட்டார். அவர் தான் நிபுணர்கள் பட்டியலில் நைற் கௌரவம் பெற்ற முதல் ஈழத்தமிழராக இருப்பார் என நம்புகிறேன். https://en.wikipedia.org/wiki/Sabaratnam_Arulkumaran சேர் அருள்குமரன் யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர். எப்பவாவது "once in a blue moon" யாழ் மத்திய கல்லூரி ஓரிருவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும்😎. அப்படி மருத்துவராக வருபவர் ஏனைய பிரபல கல்லூரிகளில் இருந்து சென்றோரை விட உச்சமான தர நிலைக்கு வருவார்! மத்திய கல்லூரியின் கிணற்றுத் தண்ணீரில் தான் ஏதோ இருக்கிறது என நினைக்கிறேன் (அதனால் தான் Upper school இல் இருக்கும் அந்த ஒற்றைக் கிணற்றை நாம் இறைப்பதில்லை😂!)
  18. இராமநாதன், முத்துகுமாரசாமி, வைத்திலிங்கம் துரைசாமி, ஓலிவர் குணதிலக, ஜோன் கொத்தலாவல என பல இலங்கையர் முன்பும் இந்த மரியாதையை பெற்றுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழரில் நிஷான் முதலாவது என நினைக்கிறேன். ஆனால் இது நிஷான் போல பலருக்கு சரியான தகமைக்கு கிடைத்தாலும், இன்னும் சிலருக்கு கொன்சேவேடிவ் கட்சிக்கு டொனேசன் கொடுத்தமைக்காக கூட வழங்கபட்டுள்ளது. நல்ல காலம் சுபாஸ்கரன் இல்லாமல் நிஷான் இந்த விருதை முதலாவதாக பெற்று கொண்டார்😂. King/Queen, Duke, Earl, Prince/Princes, Marquess, Viscount, Baron, Lord/Lady, Sir/Dame, இதற்கு கீழே - Commander of the British Empire (CBE), Officer of the British Empire (OBE), Member of the BE (MBE), மற்றும் British Empire Medal (BEM) என்பன வரும். இதுதான் மேலோட்டமாக பிரிதானியாவில் சமூக தரவரிசை. இதில் சாதாரணமானவர்கள் (commoners ) சேர், லோர்ட் வரைக்கும்தான் போக முடியும். மிகுதி பட்டங்கள், நிலவுடமை+பரம்பரையாக வருவன. ஒவ்வொரு பிரதமந்திரி விலகும் போது அவர் ஆட்களை இப்பதவிகளுக்கு நியமிக்கலாம். கள்ளன் பொரிஸ் தனக்கு காரியதரிசியாக வேலை செய்த எதையும் சாதிக்காத 30 வயதும் ஆகாத ஒரு இளம்பெண்ணை Lady யாக நியமித்தார். அதே போல் புத்தாண்டில் அரசும், அரச குடும்பமும் ஒரு தொகை பேரை நியமிப்பார்கள். இதில் சமூகத்தில் பல நல்லது செய்தோர், வேலையில், விளையாட்டில் சாதித்தோர் நியமிக்கபடுவார்கள். என்னுடைய ஒரு நெருங்கிய வெள்ள இன நண்பிக்கு, பெண்கள் கிரிகெட்டை ஊக்குவித்தமைக்காக MBE கிடைத்தது. ஆனால் அரசு விரும்பினால் எப்போதும் எவரையும் நியமிக்கலாம். சரி…நான் என்ன எண்டு நினைகிறியள்? VPBE - வெட்டி பயல் ஒவ் த பிரிடிஷ் எம்பயர்😂. இந்த knights க்குள்ளும் பல ஓடர் இருக்கு. Order of the Garter இல் அரசர், முன்னாள் பிரதமர்கள் அந்த ரேஞ்சில் உள்ளவர்கள் மட்டுமே.
  19. முன்பு வாடகை கார்கள், பீட்சா டெலிவரி, உணவு விடுதிகளில் காசு கொடுக்காமல் விட பாலியல் சீண்டல்கள் குற்றச்சாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள், குறிப்பாக லத்தீன் மற்றும் கறுப்பின ஒருசில பெண்கள்தான் இதில் ஈடுபடுவது அதிகம், தாங்களாகவே கையை பிடித்துவிட்டு காசு வேணுமா இல்லை ஏற்கனவே நமக்கிடையே வாய்க்கால் தகராறு இருக்கும்போது நீ கையை பிடிச்சு இழுத்தாய் என்று பொலிசுக்கு அடிக்கவா என்று கேக்க, மானம் மருவாதை பயம் கருதி ஆத்தா காசு வேணாம் ஆளைவிடுனு ஓடிதப்பிய குறித்த துறையில் பணியாற்றிய தமிழர்கள் அதிகம். அதேநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட/ஈடுபடும் பொறுப்பான பதவிகள், தொழில்களில் உள்ள நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
  20. வைத்தியரின் அலுவலகம் மற்றும் சில பரிசோதனைகளின் பின் குறிப்பிட்ட பல் வைத்தியரில் தவறில்லை என்று தீர்ப்பு வழக்கபட்டுள்ளதாகவும், இது ஒரு பணம் பறிக்கும் செயல்பாடு என்றும் அறிந்து கொண்டேன்.
  21. அமெரிக்காவில் புதிதாக மாநிலம் ஏதையாவது சேர்த்துள்ளார்களா? இது என்ன சொல்? பிகு கட்டையில போக, அது Ferries State University யாம் 😂. ஃபெறீஸ் என்றாவது எழுதி இருக்கலாம்😂.
  22. யாருடைய காணியிலும் நாம பிளான் போடலாம் தானே இலங்கையில் அரைவாசி மேற்ப்பட்ட புத்த விகாரைகளுக்கு உறுதிகள் இருக்காது.
  23. வந்தால் மலை. போனால் Hair என்ற கொள்கை உடையவர் போல் தெரிகின்றது. 😂
  24. பேர்மிங்கம் ,லேச்ட்டேர், ஈஸ்ட்காம் இந்த இடங்களில் நடக்கும் கூத்துக்களை வீடியோ எடுத்து சமூக வலைதளம்களில் பகிர்ந்து அதை பற்றிய விவாதங்கள் பெரிதாக பரவியதன் பின்பே உண்மையான புலம்பெயருக்கு ஆப்பு விழுந்தது . அத்துடன் ஐரோப்பாவில் அங்கும் இங்கும் தொங்கிகொண்டு இருந்த கள்ளர் காடையர் கூட்டமும் இவ்வளவு சுதந்திரம் இருக்குதா என எண்ணுமளவுக்கு வெறி பிடித்து பிரான்ஸ் கடற்கரையில் இங்கிலாந்துக்குள் அகதிகள் எனும் போர்வையில் ஊடுருவ தவமாய் தவம் இருக்க தொடங்கினார்கள் . இவற்றுக்கு எல்லாம் காரணம் தேடினால் விடை இலகுவானது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.