stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017 கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தடையால் நாளொன்றிற்கு 70 மில்லியன் என நினைவுள்ளது (சரியாக தெரியவில்லை) இழப்பு வெனிசுலாவிற்கு ஏற்பட்டது, பொதுவாக பொருளாதார தடை அரசுகளுக்கானதாக கூறப்பட்டாலும் மக்களை வாட்டி அரசிற்கெதிராக கலம் செய்ய தூண்டும் முயற்சி என கூறுகிறார்கள். எதிர்கட்சி தலைவி தனது நோபல் பரிசினை வழங்கி ட்ரம்பிற்கு ஆதரவழித்துள்ளதனை அந்த நாட்டு மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என தெரியவில்லை.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
நான் நினைக்கிறேன் எனது கருத்தினை இன்னொரு கோணத்தில் பார்க்கிறீர்களோ என கருதுகிறேன். ஐரோப்பிய நாடுகள் இரஸ்சிய உக்கிரேன் போரின் போது ஒரு பக்கமாக நிலைப்பாடெடுத்து முற்றாக இரஸ்சியாவினுடனான தொடர்பாடலை முடிவிற்கு கொண்டு வந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த திசையில் நிகழ்வுகள் இடம்பெறாமல் போய்விட்ட நிலையில் மீண்டும் இரஸ்சியாவினுடனான உறவினை ஏற்படுத்த தொடர்பாடலை ஏற்படுத்த முற்படுகின்றனர், இது அவ்வளவு இலகுவான காரியமாக தற்போது இல்லாமல் இருப்பதற்கான காரணம் ஒரு பக்க நிலைப்பாட்டின் விளைவாக இருக்கும் என கருதுகிறேன். பொதுவாக அனைத்து தெரிவுகளையும் தயாராக வைத்திருக்கும் நிலையே காணப்படும், ஆனால் இரஸ்சியா விடயத்தில் மட்டும் இவ்வாறான நிலை எடுப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கும் என நம்புகிறேன். இந்தியா எமது போராட்டத்தினை முடிவிற்கு கொண்டுவருவதில் உறுதியாக இருந்த வேளையில், முற்று முழுதாக ஈழத்தமிழர்களை புறக்கணிக்கவில்லை, (புகலிட அனுமதி, போரின் பின்னர் வட கிழக்கில் வீடு கட்டுதல் போன்ற விடயங்களினூடாக) தொடர்ச்சியாக ஒரு தொடர்பில் இருந்த நிலை காணப்பட்டுள்ளது. நாம் போய் பேசுவதால் இந்தியா எதுவும் செய்துவிடாது, இந்திய நலன் பேணப்படுவதனை பற்றியே இந்தியா சிந்திக்கும் எமது நலன் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, இந்திய தரப்புக்கு எமது நலன் பேணப்படுவதன் மூலம் அவர்களுக்கு நலன் ஏற்படும் நிலையே இங்கு பேரம் பேசும் நிலையாகும். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இந்தியாவுடன் பேச வேண்டிய தேவை இல்லை என கருதுகிறேன், ஆனால் சில செயற்பாடுகளால் எங்களையறியாமலே இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நாம் நெருக்கடியினை உருவாக்கிவிடுகிறோம். இந்தியா மட்டுமல்லாமல் சீனாவுடனும் தொடர்பில் இருக்கவேண்டும், ஆனால் உக்கிரேன் செய்த தவறினை நாம் செய்யக்கூடாது. இலங்கையிலுள்ள தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் அங்குள்ள அரசியல்வாதிகள்தான், அவர்கள்தான் தமிழ் மக்களுக்கான பேரம் பேசலை இந்தியாவுடன் தேவைப்படும் போது செய்வார்கள். தற்போது பேரம் பேசும் ஆற்றல் தமிழர்களுக்கு இல்லை, இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் ஒரு அணியாக மீண்டும் திரள வேண்டும் அதே போல் வெளிநாட்டில் உள்ள பல அமைப்புக்கள் ஒருங்கிணைந்து எதிர்கால திட்டமிடல் (5 வருட பகுதிகளாக) செயல்படவேண்டும். புலிகள் காலத்தில் அரசியல், பாதுகாப்பு, பேரம் பேசல், வெளிநாட்டு ஒருங்கிணைப்பு இருந்தது தற்போது பல வழிகளிலும் சிதறுண்ட நிலையே காணப்படுகிறது. யாழ்கள இந்த திரி எமது சமூக அளவில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளதற்கு இந்த காணொளி உதாரணமாக உள்ளது.
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 93 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 93 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வட்டகாமினி மீண்டும் அரசனாக திரும்பிய உடனே நிகந்தர்களுடைய ஆராமாவை [கோயில்கள்] அழித்து விட்டு அங்கு பனிரெண்டு அறைகளுடன் ஒரு விகாரை கட்டினான் என்று 79 ஆவது வசனம் சொல்லுகிறது. அது ஒரு சமணக் கோயிலாக இருக்க வேண்டும்; அத்தியாயம் 10 இன் 97 ஆம் வசனத்தின் அடிக்குறிப்பின்படி நிகந்தர் என்பது சமணத் துறவிகள் ஆகும். அதேசமயம் களப்பிரர் என்ற தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் சைன சமயத்தையே ஆதரித்தனர். அதேவேளை, 33 ஆம் அத்தியாயத்தின் 43 ஆம் வசனத்தின் [அரசன் தப்பியோடுவதைக் கண்ட கிரி என்னும் பெயருடைய ஒரு நிகந்தர்* ‘கருப்புச் சிங்கம் ஓடுகிறது" என்று உரக்கக் கத்தினான்] அடிக்குறிப்பின்படி, நிகந்தர் என்றால் பௌத்தர் அல்லாத துறவிகள் என்று பொருள். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் பிற்பகுதியில், கங்கை சமவெளியில் (வடக்கு இந்தியா) கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பல சமணர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர் என நம்பப்படுகிறது. உதாரணமாக, சந்திர குப்த மௌரியர் (கி.மு. 321–297 ஆட்சி) தனது கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார் என்றும், துறவியாக வாழ்ந்து இன்றைய கருநாடக மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவிற்கு [Shravanabelagola] அருகில் உள்ள சந்திரகிரியில் பத்திரபாகு [Bhadrabahu] முனிவர் உட்பட பலருடன் மோட்ச நிலையை அடைந்தார் என சமண நூல்கள் கூறுகின்றன. இது வடக்கில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமாக இருக்கலாம். கி.பி 600 வரை தமிழ்நாட்டில் அமைதியாக இருந்த பல மதங்களில் சமண மதமும் புத்த மதமும் ஆகிய இரண்டும் அடங்கும். இருப்பினும், 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சமணர்களும் பௌத்தர்களும் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர், ஒருவேளை ஆதி சங்கராச்சாரியாரின் போதனைகளின் செல்வாக்கின் காரணமாகவோ அல்லது பிற காரணங்களாலோ இருக்கலாம். இதன் விளைவாக, பல சமணர்களும் பௌத்தர்களும் பாதுகாப்புக்காக இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்? உதாரணமாக, சில வரலாற்றுக் குறிப்புகளும் கல்வெட்டுகளும், குறிப்பாக பல்லவ மற்றும் பாண்டிய ஆட்சியாளர்களின் கீழ் சமணர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறுகின்றன. மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் "துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. மன்னர் வட்டகாமினி நிகந்தர்களுடைய ஆராமாவை இடித்தது மட்டுமல்லாமல், அந்த இடங்களில் பௌத்த விகாரையையும் கட்டினான். அத்தியாயம் 33 இன் 81 வது வசனத்தின் அடிக்குறிப்பு 1 இன் படி, வட்டகாமினி நிகந்தர்களுடைய கோவிலை இடித்த இடத்தில் அபயகிரி விகாரையைக் கட்டினான். மன்னர் வட்டகாமினி பௌத்த நியதிகளை வருங்கால சந்ததியினருக்காக எழுத்து வடிவில் இருக்க உத்தரவிட்டார். இது இதுவரை வாய்மொழியாக மட்டுமே வழங்கப்பட்டது ஆகும். சைவ கோயில்கள் ஆண்டு ஆண்டாக பண்டைய காலத்தில் இருந்தே , கிருஸ்துக்கு முன்பே இருந்தே, தமிழர்களின் தேசிய பாரம்பரியமாக, பெருமையாக இருந்து வருகிறது. ஆனால், தற்போதைய தொல்பொருள் துறையால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் புனிதமான சைவத் தலங்கள் படிப்படியாக தரைமட்டமாக்கப் படுகின்றன. ஆனால் உண்மையில் இந்தப் பிரச்சினை, புனிதமான கோயில்களை அழிப்பதை விட, அங்கு சிங்கள பௌத்த குடியேற்றமும் அதற்காக புத்தர் விகாரை அமைப்பதுமே முதன்மையாகத் தெரிகிறது .தமிழ் பேசும் மக்கள், நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும், இவர்கள் பண்டைய காலம் தொடங்கி, வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழ்வதும் இன்று குறிப்பிடத் தக்கது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில், இராணுவம், சிங்கள - பௌத்த நிறுவனத்துடன் சேர்ந்து, அதிகமான புத்த கோயில்கள் மற்றும் புத்த சிலைகளை நிறுவுவதன் மூலம் நிலப்பரப்பை மாற்றி வருவதுடன் இந்தப் பகுதிகளில் நிலத்தையும் பலவந்தமாக கையகப்படுத்துகிறது. இந்தப் பகுதிகளில் தொல்பொருள் துறையின் செயல்பாடுகள் குறித்து சந்தேகத்திற்குரிய தகவல்கள் வந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர்மலையில் நிலவும் சூழ்நிலை ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் என்று எண்ணுகிறேன். மற்றது தையிட்டியில் மக்கள் காணியில் பலவந்தமாக, அவர்களின் காணியை பறித்து, போலீஸ் [காவல்துறை / Police] காவலுடன் இராணுவம் அமைத்துள்ள சட்டவிரோத தையிட்டி விகாரையையும் கூறலாம். இவை இரு உதாரணங்கள் மட்டுமே, அங்கு இதைவிட பல இடங்களில் இப்படி நடக்கிறது. இவைக்கு இலங்கை அரசும் நீதித்துறையும் கண்மூடி இருப்பது கேவலமான காட்சி ஆகும். குருந்தூர்மலையை எடுத்துக் கொண்டால், பிப்ரவரி 2021 இல், இந்த இடத்தில் ஒரு இந்து ஆலயத்தை இராணுவ வீரர்கள் அழித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஜூன் 2021 இல், அதே இடத்தில் ஒரு புதிய புத்த கோவிலுக்கு அடித்தளம் அமைக்கும் விழாவிலும் இராணுவம் பங்கேற்றது மட்டும் அல்ல, நீதிமன்ற உத்தரவுகளை மீறி கட்டுமானப் பணிகளையும் தொடர்ந்தது. இந்த நடவடிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் தொகை மற்றும் கலாச்சார நிலப்பரப்பை மாற்றுவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பலரால் கருதப்படுகின்றன, இது பெரும்பாலும் "சிங்களமயமாக்கல்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சொல் பாரம்பரியமாக சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை மேம்படுத்துவதை விவரிக்கிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 'நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் தமிழர்கள்', முதலில் கிருஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு, பின் அவர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்ட அண்மைய வரலாறு ஆகும். மேலே கூறிய அத்தனையும் தமிழ் மற்றும் முஸ்லிம் அடையாளங்களை ஓரங்கட்டுவதற்கு வழிவகுக்கும் என திட்டவட்டமாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. இந்த செயல்முறைகளில் தொல்பொருள் துறையின் ஈடுபாடு குறிப்பாக சர்ச்சைக்குரியதாக உள்ளது. சைவ [இந்து] கோயில்களை பௌத்த தலங்களாக மறுவடிவமைப்பு செய்வதில் இந்தத் துறை முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், இதன் மூலம் சைவ [இந்து] வழிபாட்டாளர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்த இடங்களில் பௌத்த கட்டமைப்புகளைக் கட்டுவதற்கு வசதி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மத சமூகங்களுக்கு இடையே பதட்டங்களுக்கு பங்களித்துள்ளது மற்றும் சிறுபான்மை கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் கூறுகிறது. Part: 93 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Soon after his return he demolished the arama of the Niganthas (temples of Niganthas), must be a Jain temple; as per footnote on 10- 97 Nigantha means Jain monks. As per footnote on the 33- 43, Nigantha means non-Buddhist monks. Tamil epic Mannimeghalai denote Samana Kutta as Samana (Jain) Malai (hill). There was a drastic drought and famine during the latter part of the reign of Chandragupta Maurayan in the Gangetic plain. Quite a lot of Jains moved to south during that time. Jainism and Buddhism were two of the many religions prevailed and peacefully co-existed in Tamil Nadu until about 600 A.D. It could be due to the preaching of Aadi Sangarar or otherwise, Jains and Buddhists were in severe persecution after sixth century A.D. Both Jains and Buddhist moved to Ceylon. The king Vattagamani not only demolished the Aarama of the Nigantha’s but also built Buddhist Viharas on those places. As per footnote 1, Abhayagiri Vihara was built on the site where Vattagamani, 33-81, demolished the Nigantha temple. The king Vattagamani ordered the Buddhist canons to be in written form for posterity which was earlier orally handed down நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 94 தொடரும் / Will follow துளி/DROP: 2002 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 93 https://www.facebook.com/groups/978753388866632/posts/33350022154646336/?
- Today
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
அதிர்ச்சியாகவும் நம்பமுடியாமலும் இருக்கிறது! ஆழ்ந்த இரங்கல்கள் என்று வெற்று வார்த்தைகளை மட்டும் எழுதிவிட்டு செல்லவும் விருப்பமில்லை. மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்ற உண்மையை புரியாமல் இருப்பதிலும் அர்த்தம் இல்லை. காலம் தானே தந்த இந்த கொடிய துயரை தாண்டியும் மோகன் அண்ணாவையும் பிள்ளைகளையும் கூட்டி செல்லும் என்ற சிறு நம்பிக்கையை மட்டும் விட்டு செல்கிறேன்
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
எங்கு எங்கு எல்லாம் சுற்றி சுழன்றாலும் இறுதியில் சேர வேண்டிய இடம் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி ! தலைவன் 8 மேற்படட போர்களை முடிவுக்கு கொண்டுவந்து இருக்கிறார் உக்ரைனுக்கும் ரசியாவிற்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து மிக விரைவில் உக்ரைன் போறும் முடிவுக்கு வரும் என்பது என்னுடைய நம்பிக்கை. கூடிய விரைவில் கிரீன்லாந்து மக்களுக்கும் விடுதலை கிடைக்கும்!
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
கடைசியில் சுமத்திரன்மட்டுந்தான் கட்சியில் மிஞ்சுவார் போல இருக்கிறது. அரியநேந்திரனுக்கு சங்கு. உன்னோட சேர்ந்து நான் செய்யும் காரியம் ரொம் பயங்கரமாக இருக்கும் என்ற வாக்கிற்கு அமைய சங்குக் கூட்டணியும் பத்தி எழுத்தாளர்களும் அரிநேந்திரனுக்கு சங்கு ஊதிவிட்டு பின்வாசல் வழியாக சுமத்திரனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் துயரமான செய்தி!மனவியை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல்..- இயந்திர மனிதர்கள், நிலவில் தளம்; 2050-ல் உலகம் எப்படி இருக்கும்?
இயந்திர மனிதர்கள், நிலவில் தளம்; 2050-ல் உலகம் எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,CBS Photo Archive படக்குறிப்பு,எதிர்காலத்தில் 2054ஆம் ஆண்டில் நடப்பதாக அமைக்கப்பட்ட 2000ஆம் ஆண்டு திரைப்படமான 'மைனாரிட்டி ரிப்போர்ட்', கைகளால் சைகைகள் செய்வதன் மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை கற்பனை செய்து காட்டியது கட்டுரை தகவல் லாரா கிரெஸ் தொழில்நுட்ப செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 25 ஆண்டுகளில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பாலான கணினிகள் சத்தமான டயல்-அப் இணைப்புகள் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டன. நெட்ஃபிளிக்ஸ் ஓர் ஆன்லைன் டிவிடி வாடகை நிறுவனமாக இருந்தது. மேலும், பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்ஃபோன் என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூட இல்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் பலவற்றில் புதுமைகள் நம்ப முடியாத வேகத்தில் வெளிவருகின்றன. எனவே, அடுத்த 25 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்களிடம் கேட்க முடிவு செய்தோம். எதிர்காலத்தில் 2050ஆம் ஆண்டளவில் நாம் பயன்படுத்தப் போகும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவை நம் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கக்கூடும் என்பவை குறித்த நிபுணர்களின் கணிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. மனிதர்களை இயந்திரங்களுடன் இணைக்கும் இயந்திர-மனிதர்கள் எதிர்காலத்தில் 2050களில் நடப்பதாகக் கற்பனை செய்யப்படும் அறிவியல் புனைகதைகள், மனிதர்கள் அதிக தகுதியுடனும், மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் உணர தங்கள் உடலிலேயே தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான உதாரணங்களால் நிரம்பியுள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான டியூஸ் எக்ஸ் என்ற பிரபலமான வீடியோ கேம் 2052ஆம் ஆண்டில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் விளையாடுபவர் 'நானைட்ஸ்' எனப்படும் மிக நுண்ணிய ரோபோக்களை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ள முடியும். இந்த நுண்ணிய ரோபோக்கள் செல்கள் அளவில் விஷயங்களை கையாள்வதன் மூலம், மேம்படுத்தப்பட்ட வேகம், இருட்டில் பார்க்கும் திறன் போன்ற மனித இனத்திற்கு அப்பாற்பட்ட திறன்களை அவை வழங்குகின்றன. இது ஏதோ மிகவும் முன்னோக்கிய எதிர்காலத்தில் இருந்து வந்த ஒன்று போலத் தோன்றலாம். ஆனால், நானோ தொழில்நுட்பம், அதாவது ஒரு மில்லிமீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு அளவிலான பொறியியல் பணிகள், ஏற்கெனவே பல அன்றாட நிஜ உலக தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், நீங்கள் இப்போது இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கே கூட அதுதான் ஆற்றல் அளிக்கிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோன் அல்லது கண்னி கருவிகள் பில்லியன் கணக்கான சிறிய டிரான்சிஸ்டர்களால் ஆன ஒரு மைய சிப்பால் இயக்கப்படுகிறது. இவை தரவு செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்காக நானோ அளவில் உருவாக்கப்பட்ட மின் கூறுகளாகும். பட மூலாதாரம்,Eidos படக்குறிப்பு,டியூஸ் எக்ஸ் என்ற வீடியோ கேமில், தனது திறன்களை, மேம்படுத்தும் கருவிகள் மூலம் அதிகரித்துக்கொள்ளும் கதாநாயகன், ஆயுதக் குழு மற்றும் ரகசிய சமூகங்கள் சம்பந்தப்பட்ட உலகளாவிய சதியை விசாரிக்கிறார் லண்டன் நானோ தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் ஸ்டீவன் பிராம்வெல் பிபிசியிடம் பேசியபோது, "2050ஆம் ஆண்டுக்குள் இயந்திரங்கள், மின்னணுவியல், உயிரியல் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகள் கணிசமான அளவில் மங்கிவிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்" என்று கூறினார். அதாவது, எதிர்காலத்தில் நாம் நானோ தொழில்நுட்ப உள்வைப்புகளைக் காணக்கூடும். ஆனால், 'டியூஸ் எக்ஸ்' வீடியோ கேமில் வருவது போல கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்குப் பதிலாக, "உங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்க, தகவல்தொடர்புக்கு உதவ" அவை பயன்படுத்தப்படும். மருத்துவத் துறையும் நானோமீட்டர் அளவிலான இயந்திரங்களை "மருந்துகளை அவை செல்ல வேண்டிய இடத்திற்குத் துல்லியமாக அனுப்புவதற்கு" பரவலாகப் பயன்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் பிராம்வெல் கூறினார். சைபர்நெட்டிக்ஸ் பேராசிரியர் கெவின் வார்விக் மேம்பாடுகளை ஆய்வு செய்வதில் சமமான ஆர்வம் கொண்டவர், பெரும்பாலானோரை விட ஒரு படி மேலே செல்கிறார். அவர் கடந்த 1998ஆம் ஆண்டில், தனது நரம்பு மண்டலத்தில் ஒரு மைக்ரோசிப்பை பொருத்திக்கொண்ட முதல் மனிதர் ஆனார். இது அவருக்கு "கேப்டன் சைபோர்க்" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. இயற்கை மற்றும் இயந்திர அமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் அறிவியல் துறையான சைபர்நெட்டிக்ஸ், 2050ஆம் ஆண்டுக்குள் ஏற்படும் முன்னேற்றங்கள், நோய்களுக்கான முன்னோடி சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று பேராசிரியர் வார்விக் நம்புகிறார். மருந்துகளுக்குப் பதிலாக, ஸ்கிஸோஃப்ரினியா போன்ற சில நிலைகளுக்குப் பகுதி சிகிச்சையாக 'மூளை மின்னணு தூண்டுதல்' முறையைப் பயன்படுத்தலாம் என்று அவர் கணிக்கிறார். மேலும் அவர் இன்னும் பல சைபர்நெட்டிக் மேம்பாடுகளை நாம் அதிகமாகக் காண்போம் என்றும், அதன் மூலம் "மூளையும் உடலும் வெவ்வேறு இடங்களில் இருக்க முடியும்" என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Kevin Warwick படக்குறிப்பு,பேராசிரியர் வார்விக் இந்த சிப்பை கொண்டு பல முன்னோடி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று, தனது மூளையை மட்டும் பயன்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள ஒரு ரோபோ கரத்தைக் கட்டுப்படுத்துவதாகும் டிஜிட்டல் இரட்டையர்கள் ஒருவேளை, புதிய மேம்பாடு அல்லது ஒரு புதிய உணவுமுறை நம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை, பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இல்லாமல் சோதித்துப் பார்க்க விரும்பினால் என்ன செய்வது? அறிவியல் அருங்காட்சியகத்தின் அறிவியல் இயக்குநரான பேராசிரியர் ரோஜர் ஹைஃபீல்ட், 'டிஜிட்டல் இரட்டையர்கள்', அதாவது ஒரு நிஜ உலக பொருளின் மெய்நிகர் வடிவங்கள், நிகழ்நேர தரவை பயன்படுத்திப் புதுப்பிக்கப்படுபவை, நமது வாழ்க்கையில் ஒரு வழக்கமான அம்சமாக மாறக்கூடும் என்று நம்புகிறார். "வெவ்வேறு மருந்துகள் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்கள் தனித்துவமான உடலின் உயிரியலை எவ்வாறு பாதிக்கின்றன" என்பதை ஆராய்வதற்காக நம்மில் ஒவ்வொருவருக்கும் "ஆயிரக்கணக்கான எளிமைப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இரட்டையர்கள்" இருக்கும் ஓர் உலகத்தை அவர் கற்பனை செய்கிறார். இதை வேறுவிதமாகக் கூறுவதெனில், நாம் நமது எதிர்காலத்தை வாழ்வதற்கு முன்பே அது செலுத்தும் தாக்கத்தை நாம் முன்கூட்டியே பார்க்க முடியும். செயற்கை நுண்ணறிவின் அடுத்த தலைமுறை கூகுள், ஐபிஎம் உள்படப் பல தொழில்நுட்ப நிறுவனங்கள், குவான்டம் கம்ப்யூட்டிங் வடிவில், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளை நாம் மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக, தற்போது பல பில்லியன் டாலர் மதிப்பிலான போட்டியில் ஈடுபட்டுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் நம்ப முடியாத வேகத்தில் மிகவும் சிக்கலான கணக்கீடுகளைச் செய்யக்கூடிய இயந்திரங்களே குவான்டம் கணினிகள். எடுத்துக்காட்டாக, புதிய மருந்துகளை வேகமாக வடிவமைப்பதற்காக மூலக்கூறு இடைவினைகளை உருவகப்படுத்துவது போன்றவற்றை வேகமாகச் செய்ய உதவுகின்றன. ஜனவரி 2025இல் முன்னணி சிப் நிறுவனமான என்விடியாவின் தலைவர் ஜென்சன் ஹுவாங், "மிகவும் பயனுள்ள" குவான்டம் கம்ப்யூட்டிங் 20 ஆண்டுகளில் வரும் என்று தாம் நம்புவதாகக் கூறினார். நாம் அரை நூற்றாண்டு இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது, செயற்கை நுண்ணறிவானது நமது சமூகத்தில் சந்தேகத்திற்கு இடமின்றித் தொடர்ந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். 2050இல் பிரிட்டன் கல்வி குறித்த ஒரு வெள்ளை அறிக்கை என்ற அறிக்கையை எழுத உதவிய எதிர்காலவியலாளரும் எழுத்தாளருமான டிரேசி ஃபாலோஸ், "நிகழ்நேரத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும்" செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களைப் பயன்படுத்தி, "மெய்நிகர் மற்றும் இயற்பியல் எதார்த்தங்கள்" நிரம்பிய கற்றல் நடைபெறும் என்று நம்புகிறார். பாடப் புத்தகங்களுக்கு பதிலாக, குழந்தைகள் "ஆழ்நிலை உருவகப்படுத்துதல்களை" பயன்படுத்துவார்கள் என்று அவர் கணிக்கிறார். இதற்கிடையில், கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட டி.என்.ஏ அல்லது பயோமெட்ரிக் தரவுகள், அவர்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக ஆய்வு செய்யப்படும். பட மூலாதாரம்,Bloomberg படக்குறிப்பு,வேமோ என்பது தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள் எழுத்தாளர் பில் டக்ளஸ், ஈர்க்கவல்ல கணிப்புகளைச் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். கடந்த 2000ஆம் ஆண்டில், "2050இல் உலகம்" என்ற தலைப்பில் நடைபெற்ற 20,000 டாலர் மதிப்பிலான உலகளாவிய எதிர்காலவியல் கட்டுரைப் போட்டியில் அவர் வெற்றி பெற்றார். அவரது அசல் கணிப்புகளில் ஒன்றான, விமானிகளற்ற விமானங்கள், 2050க்குள் நிஜமாகும் என்பதை அவர் இன்னமும் கூறி வருகிறார். அதேவேளையில், ஓட்டுநர் இல்லாத கார்களில் நாம் முதலில் அதிக முன்னேற்றங்களைக் காண்போம் என்றும், இது போக்குவரத்து நெரிசலை "பெரும்பாலும் கடந்த கால விஷயமாக" மாற்றிவிடும் எனவும் அவர் நம்புகிறார். "இப்போது இருப்பதைவிட கார்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகச் செல்லும். மேலும் ஒரு கார் பிரேக் போட்டால், அனைத்து கார்களும் பிரேக் போடும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "தானியங்கி வாகனங்களுக்கான தனியார் சுங்கச் சாலைகளில், போக்குவரத்து மணிக்கு 100 மைல்களுக்கு மேல் இருக்கும். அவற்றின் துல்லியத்தால், போக்குவரத்து விபத்துகளால் நிகழும் இறப்பு விகிதம் பெருமளவில் குறைவதைக் காண்பீர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார். விண்வெளியில் நடக்கும் விந்தைகள் பூமிக்கு அப்பால், விண்வெளிப் போட்டியும் அதே வேகத்தில் தொடரும் என்று பத்திரிகையாளரும் 'ஸ்பேஸ் போஃபின்ஸ்' பாட்காஸ்டின் இணை தொகுப்பாளருமான சூ நெல்சன் பிபிசிடயிம் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில், நிலவில் மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரு தளம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும், சில தொழில்கள் கிட்டத்தட்ட முழுதாக விண்வெளியில் அமைந்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார். உதாரணமாக, மருந்து நிறுவனங்கள் அடுத்த தலைமுறை மருந்துகளை நுண்கவர் ஈர்ப்பு விசையின்கீழ், அதாவது ஒரு சுற்றுப்பாதை விண்கலத்தில், தயாரிப்பதை நாம் காணக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏனெனில், பூமியில் வளர்க்கப்படுவதைவிட இந்த வழியில் வளர்க்கப்படும் படிகங்கள் "பெரும்பாலும் பெரிதாகவும் சிறந்த தரத்துடனும்" இருக்கும் என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் அறிவியலுடன் சங்கமிக்கும் அறிவியல் புனைகதைகள் அறிவியல் புனைகதை எழுத்தாளர் பிலிப் கே டிக் எழுதிய ஒரு குறுநாவலை அடிப்படையாகக் கொண்ட 'மைனாரிட்டி ரிப்போர்ட்' என்ற திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. அதன் கதை 2054இல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தயாரிப்பு தொடங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், விர்ச்சுவல் ரியாலிட்டியின் நிறுவனர் ஜரோன் லானியர் உள்பட பதினைந்து நிபுணர்களை, 2050களில் என்னென்ன தொழில்நுட்பங்கள் சாத்தியமாகலாம் என்பது குறித்துச் சிந்திக்க ஒரு மூன்று நாள் உச்சிமாநாட்டுக்கு அழைத்தார். அந்த விவாதங்கள், திரைப்படத்தில் இடம்பெற்ற பல கண்டுபிடிப்புகளுக்கு வடிவம் கொடுத்தன. டாம் குரூஸ் நடித்த இந்த அறிவியல் புனைகதை த்ரில்லர் படத்தின் நிகழ்வுகளை நம்புவதானால், 2050களின் மத்தியில் நாம் அனைவரும் நமது டிரான்ஸ்பரன்ட் திரைகளில் காணொளிகளைப் புரட்ட சைகைகள் மற்றும் ஆடம்பரமான கையுறை தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோம். அதே நேரத்தில், ஜெட்பேக்குகளை அணிந்த காவல்துறையினர் தடிகளுடன் நடக்கவிருக்கும் குற்றங்களை எதிர்த்துப் போராடுவார்கள். பல அறிவியல் புனைகதைகளைப் போலவே, இந்தப் படமும் நம் எதிர்கால ஆண்டுகளின் ஓர் இருண்ட காட்சியைக் காட்டுகிறது. இந்த உணர்வை சில நிபுணர்கள் தற்போதைய காலகட்டத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் அழிவுக்கு வித்திடும் என்றுகூட எச்சரிக்கின்றனர். ஒருவேளை, 2050இல் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதைப் பற்றி அதிகம் மனச்சோர்வுக்கு ஆளாவதற்கு முன்பு, பிலிப் கே டிக்கின் வார்த்தைகளுக்கே திரும்புவோம். "என்னைப் பொறுத்தவரை, அறிவியல் நமக்கு உதவுமென்று நான் பந்தயமே கட்டுகிறேன்" என்று அவர் தனது 1968ஆம் ஆண்டு சுயசரிதை கட்டுரையான 'செல்ஃப் போர்ட்ரெயிட்'-இல் எழுதினார். "அறிவியல் நம்மிடம் இருந்து பறித்ததைவிட அதிக உயிர்களை காப்பாற்றியுள்ளது. நாம் அதை நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0r4nknkje0o- இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
கடைசி வரை போராடிய விராட் கோலியின் சதம் வீண்: ஒரு நாள் தொடரை வென்றது நியூசிலாந்து பட மூலாதாரம்,Indranil MUKHERJEE / AFP via Getty Images படக்குறிப்பு,விராட் கோலி 91 பந்துகளில் சதமடித்தார் 33 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. 3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது இந்தத் தொடரின் இறுதிப் போட்டியாகும். இதற்கு முன்பு, இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. இந்தப் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் தனது முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், அதே சமயம் டெவோன் கான்வே ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வில் யங் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு, டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியின் பேட்டிங்கைத் தொடர்ந்தனர். டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் இப்போட்டியில் சதமடித்தனர். பட மூலாதாரம்,Indranil MUKHERJEE / AFP via Getty Images படக்குறிப்பு,டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் இப்போட்டியில் சதமடித்தனர். நியூசிலாந்து க்ளென் பிலிப்ஸ் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது நான்காவது விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர், டேரில் மிட்செல் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிட்செல் ஹே இரண்டு ரன்களிலும், சச்சரி ஃபாக்ஸ் 10 ரன்களிலும், கிறிஸ்டியன் கிளார்க் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம்,Shammi Mehra / AFP via Getty Images 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ரோஹித் சர்மா 11 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று ரன்களிலும், கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும், மூன்றாவது இடத்தில் பேட் செய்த விராட் கோலியும், ஆறாவது இடத்தில் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டியும் இந்திய அணியின் இன்னிங்ஸை நிலைநிறுத்தினர். விராட் கோலி 91 பந்துகளில் தனது சதத்தை எட்டினார், அதே நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டியும் தனது அரை சதத்தை எட்டினார். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்சித் ராணா 42 பந்துகளில் அரைசதம் எடுத்து அதிரடி காட்டினார். ஆனால், இவரது விக்கெட்டுக்கு பின்னர் இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது. தனியாக போராடிய விராட் கோலியும் 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c338peyr46mo- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
உண்மையில்... தமிழரசு கட்சியை சிதைத்துக் கொண்டு இருக்கும், சுத்துமாத்து சுமந்திரனைத் தான் வெளியேற்ற வேண்டும். இந்த, நரகத்தின் முள்ளு தமிழரசு கட்சியில் இருந்தால், இன்னும் பல தோல்விகளை பாரம்பரியமான தமிழரசு கட்சி சந்திக்க வேண்டி வரும். பல தோல்விகளை சந்தித்த சுமந்திரனை... உடனே, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்.- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
19இன் கீழ் உலக கிண்ணத்தில் விரான் சமுதித்த சாதனை, ஜப்பானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை ஆரம்பித்த இலங்கை Published By: Vishnu 17 Jan, 2026 | 10:17 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இரண்டு இளையோர் உலகக் கிண்ண சாதனைகளை நிலைநாட்டிய இலங்கை 203 ஓட்டங்களால் ஜப்பானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை ஆரம்பித்துள்ளது. இந்தப் போட்டியில் 192 ஓட்டங்களைக் குவித்த விரான் சமுதித்த, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்து புதிய சாதனை நிலைநாட்டினார். இவர் மாத்தறை சென் செர்வேஷியஸ் கல்லூரி வீரராவார். திரித்துவ கல்லூரியின் முன்னாள் வீரர் ஹிசித்த போயகொட 2018இல் நியூஸிலாந்தின் லின்கனில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் கென்யாவுக்கு எதிராக பெற்ற 191 ஓட்டங்கள் என்ற முந்தைய சாதனையை விரான் சமுதித்த முறியடித்தே இந்த சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் தனது சக வீரர் திமன்த மஹாவித்தானவுடன் ஆரம்ப விக்கெட்டில் 328 ஓட்டங்களைப் பகிர்ந்து இளையோர் உலகக் கிண்ணம் மற்றும் இளையோர் சர்வதேச ஒருநாள் ஆகிய இரண்டிலும் சகல விக்கெட்டுகளுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை படைத்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 387 ஓட்டங்களைக் குவித்தது. விரான் சமுதித்த 143 பந்துகளை எதிர்கொண்டு 26 பவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் விளாசி இருந்தார். மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய திரித்துவ கல்லூரி வீரர் திமன்த மஹாவித்தான 125 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 115 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குவித்த கன்னிச் சதங்கள் இவையாகும். அவர்களை விட அணித் தலைவர் விமத் தின்சார 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் திமத்தி முவர் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 50 ஓவர்களும் தாக்குப் பிடித்து 8 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய முன்வரிசை வீரர் ஹியூகோ கெலி 162 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 101 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் நிஹார் பாமர் (23) மாத்திரம் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 8 வீரர்களில் செத்மிக்க செனவிரட்ன (9 - 1 விக்.), சாமிக்க ஹீனட்டிகல (16 - 1 விக்.), விரான் சமுதித்த (17 - 1 விக்.), ரசித் நிம்சார 21 - 1 விக்.), விக்னேஸ்வரன் ஆகாஷ் (42 - 1 விக்.), அறிமுக வீரர் ஸ்ரீ ராம் ஜீவகன் (53 - 1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விரான் சமுதித்த https://www.virakesari.lk/article/236295 பங்களாதேஷை DLS முறைமையில் வென்றது இந்தியா 18 Jan, 2026 | 06:19 AM (நெவில் அன்தனி) புலாவாயோ, குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று சனிக்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண சி குழு போட்டியில் பங்களாதேஷை டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் 18 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை இந்தியா ஈட்டியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா சிரமத்துக்கு மத்தியில் 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 3 விக்கெட்ளை 53 ஓட்டங்களுக்கு இழந்த இந்தியா பெரும் நெருக்கடிக்குள்ளானது. ஆனால் வைபவ் சூரியவன்ஷி. அபிக்யான் குண்டு ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு ஆறுதல் அளித்தனர். வைபவ் சூரியவன்ஷி 67 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (119 - 5 விக்.) இந் நிலையில் அபிக்யான் குண்டு, கனிஷ்க் சௌஹான் (28) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிரந்து இந்தியாவுக்கு தெம்பூட்டினர். அபிக்யான் குண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் அல் பஹாத் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அஸிஸ்உல் ஹக்கிம் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் ஈமொன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 239 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தடைப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 29 ஓவர்களில் 165 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 21. 1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ், அதன் பின்னர் எஞ்சிய 8 விக்கெட்ளை 40 ஓட்டங்களுக்கு இழந்து தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் அஸிஸ்உல் ஹக்கிம் 51 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 37 ஓட்டங்களையும் கலாம் சித்திக்கி, ரிஸான் ஹொசன் ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஹான் மல்ஹோத்ரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கிலான் பட்டேல் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: விஹான் மல்ஹோத்ரா https://www.virakesari.lk/article/236316- "டிரம்பின் பொருளாதாரப் போர்": மேற்கத்திய கூட்டணியை பிளவுபடுத்துமா?
"டிரம்பின் பொருளாதாரப் போர்": மேற்கத்திய கூட்டணியை பிளவுபடுத்துமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சனிக்கிழமை அன்று கிரீன்லாந்துக்கு ஆதரவாக டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம் கட்டுரை தகவல் ஃபைசல் இஸ்லாம் பொருளாதார ஆசிரியர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கிரீன்லாந்தை இணைத்துக்கொள்ளும் தனது திட்டத்தை மேற்கத்திய நட்பு நாடுகள் எதிர்க்கக் கூடாது என்றும், மீறினால் அமெரிக்காவுடனான தங்கள் வர்த்தகத்திற்கு மேலும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல் முன்னெப்போதும் நிகழ்ந்திராதது. கடந்த ஓராண்டாக அதிபர் டிரம்பிடமிருந்து வழக்கத்திற்கு மாறான மற்றும் எதிர்பாராத பொருளாதார அச்சுறுத்தல்களை நாம் கேட்டுள்ளோம், ஆனால் இது எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது என உறுதியாக சொல்லலாம், மேலும் இது நம்மை கற்பனைக்கு அப்பாற்பட்ட மற்றும் முற்றிலும் ஆபத்தான ஒரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. டிரம்ப் கூறியதை உள்ளபடியே எடுத்துக்கொண்டால், இது தன்னுடைய நெருக்கமான நட்பு நாடுகள் மீது வெள்ளை மாளிகை தொடுக்கும் பொருளாதார போரின் ஒரு வடிவம். ஏனெனில், இது மிகக்குறுகிய முன்னறிவிப்புடன் நட்பு நாடுகளை குறிவைக்கிறது, மேலும் நேட்டோ மற்றும் மேற்கத்திய கூட்டணி பிளவுபடும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்படுவதாக உள்ளது. இது, அந்நாடுகளை சேர்ந்த அதிகாரிகளை முற்றிலும் குழப்பமடையச் செய்துள்ளது. உண்மையில், இந்நடவடிக்கையால் கோபமடைவதை விட அவர்கள் வழக்கத்திற்கு மாறாக குழப்பத்தில் உள்ளனர். உங்கள் கூட்டாளியின் நிலத்தைக் கைப்பற்றுவதை அடிப்படையாகக் கொண்ட இதுபோன்ற ஒரு அச்சுறுத்தல் உண்மையில் நடக்கும் என்று உலகில் யாரும் நினைக்க மாட்டார்கள். இதைச் செய்வதற்கு டிரம்புக்கு உண்மையிலேயே அமெரிக்கா, அதன் நாடாளுமன்றம், அவ்வளவு ஏன் அவருடைய சொந்த நிர்வாகத்தில் ஆதரவு உள்ளதா? சில வர்த்தக அதிகாரிகள் கருதுவது போல, இது முன்னெப்போதும் நடந்ததைவிட மிகப்பெரிய வரி விதிப்பு (TACO- Trump will Chicken Out) அச்சுறுத்தலா? அதாவது, டாக்கோ என்பது மிகப்பெரும் வரி விதிப்பின் மூலம் அச்சுறுத்தும் டிரம்பின் போக்கை குறிப்பதாகும். அவ்வப்போது இந்த வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் வருகின்றன, அதனை பொருளாதார ரீதியாக இந்த நாடுகள் இதுவரை சமாளித்துள்ளது. உதாரணமாக, கனடாவை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவுடனான அதன் வர்த்தக உறவு சரிவை சந்தித்துள்ளது. ஆனால், கனடா பிரதமர் மார்க் கார்னியின் உத்தி மூலம், அந்நாட்டின் வர்த்தகம் உலகின் மற்ற நாடுகளைவிட 14% அதிகரித்துள்ளது, இது அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக இழப்பை சமாளிக்க தேவையானதைவிட மிகவும் அதிகமாகும். பட மூலாதாரம்,Reuters இந்த வாரம் சீனாவில் இருக்கும் கார்னி, "புதிய உலக ஒழுங்கு" என்ற கருத்தை முன்னெடுத்து, சீனாவுடன் மேலும் வர்த்தக உறவுகளை அதிகரிக்க முயற்சித்து வருகிறார். இது, சீனாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை குறைக்க வேண்டும் என்ற அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள சில அதிகாரிகள் விரும்பும் அணுகுமுறைக்கு மாறானதாக உள்ளது. "இது சீனாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையேயான ஒரு போராட்டம்" என்று, டிரம்ப் நிர்வாகம் வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பு உலகின் மற்ற நாடுகளை நம்பவைக்க முயன்றது. இந்த அணுகுமுறையை கார்னி வெளிப்படையாக காட்டி வருகிறார். அதுவே, தற்போது (டிரம்பால்) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் நேரத்தைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான பின்னணியாக இருக்கலாம். இருப்பினும், நாம் டிரம்பின் சமீபத்திய மிரட்டல்களை தீவிரமாக எடுத்துக்கொண்டால், அவை மிகவும் கவலை அளிப்பவையாகும். 10% வரி விதிப்பால் மட்டும் இது கவலைக்குரியதல்ல, மாறாக அதன் பின்னணியில் உள்ள காரணத்தினால்தான் இது முக்கியத்துவம் பெறுகிறது - ஒரு நட்பு நாட்டிலிருந்து நிலத்தைப் பறிப்பது மற்றும் நட்பு நாடுகளைப் பகிரங்கமாக மிரட்டி பணியவைக்க முயற்சிக்கும் செயல் கவலைக்குரியது. சீனா அல்லது ரஷ்யா தங்கள் நட்பு நாடுகளில் சிலவற்றுக்கு இதுபோன்ற ஒரு மிரட்டலை விடுத்திருந்தால், உலகம் எப்படி எதிர்வினையாற்றியிருக்கும்? இந்த அச்சுறுத்தலின் அடிப்படை வெளிப்படையாக மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள தலைநகரங்களில் பலர் டிரம்பின் சமூக ஊடக அறிவிப்பைப் படித்து, அமெரிக்காவின் முடிவெடுக்கும் செயல்முறை குறித்து கேள்வி எழுப்புவார்கள். வரும் புதன்கிழமை அன்று உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) தான் பொருளாதார ரீதியாக அச்சுறுத்திய நட்பு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க அதிபர் டிரம்ப் வருகை தருகிறார். அதற்குள், எதனுடனும் ஒப்பிட முடியாத இந்த அச்சுறுத்தல் எப்படியாவது தணிந்துவிடும் என்று உலகின் பெரும்பாலானோர் நம்புவார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70l10ye6jxo- கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மை ஐ.நாவின் புதிய அறிக்கை மூலம் நிரூபணம் - அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல்
கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மை ஐ.நாவின் புதிய அறிக்கை மூலம் நிரூபணம் - அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல் 18 Jan, 2026 | 10:21 AM (நா.தனுஜா) இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி, இவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராயவேண்டும் என வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய 'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டது. இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நாவின் இப்புதிய அறிக்கையைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும், உலகளாவிய ரீதியில் பல்வேறு மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தலைதூக்கியிருக்கும் சூழ்நிலையில், தமது பிரச்சினைகளை ஐ.நா மறந்துவிட்டது எனக் கருதியிருந்த வேளையில் இவ்வறிக்கை வெளியானது தமக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார். 'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிகமோசமான அக்கிரமங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச மக்கள் தீர்ப்பாயம், சர்வதேச நீதிமன்றம் போன்ற கட்டமைப்புக்களின் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா? அதனை எவ்வாறு செய்வது? என்பன தொடர்பில் ஆராயவேண்டும் எனவும் லீலாதேவி குறிப்பிட்டார். இருப்பினும் இந்த ஆராய்வு செயன்முறை குறித்தவொரு தரப்பினருக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், மாறாக அதில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/236330- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசல கூடத்தை பூரணப்படுத்த குழிவெட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் பிளாற் புதிதாக போடப்பட்டுள்ளது. எஞ்சிய சல்லி, மணல், சீமந்து படங்கள்.- டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!
அந்தம்மாவுக்கு "அல்வா"தான் கிடைக்கப் போகுது போலை.- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள்.- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
யார்யாரெல்லாம் புலி அனுதாபிகளோ அவர்களனைவரும் நீக்கப்படுவர். அடுத்தவர் சிறீதரன்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
கடந்த 78ஆண்டுகளாக வந்த எல்லா ஆட்சியாளரும் சொல்லியதையும் செய்ததையுமே அநுர ஆட்சி தொடர்கிறது. மாற்றங்கள் மகாசங்கங்களின் அதிகாரத்துவம் உள்ளவரை அல்லது சிங்கள் வெகுசனங்களிடையே இருதரப்பும் ஈழத்தீவின் சமமான பங்காளர்கள் என்ற மனமாற்றம் ஏற்படாதவரை அரசியல் மாற்றங்கள் நிகழாது. அவை ஒற்றையச்சிலேயே சுழலும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
சுமந்திரனின் முடிவே அரசியல் குழுவின் முடிவு. அடுத்தது யார்?- வெண்முகில் நகரம் – நாவல் வாசிப்பனுபவம்
வெண்முகில் நகரம் – நாவல் வாசிப்பனுபவம் இராதா கிருஷ்ணன் வெண்முகில் நகரம் நாவல் வாசித்து முடித்தவுடன் மனதில் நின்ற முதல் கதாபாத்திரம் என்று பார்த்தால் பூரிசிரவஸ் வருகிறார். அழகான மூன்று காதல் வாய்ப்புகள் அமைகிறது. அமைந்த சில காலங்களிலேயே அவை இல்லாமல் ஆகி விடுகின்றன .கனவுடன் செல்லத் தொடங்கி முடிவில் வெறும் கையுடன் தனது நாட்டிற்கு செல்லும் நிலையில் நாவல் முடிகிறது. கனவுகளை பின்தொடர்ந்து முடிவில் வெறும் கையுடன் திரும்புகிறான் . இவனுக்கு இணையான இன்னொரு பாத்திரமாக நாவலில் சாத்யகி வருகிறான். அவனுக்கு தன்னை கிருஷ்ணனுக்கு அளிப்பதை தவிர வேறு கனவுகள் இல்லை. கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதே அவனது விருப்பமாக இருக்கிறது .அதற்காக தொழுமர் ( அடிமை) பணியில் இணையும் அளவுக்கு கிருஷ்ணர் மீது அன்பு கொண்டிருக்கிறார். மற்றபடி அவருக்கு என தனி விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் அவருக்கு கிருஷ்ணனிடம் வந்த பிறகு இளவரசருக்கு இணையான மதிப்பை எல்லோரும் அளிக்கிறார்கள். எங்கும் அவனால் நிமிர்ந்து நின்று பேச முடிகிறது. எல்லாம் அவனிடம் வந்து அமைகிறது. கிருஷ்ணர் அவனுக்கு பானுமதியிடம் சொல்லி பெண் பார்க்கிறார், வில்லில் சிறந்தவரான அர்ஜுனனிடம் மாணவராக சேர்க்கிறார். அவர் எதுவும் அடைய விரும்புவதில்லை. ஆனால் எல்லாம் அவரிடம் வந்து சேர்கிறது . ஆனால் அவர் எதையும் தனக்குள் ஏற்றாமல் தான் கிருஷ்ணனின் அடிமை / சேவகன் என்று மட்டுமே தன்னை முன்வைக்கிறார் ! நாவலில் ஆரம்பம் என்பது பாண்டவர்கள் திரௌபதியை மணந்த பின் உறவு கொள்வதற்கு முன்பாக ஆரம்பிக்கிறது. ஐந்து கணவன்கள் ஒரு மனைவி என்பதை ஏற்க முடியாமல் தவிக்கும், என்ன செய்வது நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது. இதை வெறும் திரௌபதி – பாண்டவர்கள் நிலையில் இல்லாமல் சாதாரண ஒரு பெண் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கணவன்கள் இருந்தால் அதை அந்த கணவன்கள் எவ்வாறு அணுகுவது என்பதாகவும் காண இயலும். ஒரு கணவன் பல மனைவி என்பது நமக்கு அதிர்ச்சி அளிப்பது இல்லை, ஆனால் பல கணவன் ஒரு மனைவி என்பது சட்டென்று அதிர்ச்சி அளிக்கிறது . நம் வழக்கத்தில் மனைவிக்கு ஒரு கணவன், அவனுக்கு மட்டும் அவள் உரியவள் என்றே அணுகப் படுகிறது. அப்படிதான் நாம் அணுகுகிறோம் . இந்த நாவல் எதிர் சூழலை எப்படி அணுக இயலும் என்பதைப் பேசுகிறது. அதிர்ச்சி அளித்தாலும் மனைவி என்ற இடத்தில் அன்னையை வைத்து இந்த நாவல் பேசுகிறது . அன்னைக்கு ஐந்து குழந்தைகள் இருக்குமெனில் ஏன் ஐந்து கணவன்கள் என்பது இருக்க கூடாது என்கிறது . அதாவது குழந்தைகள் அன்னையிடம் அன்பு செலுத்த, அன்னை குழந்தையிடம் அன்பு செலுத்த இன்னொரு குழந்தை தடையாக இருப்பது இல்லை , தடையாக தோன்றுவதில்லை அல்லவா, அது போல அணுகுங்கள் என்று பாண்டவர்களிடம் முன்வைக்கிறது. இன்னொருவருடன் உறவு என்பதை ஆண் யோசிக்கும் இடத்தில் நதியை காட்டி நதி இதுவரை வந்த பின்னணியும் , இனி செல்லும் பின்னணியும் நாம் பார்க்க வேண்டியதில்லை / பார்ப்பதில்லை தானே என்கிறது. உன்னுடன் இருக்கும் போது உன்னுடையவள் என்பதை மட்டும் எண்ணிக் கொள் என்று சொல்கிறது அல்லது அவ்வாறு நான் புரிந்து கொண்டேன் ! திரௌபதியை விளக்க புலோமை கதை சொல்லப்படுகிறது. திரௌபதியை புரிந்து கொள்ள நமக்கு மிக உதவும் பகுதி அது . நாவலில் ஆரம்ப பகுதியில் நிறைய புராணக் கதைகள் சூதர் பாடல்கள் வழியாக சொல்ல படுகிறது. அதில் இந்திரத்யும்னன் கதை, நீரர மகளிர் கதை என நிறைய வருகிறது . அவை கதை மாந்தர் மற்றும் அந்நேர மனநிலை , அவர்கள் எதிர் கொள்ளும் சூழல் சாரந்து வாசிக்கும் நமக்கு மேலதிகமாக புரிந்து கொள்ள மிக உதவுகிறது . இதில் இந்திரத்யும்னன் கதை வழியாக தென்னக நிலமும் பாரத கதையில் இணைகிறது . மேலும் இந்த கதை கூட இரண்டு கதைகளாக வருகிறது. ஒன்று சூதர்கள் சொல்வது , இன்னொன்று திரௌபதி சொல்வது . இந்த கதை பற்றி இணையத்தில் தேடிய போது கதையில் நாவலாசிரியர் உருவாக்கியிருந்த கோணம் முன்பு இருந்த கதை என இவற்றைக் கொண்டு ஆராய்ந்து அறிய நிறைய வெளிகள் இருக்கிறது . எனக்கு இந்திரத்யும்னன் தன்னை அறிந்தவரை தேடும் பகுதியில் கூட ஒரு வரிசை வைப்புமுறை இருக்கிறது என்று தோன்றியது . அவன் உடல் , அவன் மனத்தில் இருந்த காமம் , அதன் ஊற்றுமுகம் , அதைத் தாண்டிய அவனின் இருப்பு என செல்வதில் வைப்பு முறை இருப்பதாக உணர்ந்தேன் . நாவலில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம் என்பது ஒரு பாத்திரத்தின் இயல்புக்கு நேர் எதிராக இன்னொரு பாத்திரம் கூடவே இருக்கும் . உதாரணமாக புலோமை நெருப்பு போன்றவள் நிலைகொள்ளாதவள் என்றால், அவள் தமக்கை காலகை குளிர்ந்தவள் என புலோமைக்கு நேர் எதிரான குணங்களுடன் இருக்கிறது . நாவலில் போர்க் காட்சியும் வருகிறது . போர் என்றால் பலம் கொண்டவர்கள் வெல்வார்கள் என்று எண்ணுவோம் , இந்த போரில் வெல்ல வாய்ப்பு இருந்த, வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த கர்ணன் தோல்வியை அடைகிறான் . போரில் பங்கு பெறாத வெளியில் நின்று வேடிக்கை பார்த்த திரௌபதி தன் சமயோசித செயல்களால் வெற்றியை தங்கள் பக்கம் கொண்டு வருகிறாள் . வெல்லும் சூழலை உருவாக்கி அளிக்கிறாள் . பாண்டவர்கள் திரௌபதியிடம் முதல் உடல் உறவு கொள்ளும் நாள் காட்சிகளில் பாண்டவர்களின் மனநிலையை அறிய முடிவதை போல திரௌபதியையும் அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக மாயை, அவள் திரௌபதிதான் என்று எண்ணுகிறேன் . அர்ஜுனனிடம் அப்படியே தன்னை அளிக்கும் மாயை திரௌபதியில் இருக்கும் ஒருத்திதான் என்று வாசிக்கும் போது தோன்றியது . ஜெயமோகனின் முதன்மையான புனைவு திறன்களில் ஒன்று நிலகாட்சிகளை விவரிப்பது . நம்மால் அந்த நிலங்களை நேரில் பார்ப்பது போல வாசிக்கும் போது உணர முடியும் . பூரிசிரவஸ் பாத்திரம் துவங்கும் பகுதியில் மலை பிரதேசத்தில் பயணிக்கும் இடங்கள் மற்றும் மத்ர நாட்டில் பூரிசிரவஸ் காணும் காட்சிகள் , சாத்யகி வழியாக துவாரகை நில காட்சிகள் என பல பகுதிகளில் நில காட்சிகள் விரிவாக விவரிக்கப்படுகின்றன. வெண்முரசில் இருக்கும் முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்பது எந்த ஒரு விசயத்திற்கும் ஒரு கோணம் இல்லாது பல கோணப் பார்வைகள் காட்டப் படுகிறது . உதாரணமாக வெண்முரசு ஆரம்பத்தில் வந்த பால்ஹிகர் தனது மூத்தவருக்கு மன்னர் வாய்ப்பு இல்லாத போது மூத்தவர் அரண்மனையில் இருந்து வெளியேறிய போது இனி தனக்கும் இந்த இடம் தேவையில்லை என்று அண்ணன் மீதான பற்றில் வெளியேறியது போல வரும் , பிறகு இந்த வெண்முகில் நகரம் படிக்கும் போது வேறு வேறு கோணங்கள் காட்டப்படுகிறது. அவை எல்லாம் சுவாரஸ்யமானவை மட்டும் அல்ல மேலதிக புரிதல்கள் சமூக ஏற்பு, மறுப்பு சார்ந்து , தனது என்று நாம் உணரும் தருணங்கள் சார்ந்து பல்வேறு புரிதல்களை வாசகனுக்கு அளிப்பவை . எனக்கு இந்த நாவலில் மிக பிடித்த இடம் என்றால் அது பூரிசிரவஸ் – பிரேமை இணை கொள்ளும் காதல் / உறவு கொள்ளும் பகுதிகள் . இனிமையான பகுதி அது . நாவலில் திருதராஷ்டிரர் கொள்ளும் மகன் சார்ந்த மனநிலை ,அது சார்ந்த மாற்றங்கள் , அதன் வழியாக தந்தை தன் மகனில் கொள்ளும் அன்பு , அது எந்த புற விசயங்களாலும், மகன் தவறு செய்தாலும் மாறாமல் இருப்பது . அது விலங்குணர்வு போன்ற மாறாத ஆதி உணர்வு போல ஒன்று என்பதை பற்றி எல்லாம் தர்மன் ,விதுரன் , கிருஷ்ணர் வழியாக எல்லாம் பேசப்படுகிறது . மேலும் திருதராஷ்டிரர் செயல்கள் வழியாகவும் காண முடிகிறது . நாவலில் தர்மன் யார் மக்களை இணைக்கிறார்களோ அவர்களே பெரிய மன்னர்களாக முடியும், அந்த திறன் தனக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே இருக்கிறது என்று சொல்கிறார். இதைத் தாண்டி கிருஷ்ணரால் தனக்கு ஏற்ப தான் விரும்பும் விளைவுகளுக்கு ஏற்ப சூழலை , மாந்தர்களின் மனநிலையை மாற்ற முடிவதை இந்த நாவலில் விரிவாக பார்க்க முடிகிறது. எந்த பலிகளும் இல்லாமல் , யாரின் மனமும் வருத்தமும் ஏற்படாமல் நாட்டையே இரண்டாக அவனால் பிரிக்க முடிகிறது . எதை செய்தால் மக்கள் கவனம் திரும்பும், எதைச் செய்தால் மனிதனும் மனநிலை மாறும் ,எதை செய்தால் தான் விரும்பும் முடிவுக்கு மனிதர்கள் வருவார்கள் என்பதை உணர்ந்து அதை நிகழ்த்துகிறார். அவரால் அப்படி காட்டில் இருந்து தனிமையில் மூழ்கிய பீஷ்மரை கூட மனம் மாற்றி அரசவைக்கு கொண்டு வர முடிகிறது. எதையும் நேரடியாக செய்வது இல்லை, அந்த இடத்திற்கு அவர்களை அவர்கள் அறியாமல் நகர்த்துகிறார் ,அல்லது உரிய காரணங்கள் சொல்லி கொண்டு செல்கிறார் ! கிருஷ்ணர் சம்படையுடன் பேசும் காட்சி அவரை வேறு தளத்தில் கொண்டு செல்கிறது . அவர்கள் உரையாடுவது முற்றிலும் வேறு தளத்தில் என்று தோன்றியது. அன்றே சம்படை மரணிக்கிறார், அவர் மரணம் ஆவது முன்பே கிருஷ்ணருக்கு தெரியும் என்று தோன்றியது . இன்னும் பல குணங்கள் கிருஷ்ணர் சார்ந்து வருகிறது . மிக சாதாரண மக்களிடமும் உரையாடுவது என . இதை எழுதும் போது புரி சிரவஸ் விழா ஏற்பாட்டில் வேண்டுமென தவறு செய்யும் ஒருவனை கண்டு கொள்வதும் சரியாக அவனிடம் போய் கிருஷ்ணர் கண்டுகொண்டு உரையாடுவதும் ஞாபகம் வருகிறது ! இந்நாவலில் சில இடங்களில் வந்து இருந்தாலும் பூரிசிரவசின் மூத்தவரான சகனை பிடித்தது. நிகழ்வின் உணர்ச்சிகரத்துற்குள் சிக்கிக் கொள்ளாமல் வெளியில் நின்று பார்த்து தீர்வு காண்பவன் அவன் என்று வாசிக்கும் போது உணர முடிந்தது . இது தவிர பால்ஹிக நாடு சார்ந்த நில காட்சிகளும் மிக பிடித்தது . இது தவிர பூரிசிரவஸை ஆரம்பத்தில் விரும்பிய விஜயை, துச்சளை போன்றவர்கள் வேறு மணவாய்புகள் அமைந்த பிறகு பூரிசிரவசை எதிர்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தன. பானுமதி பாத்திரமும் நன்றாக இருந்தது . நாம் மிக விரும்பும் ஒன்று நமக்கு கிடைக்காமல் ஆகி விடும் போது அது நமக்கு வாழ்நாள் எதிராக இருக்கும் தரப்பிடம் சென்று விடும் போது உருவாகும் மனநிலை நச்சுமுள் என்ற அத்தியாயங்களில் விரிவாகப் பேசப்படுகிறது . இன்னொரு இடம் காந்தாரியிடம் கிருஷ்ணர் சகுனியின் காந்தாரி மீது கொண்டிருக்கும் அன்பு/ வழிபாடு பற்றி பேசும் இடம் , மிக நுணுக்கமான மன இயல்பு பற்றி பேசும் இடம் அது . https://mayir.in/இந்திய-நாவல்கள்/radhakrishnan/4418/- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
தைப்பொங்கல் சிரிப்புகளில் வரவேண்டிய செய்தியைப்போல் சுமந்திரன் கட்சியின் நிலை உள்ளது.- சரணாகதி
சரணாகதி ராமராஜன் மாணிக்கவேல் பார்த்தன் அதிகமாகத் திரௌபதியிடம் பேசியதில்லை. அவளும் அப்படித்தான். அவனிடம் அவள் அதிகமாகப் பேசியது இல்லையே தவிர, மற்றவர்களிடம் பேசாமல் இருந்தது இல்லை. அவள் சக்கரவர்த்தினி அல்லவா? கல்லும் முள்ளும் மண்டிய வெறும் கட்டாந்தரையில், அத்தனை பெரிய அதிசய அரண்மனை கட்ட வேண்டும் என்றால், எத்தனை எத்தனை கட்டளைகள் பிறப்பித்திருப்பாள்! இந்திரப்பிரஸ்தம் கண்ட ஸ்ரீசக்கரவர்த்தினி! எண்ணங்கள் இல்லாதவனுக்கு ஆசைகள் இல்லை. ஆசைகள் இல்லாதவனுக்குக் கனவுகள் இல்லை. கனவுகள் இல்லாதவனுக்கு இலக்குகள் இல்லை. இலக்குகள் இல்லாதவனுக்குச் செயல்கள் இல்லை. செயல்கள் இல்லாதவனுக்குக் கட்டளைகள் இல்லை. கட்டளைகள் இல்லாதவன் தலைவன் இல்லை. தலைவன் ஆக முடியாதவன் எப்படி அரசனாவது? அரசன் ஆகாதவன் எப்படிச் சக்கரவர்த்தியாவது? அவள் சக்கரவர்த்தினி அல்லவா? நிறையப் பேசுவாள். நிறைவாகப் பேசுவாள். ஆனாலும் அவள் பார்த்தனிடம் அதிகம் பேசியதில்லை. நெஞ்சகலில் தீபம் ஏற்றும் அவளின் அகல்விழிச் சிறு அசைவில், யுகங்களைத் தாண்டும் நீண்ட கதையாடல்கள் நடந்த நினைவுகள் நெஞ்சில் பூக்கும். அதனால் அவளிடம் பேச வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு எழுந்ததில்லை. ஆனால் அவளிடம் இப்போது பேசத் தவிக்கிறான். அஸ்தினபுரியிலிருந்து கானகம் வந்த நாள் முதல், அவளிடம் தனியே பேச வேண்டும் என்ற தவிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அந்தத் தவிப்பால் விலகி விலகி நிற்கிறான். அங்கு அந்தக் கொடும் செயல் நடக்கும்போது வெறும் தூசாக இருந்துவிட்டு, இங்கு எப்படி அவளிடம் பேசுவது? அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைக்கும்போதெல்லாம், கண்ணனையே அழைக்கிறான் என்று அறிந்தாள். அவள் கண்ணனின் பெண்வடிவம் என்ற மயக்கம் அவனுக்கு உண்டு. தனக்குள் கண்ணனே எழுகிறான் என்பதையும் கண்டாள். அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது. அதனால்தான் அவளிடத்தில் அவன் அதிகம் பேசியதில்லை. ஆனால் இப்போது அவளிடம் பேச வேண்டும் என்று தவிக்கிறான். பார்த்தன் “திரௌபதி” என்று அழைப்பதைத் தவிர்ப்பான். தவறி “திரௌபதி” என்று அழைத்துவிட்டால், அவன் உடலும், கைகளும், காற்றும் அறியாமல் நடுங்குவதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். இப்போதெல்லாம் அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைத்த பின்புதான் திரும்புகிறாள். “திரௌபதி” என்ற அந்தப் பெயர், அவள் தந்தை துருபதன் நினைவை எழ வைக்கிறது. ஞாபகத்தீ எரிய வைக்கிறது. குருவுக்காக என்றாலும், யாருக்காக என்றாலும், மனிதனை மனிதன் சிறுமைப்படுத்தும் கணம் சுகமாக இருக்கலாம். அந்தக் கணத்தில் வெற்றி பெற்றதாய்க் களிப்புறலாம். அந்தக் கணத்தைத் தாண்டிவிட்டால், அந்தக் கணம் இறக்கி வைக்க முடியாத, அணைக்க முடியாத கனமான கனல் கல் என்றாகிவிடுகிறது. அது அழுத்திச் சுட்டுக்கொண்டே இருக்கும். யுகங்களைக் கடந்தும் கூட அது அணைவதே இல்லை. கணத்தில் செய்த பிழைகளை யுகங்கள்வரை ஓடியும், உழைத்தும் திருத்திவிட முடியுமா? யுதிஷ்டிரன் திரௌபதியைச் சூதில் வைத்த கணம் எத்தனை சிறுபொழுது? இமைக்கணம். அதன் வலி யுகங்களின் வலி; யுகமாந்தர்களின் வலி. அதைத் திருத்திவிட முடியுமா? கணங்களைக் காத்த மனிதன் யுகங்களைக் காத்தவன் ஆகிறான். மகிழ மரத்தில் சாய்ந்து நின்று, நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு, வானத்தின் நீலத்தையும், மேகங்களின் சித்திரத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தன், ஓடை ஓரத்தில் அவிழ்ந்த கூந்தலோடு அமர்ந்திருந்த திரௌபதியைப் பார்த்ததும் திடுக்கிட்டான். காண்டீபம் ஏந்தும் கைகள் நடுங்கின. கை நடுக்கத்தில், சிறு நரம்புகள் பாம்புகள் போலப் புறங்கையில் அசைந்தன. பதறும் கால்களுக்குக் கீழே பூமி பிளந்துவிடாதா? எப்படி அவளிடம் பேசுவேன்? திரௌபதி ஓடையின் கரையில் கிடந்த சந்தன நிற வட்டக்கல்லின்மேல், பெரிய வாழைப்பூவைக் கொய்து குந்த வைத்ததுபோலக் குந்தி, பீமன் தேடிக் கொண்டுவந்த புல் அரிசியைச் சமைப்பதற்காகக் கழுவிக்கொண்டிருந்தாள். வண்டிச் சக்கரம் அளவுக்குப் பெரியதாக இருந்த அந்தக் கல்லைப் பீமன் வெகு தூரத்திலிருந்து தன்னந்தனியாய்த் தூக்கிவந்து அவளுக்காகப் போட்டுவைத்தான். ராஜ நாகங்கள் மலையில் புரள்வதுபோல, அவிழ்ந்த கூந்தல் கற்றைகள் காற்றில் அவள் முதுகிலும், கல்லிலும் புரண்டன. அவளுக்கு எத்தனை நீளமான கூந்தல்! அவள் கொண்டை போடும்போது, தலையின்மேல் ஒரு தலை இருப்பதுபோல இருக்கும். பொன்னும், மணியும், முத்தும், ரத்தினமும், இந்திர நீலமும், மரகதமும், மாணிக்கமும், பூங்காடும் நிறைந்த அவள் கொண்டை, வண்ண மீன் விளையாடும் கடலை உருட்டிக் கொண்டையாக வைத்ததுபோல் குளிர்ந்து ஜொலிக்கும். ஊர்ப் பெண்கள் எல்லாம் அவள் போடும் கொண்டையை நினைத்து, கனவிலும் பெருமூச்சு விடுவார்கள். கூடியிருந்தால் அலர் பேசுவார்கள். தனித்திருந்தால் உள்ளுக்குள் ரகசியமாய்ப் புகழ்வார்கள். சில நேரம் புழுங்குவார்கள், சில நேரம் அழுவார்கள், சில நேரம் சிரிப்பார்கள். அந்தக் கூந்தல் அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்தது. சிக்கில்லா அவள் கூந்தலில் சிக்கிக்கொள்ளாத மனம் உண்டா? ஆடவர்களைப்பற்றித் தனியாக என்னச் சொல்ல? கொடுத்தே பழக்கப்பட்ட கர்ணன்கூட அவளிடம் எடுக்க நினைத்தான் என்றால்… அந்தக் கூந்தலில் பார்த்தன் குழந்தையாகத் தவழ்ந்த காலம் வரம். யாருடைய சாபம், அதே கூந்தல் துச்சாதனன் கையில் அவளை இழுத்து வரும் கயிறானது? காலம் எத்தனை கொடியது! பதிமூன்று ஆண்டுகள் கழித்தேனும் அவள் கொண்டையிடுவாளா? காலமே அறியும். உச்சம் பெரும் எல்லாமும் நீச்சம் பெறும் என்றால் உச்சம் எதற்கு? அதில் என்ன பெருமை? சிறுமையைக் கடந்துதான் பெருமை, பெருமைப்பட வேண்டும் போலும். பார்த்தன் ஆழமாக மூச்சை இழுத்து, நெஞ்சுக்குள் நிறுத்திப் பையப்பைய விட்டான். கண்ணின் இமைச் சுவர்களில் நீர் திரண்டு நின்றது. வெண்விழி நரம்புகள் சிவப்பேறின. கண்களை மூடித் திறந்தவன், தலையை மெல்ல ஆட்டிக்கொண்டு மீண்டும் திரௌபதியை நோக்கினான். விழியில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளி, அவன் கால் பெருவிரல் நகத்தில் பட்டுத் தெறித்தது. வெந்நீர்த் துளி விழுந்ததுபோல் காலை உதறினான். அவள் உடுத்திருந்த மரவுரிச் சேலை, ஓடையில் இருந்து எழுந்த குளிர்ந்த காற்றில் அசையும்போது, அக்கினிக் குண்டத்தில் மலர்ந்த அனல் மலர்போலத் தெரிந்தாள். கரையில் இருந்த கல்வாழைப் பூக்கள் காற்றில் அசைந்து அசைந்து அவள் தலையைத் தொட்டன. மேகத்தில் நட்சத்திரங்கள் பூப்பதுபோல இருந்தது. வாயில் பசும்புற்கள் வழிய ஓடிவந்து திகைத்து, அங்கும் இங்கும் பவழம் போன்ற கண்களால் குழந்தைபோலப் பார்த்து, அவளை முகர்ந்துவிட்டுப் போகும் வெண்முயல்கள்! தண்ணீர் குடித்துவிட்டுப் போகும் மான்கள் அவள் முகம் நோக்கி முகம் நீட்டும்! ஆண் மயில்களின் சேட்டைக்கு அஞ்சுவதுபோல, அவள் அருகில் வந்து மேயும் பெண்மயில்கள்! பழமரங்களில் கொஞ்சும் கிளிகள் கொத்தி எடுத்து வந்த பழங்களை அவள் காலடியில் போட்டுவிட்டு, அவள் தோள்மீது அமர்ந்து கொஞ்சின. சொந்த வீட்டில் விளையாடும் குழந்தைகள் போல, இலக்கின்றி ஓடையில் நீந்தின மீன்கள்! கழுவிக்கொண்டிருந்த அரிசியில் கைப்பிடி அள்ளி ஓடையில் எறிந்தாள். ஒரு பிடி அள்ளி மயிலுக்கும், கிளிக்கும், அணிலுக்கும் கரையில் தூவினாள். மீன்கள் எல்லாம் அந்த அரிசி விழுந்த இடத்தை நோக்கிக் குவிந்தன. ஓடையில் மீன்கொத்துகள் மலர்ந்தன. திரௌபதி இதழ்கள் மெல்ல விரிய, மீண்டும் ஒரு பிடி அள்ளிப் போட்டாள். மீன்விழியாள் மீனோடு விளையாடினாள். அன்னை வயதில் ஒரு குழந்தை அங்கு களித்துக்கொண்டிருந்தாள். பார்த்தன் குனிந்து காலடியிலிருந்த மகிழம்பூ ஒன்றை எடுத்து, அவளுக்குள் இருந்து வெளிப்படும் குழந்தையை விரட்ட, அவள்மேல் வீசப் போனான். ஏதோ நினைத்து நிறுத்திப் பூவை முகர்ந்தபடி, மரத்தில் வலது காலை ஊன்றிச் சாய்ந்து நின்று, அவளை மீண்டும் பார்த்தான். நரம்புகள் ஓடிய அவன் கால், மரத்தின் கிளைபோலத் தோன்றியது. மகிழ மரத்தில் ஏறிக்கொண்டிருந்த சித்தெறும்புகள், அவன் பாதத்தின் சிறு வரிகளை நோக்குவதுபோல நின்று, தலை அசைத்து முகர்ந்தன. கூச்சத்தில் பார்த்தன் பாதத்தைச் சற்று அசைத்தான். சித்தெறும்புகள் வளைந்து வரிசையாக மரத்தில் ஏறின. கிருஷ்ணை, பார்க்கப் பார்க்கப் புதிதாகத் தோன்றிக்கொண்டே இருந்தாள். எங்குதான் இந்த அழகுப் பெண்களுக்குள் மறைந்திருக்கிறது? பார்க்கும் தோறும் புதையல்போல வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இத்தனை நாளாய் இவளை நாம் பார்க்கவே இல்லையோ?” என்ற ஐயம் அவனுக்குள் எழுந்தது. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துக்கொண்டான். யுதிஷ்டிரரும் பீமனும் அவர்கள் செயலில் மூழ்கியிருந்தார்கள். திரௌபதி மீண்டும் கைப்பிடி அரிசியை அள்ளி மீனுக்குப் போட்டாள். ஒரு பெரிய மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்து அவள் பாதத்தை முத்தமிடுவதுபோல் வாயைக் குவித்துத் திறந்து துள்ளியது. ஒரு துள்ளலில் அதன் வால் அவள் காலைத் தீண்டியது, கூச்சத்தில் சிலிர்த்து மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்து, கல்லில் உட்கார்ந்திருப்பதை மறந்து, அரிசியோடு கீழே சாய்ந்தாள். பார்த்தன் அங்கு எப்படிப் போனான் என்று உணரும்முன், அவளை ஒரு கையிலும் அரிசியை ஒரு கையிலும் பற்றித் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றிச் சமதளத்தில் விட்டான். மகரந்தம் நிரம்பிய மரகதத் தாம்பூலத்தில் நிற்பதுபோல, மஞ்சள் பூ பூத்த புல்தரையில் கால்களை அழுத்தி நின்றாள். மஞ்சள் பூப் பூத்த புற்கள் அவள் பாதத்தை மூடிக்கொண்டன. பார்த்தன் தலையிலிருந்து உதிர்ந்திருந்த மகிழம் பூக்கள் அவள் நெஞ்சில் விழுந்து, அவள் தனங்கள் தாங்க, மணத்தது. மகிழம்பூ வாசத்தில் அவள் மூச்சை சற்று ஆழமாக இழுத்தாள். பார்த்தன் கண்களைப் பார்த்தவள், ஆடையைச் சரி செய்வதுபோல் நகர்ந்துகொண்டாள். பார்த்தன் தன் விரல்களில் அனல் கங்கு ஒன்றைத் தொட்ட வலியை உணர்ந்தான். ”கிருஷ்ணை” என்று அழைக்கப் போனவன் நா மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வியர்த்தது. கருப்பு வெள்ளை பளிங்கினால் செய்த மேகக் கோட்டையில் பதித்த இரத்தினத் தாம்பூலம் போன்ற மாலைச் சூரியன். வெண் பொன் வைர மணல் உருளும் சலசலக்கும் குளிர்ந்த நீர் ஓடை. அதன் அலை விசிறியிலிருந்து எழுந்து வரும் தென்றல். பூ, காய், கனி வாசம். ஓடையில் விளையாடும் மீன்கள். பூமரத்தில் விளையாடும் அன்றில்கள். கானம் பாடும் குயில்கள். வெண்பூக்கள் சூடிய நாணல் புற்களுக்கு இடையில் தவமிருக்கும் கொக்குகள். ஓடையின் உயரத்தில் ஓடைக்கு விசுறுவதுபோலச் சிறகடிக்கும் மீன்கொத்திகள். அக்கரையில் மேயும் பசுக்கூட்டங்கள். அணைத்து அமர்ந்திருக்கும் வானரங்கள். புல்லுக்கும் வலிக்காமல் நடந்து போகும் யானைகள். இந்த இடத்தில் மனைவியைத் தொடும்போது வியர்க்குமா? பார்த்தன் மனம் சிந்தனை அறுபட்டு நின்று போனது. தூரத்தில் நீலக்குயில் ஒன்று கூவ, எதிர் குரல் எழுந்ததும், பலாமரத்தில் இருந்த குயில் வெளிப்பட்டது. தூரத்தில் பீமன் பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிக் கொண்டு வந்து, விழுது விட்ட ஆலமரத்தடியைச் சுற்றிப்போட்டு உட்காரும் மேடை செய்தான். யுதிஷ்டிரர் இங்கு இல்லாததுபோல, வடக்கே இருந்த குளக்கரையில் அரசமரத்தடியில் குத்துக்காலிட்டு குனிந்து அமர்ந்திருந்தார். தோளில் கிடந்த அங்கவஸ்திரம் பூமிக்குப் போர்த்திவிட்டதுபோலக் கொஞ்சம் தோளில் கிடந்தது. இப்பொழுதெல்லாம் அவர் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. நடுங்கும் கைகளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதால் கைநீட்டிக் கூட யாரிடமும் பதில் விடுப்பதில்லை. ஏதோ ஒரு விடையைத் தேடிக் கொண்டே இருந்தார். நெற்றியில் அடிக்கடி கோடுகள் தோன்றி மறைந்தன. பீமன் அவர் அருகில் போகாமல் பார்த்தன் பார்த்துக் கொண்டான். திரௌபதியே பீமன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். நடுங்கும் கைகளால் முன்னால் கிடந்த வெண்மணலைச் சமன் செய்து, அரசச் சருகொன்றால் எதையோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தார். வாழ்வின் சம்பவங்கள் எழுதி அழிக்கக் கூடியவைதானா? திரௌபதியிடமிருந்து நகர்ந்து போக வழி தேடிய பார்த்தன், கல்லின் மீது கிடந்து துடித்த பெரிய மீனைச் சமையலுக்காகப் பாய்ந்து போய்த் தூக்கினான். ”இனியவரே, அது என் பாதத்தைத் தொட்டுவிட்டது. அது வாழட்டும், அதன் குடி பெருகட்டும். நீரில் விட்டுவிடுங்கள்” என்றாள். பார்த்தன் சிலையாகி விட்டான். கண்கள் இமைக்க மறந்துவிட்டன. ஆடைக்குள் தொடைத் தசைகள் ஆடின. நெஞ்சுக்குள் இருதயம் மலரும் ஓசை கேட்டான். வலது கையில் தலைகீழாய் தொங்கிய மீன் தனது விடுதலைக்காகப் பார்த்தன் கையில் துடித்துக் கொண்டு இருந்தது. பார்த்தன் இன்னும் சிலையாகத்தான் நின்றான். ஆனால், அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் இரு கரங்கள் குவிந்து மொட்டாகின. ”இனியவரே!” என்றாள் முன்னினும் இனிமையாக. செவி குளிர்ந்து, காது மடலில் மென்சூடு பரவிக், காது முடிகள் கூச்செறிந்தது. சிற்பத்தில் பூத்த புன்னகை. சொட்டிவிடுமோ என்பதுபோல இதழ்கனியில் தேன் ஈர மினுமினுப்பு. நோக்கி உளம் உருகினான். இந்திரப்பிரதஸ்தத்தில் வாழும் வரை இவளை ஆசையும் அகங்காரமும் கொண்ட பேரரசியாக மட்டுமே பார்த்து, மனம் விலகி இருந்ததை நினைத்து வெட்கினான். மனைவியரைக் கணவர்கள் புரிந்துகொள்வதே இல்லையோ? மனைவியர்கள் கணவர்கள் புரிந்துகொள்ளும் வட்டத்திற்கு அப்பாலுக்கு அப்பால் நின்று ஆடுகிறார்களோ? எத்தனை மூச்சடக்கிப் பாடிப்போனாலும் தொட முடிவதில்லை. இவள் யார்? அருகில் கிடந்த கருங்கல்லில் சிறு குழந்தையைப்போல துள்ளி ஏறி நின்று ”இனியவரே!” என்றாள் கர்ஜனையாக. அட்சயப் பாத்திரம் போலக் கையில் அரிசிப்பானை. குரலின் கடுமையில் கண்கள் விரிந்தன. அகன்ற கண்களும் அவிழ்ந்த கூந்தலும் மகிடன் தலையில் கொற்றவை எனக் காட்சிக் கொடுத்தாள். உடல் அதிர்ந்து, அகத்தில் பனித்துளி சொட்டிடக் குளிர்ந்தான். எண்ணங்கள் ஒழிந்தவனாய், யாரோ தன்னை இயக்குவதுபோலத் துரிதமாய் சென்று மீனை ஓடையில் விட்டான். மீன் ஆற்றில் நீந்தும் போதுதான் தனக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். திரௌபதி நீந்தும் மீனைப் பார்த்தாள். அவள் விழிகளும் நீந்தி மகிழ்ந்தன. ”கிருஷ்ணை” பார்த்தன் வாயில் இருந்து வார்த்தை வெளிப்படவில்லை. ஆனாலும் திரௌபதிக்குக் கேட்டது. திரௌபதி, கானக வாழ்க்கையை எளிமையிலும் எளிமையாக, ஏதிலியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் எப்படி கடத்துவது என்று எண்ணும் அறியாச் சிறுமிபோல நோக்கினாள். ”என்ன? இனியவரே” கண்களால் கேட்டாள். செவிவரை நீண்ட விழியும், கருங்குருவியின் இறகு இதழ் போன்ற இமை முடியும் அவள் கண்களை விசாலமாக மலரச் செய்தது. அவள் முகத்தைக் குழந்தையாக வடித்து வைத்தது. ‘’அஸ்தினாபுரத்தில் இத்தனை நடந்தபிறகும், இவளால் என்னை எப்படி இனியவரே என்று அழைக்க முடிகிறது. அதில் கேலி இல்லை. ஐவர்மீதும் இன்னும் அதிகப் பரிவிருக்கிறது. இவளால் மட்டும்தான் அது முடியுமோ’’ என்று நினைத்தபடியே ”எங்கு நின்றாலும் கருவறைப் பீடத்தில் நின்று அருளும் அன்னை எனவே தெரிகிறாய் தேவி” என்றான். திரௌபதி வாய்விட்டுச் சிரித்தாள். கானகம் முழுவதும் சிரிப்பொலி அலை அலையாய்ப் பரவியது. அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஓடையில், பெரும் காடு நகர்ந்து வந்ததுபோல் புழுதிப் பறக்க வந்து நீர் அருந்திக் கொண்டிருந்த எருமைக் கூட்டத்தின் தலைவன், நீர் வழியும் வாயோடு அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, வயிறு அதிர உறுமி, தலை தாழ்த்தியது. அவள் பாதங்களுக்கு இருபுறமும் வளைந்த வாள் போல அதன் கொம்பு மட்டும் காட்சி கொடுத்தது. எருமைகளின் வாசம் பிடித்து வந்த சிங்கக் கூட்டத்தின் முதல்வன் கோரைப்புல் புதரிலிருந்து ஓசை இன்றித் தலை நீட்டியது. அருகில் அடி பெருத்து நின்ற செண்பக மரத்திலிருந்து உதிர்ந்த செண்பகப் பூவில் ஒன்று காற்றில் மிதந்து வந்து, இதுதான் இடம் என்பதுபோல அவள் சென்னியில் விழுந்து, பாதத்தைத் தொட்டு, வான்பார்த்து மலர்ந்து அமைந்தது. பீடம் அமைத்துவிட்டு, மரக்கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்த பீமன், கோடரியைத் தரையில் ஊன்றித் திரும்பிப் பார்த்துக் கண்களைச் சுருக்கிக் கேள்வி எழப் புன்னகைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி முதல்முதலில் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தான். அவன் கைகள் நடுங்கவில்லை. நெஞ்சம் நிமிர்ந்தது. மீண்டும் பிறந்ததுபோலப் புன்னகைத்தான். குத்துக்காலில் உட்கார்ந்திருந்தவன் அங்கவஸ்திரத்தை இழுத்துத் தரையில் படாமல் தோளில் போட்டுக் கொண்டு, தரையில் அழுந்த உட்கார்ந்தான். உடம்பிலிருந்து பெரிய எடை இறங்கியதுபோல உடலை அசைத்தான். ”எதுவும் தூரத்தில் இல்லை, எல்லாம் அருகில்தான் இருக்கிறது” என்று தரையில் கிறுக்கினான். காதலி முன் பேச்சு வராமல் தவிக்கும் காதலன்போலப் பார்த்தன் தலை குனிந்தான் தலை குனிந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இதழில் மென்னகை பூத்தது. தன்னாலும் சிரிக்க முடியும் என்பதை நம்பினான். சில விஷயங்கள் எளியவைதான். அது எளியவை அல்ல என்பதை வாழ்க்கை உணர்த்துகிறது. ‘’விஜயரின் வில் பேசும் என்பது தெரியும். விஜயரும் பேசுவார். அதுவும் கவிதை பேசுவார் என்பது இன்றுதான் அறிந்தேன். இதற்காக நாம் கானகம் வரவேண்டியிருக்கிறது. விலை அதிகம்தான். ஆனாலும் அதுவும் நன்று. கண்ணனின் தோழருக்குக் கவிதை வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஒருவேளை கண்ணனின் தங்கையிடம் கற்றிருப்பார்.” என்று மீண்டும் சிரித்தாள். ஒரு சொல்லும் அவளிடம் கேலி இல்லை. ஆனால் பார்த்தனுக்கு வலித்தது. கண்ணனின் தங்கை என்றபோது அதில் கனல் இருந்தது. அவள் நெஞ்சம் ஏறி இறங்கி மூக்குச் சிவந்து மூச்சுச் சீறியது. விஜயன் என்ற பெயரை அவள் உச்சரித்ததும் காயத்தில் கொதி எண்ணெயை ஊற்றியதுபோல எரிந்தது. உலகில் யாரிடமும் தோற்காத காண்டீபம் ஒரு புல் என இருக்கும் காலமும் வரும் என்று அவன் எண்ணியது உண்டா? அவள் பார்க்காமல் இருக்க விழிகளைத் திருப்பிக் கொண்டான். அவளும் அவள் விழிகளைத் திருப்பிக் கொண்டாள். அங்கிருந்து நகர்ந்துவிடத் திரும்பினான் பார்த்தன். ‘இனியவரே’ என்ற அவள் குரலின் குழைவு அவனை நகரவிடவில்லை. திரும்பாமல் நிலம் நோக்கி நின்றான். திரௌபதியின் வாசம் அருகில். திரும்பியவன் அவள் இமைகளின் ஈரத்தைச் சுண்டுவிரலால் நீக்கினான். ”உயிர் போகிற வலி இருந்தாலும் யானைகள் அலறாது, துடிக்காது இனியவரே” என்றபடி அவள் தன் முந்தானையால் அவன் கண்களை ஒற்றினாள். ”நாம் வெறும் மனிதர்கள் மட்டும் தேவி” என்றபோது அவன் உதடுகள் கோணின. ”மனிதம் மட்டுமே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் இனியவரே!” என்றவள் விலகி நின்று ”என்னிடம் என்ன பேசவேண்டும், சில நாட்களாய் அவதிப்படுகிறீர்கள்” என்றாள். ‘எப்படி அறிந்தாள்?” அன்னையின் வடிவு. குழந்தையின் முகம். தித்திக்கும் சொற்கள். உடல் முழுவதும் பரவும் பரிவு. அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தவிப்பு. கைகளை இறுக்கி மூடிக்கொண்டான். என்ன நடந்தால் என்ன? அன்பு, காமம், ஆசை, கோபம் எல்லாம் இடம் கிடைக்கும் போதெல்லாம் துளிர்த்துவிடுகிறது. அதன் விழைவு வேர்கள் அறுபடுவதே இல்லையோ? இமைக்கணத்தில் துளி என விழுந்து கடலாகித் தடம் தெரியாமல் ஆழ மூழ்கடித்து விடுகிறது. மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்தபோது அவள் கல்லில் இருந்து சாய்ந்தது தெரியாமல் அல்ல, நான் தாங்கிக் கொள்வேன் என்ற தைரியத்தில்தானா? பார்த்தன் கால்களை அழுந்த பூமியில் பதித்தான். இதழ்கள் மலர்ந்தன. பார்வை அகத்திற்குத் திரும்பியது. நெற்றிப்பொட்டில் மனம் குவிந்து நின்றது. தலைக்குமேல் வானம் விரிந்து விரிந்து போனது. தலைக்குள் ஒளி வட்டங்கள் மின்னின. சென்னியில் திருவடித் தாமரை மலர்ந்தது போன்ற சிலிர்ப்பு. ”கானகத்திற்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் காண்டீபப் பயிற்சி செய்யவே இல்லை. நீங்கள் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள். பீமருக்குத் தனியாகப் பயிற்சி தேவை இல்லை. அவர் செய்யும் ஒவ்வொரு வேலையும் மல்லருக்கான பயிற்சிதான். பேரரசருக்கும் அப்படித்தான். சொல்வளர் கட்டுக்குள் புகுந்து சொற்கனிகள் உண்டு சொல்லாகவே மாறிவிடுவார். அவர் வேண்டும் என்றால் பகடை பழகலாம். இதை கோபத்தில் சொல்லவில்லை. அவர் உண்மையை தேடுபவர். தோல்வி பொய் என்று அவருக்குத் தெரியும். அவர் பொய்யைப் பொய்யாக்கிவிடுவார்.” இளையவர்கள் இருவரும் பரியும் பசுவும் மேய்க்கிறார்கள். அதுவே அவர்களுக்கு வித்தையும் ஞானமும் கொடுத்துவிடும். நீங்கள் படித்தது தனுர்வேதம். அதை ஓதவேண்டியது உங்கள் கடமை. கல்வி கற்பவனையே காதலிக்கிறது. கல்வி விலகா காதலி. என்றும் இளையவள். எப்பொழுதும் இனியவள். அவள் தன்னைக் காதலிப்பவனை அமுதூட்டிச் சிரஞ்சீவி ஆக்குகிறாள். நீங்கள் வில்வித்தை கற்பதில் ஓய்வு கொள்ளாதீர்கள். யார் கண்டார்கள், நாம் பெரும் போர் செய்தே நம் நாட்டை மீட்க வேண்டி இருக்கலாம்.’’ என்றவள் ‘’இளையவர்கள் பசி தாங்க மாட்டார்கள். அவர்கள் வருவதற்குள் சமைத்துவிட்டு வருகிறேன்.” என்று அவன் பதிலுக்குக் காத்திராமல் குடிலுக்கு நடந்தாள். ”ஏன் எனக்குப் பசிக்காதா?” என்றவன், இவ்வளவு நெருக்கமாகக் கிருஷ்ணையிடம் பேசியது உண்டா? என்ற எண்ணத்தில் மூழ்கினான். அவளுக்குள் பரவிய கூச்சம் நடையில் தெரிந்தது. இடுப்பில் வைத்திருந்த அரிசிப் பானையை இடது கையால் அழுந்த அணைத்தபடி, வலது கையால் சேலையை இழுத்து மார்பை மூடியவள், பின்புறம் புடவைச் சுருக்கத்தைத் தடவி இழுத்துச் சரிசெய்தாள். “அவர்கள் முன் நான் குந்தி அத்தையாகிறேன்,” என்றாள், திரும்பாமல் நடந்து போனாள். அந்த கணத்தில் அவளின் உயரம் கூடியதுபோல் அவன் உணர்ந்தான். அவள் மெல்லச் சிரிப்பது அவள் முதுகில் தெரிந்தது. குடிலுக்குள் நுழையும் முன், தத்தித் தத்திப் பின்னால் வந்த பறவைகளுக்கு அரிசியை அள்ளித் தூவிவிட்டு, குடிலுக்குள் நுழைந்தாள். குடிலுக்கு அருகில் படர்ந்திருந்த வசந்த மல்லிகைக் கொத்து ஒன்று அவள் தோளில் தட்டியது. பார்த்தன் காண்டீபத்தை எடுத்தான். மலைக் குகையில் தன் துணை மற்றும் குட்டிகளுடன் படுத்திருந்த ஆண் சிங்கம் எழுந்து, பிடரி உலுக்கிக் கர்ஜனை செய்தது. காண்டீபத்திலிருந்து எழுந்த ஒலி, எதிர்ச் சிங்கம் கர்ஜிப்பதுபோல் காடே அதிர்ந்தது. பார்த்தன் அம்பை எய்து எய்து, கணக்கிலாத் தூரத்தை இலக்கை வென்றுகொண்டிருந்தான். தானே தனக்குக் கற்பித்துக் கொண்டிருந்தான். தன்னைத் தானே வென்றுகொண்டிருந்தான். குருவும் சீடனும் ஒன்றாகும் புள்ளியில் நின்று மையம் கண்டான். அந்த நொடி முடிந்ததும், “இன்னும் வெகுதூரம்” என்பதுபோல் வெறுமையில் விழுந்தான். அந்த வெறுமையை வெல்ல மீண்டும் தொடங்கினான். கல்வியோ, கலையோ, அதன் ஆடலே இதுதானோ? தேடல், தெளிவு, உண்மை; உண்மை, தெளிவு, தேடல். கீழிருந்து உச்சிக்கு. உச்சியிலிருந்து தரைக்கு. எங்கே நிற்பது? காண்டீபத்திலிருந்து அம்பு பறந்துகொண்டே இருந்தது. திரௌபதி பொங்கும் பானையில் கழுவிய அரிசியை அள்ளிப் போட்டாள். அவிழ்ந்து அவளை மூடியிருந்த கூந்தல் அடுப்பில் பட்டுவிடாமல் சற்றுத் தள்ளி அமர்ந்து, ‘பார்த்தன் என்ன கேட்கப்போகிறான்’ என்ற நினைப்பில் எரியும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் எரியும் தழல் ஒளி, அவள் கூந்தலில் நுழைந்து அவளை அக்கினிச் சிலை போல் செய்தது. உடைத்த விறகுகளை அள்ளிச் சேர்த்து, மழையில் நனைந்துவிடாமல் இருக்கப் பாதுகாப்பாய், ஆலமர அடியில் வீடுபோல் இருந்த பொந்தில் வைத்த பீமன், தாமரைக் குளத்திற்கு நீந்தப் போனான். யுதிஷ்டிரர் குளித்துவிட்டு வந்து கமலாசனத்தில் அமர்ந்து தன்னில் மூழ்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரால் தியானத்தில் அமர முடிந்ததை, பார்த்தன் அம்பு எய்தபடியே பார்த்தான். ஒரு அம்பை அதிவேகத்தில் எய்து, அது இலக்கைத் தொடப்போகும்போது, மறு அம்பை எய்து அதைத் தடுத்து, தன்னிடமே வரவழைத்தான். வந்த அம்பைத் தன் கை அம்பால் அடித்து, இரண்டையும் ஒன்றாகவே வானுக்கு அனுப்பினான். அங்கிருந்து இரண்டும் பிரிந்து, இருவேறு பாதையில் அவனிடமே வந்தது. இரண்டு அம்பையும் பிடித்து, அம்பறாத் தூளியில் இட்டவன், காண்டீபத்தைக் கண்ணில் ஒற்றி, மகிழ மரத்தில் மாட்டி வைத்துவிட்டு நீர் ஆடப் போனான். நகுலனும் சகாதேவனும் காட்டில் தேடிக் கொணர்ந்த தேன், கனிகள், கிழங்குகளைத் திரௌபதியிடம் கொடுத்துவிட்டு, மாடுகளையும் பரிகளையும் அவற்றிற்குரிய இடத்தில் கட்டினார்கள். சகாதேவன் பால் கறந்து, அருகில் உள்ள ஆசிரமத்திற்கு எடுத்துப்போனான். நகுலன் தேடி எடுத்துவந்த நோய் தீர்க்கும் மூலிகைகளை ஆசிரமத்தில் கொடுக்க அவன்கூடச் சென்றான். வன உயிர்கள் தீயில் மடிந்துவிடக் கூடாது என்பதால், அவர்கள் இரவில் அனல் எழுப்புவதில்லை. கதிரவன் இருக்கும்போதே ஐவரும் உண்டார்கள். திரௌபதி, ஐவரும் உண்டபின் உண்டாள். நகுலனும் சகாதேவனும் அவளுக்கு உதவினார்கள். அஸ்தினபுரியிலிருந்து வந்த பின்பு இன்றுதான் பார்த்தன் பாடினான். மெல்லிய ராகத்தில் பாடியபடி, மகிழ மரத்தடியில் நிலவொளியில் காத்திருந்தான். அவனையும் அறியாமல், தாளத்திற்கு ஏற்றவாறு அவன் கைகள் அபிநயம் பிடித்தன. நிலவொளியில் நிழற்சிலைபோல நடந்து வந்த திரௌபதி, பார்த்தன்முன் அவன் தொடாத தூரத்தில் அமர்ந்தாள். பார்த்தனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “இனியவரே!” நீண்ட நாட்களுக்குப் பின் “விஜயரைப் பார்த்தேன்” என்று திரௌபதி பேச்சைத் தொடங்கினாள். “உன்னால்தான் மீண்டேன் தேவி! பேரரசர் கூட மீண்டுவிட்டார்” “நல்லது. வாழ்வென்பதே அதுதானே இனியவரே! நிலவின் ஒளியால் அந்த இடத்தை மனதில் அழியாச் சித்திரக்கூடமாக்கினாள். சற்றுமுன் பார்த்த இடமா இது?” என்று அதிசயித்தான். “உங்கள் மனைவியிடம் பேச இத்தனை நாள் ஏன் தவித்தீர்கள்?” அவள் நீண்ட, கூர்ந்த நாசி, கற்சிலையின் நாசிபோல் நிலவொளியில் பளபளத்தது. அதில் ஒரு காலத்தில் மின்னிய மாணிக்க மூக்குத்தியை எண்ணினான் பார்த்தன். பெரும் மூச்சு எழுந்தது. “பகடையாட்டத்திற்குப் பின்னும், துச்சாதனன் கொடும் செயலுக்கு மௌனமாய் இருந்தப் பின்னும் உன்னோடு பேச முடியும் என்று என்னை நான் எப்படி நம்ப வைப்பது, தேவி!” பார்த்தன் குரல் தழுதழுத்தது. மேலும் பேச முடியாமல், மேலே பார்த்தான். முழு நிலவின் ஒளி, இலைகள் வழியாகப் பனித் துகளாக வழிந்தது. தூரத்தில் விளா மரத்தைச் சுற்றி மின்மினிகள் பறந்தன. திரௌபதியின் நீண்ட மூச்சொலியால் அசைந்து திரும்பி, அவளைப் பார்த்தான். நிலவொளியில் நெய்த துகில் கூடத்திற்குள் கொலுவிருப்பதுபோல் சிலையாகி இருந்தாள். அவள் கண்கள் தூரத்தை நோக்கின. அவள் தனக்குள்ளேயே பார்க்கிறாள் என்று பார்த்தன் புரிந்து கொண்டான். சிலையின் புன்னகைபோல அவள் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. “எப்போதும் எப்படிப் புன்னகையோடு இருக்கிறாள்? எப்படி அந்தக் கணத்தைக் கடந்தாள்? கனத்தைத் துறந்தாள்? “இதை எப்படி அவளிடம் கேள்வியாய்க் கேட்பது? துகில் உரியும்போது எப்படி இருந்தது என்றா? கண்ணன் துகில் வழங்கியபோது எதை உணர்ந்தாய் என்றா? எப்படி இந்த நிகழ்விலிருந்து மீண்டாய் என்றா? ஏன் அந்த நிகழ்வை நினைத்தேன்? நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் அதை மறந்துவிட்டுச் செல்ல வேண்டும். ஏன் அதை மனதில் ஓட்டி ஓட்டிப் பார்த்தேன்? திரௌபதி மன ஓட்டத்தைப் படித்துவிட்டாள். “இப்போது எப்படி கேட்பது? என்ன கேட்பது?” பார்த்தனால் பேச முடியவில்லை. பொய் சொல்லவும் விருப்பம் இல்லை. ‘கண்டுபிடித்துவிடுவாள்’. “சொல்லுங்கள் இனியவரே! என்ன என்னிடம் கேட்க வேண்டும்?” “வேண்டாம் தேவி, அதைக் கடந்து செல்வோம்” “இது நடக்காதது அல்ல, விஜயரே! எந்த இழிவும் நமக்கு நடக்காதவரை அது சம்பவம் மட்டும்தான். நமக்கு நடந்தால் மட்டும்தான் துயரம்.” பார்த்தன் பதறிப்போனான், நெஞ்சு ஏறி இறங்கித் துடித்தது. “இந்த இழிவை நீங்கள், நான், எல்லோரும் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் நமக்கு வலித்திருக்காது. வலிக்காததற்கு ஒரு காரணம் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும். கடந்துபோயிருப்போம்.” பார்த்தன் தலை கனத்தது, பின் மண்டையில் படீர் படீர் என்று அறைந்துகொண்டான். அதற்குமேல் பேசாமல் எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்தான். தோள்பட்டை இறுகிக் கனத்தது. உடலின் ஒவ்வொரு அணுவிலும் கனல் ஊசிகள் ஏறும் வலி. விழுந்து புரளலாம்போல் இருந்தது. “வேண்டாம், செல்வோம்” என்றான். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. அவள் இனிமையாக ஏதேனும் பேச மாட்டாளா? என்று மனம் ஏங்கியது. உடலில் அமுதம் ஊறாதா? என்று தவித்தான். கானல் நீரைத் தேடி ஓடுபவன் நாவில், பனிக்கட்டி மழை விழ வேண்டாம்; விசும்பின் துளியாவது விழுந்தால் போதுமே! ஆண் எவ்வளவு பெரிய சுயநலக்காரன்! பெண்ணிடம் அவன் வேண்டிக்கொண்டே இருக்கிறான். அவள் காயங்களிலும் தேன் ஊறாதா என்று நக்கிப் பார்க்கிறான். பார்த்தனுக்கு ‘ஓ’ என்று கத்திக்கொண்டு ஓடி, அருகில் உள்ள ஓடையில் குதிக்க வேண்டும்போல் அகம் எரிந்தது. திரௌபதி சற்று நகர்ந்து, மெல்லக் கை நீட்டி அவன் நெஞ்சத்தைத் தொட்டாள். குழைவான குளிர் விரல்கள். பார்த்தன் நெகிழ்ந்தான். அந்தக் கைகளை அப்படியே நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்போல் உருகினான். கண்கள் சிவந்து காந்தியது. “அமைதி அடையுங்கள்” என்றாள். தன் கையை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கோர்த்துக்கொண்டாள். காற்றில் பறந்த முடி, அவள் நெற்றியில் சுருண்டு விழுந்து, கண்களை மறைத்து அழகைக் கூட்டியது. தனது விரலை நீட்டி அதை ஒதுக்கப் போனவன் நிறுத்திக்கொண்டான். அவளே தனது புறங்கையால் ஒதுக்கினாள். அந்த நொடியில் அவளுக்குள்ளிருந்து ஒரு மயில் எழுந்து எட்டிப் பார்த்து மறைந்தது. அவள் தொண்டைக்குழி மெல்லத் துடித்தது. அவள் கழுத்தோரம் சுருண்டிருந்த பூ முடிகள், நிலா ஒளியில் ஈரம் கொண்டிருந்தன. இரவில் மலரும் பவழ மல்லி வாசம் கனமாக வந்து தாக்கியது. அருகில் இருந்த குளத்திலிருந்து அல்லிகள் மலரும் வாசம் எழுந்து வந்து சூழ்ந்தது. அதற்குமேல் அங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணினான். “தேவி, நீ குடிலுக்குச் செல். நான் மல்லர் உருவாக்கி வைத்திருக்கும் புல் படுக்கைக்குச் செல்கிறேன்” என்றான். குரலில் கனமும் கண்டிப்பும் இருந்தது. திரௌபதியின் உடலில் ஒரு சிலிர்ப்புத் தோன்ற, மெல்ல அசைந்து இதழ் பிரியாமல் புன்னகைத்தாள். பார்த்தனுக்கு அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளை அருகில் வைத்துத் தாங்கிக்கொள்வதும் கடினமாக இருந்தது. “ஆணுக்கு உடம்பு ஒரு ஆயுதம் மட்டும்; அது போட்டி போடும், வெட்டும், வெட்டப்படும். பெண்ணுக்கு உடம்பே இதயம். கையளவு இதயம் கொண்ட ஆணுக்கு அது எப்படிப் புரியும்? வயதோ, கல்வியோ, குலமோ அதைப் புரியவைத்துவிட முடியாது. அதனால்தான் பெண்ணின் உடல் இங்கு காட்சிக்கு இழுக்கப்படுகிறது.” அவளுக்குள் அனல் எழுந்து ஆடியது. கண்ணாடிக் குவளைக்குள் வைக்கப்பட்ட தீபம்போல் அவளுக்குள் எரியும் அனலை அவன் பார்த்தான். “குளிர்ந்த நதியில் தீபத்தை ஏற்றி மிதக்க விடுவதுபோல், குளிர்ந்திருந்த அவளுக்குள் மீண்டும் அனலை ஏற்றி வைத்து விட்டேனோ?” என்று முகம் வாடினான். “என்ன கேட்க நினைத்தேன்?” அவனுக்குள் கேள்வியே எழவில்லை. அவளிடம் பேச வேண்டும் என்ற வேட்கையில் குழப்பிக்கொண்டேனா? ஏதாவது உதவி செய்வதுபோலப் பேசியிருக்கலாமே? ஏன் சிறு விஷயத்தையும் பெரியதாகக் குழப்பிக்கொள்கிறேன்? பெரிய வலி ஏற்படும்போது, சிந்தனை சிறு சிறு விஷயங்களைக் கையாள முடியாமல் தவிக்கிறது. அவன் முக வாடலைக் கண்ட திரௌபதி, அவன் மகிழ மெல்லச் சிரித்தாள். “விடுங்கள் விஜயரே! பெரும் பிரச்சினைகள் வரும்போது பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று எழுந்தவள், தன் பின்புறத்தைத் தட்டி அங்கிருந்த புற்களைப் பறக்கவிட்டாள். கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் நடுவிலிருந்து எழுந்தவள், அவர்கள் உடன்வரச் செல்வதுபோல் சென்றாள். எங்கிருந்தாலும் அவள் சக்கரவர்த்தினிதானே! “தேவி!” நின்று திரும்பிப் பார்த்து, “என்ன வேண்டும், குழந்தாய்?” என்பதுபோல் நோக்கினாள். “தேவி! அந்தக் கணத்தில் எப்படி கண்ணனை அழைத்தாய்?” “இத்தனை நாளாய் இந்தக் கேள்விக்குத்தான் தவித்தேன், கிடைத்துவிட்டது!” என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் அவனை உந்தி எழுப்பியது. திரௌபதி முகம் ஒளிர்ந்தது. விழிகள் கனிந்தன. இதழில் புன்னகை பூத்தது. விளா மரத்தைச் சுற்றிப் பறந்த மின்மினிகள் ஏனோ நகர்ந்தன. அதனால் தூரத்தில், அவள் சிரசுக்குப் பின்னால் மின்மினிகளின் ஒளிக்கோலம். “நம்மிடமிருந்து நம்மைத் துறப்பது அத்தனை எளிதில்லை, விஜயரே! அந்தக் கணத்தில் என்னிடமிருந்து என்னை நான் துறந்தேன், இனியவரே! அந்தக் கணம் எனக்கு வாய்த்தது. எனக்குள் நான் இல்லாதபோது வேறு யார் அங்கு இருப்பார்கள்? கண்ணன் வந்தான் என்றார்கள்.” என்றவள், காற்றும் கசங்காமல் மெல்ல நடந்தாள். பெண்வேடமிட்ட கண்ணன் நடந்து போவதுபோல் இருந்தது. குனிந்து கையில் கிடைத்த மகிழ மலர்களை அள்ளி, அவள் பாதம் பதிந்த இடத்தில் தூவினான். திரௌபதி திரும்பாமல் கடைக்கண்ணால் அதை நோக்கிப் புன்னகைத்துத் தன் நெஞ்சத்தைப் பார்த்தாள். மாலையில் பார்த்தன் சிரசிலிருந்து விழுந்த மலர்கள் அவள் தனத்தின்மீது மணத்துக் கொண்டிருந்தன. https://solvanam.com/2026/01/11/சரணாகதி/- சித்தாந்த வினா விடை
சித்தாந்த வினா விடை- தொடர் 4 - அருணைவடிவேல் முதலியார் அனுமான அளவையின் வகை இனி, காணப்பட்ட ஏதுவைக்கொண்டு காணப்படாத துணிபொருளை உணர்வதாகிய அனுமான அளவை,‘தன் பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்' என இருவகைப்படும். (அ) தன் பொருட்டு அனுமானம் துணிபொருளை மூன்றிடங்களில் வைத்து மூன்று வகை யான ஏதுக்களால் ஒருவன் தானே ஆராய்ந்து துணிவது, தன் பொருட்டனுமானமாகும். துணிபொருளை, ‘சாத்தியம்' என்பர் வட நூலார். மூன்று இடங்களாவன: 'தனது ஆராய்ச்சிக்கு அப்பொழுது உரியதாய் உள்ள இடம், அந்த இடத்தைப் போலவே நின்று அதற்கு உபமானமாவதற்கு உரிய இடம், அந்த இடத் திற்கு நேர்மாறான இடம்' என்பன. எடுத்துக்காட்டாக, ஒருவன் ஒருமலைமேற் புகையைக் கண்டபொழுது, ‘இம்மலை புகையுடையதாய் இருத்தலால், தீயுடையது' என்று ஆராய்ந்து துணியுமிடத்து, அத் துணிவிற்கு அவன் முன்பு அடுக்களையில் (சமயலறையில்) புகையைத் தீயுடன் கண்ட காட்சியே காரண மாகும்; ஆகவே, 'இம்மலை அடுக்களை போன்றுள்ளது' என்ற உவமையுணர்ச்சி அப்பொழுது அவனுக்கு உளதாகும். மேலும் “தீ இல்லாத இடத்தில் புகை இருத்தல் இல்லையோ? என அதனை எதிர்மறுத்து உணருமிடத்து, தீயோடு சிறிதும் இயைபில்லாத தாமரை ஓடைக்கண் புகையில்லாமை அவனுக்குத் தோன்றும். அதனால், தீயை அவன், ‘மலை, அடுக்களை, தாமரையோடை' என்னும் மூன்றிடங்களில் வைத்துத் துணிபவனாதலறிக. மூன்றிடங்கள் மூன்றிடங்களும் 'மூன்று பக்கம்' (பட்சம்) என வழங்கப் படும். அவற்றுள், ஆராய்ச்சிக்குரிய இடம், பக்கம் (பட்சம்) என் வழங்கப்படும். அதற்கு உபமானமாதற்குரிய இடம், ‘ஒத்த பக்கம் (சபட்சம்)' எனப்படும். அதற்கு மறுதலையாய் உள்ள இடம் 'ஒவ்வாப் பக்கம் (விபட்சம்)' எனப்படும். மேற்காட்டிய உதாரணத்தில், மலை பக்கம்; அடுக்களை சபக்கம்; தாமரை யோடை விபக்கம். பக்கத்திலும், சபக்கத்திலும் துணியப்படும் பொருள் இருக்கும்; விபக்கத்தில் அப்பொருள் இராது. மூன்று ஏதுக்கள் இனி, மூன்று ஏதுக்களாவன: 'இயல்பு ஏது, காரிய ஏது, இன்மை ஏது' என்பன. காரிய ஏது என்பதனாலேயே‘காரண ‘ஏது’ என்பதும் தழுவிக் கொள்ளப்படும். இன்மை ஏதுவை அனுபலத்தி ஏது' என்பர். இயல்பு ஏது இயல்பு ஏதுவாவது, பொருள்களை உணர்தற்குச் சொற்கள் ஏதுவாதல்; அஃதாவது, மரம் பூத்தமையை நேரிற் காணாதிருக்கின்ற ஒருவனிடத்தில் மற்றொருவன் வந்து, மரம் பூத்தது’ என்று சொல்வானாயின், கேட்டவன் அச்செய்தியை இனிது உணர்கின்றான். அவ்வாறு உணர்தற்கு ஏதுவாய் நின்றது எது? ஒருவன் வந்து சொல்லிய அச்சொல்லே. அச்சொல் அப்பொருளை எவ்வாறு உணர்த்திற்று? என்று வினவினால், `'இவ்வாறு உணர்த்திற்று’ என விளக்கிக் கூற முடியுமோ? முடியாது: ஆகவே, ஒவ்வொரு சொல்லும் அதனதன் பொருளை உணர்த்துவதில் இயல்பாகவே ஓர் ஆற்றல் பெற்றிருக்கின்றது என்று கொள்ள வேண்டும்; அதனால் பொருளை நேரே காணாமல் பிறர்சொல்லும் சொல்லால் உணருமிடத்து அச்சொல்லாகிய ஏது, ‘இயல்பு ஏது' எனப்படுகின்றது. "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” என்பது தொல் காப்பியம். காரிய ஏது காரிய ஏதுவாவது, காணப்படாத காரணப்பொருளை உணர்தற்கு, காணப்பட்ட அதன் காரியப்பொருள் ஏதுவாய் நிற்றல். உதாரணமாக, காணப்படாத நெருப்பை உணர்தற்கு ' அதன் காரியமாகிய புகை காணப்பட்டு ஏதுவாய் நிற்றலைக் காண்க. காரண ஏது காரண ஏதுவாவது, காரியம் நிகழாதிருக்கும்பொழுதே அது நிகழும் என உணர்தற்கு அதன் காரணப் பொருள் ஏதுவாய் நிற்றல். உதாரணமாக மழை பெய்யாதிருக்கும் பொழுதே மழைபெய்யும் என உணர்தற்கு, இடித்தும், மின்னியும் இருண்டும் எழுகின்ற மேகம் ஏதுவாய் நிற்றலை அறிக. 'காரிய ஏது' என்பதனாலேயே ஒற்றுமைபற்றிக் காரண ஏதுவும் தானே பெறப்படும் என்பதுபற்றி இதனை வேறுகூறாமல் 'மூன்று ஏது' என்றே கூறுவர். இன்மை ஏது அல்லது அனுபலத்தி ஏது இன்மை ஏது அல்லது அனுபலத்தி ஏதுவாவது, காரணப் பொருளினது இன்மையை உணர்தற்குக் காரியப்பொருளினது இன்மையும், காரியப் பொருளினது இன்மையை உணர்தற்குக் காரணப் பொருளினது இன்மையும் ஏதுவாதல். எடுத்துக் காட்டாக, குளிர் இல்லாமை, 'பனி இல்லை' என்று உணர்தற்கும், பனி இல்லாமை, 'குளிர் இராது' என்று உணர்தற்கும் ஏதுவாய் நிற்றல் உணர்க. குளிர், காரியம்; பனி, காரணம். (ஆ) பிறர்பொருட்டனுமானம் மேற்சொல்லியவாறு, காணப்படாத பொருளை ஏதுக் களால், தான் அனுமித்து (கருதி) உணர்ந்ததை அம்முறையிலே பிறர் உணரும்படி எடுத்துச் சொல்வது பிறர்பொருட்டனுமான மாகும். எனவே, 'உள்ளத்துள்' உணர்வது தன்பொருட்டனு மானம்' என்பதும், 'அதனை வெளியில் சொல்லால் சொல்லி உணர்த்துவது பிறர்பொருட்டனுமானம்' என்பதும் விளங்கும். பிறர் உணரும்படி சொல்லப்படும் சொல், 'உடன்பாட்டுச் சொல், எதிர் மறைச் சொல்' என இருவகைப்படும். உடன் பாட்டினை, 'அந்நுவயம்' என்றும், எதிர்மறையினை, 'வெதிரேகம்' என்றும் வடநூலார் கூறுவர். i உடன்பாட்டுச் சொல் 'இம்மலை புகையுடைமையால் தீயுடையது; புகையுள்ள விடத்துத் தீயுண்டு, அடுக்களைபோல், என இவ்வாறு உடன் பாட்டுவகையில் சொல்லப்படுவது, உடன்பாட்டுச் சொல். ii எதிர்மறைச் சொல் ‘இம்மலை தீயுடையதே, புகையுடைமையால், தீ இல்லாத விடத்துப் புகை உண்டாதல் இல்லை, தாமரை ஓடைபோல' என இவ்வாறு எதிர்மறை வகையில் சொல்லப்படுவது எதிர்மறைச் சொல். இவ்வாறு எதிர்மறை வகையால் உணர்வதையே ‘அருத்தாபத்தி' எனச் சிலர் வேறோர் அளவையாகக் கூறுவர் என்பது முன்பு சொல்லப்பட்டது. iii அனுமான உறுப்பு ஐந்து பிறர் பொருட்டுச் சொல்லப்படும் அனுமான வாக் கியத்தை ஐந்து உறுப்புக்கள் உடையதாகத் தார்க்கிகர் முதலியோர் கூறுவர். அவை, 'மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம்' என்பன. 1. மேற்கோள் மேற்கோளாவது, தான் துணிந்து கொள்ளும் கொள்கை. அது ‘இம்மலை தீயுடையது' என்றல் போல்வது. மேற்கோளை வடநூலார், 'பிரதிக்ஞை' என்பர். 2. ஏது ஏதுவாவது தனது துணிவிற்குக் காரணமாய் நிற்பது, அது ‘புகையுடைமையால்' என்றல்போல்வது: 'ஏது' என்பது, வடசொல்லே. இதனைத் தமிழ்ச் சொல்லால் கூறுதல் இல்லை. 3. எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டாவது, ஏதுவாகக் குறிக்கப்பட்ட பொருள் மேற்கோளாகத் துணியப்படும் பொருளோடு எப்பொழுதும் விட்டு நீங்காது உடன் நிகழ்தலை வலியுறுத்துதற்கு எடுத்துக் காட்டப்படுவது. அது‘புகையுள்ள இடத்துத் தீயுண்டு, அடுக்களை போல' என்றல்போல்வது. இதுவே, எதிர்மறையில் 'தீயில்லாத இடத்தில் புகையில்லை; தாமரை ஓடைபோல' என்று வரும். இவையே 'ஒத்தபக்கம் (சபட்சம்); ஒவ்வாப்பக்கம் (விபட்சம்). என முன்பு கூறப்பட்டன. எடுத்துக்காட்டினை, 'உதாரணம்' என்றும், 'திருட்டாந்தம்' என்றும் வடநூலார் கூறுவர். விட்டு நீங்காமை, ‘அவினாபாவம்' எனப்படும். 4. உபநயம் உபநயமாவது, ஒத்த பக்கத்தினது (உபமானத்தினது). தன்மையைப் பக்கமும் (உபமேயமும்) உடையதாய் இருக் கின்றது எனப் பொருத்திக் காட்டுதல். அது, ‘இம்மலையும் புகையுடையது' என்றல் போல்வது. 5. நிகமனம் நிகமனமாவது ‘மேற்கோளாகச் சொல்லிய பொருளை, இவ் வாற்றால் இங்ஙனம் சொல்லப்பட்டது' என முடிந்தது முடித் தலாகக் கூறி முடித்தல். அது, ‘ஆதலின், இம்மலையும் தீயுடையது' என்றல் போல்வது. 'உபநயம், நிகமனம் என்பன வடசொற்களே. இவற்றையும் தமிழ்ச் சொல்லாற் கூறுதல் இல்லை. 'உபநயம், நிகமனம்' என்னும் இரண்டும் இன்றியமை யாத உறுப்புக்கள் அல்ல; அதனால் சைவ சித்தாந்திகள், மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு' என்னும் மூன்று உறுப்புக்களை மட்டுமே கூறுவர். மேற்கோள் முதலிய மூன்றும் தம் தம் இயல்பிற் குறையாது நிரம்பி நிற்கும்பொழுதே அனுமான அளவை, அளவை யாகக் கொள்ளப்படும். அவை குறைபாடுடையனவாய்விடின், 'போலி' எனப்பட்டு, அனுமான அளவையும் போலி என ஒதுக்கப்படும். அனுமானப் போலியை, 'பக்கப்போலி, ஏதுப் போலி உவமப்போலி' என மூன்றாகப் பகுத்து, ஒவ்வொன்றையும் பலவாக்கிப் பலவாறாக விரிப்பர். அவையெல்லாம் அவ்வாறே நாம் விரிக்க வேண்டுவது இல்லை. போலியை வடநூலார் 'ஆபாசம்' என்பர். இனி, அனுமானம், காட்சியில் அனுமானம், கருத்தில் அனுமானம், உரையில் அனுமானம்' என வேறொரு வகையில் மூன்றாகச் சொல்லப்படும். ஓர் இடத்தில் மலரின் மணத்தை நுகர்ந்த ஒருவன், 'இங்கு மலர் உண்டு' எனத் துணிதல் போல்வன காட்சியில் அனு மானம்; என்னையெனின், மலர் காட்சிப் பொருளாதலின் என்க; எனவே புகையைக் கண்டு நெருப்பு உண்டு என உணர்தலும் இதுவேயாயிற்று. 6. உரையளவையின் வகை இனி, 'காட்சி, கருதல்' என்னும் இரண்டு அளவைகளாலும் அறிய வாராதவற்றை அறிய உதவுவதாகிய உரையளவை, தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை' என மூன்று வகைப்படும். இவை முறையே, கருமகாண்டம், உபாசனாகாண்டம், ஞான, காண்டம் எனப்படும். (அ) தந்திரகலை ‘தந்திரகலை அல்லது கருமகாண்டம்' என்பது நித்திய, நைமித்திய, காமிய கருமங்களாகிய ஒழுக்கங்களைக் கூறுவது. அதனை உபதேசகலை அல்லது ஞானகாண்டத்தொடு மாறு கோளின்றி உள்ளவாறுணரும் உணர்வே தந்திரகலையளவை யாகும். (ஆ) மந்திரகலை 'மந்திரகலை அல்லது உபாசனாகாண்டம்' என்பது மேற் கூறிய நித்தியம் முதலிய மூவகையிலும், ஐம்பொறி முதலிய வற்றை அடக்கித் தெய்வங்களை வழிபடும் முறையைக் கூறுவது. அதனை உள்ளவாருணரும் உணர்வே மந்திர கலையளவையாகும். (இ) உபதேசகலை ‘உபதேசகலை அல்லது ஞானகாண்டம் என்பது, 'பதி, பசு பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு -விரித்துக் கூறுவது. இதுவே, ‘தத்துவ ஆராய்ச்சி' எனப்படும். அதனை உள்ளவாறுணரும் உணர்வே உபதேசகலையளவையாகும். இவ்வாறு உரையளவையின் வகைகளை உணர்ந்துகொள்க. இங்ஙனம் மூவகை அளவைகளின் இயல்பையும் ஒருவாறு உனக் குத் தொகுத்துக் கூறினோம். https://www.siddhantham.in/2025/07/4.html- இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைப் புதிர்கள்! (பகுதி II) 10 Jan 2026, 10:49 AM குறைந்துவரும் கருவுறுதலும் இந்தியச் சமூகத்தின் எதிர்காலமும்! ருக்மிணி எஸ். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். பகுதி I இல், தற்போதைய நிலவரத்தை விவரிப்பதற்காகத் தரவுகளை ஒன்றிணைத்தோம். ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல் போனதாக நாங்கள் வாதிடும் சமீபத்திய முக்கியமான தரவுப் புள்ளிகளையும் வழங்கினோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் தொடர்பான தரவுகளை ஆராய்கிறோம். இந்தியா உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இருக்கும் அதே நேரத்தில் விதிவிலக்காகவும் இருப்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கிடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள் குறித்த தரவுகளையும், அது தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதையும் பார்ப்போம். மக்கள் தொகை மாற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் — குறைந்துவரும் கருவுறுதல், அதிகரித்துவரும் ஆயுட்காலம், இடப்பெயர்வு, தொற்றுநோயியல் மாற்றங்கள் — ஒரு பெண் ஈன்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவுக்குக் கவனத்தை ஈர்க்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை. சில குழுக்களிடையே நிலவும் அல்லது உணரப்படும் அதிகக் கருவுறுதல் விகிதங்களும் மற்றவர்களிடையே குறைந்துவரும் கருவுறுதலும் மக்கள்தொகை தொடர்பான கருத்தங்குகளுக்கு அப்பால் எதிரொலிகளை எழுப்பும் கலாச்சாரப் பதற்றமாக உருவெடுத்துள்ளன. இது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நடக்கும் ஊடக, அரசியல் விவாதத்தின் முக்கியப் பகுதியாக மாறியுள்ளது. மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் இந்தப் பகுதியில், உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவுகளின் கலவையைப் பயன்படுத்தி, இந்தியாவில் மாறிவரும் கருவுறுதல் விகிதங்களின் ஐந்து முக்கிய அம்சங்களை அலசுகிறோம். இந்தியா பல வழிகளில் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இருக்கும் அதே சமயம் கருவுறுதலின் சில அம்சங்களில் முக்கியமான விதிவிலக்காகவும் உள்ளதையும் விவாதிக்கிறோம். உலகளாவிய தரவுகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகைச் சாத்தியப்பாடுகள், 2024 அறிக்கையின் திருத்தப்பட்ட வடிவத்தைப் பயன்படுத்துகிறோம். இந்தியத் தரவுகளுக்கு, இந்தியாவின் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு, தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வு ஆகியவற்றின் மக்கள்தொகை மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம். 1. இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) இப்போது தேசிய அளவில் பதிலீட்டு அளவைவிடக் குறைந்துள்ளது மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாகப் பெற வாய்ப்புள்ள குழந்தைகளின் எண்ணிக்கையாகும். ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்று மக்கள்தொகை நிபுணர்கள் கூறுகிறார்கள், அப்போது நாடு “பதிலீட்டுக் கருவுறுதலை” அடைந்து விட்டது என்று கூறப்படுகிறது. இரண்டு பெரியவர்கள் ஒரு 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றுவைத்துக்கொண்டால், குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், அந்தக் கணவன் மனைவி இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இரண்டுக்கு இரண்டு என்பதால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகை பயணத்தில் முக்கியமான மைல்கல். கருவுறுதல் இந்த அளவிற்கும் கீழே குறைந்தால், மக்கள்தொகை மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும். இந்தியாவின் மதிப்பீடுகளின்படி, 2019இல் இந்தியாவின் TFR பதிலீட்டு அளவைவிடக் குறைந்தது. நகர்ப்புற இந்தியாவின் TFR 2004இல் இந்த நிலையை முன்னதாகவே அடைந்தது. கிராமப்புற இந்தியாவிலும் TFR 2023இல் பதிலீட்டு அளவைவிடக் குறைந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மிக அண்மைக்காலதில் இது தொடர்பாக நமக்குக் கிடைத்துள்ள அதிகாரப்பூர்வமான தரவு என்றால் அது 2023ஆம் ஆண்டின் தரவுதான். கருவுறுதல் குறித்த இந்திய தேசியத் தரவு, ஆண்டுதோறும் நடத்தப்படும் மாதிரிப் பதிவு அமைப்பிலிருந்து (Sample Registration System – SRS) வருகிறது. பெரிய அளவிலான மாதிரிகளைக் கொண்டு நாடு தழுவிய அளவில் வீடு வீடாக நடத்தும் கணக்கெடுப்பு இது. மிகச் சமீபத்திய SRS தரவு 2023ஆம் ஆண்டிற்கானது. இந்திய மாநிலங்களின் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்குமான மதிப்பீடுகளை வழங்கும் இந்தக் கணக்கெடுப்பு, கல்வி நிலை, வருமானக் குழு அல்லது சமூகக் குழு உள்ளிட்ட சமூகப் பொருளாதாரக் கூறுகளின் அடிப்படையில் மதிப்பீடுகளை வழங்குவதில்லை. இதற்காக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சுகாதார ஆய்வுகள் அமைப்பின் ஒரு பகுதியான தேசிய அளவில் பிரதிநிதித்துவம் கொண்ட தேசிய குடும்பச் சுகாதார ஆய்வை (National Family Health Survey – NFHS) நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தியாவின் மிகச் சமீபத்திய NFHS 2019-21இல் நடத்தப்பட்டது. NFHSஇன் TFR மதிப்பீடுகள் அதே ஆண்டிற்கான SRSஐவிடவும் சற்றே அதிகமாக உள்ளன. உலகம் முழுவதும் ஏழைகளிடமும் குறைந்த கல்வி அறிவு கொண்ட பிரிவினரிடமும் TFR அதிகமாக உள்ளது. காலப்போக்கில் அந்தக் குழுக்கள் செல்வந்தர்களாகவும் மேம்பட்ட கல்வி அறிவுடையவர்களாகவும் மாறும்போது இது குறைகிறது. இந்தியாவில் ஏழ்மையான 20 சதவீத இந்தியக் குடும்பங்களிடையே TFR மிக அதிகமாக இருந்தது. அங்கு சராசரியாக ஒரு பெண், வசதிபடைத்த 20 சதவீதக் குடும்பங்களில் உள்ள சராசரிப் பெண்ணைவிடச் சராசரியாக ஒரு குழந்தை அதிகமாகப் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கல்வி அறிவு கொண்ட பெண்களுக்கும் அதிகக் கல்வி அறிவு கொண்ட பெண்களுக்கும் இடையேயான இடைவெளி ஒரே மாதிரியாக உள்ளது: பள்ளிக் கல்வியே இல்லாத பெண்கள், 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிக் கல்வி பெற்ற பெண்களைவிடச் சராசரியாக ஒரு குழந்தை அதிகமாகப் பெறுகிறார்கள். இருப்பினும், காலப்போக்கில், பணக்கார, ஏழை ஆகிய இரண்டு குடும்பங்களிலும், குறைந்த கல்வி அறிவு கொண்ட பெண்களிடையேயும் அதிகக் கல்வி அறிவு கொண்ட பெண்களிடையேயும் TFR குறைந்துள்ளது. சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் பாதகங்களையும் எதிர்கொள்ளும் ஒதுக்கப்பட்ட சமூகங்களான பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களிடையே சலுகை பெற்ற சாதிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களைவிட TFR அதிகமாக உள்ளது. மற்ற மதக் குழுக்களுடன் குறிப்பாக இந்துப் பெண்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் பெண்களின் அதிக TFR ஆகும். இது இந்தியாவில் காணப்படும் கூர்மையான வித்தியாசமாகும். TFR முஸ்லிம் பெண்களிடையே மற்ற மதக் குழுக்களைவிடத் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இது இந்தியாவில் முஸ்லிம் குடும்பங்களின் குறைந்த வருமானத்துடன் தொடர்புடையது. மற்ற மதக் குழுக்களைக் காட்டிலும் முஸ்லிம்களிடத்தில் TFR அதிகமாக இருக்கும் நிலை தொடர்ந்தாலும், முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதங்களும் கணிசமாகக் குறைந்துவிட்டன. மேலும், குடும்ப வருமானம் அதிகமாகவும், பெண்களின் கல்வி விகிதங்கள் அதிகமாகவும் இருக்கும் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட எல்லாக் குழுவினரிடையேயும் கருவுறுதல் விகிதங்கள் குறைவாக உள்ளன. குறைந்த கருவுறுதல் விகிதங்கள் கொண்ட வசதி படைத்த மாநிலங்களான கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள முஸ்லிம் பெண்களின் TFR, அதிக கருவுறுதல் கொண்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களான பிகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள இந்துப் பெண்களின் TFRஐவிடக் குறைவாக உள்ளது. 2. நாட்டின் சில பகுதிகளில் TFR நீண்ட காலமாகப் பதிலீட்டு அளவைவிடக் குறைவாக உள்ளது மிக அண்மைக்காலத்தில்தான் இந்தியாவின் தேசிய TFR, பதிலீட்டு அளவைவிடக் குறைந்துள்ளது. எனவே, குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் குறித்த உலகளாவிய உரையாடலுக்குள் இந்தியா இப்போதுதான் நுழைவதாகத் தோன்றலாம். ஆனால், இந்தியாவின் சில பகுதிகள் பல தசாப்தங்களாகவே வளர்ச்சியடைந்த உலகின் சில பகுதிகளைப் போலவே குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. தேசிய TFR 4ஆக இருந்தபோது, 1988ஆம் ஆண்டில் பதிலீட்டுக் கருவுறுதலை அடைந்த முதல் இந்திய மாநிலம் கேரளம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1993இல் தமிழ்நாடு அந்த இடத்திற்கு வந்தது. மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2004இல் ஆந்திரப் பிரதேசம் அந்த நிலையை எட்டியது. இந்தியாவின் கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் கருவுறுதல் அடிப்படையில் ஒரு விதிவிலக்கு. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்த மாநிலம் 2005இல் பதிலீட்டுக் கருவுறுதலை அடைந்தது. இது இந்திய மாநிலங்களின் நகர்ப்புறப் பகுதிகளில் இன்னும் அதிகமாக உள்ளது. 2023ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம், பிகார் தவிர அனைத்து இந்திய மாநிலங்களிலும் TFR பதிலீட்டு அளவைவிடக் குறைவாக இருந்தது. எனினும், தெற்கு மாநிலங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த பிறப்பு விகிதங்கள் நிலவிவரும் போதிலும், குறைந்த கருவுறுதல் குறித்துப் பொது வெளியிலும் அரசியல் களத்திலும் நடக்கும் உரையாடல்கள் ஒப்பீட்டளவில் புதியவை.எடுத்துக்காட்டாக, ஆந்திரப் பிரதேசத்தில், 2025 ஜனவரியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஊக்கமளிக்கும் வகையில், இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தார். நாயுடுவின் இந்த ஆலோசனையைச் செயல்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புவரை, இந்த மாநிலம் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடாமல் தடுத்துவைத்திருந்தது. (அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 அக்டோபரில் நீக்கப்பட்டது). 3. பெண்கள் தாமதமாக அதிகக் குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும், விரைவாகக் குறைவான குழந்தைகளைப் பெறும் வழக்கமே இந்தியாவில் குறைந்துவரும் கருவுறுதல் விகிதத்திற்குக் காரணமாகிறது. வளர்ச்சியடைந்த உலகின் பெரும்பாலான பகுதிகளில், கருவுறுதல் குறைவது பெண்கள் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் குறைவான குழந்தைகளைப் பெறுவதாக வெளிப்படுகிறது. இந்தியாவிலோ பெண்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பீட்டளவில் விரைவாகப் பெற்றெடுத்துவிட்டு, இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இந்தியப் பெண்கள் வாழ்க்கையில் பிற்காலத்தில் அதிகக் குழந்தைகளைப் பெறுவதில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் பெண்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயது சற்று மட்டுமே – இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக – அதிகரித்துள்ளது. சராசரி இந்தியத் தாய் இப்போது தனது முதல் குழந்தையை 21 வயதிற்குச் சற்றே கூடுதலான வயதில் பெற்றெடுக்கிறார். இது இந்தியப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயதில் ஏற்படும் மாற்றங்களுடன் நெருக்கமாகப் பயணிக்கிறது. தற்போது பெண்களின் திருமண வயது 18 வயதுக்குச் சற்றுக் கூடுதலாக உள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால் அது பெண்கள் தங்கள் கடைசிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயதில் ஏற்பட்ட மாற்றம். குடும்பங்கள் சிறியதாகிவரும் நிலையில், அதிகமான பெண்கள் தங்கள் இருபதுகளிலேயே தங்கள் கர்ப்பங்களையும் முடித்துக்கொள்கிறார்கள். இதன் விளைவாக, ஒரு இந்தியத் தாய் தனது கடைசிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் சராசரி வயது கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பைவிட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்துள்ளது. உலகம் முழுவதும் வருமானமும் கல்வியும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, பெண்கள் சற்றுத் தாமதமாகத் திருமணம் செய்துகொள்ளத் தொடங்குகிறார்கள். மேலும் தாமதமாகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். இந்தியாவிலும் இப்படி நடந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இருபதுகளில் உள்ள பெண்களுக்கே பிறக்கின்றன. உதாரணமாக, இங்கிலாந்தில் பெண்கள் தற்போது தங்கள் முதல் குழந்தையை மிகத் தாமதமாகப் பெற்றெடுக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் முப்பதுகளில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன. இந்தியாவிலும் இந்த மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது. 1950களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன. இது கடந்த சில ஆண்டுகளில் மாறிவிட்டது என்றும், இந்தியாவில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இப்போது இருபதுகளின் பிற்பகுதியில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை மதிப்பீடு குறிப்பிடுகிறது. 4. இந்தியாவிலும் உலகிலும் கருவுறுதல் ஏன் குறைகிறது? குறைந்த பிறப்பு விகிதங்கள் குறித்த உலகளாவிய ஆய்வுகள் குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தைச் சார்ந்தவையாகவே இருக்க முனைகின்றன. இத்தகைய ஆய்வில் இந்தியாவைத் தவிர்ப்பது மனிதகுலத்தின் ஆறில் ஒரு பகுதியைத் தவிர்ப்பதாகும். அது மட்டுமல்லாமல், பிறப்பு விகிதங்கள் ஏன் குறைகின்றன என்பதற்கு உலகம் முழுவதும் பொருந்தாத கோட்பாடு உருவாவதற்கும் இது வழிவகுக்கும். பொருளாதார வல்லுநர்களான டீன் ஸ்பியர்ஸ், மைக்கேல் ஜெருசோ ஆகிய இருவரும் இணைந்து 2025ஆம் ஆண்டு எழுதிய ஆஃப்டர் தி ஸ்பைக்: பாப்புலேஷன், ப்ரோக்ரஸ், அண்ட் தி கேஸ் ஃபார் பீப்பிள் (After the Spike: Population, Progress, and the Case for People) என்னும் நூலில், கருவுறுதல் ஏன் குறைகிறது என்பதைப் புரிந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து நம்பகமான தரவுகளைத் திரட்டியுள்ளார்கள். வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்காகத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியிலிருந்து விலகும் பெண்களுக்கு ஏற்படும் இழப்பு கணிசமானது என்றும் நிரூபிக்கப்படக்கூடியது என்றும் ஸ்பியர்ஸும் ஜெருசோவும் வாதிடுகிறார்கள். ஆனால் இது இந்தியாவில் பொருந்தவில்லை. “தொழிலைத் துறப்பதால் ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்ட பிறகு கருவுறுதல் குறைவதற்கான மாபெரும் கோட்பாட்டைக் கண்டடைந்துவிட்டோம் என்று நினைப்பது நம் மனதுக்கு உகந்த்தாக இருக்கலாம். ஆனால், பெண்கள் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கான சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் பெற்றால் மட்டுமே குறைந்த பிறப்பு விகிதங்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு அனைவருக்கும் பொருந்தக்கூடிய கோட்பாடாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது,” என்று அவர்கள் எழுதுகிறார்கள். “இந்தியாவைக் கவனியுங்கள். இந்தியா குறைந்த கருவுறுதலை அடைந்த பாதை, கருவுறுதல் குறைவுக்கான இந்தக் கோட்பாட்டிற்கும், கருவுறுதல் குறைவுக்கான பெரும்பாலான மற்ற கோட்பாடுகளுக்கும் சவாலாக விளங்குகிறது” என்கிறார்கள். ஸ்பியர்ஸும் ஜெருசோவும் சுட்டிக்காட்டுவதுபோல, உலகளாவிய முறை என்று எதுவும் இல்லை. இந்தியாவில் வயது வந்த பெண்களில் பெரும்பாலானோர் வீட்டிற்கு வெளியே ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபடுவதில்லை. கிழக்கு ஆசியா அல்லது ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் அப்படி ஈடுபடுகிறார்கள். ஆனால் இரு பகுதிகளிலும் பிறப்பு விகிதங்கள் ஒரே அளவில் உள்ளன. இந்தியாவைவிட அதிகத் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களைக் கொண்ட, அதே சமயம் அதிகப் பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளும் உள்ளன. இந்தியப் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வயதும் கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா அல்லது ஐரோப்பாவைவிடக் குறைவாகவே உள்ளது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்கள் தங்கள் தொழில் அல்லது வேலைக்காகக் குழந்தை பிறப்பதைத் தாமதப்படுத்துவது என்பது கருவுறுதல் குறைவதற்கான விளக்கமாக இல்லை. “இந்தியாவில், பெற்றோருக்கான பொறுப்புக்கும் பெண்களின் தொழிலுக்கும் இடையில் மோதல் இல்லாமல் குறைந்த கருவுறுதல் நடக்கிறது,” என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் எழுதுகிறார்கள். அப்படியானால், இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் பிறப்பு விகிதங்கள் ஏன் குறைகின்றன? ஸ்பியர்ஸும் ஜெருசோவும் இதற்கான பொதுவான கோட்பாடு இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். குறைந்த பிறப்பு விகிதங்களைப் பற்றி நாம் அறியாதவை நிறைய உள்ளன என்கிறார்கள். இந்தியா ஏற்படுத்தும் சிக்கலே இதற்கு ஓரளவு காரணம் என்றும் கூறுகிறார்கள். தாராளமயம், பெண்ணியம் ஆகியவற்றின் எழுச்சி, திருமணம், மத ஆதிக்கம் ஆகியவற்றின் சரிவு, தொழிலாளர் பங்கேற்பில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்தல் உள்ளிட்ட மேற்குலகுக்குப் பொருந்தும் பல கருதுகோள்கள் இந்தியாவுக்குப் பொருந்தாது. உலகமானது பலவிதமான, சிறியதும் பெரியதுமான வழிகளில் மேம்பட்டுள்ளது; இது குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் இழப்புகளை மிக அதிகமாக ஆக்குகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இதில் பொருளாதார இழப்புகள் மட்டுமின்றி, கண்களுக்குப் புலப்படாதவையும் அடங்கும். எளிமையாகச் சொன்னால், குழந்தைகள் இல்லாதபோது மனிதர்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்ய அதிக நேரம் கிடைப்பதால் அவர்கள் பெறும் இன்பங்கள் கூடுகின்றன. “முன்பெல்லாம் ‘பல குழந்தைகளைப் பெறுவது’ என்பது ஒருவருக்கு முக்கியமாக இருந்தது. இப்போது அது, ‘எனக்கு எது முக்கியமோ அதைப் பெறுவது’ என்பதாக மாறிவிட்டது. பழைய மதிப்பீட்டின்படி செயல்படுவதால் எற்படும் இழப்பு அதிகம்” என்று அவர்கள் எழுதுகிறார்கள். கட்டாய மக்கள்தொகைக் கட்டுப்பாடுகளும் நீண்ட கால அளவில் கருவுறுதல் வடிவங்களைக் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றுவதில்லை என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் வாதிடுகிறார்கள். தென்னிந்திய அரசியல்வாதிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் விளைவாகத் தங்கள் மாநிலங்கள் குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன என்று வாதிட்டாலும், இந்த மாநிலங்கள் உலகின் பிற பகுதிகளைப் போலவே இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் அதே ஏணியில் சற்றுக் கீழே உள்ளன. 5. இந்தியாவில் கருவுறுதலின் எதிர்காலம் என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகைப் பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் உலக மக்கள்தொகைச் சாத்தியப்பாடுகளின் திருத்தத்தை வெளியிடுகிறது. மிக அண்மையில், 2024ஆம் ஆண்டில் அது வெளியிட்ட திருத்தம், அடுத்த 75 ஆண்டுகளுக்கு இந்தியாவின் கருவுறுதல் விகிதம் படிப்படியாகக் குறையும் என்று கூறுகிறது. கணிக்கப்படும் கருவுறுதல், இறப்பு ஆகிய விகிதங்களின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 2060இலிருந்து அதன் மொத்த எண்ணிக்கையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற நாடுகளுக்கான ஐ.நா.வின் கணிப்புகளை ஒத்திருக்கிறது. பிற நாடுகளில் அடுத்த 75 ஆண்டுகளுக்குக் கருவுறுதல் மெதுவாகவே குறையும்; சுமார் 1.5முதல் 2வரை கருவுறுதல் விகிதம் இருக்கும் என்று பரந்த அளவில் மதிப்பிடப்படுகிறது. TFR இப்போது 1க்குக் கீழே உள்ள உலகின் ஒரே நாடு தென்கொரியா. இங்கு TFR சற்றே மீண்டு வந்து 1ஐ விட அதிகரிக்கும். பிறகு இந்த நூற்றாண்டின் எஞ்சிய காலத்திற்கு 1க்கு மேல் இருக்கும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது. எனினும், ஐ.நா.வின் தற்போதைய மதிப்பீடுகளைவிடக் குறைவான அளவில் கருவுறுதல் குறையக்கூடும். இந்தியாவின் சொந்த மக்கள்தொகை மதிப்பீடுகள் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டதால் பழையவை. இந்த மதிப்பீடுகள், 2035 வாக்கில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உட்படக் குறைந்தது ஏழு முக்கிய இந்திய மாநிலங்களில் TFR 1.5 ஆக இருக்கும் என்று கூறுகின்றன. இவையும் குறைவான மதிப்பீடுகளாக இருக்க வாய்ப்புள்ளது. பிகார் போன்ற மாநிலங்களின் TFR, 2023 வாக்கில், ஏற்கனவே 2011ஆம் ஆண்டின் மதிப்பீடுகளைவிடக் கணிசமாகக் குறைவாக இருந்தது. இந்திய அரசியல்வாதிகள் சிலரும் மக்கள்தொகை நிபுணர்களும் குறைந்த பிறப்பு விகிதங்களின் சவால்களை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறைந்த பிறப்பு விகிதத்தை மாற்றியமைக்கத் தேவையான கொள்கைகளையும் பரிந்துரைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இருப்பினும், இந்த மாற்றங்கள் எளிதில் நடக்காது என்று வரலாறு சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், இந்தியாவில் நடக்கும் விவாதம் பெரும்பாலும் அதன் மக்கள்தொகை வரலாறு பற்றிய தவறான வாசிப்பையும், பொதுக்கொள்கையே கருவுறுதலைக் குறைத்தது என்ற நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது. 1950 முதல், 26 நாடுகளில் TFR 1.9க்குக் கீழே குறைந்துள்ளது என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் கண்டறிந்துள்ளனர். “இந்த இருபத்தி ஆறு நாடுகளில் ஒன்றில்கூட, வாழ்நாள் பிறப்பு விகிதம் மக்கள்தொகையை நிலைப்படுத்தும் அளவுக்கு மீண்டும் உயர்ந்ததில்லை. கனடா, ஜப்பான், ஸ்காட்லாந்து, தைவான் என எந்த எந்த நாட்டிலும் இல்லை. இந்த நாடுகளில் சிலவற்றில், குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு உதவும் கொள்கைகள் தங்களிடம் இருப்பதாக அரசாங்கங்கள் கூறுகின்றன. ஆனால் இதனால் பிறப்பு விகிதம் உயர்ந்துவிடவில்லை. இந்த நாடுகள் அனைத்தும் இரண்டுக்கும் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்டவையாகவே தொடர்கின்றன.” இந்திய அரசியல்வாதிகள் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க அறிவுறுத்தல்கள், ஊக்கத்தொகைகள் ஆகிய இரட்டை உத்திகளைப் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது. எந்த உத்தியும் வேலை செய்ய வாய்ப்பில்லை என்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. நிலைமையை மாற்றவே முடியாத நிலையில், இந்தியச் சமூகம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தாக்கங்கள் உள்ளன. இவற்றில் முதலாவது, மக்கள்தொகைக்குள் நிலவும் வயது விகிதங்கள் மாறியதற்கான அச்சுறுத்தலும் அது சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களும் ஆகும். (இந்தத் தொடரின் 3ஆவது பகுதி, மாநில அளவில் இந்த விஷயத்தைக் கையாள்கிறது). இது இந்தியப் பெண்களின் வாழ்க்கையிலும், குறிப்பாகத் தொழிலாளர் படையில் அவர்களது பங்களிப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கமும் உள்ளது. வேலை செய்வதாகவோ அல்லது வேலை தேடுவதாகவோ தெரிவிக்கும் வயதுவந்த இந்தியப் பெண்களின் பங்கு ஆண்களில் பாதியைவிடக் குறைவாகவும், உலகின் பிற பகுதிகளைவிடக் கணிசமாகக் குறைவாகவும் உள்ளது. வேலையோ தொழிலோ செய்யவில்லை என்று தெரிவிக்கும் பெண்கள் தங்கள் வீடுகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை, முக்கியமாகக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஊதியம் இல்லாத பணிகளைச் செய்கிறார்கள். இந்தியாவில் பணிபுரியும் மக்கள்தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பங்கேற்பு விகிதங்களுக்கு இடையேயான இடைவெளி அவர்களின் இருபதுகளின் பிற்பகுதியில் மிக அதிகமாக உள்ளது. அப்போதுதான் இந்தியப் பெண்களுக்குக் குழந்தைப் பிறப்பு, குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் ஆகியவை உச்சத்தை அடைகின்றன. இந்தியப் பெண்கள் குறுகிய காலத்திற்குள் தங்கள் கர்ப்பங்களை முடித்துக்கொள்வதால், அவர்கள் தொழிலாளர் சந்தைக்குள் வரலாம். இருப்பினும், உலகின் பிற பகுதிகளில் நடப்பதுபோல இந்தியப் பெண்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயது உயரத் தொடங்கும்போது, தொழிலாளர் சந்தையில் பெண்கள் நுழையும் அல்லது மீண்டும் நுழையும் காலமும் காலப்போக்கில் மாறலாம். குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் மேம்பட்ட வாழ்க்கை அமையும் என்னும் நம்பிக்கையில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்ட ஒரு சமூகத்தின் அபிலாஷைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்ற கேள்வியும் உள்ளது. இந்தியப் பெண்கள் குறைந்த எண்ண்ணிக்கையில் குழந்தைகளைப் பெறுவது தொழிலாளர் சந்தை சார்ந்த காரணிகளால் அல்ல என்றால், அவர்கள் மேலும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளும் தேர்வுகளை முறையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழலின் தரம் ஆகியவற்றில் மட்டுமின்றி, ஓய்வு, பயணம், கலை, பொது வெளி ஆகியவற்றிலும் இதன் தாக்கங்கள் இருக்கும். குறைந்துவரும் பிறப்பு விகிதங்களை மாற்றியமைக்க வேண்டுமா என்பது கருத்தியல் சார்ந்த திட்டம். இதை மாற்றியமைக்க முடியுமா என்பது தற்போது முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இன்னும் சிறிது காலத்திற்குக் குறைந்த பிறப்பு விகிதங்களே யதார்த்தமாக இருக்கக்கூடிய நிலையில், சரியான சான்றுகளைக் கொண்டிருப்பதும் விளைவுகளைப் பற்றித் தெளிவாக இருப்பதும் இந்தியா மேற்கொள்ள வேண்டிய அவசரமான அடுத்தகட்டச் செயபாடுகள் ஆகும். கட்டுரையாளர் ருக்மிணி எஸ். ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது. https://minnambalam.com/indias-population-puzzles-part-2/ - யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.