stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பரிசில்களை அள்ளுவதற்கு அவ்வளவு அவசரமோ?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன், இன்னொரு தவறு நடந்துவிட்டது, கூகிள் படிவத்தில் இருந்த x, y தெரிவுகள் அதில் இருந்ததனை அப்படியே முதலில் பதிந்திருந்தேன் (கேள்வி 53 முதல்), அதனை திருத்த முயன்ற வேளை எனது சொந்த தெரிவினை போட்டு விட்டேன் (அதாவது முன்னர் இருந்த நிலையில் சில மாற்றங்கள்), அதனால் நான் போட்டியின் விதியினை மீறியுள்ளதால் என்னை போட்டியில் இருந்து நீக்கி விடுங்கள், ஆனாலும் இந்த திரியில் ஆர்வமாக கலந்து கொள்வேன்.- திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி
“சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார். அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார். தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார். எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள். அந்த நாள்களில் திலீபனின் நாளில் சந்தியில் திலீபனின் படம் வைத்து பூ வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் இந்த இராணுவத் தளபதி திலீபனின் படம் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து பூ வைத்துவிட்டு செல்வார். எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும் அப்பொழுது பானு அண்ணரைக் கேட்போம் எங்களுக்கு எதிராக போராடிய இவரால் எப்படி திலீபனுக்கு பூ வைக்க முடிகிறது என்று அதற்கு அவர் சொன்ன பதில் அவர் கூலிக்காக வந்த படியால் எமது தியாகம் பற்றி அறியாதவராக இருந்தார். எங்களிடம் வந்த பிறகு தான் எமது போராட்டத்துக்கு தனது பங்கும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். அவர் மட்டுமல்ல அவரது நாயும் எங்களுடன் தான் இருக்கிறது. இவர் பூ வைக்க மறந்தாலும் அவரின் நாய் பூ கொண்டு வந்து வைத்து விட்டுப் போகும். என்றார். எதிரியால் கூட விளங்கிக் கொண்ட எமது போராட்டத்தை சர்வதேசம் இன்றும் விளங்காமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.” நினைவுபகிர்வு – துன்னாலை செல்வம்- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
தமிழர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் எனக்குத் தேவையில்லை, சிங்களவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்ற கடும் இனவாதியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாவின் குரலுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டு பேருமே அரசியலில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள்.- 1987 இல் 30 கலிபருடன் ஒரு தயார்படுத்தல்
1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான், வாசு, அஜித்(பாம்பன்), பரன், றொபோட்(வெள்ளை) ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார். அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர்.வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கியான30 கலிபர் பரிசோதிக்கப்பட்டது(zero setting) நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தயாரிப்பு நடவடிக்கை நடைபெற்றது.தேசியத் தலைவர் எப்போதும் கூறுவது போல் தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்க வேண்டும் என்றால் முன் தயாரிப்பு வேலை முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைய அவரே கடுமையாக உழைத்த இந்த ஒளிநாடாவை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமையாகும். (இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்) அ.சேரா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மன்னிக்கவும் தவறு திருத்தப்பட்டுள்ளது, எனது சோம்பல்தனம் கேள்வியினை கூட சரியாக வாசிக்கவில்லை ஏதோ போட்டியில் கலந்தால் போது எனும் மனநிலையில் கூகிள் படிவத்தில் சேமிக்கப்பட்ட உதாரணத்தினை தெரிவு செய்திருந்தேன், தற்போது திருத்தப்பட்டுள்ளது என கருதுகிறேன், சிரமத்திற்கு மன்னிக்கவும். நீங்களும் x,y என தெரிவு செய்துள்ளீர்கள் என கருதுகிறேன் மேலே கிருபன் கேள்வி 53 தொடங்கும் போட்டிகளுக்கு நாடுகளை குறிப்பிட்டால் வசதியாகவிருக்கும் என கூறியுள்ளார் , போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.- தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர். திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர். திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் போராளிகளுக்கு திருமண ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கினை மேற்கொண்டு வந்தது. காதல் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிட்ட அம்சமாகும். ஆண் போராளிகள் 28 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும்,பெண் போராளிகள் 23 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும் இருத்தல் முக்கியமானது. போராளிகள் தமக்கிடையே காதல் ஏற்படுமாயின் அது பற்றிய விபரத்தினை எழுத்து மூலம் துறைப் பொறுப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். துறைப்பொறுப்பாளர் அதனை ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். திருமண ஏற்பாட்டுக் குழு கூடிய அதைப்பற்றி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த பின் அந்த விபரத்தை தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கும். தேசியத்தலைவர் அவர்களது அங்கீகாரம் கிடைத்தபின் ஆண்,பெண் போராளிகளின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் பூரண சம்மதத்தோடு திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்யும். திருமண நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் குறைந்த அளவிலான உறவினர்கள், அத்தோடு துறை சார்ந்த போராளிகளும் கலந்துகொள்ளும் நிகழ்வாக அந்த திருமணம் இடம்பெறும். விடுதலைப்புலிகளால் நடாத்தி வைக்கப்பட்ட திருமணங்களில் தாலி அணிதலும் முக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தங்கத்திலான தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருக்கும். வழமையாக திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையிலேயே இந்தத் திருமண நிகழ்வுகள் இடம்பெற்றன.சில மூத்த தளபதிகளின் திருமணங்களில் தேசியத் தலைவரும் திருமதி மதிவதனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். சில போராளிகளின் காதல் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன். நிதர்சனம் பகுதியில் கடமை புரிந்த தவா,எழில் ஆகியோர் களுக்கிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. தவா அவர்கள் இவ்விடயத்தை திருமண ஏற்பாட்டுக் குழுவுக்கு அறியத் தந்தார். குழுவில் அங்கம் வகித்த புதுவை இரத்தினதுரையும் நானும்(தேவர் அண்ணா) தவா,எழில் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினோம். அப்போது எழிலனின் பெற்றோர் தமிழீழ மண்ணில் இருக்கவில்லை. அவரது மாமியார் மானிப்பாயில் இருப்பதாக எழில் தெரிவித்தார். புதுவை அவர்களும் நானும் சென்று மாமியாரைச் சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறி அவர் மூலம் பெற்றோருக்கும் அறியத்தரப்பட்டு தேசியத்தலைவர் அவர்களின் அனுமதியோடு அந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றது. இதே விதமாக இன்னும் சில போராளிகளின் திருமணங்களும் நாம் போராளிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களோடு கலந்து பேசி அனைவரினதும் பூரண சம்மதங்களுடன் இடம்பெற்றிருக்கின்றன. புலிப்போராளிகளது திருமணங்களுக்கு தமிழீழ திருமண பதிவுச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு திருமணப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையில் சபையினர் முன்பாக ஆணும் பெண்ணும் உறுதிமொழிகளைக் கூறி கையொப்பங்கள் இடப்பட்டு சாட்சிகளின் ஒப்பங்களோடு அவை அங்கீகரிக்கப்பட்டன. இவர்களுக்கு திருமணம் முடிந்தபின் குடும்ப பராமரிப்பு இறுக்கமான நிதியை மாதாமாதம் இயக்கத்தின் நிதிப் பிரிவு வழங்கி வந்தடையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். --> தேவர் அண்ணா- தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
புலிகளின் சிறப்பு அணியொன்று- 1201 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
பெரிய அளவில் அல்ல - அறவே சம்பந்தபடவில்லை. புலிகள் ஈபியை தடை செய்து, அடித்த பின் இந்தியா தப்பி, அங்கேயே பத்மனாபாவுடனான முரண் ஆரம்பித்து விட்டது. 1987 அக்டோபரில் புலிகள் இந்திய சண்டை. அதே ஆண்டு நவம்பரில் ஈபிடிபி ஆரம்பம். இந்திய படையோடு சேர்ந்து மக்கள் மீது கொலைவெறி ஆட்டம் ஆடியவர்கள் - ஈபிஆர் எல் எவ், டெலோ, புளொட், திரீ ஸ்டார், ஈ என் டி எல் எப்.- வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம்
தையிட்டி விகாரை ராஜபக்ச காலத்தில் அமைந்தது என முரட்டு முட்டு கொடுத்த காவடியார் எங்கே? அந்த திரியிலும் தலை கறுப்பை காணோம்😂- தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
மேஜர் சுவர்ணன் இம்ரான் பாண்டியன் படையணியின் ராதா விமான எதிர்ப்பு அணியில் வான்காப்பு வீரனாக பணியாற்றிய போது எடுத்த நிழற்படம்.- 1201 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
- Today
- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
செய்தி சீமானை பற்றி - ஏன் விஜை பற்றி எழுதுகிறீர்கள்😂. பட படப்பாக உள்ளதா?😂 சொந்த உழைப்பில் சோறு சாப்பிட்டால் - இதுதான் பிரச்சனை. திரள்நிதியில், தரகு காசில் தானும் உண்டு, மனைவி, மகன், மனைவியின் அக்காள் மகன் வரை கொழுத்து பிழைக்கும் ஊழல்-குடும்ப அரசியல்வாதி எண்டால், உழைக்காமல் வாழலாம்.- மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது!
முதலை இறந்து இருப்பது , அதுவும் இந்த மழையில், வாவியின் ecosystem இல் ஏதாவது பாரதூரமாக (பாதகமாக) மாறி உள்ளதோ என்ரா சிந்தனைக்கு இட்டு செல்கிறது. சில வேளையில் உணவு சங்கிலி முறிக்கப்பட்டு (வெள்ளத்தால் அதன் உணவுகளான பெரிய மீன்கள்) அடித்து செல்லப்பட்டு இருக்கலாம். இரையாகும் மற்ற விலங்கு / பறவைகளும் அநேகமாக வந்து இருக்காது. அல்லது எல்லாம் வெறு எங்காவது இருந்து மாசுபட்ட (இராசனாய, தொழிசாலை கழிவுகள்) இழுத்து வந்து வாபியில் கொட்டி யாததாகவும் இருக்கலாம். இதில் சொல்ல வந்து மறந்தது, வாயில் ஆக்சிசன் மட்டம் குறைவு, கரியமில வாயு மாதம் கூடியவவை போன்றதும் நடந்து இருக்கலாம். (அப்படி என்றால் ஏன் என்ற கேள்வி இயற்கை) (மேற்றகில்), இப்படி நடப்பது புறக்கணிக்க புறக்கணிக்கப்படாது. ஏனெனில், பெரிய உயிரினங்களே, முதலில் ecosystem மாற்றத்தில் தாக்கப்படுவது. எதுவாயினும், துறைசார் ஆய்வின் மூலம் முடிவு எடுப்பது. (சிங்கள பகுதிகளில் இருக்கும் வசதிகளை வைத்து செய்கிறார்கள்)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN எதிர் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN எதிர் ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN எதிர் ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? USA ?? NED ?? NAM ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SL ?? IRE ?? ZIM ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? WI ?? BAN ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? SA ?? AFG ?? CAN ?? UAE ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. X1 IND USA NED NAM X2 AUS IRE ZIM OMA X3 WI BAN NEP ITA X4 SA AFG CAN UAE Y1 ENG BAN NEP ITA Y2 NZ AFG CAN UAE Y3 PAK USA NED NAM Y4 SL IRE ZIM OMA 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y3 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத் X1 எதிர் X4 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல Y1 எதிர் Y3 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத் X3 எதிர் X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y1 எதிர் Y2 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி, X2 எதிர் X4 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ் X1 எதிர் X3 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 ?? X2 ?? X3 ?? X4 ?? 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 ?? Y2 ?? Y3 ?? Y4 ?? 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில்- தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்: தமிழரசுக் கட்சி மீது கடும் விமர்சனம்! முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் இன்று (22) தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்தில், 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ரகசிய வாக்கெடுப்பு முறையில் இரண்டு கட்டங்களாக இந்தப் போட்டி இடம்பெற்றது. வாக்கெடுப்பு விவரம்: முதற்கட்ட வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (10), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (6) மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி (5) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்த வாக்குகளைப் பெற்ற தமிழரசுக்கட்சி வேட்பாளர் நீக்கப்பட்டார். இறுதிக்கட்டப் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 7 வாக்குகளை மட்டுமே பெற்றார். புதிய தவிசாளர் உறுதிமொழி: வெற்றிக்குப் பின் உரையாற்றிய புதிய தவிசாளர் இமக்குலேற்றா, ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஏற்ப பாமர மக்களை முன்னேற்றவும், பாரபட்சமின்றி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார். தமிழரசுக்கட்சி மீது குற்றச்சாட்டு: இதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைமை முல்லைத்தீவில் உள்ள ஒரு தனிநபரின் பேச்சைக் கேட்டுச் செயற்பட்டதாலேயே, இந்தச் சபை தேசிய மக்கள் சக்தி வசம் சென்றதாகச் சமூக செயற்பாட்டாளர்களும் ஏனைய உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தியாகங்கள் நிறைந்த இந்த மண்ணை, தமிழரசுக்கட்சியினர் தமது சுயநலத்தால் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா மற்றும் தவராசா அமலன் ஆகியோர் சாடியுள்ளனர். இது எப்படி ஒருவரை கட்சியை விட்டு துரத்துவது? இங்கு 4 கறுப்பாடுகள் இருந்திருக்கின்றன. இவர்களை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வழி காட்டியவர்கள் யார் யார். 14 வாக்குகள் எப்படி கிடைத்தது?- அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
@ரசோதரன் உங்கள் இடம் எப்படி? சுகமாக இருக்கிறீர்களா? எமதுகரை பனியால் மூழ்கியுள்ளது. அதே மாதிரி உங்கள்கரையை வழிந்தோடும் சேறுகளை அள்ளி எறிகிறார்கள்.- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
எல்லோரும் கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கையில் சீமான்தனித்து நிற்கிறார் . தேர்தல்செலவுவும் கொடுத்து கணிசமான தொகுதிகளையும் கொடுக்க சித்தப்பு தயராகவே இருக்கிறார்.முதல்த்தேர்தலில் முதல்வராகும் ஆசையில் ஈருக்கும் காரணத்தால் வியை யாருடனும் கூட்டணி அமைக்க முடியாமல் ஈரக்கிறார்.ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் கூட்ணிக்கு வருவதாக சமிக்ஞை கூட காட்டவில்லை.விஜை தேர்தலில் தனித்து நின்றால் தேர்தல் முடிந்த கையோடு படம் நடிக்க கிளம்பி விடுவார்.- வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம்
வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் வவுனியா, சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு, அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது. பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகள் இடைநிறுத்தம் மேலும், அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு, எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளவிடாது தடை விதித்திருந்தது. எனினும் ஊர் மக்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சின் அனுமதியை பெற்று பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை ஆரம்பித்தனர். இந்நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தினை தாம் புனரமைத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதனை அறிந்து எண்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை, குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு, எல்லப்பமருதன்குளம் குளக்கட்டு பகுதியில் அது கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். விகாரை அமைக்கும் பணி குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம் கிளிநொச்சி, குருந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் ஆய்வுகளின் போது காணப்பட்டதாக தொல்பொருளாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை ஒத்த சிவலிங்கமே சமணங்குளம் பகுதியில் காணப்பட்டதாகவும், அந்த எண்கோண வடிவிலான சிவலிங்கமே குறித்த எண் கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கின்ற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை, குறித்த பகுதியில் முழுமையாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/viharaya-in-the-pillayar-temple-complex-vavuniya-1766838422- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் 23வது கேள்வியின் பதில் விடுபட்டுள்ளது.ENG மாற்ற முடியுமா?- ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
ஆஷஸ் தொடர்! 5468 நாட்களுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் எழுதப்பட்ட வரலாறு அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4ஆவது ஆஷஸ் தொடரில் 5468 நாட்ககளுக்கு பின்னர் அதாவது 14 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் 4ஆவது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று(26) தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர். அவுஸ்திரேலியா சா்பில் மிச்சேல் நேசர் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை எடுத்தார். ஜோஸ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களில் சுருண்டது. ஹாரி புரூக் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை எடுத்தார். மிச்சேல் நேசர் 4 விக்கெட்டும், போலண்டு 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 42ஓட்டங்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. 2ஆவது நாள் ஆட்டம் இன்று(27) 2ஆவது நாள் ஆட்டம் ஆரம்பமானது. இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் அவுஸ்திரேலியா விக்கெட்டுகள் சரிந்தன. மதிய உணவு இடைவேளைக்குள் 88 ஓட்டங்களில் 6 விக்கெட்டை பறி கொடுத்தது. ஸ்காட் போலண்டு (6 ), ஜேக் வெதரால்ட் (5), லபு ஷேன் (8), டிராவிஸ் ஹெட் (46), உஸ்மான் கவா ஜா (10), அலெக்ஸ் கேரி (4) ஆகியோர் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து விக்கெட்டுகள் எளிதில் விழுந்தன. அவுஸ்திரேலியா அணி 34.3 ஓவர்களில் 132 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இங்கிலாந்துக்கு 175 ஓட்டங்கள் இலக்காக இருந்தது. கேமரூன் கிரீன் 19 ஓட்டங்களிலும், நேசர், ஸ்டார்க் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், ரிச் சர்ட்சன் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஸ்டீவ் சுமித் 24 ஓட்டங்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஸ் டங் 2 விக்கெட்டும், அட்கின்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் பென்டக்கெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7ஆவது ஓவரில் தொடக்க ஜோடி சரிந்தது. டக்கெட் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர், 34 ஓட்டங்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2ஆவது விக்கெட்டுக்கு கிராவ்லியுடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. போட்டியின் இறுதிவரை 18 ஓட்டங்களுடன் ஹாரி புரூக் மற்றும் 3 ஓட்டங்களுடன் ஸ்மித் களத்தில் இருந்தனர். 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, சொந்த மண்ணிலிருந்து அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். 5468 நாட்கள், அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது. ஆஷஸ் தொடரின் முதல் மற்றும் 4ஆவது போட்டிகள் 2 நாட்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் திகதி சிட்னியில் தொடங்குகிறது. https://tamilwin.com/article/ashes-series-england-defeated-australia-5468-days-1766820396- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாட்டு வீரர்களின் பெயர்களைக் கேட்டிருப்பதால் ஆட்களைத் தேடி எடுக்க வேண்டுமே.- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இந்திய இராணுவ காலத்தில் டக்ளஸ் பெரிய அளவில் அறியப்படவில்லை. ஈபிஆர் எல்எவ் இராணுவப்பிரிவு தலைவராக இருந்தவர்.இந்தி ஈராணுவத்தின் காலத்தில் சுரேஸ்பிரேமச்சந்திரனே மண்டையன் குழுவின் தலைவராக இருந்து பல கொடுமைகளைச் செய்தவர்.அந்த நேரங்களில் ஏற்பட்ட உள்முரண்பாடுகளால் பிரிந்து சென்று ஈபிடிபியை ஆரம்பித்தார்.- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 74 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 74 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சம் / அத்தியாயம் XI / தேவநம்பிய தீசன் அல்லது தீசனின் [Devanampiya Tissa or Tissa] பட்டாபிஷேகம்: அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் மூத்த சிவன் என்பவன் - சுவண்ணபாலியின் மகன் ஆட்சிக்கு வந்தான். நாடு அப்போது அமைதியாக இருந்தது. அரசன் அழகுள்ள மகா மேகவனம் பூங்காவை [Mahameghavana-garden] அமைத்தான். அதன் பெயருக்கேற்ப அந்த வனம் எல்லா வகையான நல்ல வளங்களையும் உடையதாக இருந்தது. பழ மரங்களும், மலர் மரங்களும் அங்கு இருந்தன. பூங்காவை அமைப்பதற்காக அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த போது ஒரு பெரிய மேகம் காலமில்லாத அந்தக் காலத்திலும் திரண்டு மழையைப் பொழிந்தது. அதனாலேயே அந்தப் பூங்காவை மகா மேகவனம் என்றழைத்தனர். இலங்கையின் திருமுகம் போல் நிகழ்ந்த புகழ் மிக்க அனுராதபுரத்திலிருந்து மூத்த சிவன் அறுபது வருட காலம் ஆண்டான். அவனுக்குப் பத்து குமாரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் நலனில் அக்கறை கொண்டவர்கள். இரண்டு பெண்கள்; அவர்கள் இருவரும் அழகாகவும் பிறந்த குடிக்குப் பெருமை தரும் விதத்திலும் இருந்தார்கள். இரண்டாவது குமாரன் பெயர் தேவநம்பிய தீசன் என்பது. சகோதரர்கள் எல்லோரிலும் குண நலனிலும் அறிவுத் திறமையிலும் மிகச் சிறந்தவனாக அவன் விளங்கினன். பண்டுகாபயனுக்கு முப்பது வயதில் மகன் பிறந்தான் என்று கருதினால், மூத்த சிவன் அரியணை ஏறும்போது, மூத்தசிவனுக்கு எழுபத்தேழு வயதுடையவனாக இருந்திருப்பான். அவன் மேலும் அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே, மூத்த சிவனுக்கு குறைந்தபட்சம் நூற்று முப்பத்தேழு வயது வரை வாழ்ந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அளவுக்கு மிக நீண்ட வயது. மூத்த சிவனுக்கு பத்து மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்; மகன்கள் அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், அசேலன், சூரதிச்சன், கிர என்ற ஆண் மகன்களும், அனுலா மற்றும் சிவாலி என்ற மகள்களும் இருந்தனர். [Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa, Kira, and the daughters are Anula and Sivali.] பெயர்கள் தீபவம்சத்திலிருந்து வந்தவை. மகாவம்சம் பெயர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. அபயா மூத்த மகனாக இருந்தும், வரிசையில் இரண்டாவது மகனான தீசன் அரசனானான். மூத்த மகன் அபயாவுக்கு என்ன நடந்தது என்பது தீபவம்சத்திலோ அல்லது மகாவம்சத்திலோ கொடுக்கப்படவில்லை. பண்டுகாபயா மற்றும் மூத்தசிவாவின் ஆட்சிக்காலம் தீபவம்சத்தில் ஐந்து வசனங்களைக் கொண்ட ஒரு பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 106 வசனங்களைக் கொண்ட நீண்ட அத்தியாயமாக 10 ம் அத்தியாயம், முற்றும் முழுவதுமாக பண்டுகாபயனின் ஆட்சியை மகாவம்சத்தில் பேசுகிறது. [மகாவம்சம் / அத்தியாயம் X / பண்டுகாபயனின் பட்டாபிஷேகம்] இது மகாவம்சத்தின் ஆசிரியரின் தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவாக்கத்தாலும் மற்றும் அலங்காரத்தாலும் நீண்டுள்ளது புரிகிறது. சந்திரகுப்த மௌரியரிடமிருந்தும் [Chandragupta Maurya] அவரது பிராமண ஆலோசகர் சாணக்கியரிடமிருந்தும் [Chanakya] ஒரு சிறிய பிரதியை இங்கு காண்கிறோம். அதாவது, பண்டுகாபயன் ஒரு பிராமணரை தனது குருவாகக் கொண்டுள்ளார். எனவே, குருவாக பிராமணர் என்பது பிராமண மதம் நீதிமன்ற மதம் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் புத்த மதம் மகிந்த தேரரால் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பண்டுகாபயனின் மாமனார் கிரிகண்டசிவா [Girikandasiva] ஆவார். இது ஒரு வெளிப்படையான சைவ தமிழ் பெயர் ஆகும். மேலும், பண்டுவாசுதேவா, பண்டுகாபயா, மூத்தசிவா, சுவண்ணபாலி, கிரிகண்டசிவா போன்ற பெயர்களும் மற்றும் பிராமண குரு போன்றவை மிகவும் வலுவான பாண்டியர், சைவ மற்றும் தமிழ் தொடர்பைக் குறிக்கின்றன. மேலும் அத்தியாயம் X / பாண்டுகாபயனின் பட்டாபிஷேகம், 94 முதல் 102 வரை தெளிவாகக் கூறுகிறது: சண்டாள கிராமத்துக்கு [candala-village, candala: an outcaste or untouchable / the lowest of the men] வட கிழக்கில் சண்டாளர்களுக்காகத் தனியே, தாழ்ந்தவர்களுக்கான ஒரு சுடலையை [cemetery] ஏற்படுத்தினான். இதற்கு வடக்கே, இதற்கும் பாசான மலைக்கும் [Pasana-mountain] இடையே, வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன. அதற்கும் வடக்கே காமனி வாபி [Gamani-tank] வரை, பல துறவிகளுக்கான ஒரு மடம் அமைக்கப்பட்டது. அகற்குக் கிழக்கே அரசன் நிகந்த ஜோதியர்களுக்காக [nigantha Jotiya] ஒரு வீட்டைக் கட்டினன். இதில் காமனி வாபி என்பது இன்று கரம்பவக்குளம் எனவும் நிகந்தஜோதியர் என்பவர்கள் சைனத் துறவிகள் என்றும் ஊகிக்கப்படுகிறது அல்லது அடையாளம் காணப்படுகிறது. அப்பிரதேசத்திலேயே கிரி என்னும் பெயருடைய நிகந்தரும் [சமணர் / Jain], பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இருந்தனர். அங்கு அரசன் நிகந்த கும்பாண்டருக்காக [Kumbhanda / கும்பாண்டர் என்பது பௌத்த புராணங்களின் சிறிய தெய்வங்களில் உள்ள குள்ளமான, தவறான உருவம் கொண்ட ஆவிகளின் குழுவில் ஒன்றாகும்.] ஒரு பிரார்த்தனை மண்டபத்தைக் கட்டினன். அது அவர் பெயரால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து மேற்கேயும், வேடுவர்கள் வசித்த பதிக்குக் கிழக்கேயும் மாறுபட்ட கொள்கை யுடைய ஐநூறு குடும்பங்கள் வசித்தன. ஜோதியருடைய வீட்டுக்கு அப்பால், காமனி வாபியின் இக்கரையில் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுக்கும் துறவிகளுக்காக [wandering mendicant monks] ஒரு மடத்தைக் கட்டுவித்தான். ஆசீவகர்களுக்குத் (Ājīvika, ஆசீவகம் என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும், துறவு வாழ்க்கையும் ஆகும். இது பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர், மகாவீரர் ஆகியோருக்கு சமகாலத்தில் வாழ்ந்த மற்கலி கோசாலர் என்பவர் உருவாக்கிய ஒரு சமய நெறியாகும். ஆசிவகம் ஊழ்வினையை அதிகம் வலியுறுத்துகிறது.) தங்கமிடமும், பிராமணர்களுக்கான ஒரு தங்குமிடத்தையும் அமைத்தான். இந்த இடத்தில் நோயுற்றவர்கள் தங்கி சுகம் பெற ஒரு மனையையும், மண்டபத்தையும் கட்டினன்." எனவே இங்கே, பண்டுகாபயன் மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட மற்றும் நீதி தவறாத அரசனாக சித்தரிக்கப்படுகிறார். பழங்குடி மக்கள் ["பழங்குடி மக்கள்" என்ற சொல் இந்தோ-ஆரிய குடியேறிகள் வருவதற்கு முன்பு இலங்கையில் வசித்து வந்ததாக நம்பப்படும் பூர்வீக இயக்கர்கள் மற்றும் நாகர்களைக் குறிக்கிறது.] அரவணைக்கப்பட்டு, சமூகத்தில் சமமான இடத்தை வழங்கினார். மேலும் பல்வேறு மதக் குழுக்களுக்கு அவர் ஆதரவளித்தார். உதாரணமாக, துறவிகள் (துறவிகள் மற்றும் காடுகளில் வசிக்கும் முனிவர்கள்), சமணர்கள் (பண்டைய இந்தியாவில் ஒரு முக்கிய மதமாக இருந்த சமண மதத்தைப் பின்பற்றுபவர்கள்), அஜீவகர்கள் (இப்போது அழிந்துபோன துறவிப் பிரிவு, இது விதியை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளைப் பின்பற்றியது), பிராமணர்கள் மற்றும் நிறுவப்பட்ட மத நம்பிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும் மதப் பிரிவுகள் அனைத்தும் தங்க வைக்கப்பட்டன. இது இன்றைய இலங்கையின் தேசியவாத புத்த துறவிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆனால் பண்டுகாபயன் காலத்தில் புத்தமதம் இன்னும் இலங்கைக்கு வரவில்லை, புத்தர் நேரடியாக இலங்கையில் போதித்தது என மகாவம்சத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டது, விழலுக்கு இறைத்த நீர் போலாயிற்று என்பதை மகிந்த தேரரை மீண்டும் அனுப்பியதில் இருந்து அறிகிறோம். இன்றைய இலங்கையில், சில துறவிகள் மற்றும் குழுக்கள் (எ.கா., பொது பல சேனை அல்லது "பௌத்தர்களின் அதிகாரப் படை") சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை ஊக்குவிக்கின்றன, இது பண்டுகாபயாவின் பன்முக அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானது. பௌத்தர்கள் அல்லாதவர்களை உள்ளடக்கிய பண்டுகாபயாவைப் போலல்லாமல், நவீன பௌத்த தேசியவாதிகள் பெரும்பாலும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதுடன், பல மத சகவாழ்வை எதிர்க்கின்றனர். அதுமட்டும் அல்ல, அரசியலில் இருந்து விலகி இருந்த பண்டைய துறவிகளைப் போலல்லாமல், நவீன துறவிகள் அரசியல் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபடுவதுடன், பெரும்பாலும் சிறுபான்மை எதிர்ப்பு கொள்கைகளை ஆதரிக்கின்றனர், விதைக்கின்றனர்! Part: 74 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 If it is assumed that Pandukabhaya had his son when he was thirty years of age, then the son, Mutasiva, would have been about seventy seven years of age when he ascended the throne. He ruled for another sixty years. Hence, Mutasiva must have lived at least to the age of one hundred and thirty seven, unbelievably very long age. Mutasiva had ten sons and two daughters; the sons are Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa, Kira, and the daughters are Anula and Sivali. The names are from the Dipavamsa, and the Mahavamsa is silent on the names. Abhaya is the eldest son, but Tissa, the second in line, became the king. What happened to the eldest son Abhaya is not given in the Dipavamsa or in the Mahavamsa. The reigns of Pandukabhaya and Mutasiva are detailed in one paragraph of five verses in the Dipavamsa. However, the entire long chapter 10 with 106 verses is used to cover the rule of Pandukabhaya in the Mahavamsa. This is a selective elaboration and embellishment by the author of the Mahavamsa. There is a bit of a copy from Chandragupta Maurya and his advisor Chanakya, a Brahman. Similarly, Pandukabhaya has a Brahmin as his Chaplain. Brahmin as chaplain indicates a Brahamnical religion is the court religion, as the Mahinda Thera does not yet introduce the Buddhism. Pandukabhaya’s father in law is Girikandasiva which is a Saiva Tamil name. The names Panduvasudeva, Pandukabhaya, Mutasiva, Suvannapali, Girikandasiva, Brahmin chaplain etc indicate very strong Pandyan, Saiva and Tamil connection. Pandukabhaya is depicted as a very liberal and even handed king. The aboriginal people are accommodated and had they seated on par with him, refer 10-67. Ascetics, Jains, Ajivakas, Brahmins, and other heretical sects are all accommodated. It is a far cry from the present day jingoistic Buddhist monks of Ceylon. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 75 தொடரும் / Will follow துளி/DROP: 1958 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 74 https://www.facebook.com/groups/978753388866632/posts/33020555820926306/? - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.