Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அல்லது யார் எவ்வளவு நிதி உதவி செய்கின்றார்கள் என்பதை மறைத்து அவர் அவர் தனது பங்களிப்பை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடலாம் . ஏராளன் வரவுவில் வைக்கப்பட்ட தொகையை மட்டும் எங்களுடன் பகிரலாம். தேவையான தொகை சேர்ந்த கையுடன் முன்னோடிகளின் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எது சரியானது என்பதற்கு அப்பால் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் அதுவே எமது இலக்கு சரி இன்னும் சிலர் தங்களின் கருத்தையும் கூறட்டும்
  3. கட்டாயம் எழுதுங்கள். தீமை செய்பவரே சொல்லி காட்டும் உலகில் நாம் ஒளிக்க தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. அத்தோடு இது ஏனையோரையும் ஊக்கப்படுத்தும். நானும் அப்படியே செய்கிறேன்.
  4. வல்லிபுரம் ஆழ்வார் கோவிலை இலக்கு வைத்த பிக்கு. சூறாவளி வரும்போது என்னையே ஜனாதிபதி அழைத்தார்-சாணக்கியன். 6000 ரூபா சம்பளம் பெற்றுவந்த ஆசிரியர்கள் தமிழில் வகுப்பெடுத்துவிட்டு ஆங்கிலத்தில் பரீட்சை என்று முறைப்பாடு.
  5. இப்படித்தான் ஒருகாலத்தில் ஜேர்மனியும் ஆடியது. முடிவு யாவரும் அறிந்ததே. அமெரிக்காவின் கொலம்பியா மீதான நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கப்படாத விடத்து எனைய வல்லரசுகளின் ஆக்கிரமிப்பும் கேள்விகளுக்கு உட்படாது. அமெரிக்கா அவுக்கு அதிகமாகத் தலையிடுவது உதாரணமாக கிரின்லாண்ட் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இதை ரசிக்கவில்லை. ஈயுவுக்கு வெளியே இருக்கும் யுகேயும் இதை ஆதரிக்கவில்லை. ரஸ்யா சீனா சொல்லத்தேவையில்லை. எல்லோருமு; ஒரு புள்ளியில் சந்தித்தால் விளைவு அமெரிக்காவுக்கு பாதகமாக முடியும்.
  6. ஒரு குறிப்பிட்ட தொகை மலசல கூடம் கட்ட தேவை என ஏராளன் அறியத்தந்துள்ளார்.அதை நான் அனுப்புகின்றேன். ஆடம்பர மலசல கூடம் கட்டுவதற்கு அந்த பணம் பயன்படாது என நான் நினைக்கின்றேன்.
  7. இதில் ஈழப்பிரியன் அண்ணாவும் அப்பப்ப உதவி செய்யலாம் எனக் கூறியதை மறந்து விட்டேன்.🙏 அவரையும் சேர்த்துக்கொள்ளலாம். அடுத்த கட்டமாக எங்களின் இலக்கான திட்டத்திற்கு நான் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் சிலரிடம் பேசியிருக்கின்றேன். அவர்களும் நிச்சயமாக இந்தத் திட்டத்திற்கு உதவுவதாகக் கூறியுள்ளார்கள் அதற்கும் ஒரு காலத்தை நிர்ணயம் செய்தால் தான் அந்தக் காலத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்பது கருத்து
  8. Today
  9. சரி அப்படியே செய்யலாம் ஏராளன் பரிந்துரைத்த அந்தப் பொன்னாலை திருத்த வேலைகளை முன்மாதிரியாக ஆரம்பிக்கலாம் அதற்கான செலவு அண்ணளவாக 184,௦௦௦ வரும் என்று ஏராளனுடைய நண்பர் ஒருவர் கணித்திருக்கின்றார் , அதை ஏராளன் மற்றைய திரியில் சொல்லியிருக்கின்றார் . நாங்கள் 200.000 ரூபாய் என்ற தொகையை முதலில் சேர்ப்போம். இப்போது இந்தக் குழுவில் நிதி உதவி செய்ய முன் வந்திருப்பது வாத்தியார் குமாரசாமி அண்ணா . கோஷான் கவி அருணாசலம் அண்ணா இதில் குமாரசாமி அண்ணா முன்னோடியூடாக இன்னுமொரு திட்டத்திற்கு நிதி உதவி செய்வதாக எழுதியுள்ளார் ஆகவே அவருடைய நிலையை அவர் விளக்கமாக தெரியப்படுத்துவது நல்லது மற்றும்படி கவி அருணாசலம் அண்ணை எழுத்தியதை நான் ஏற்கனவே எழுத நினைத்தேன் . நேரம் கிடைக்கவில்லை அவர் சரியாகவே கேட்டுள்ளார் நாங்கள் நினைத்தால் இந்த பொன்னாலை திட்டத்தை மாசி மாதத்திற்குள் முடித்து விடலாம். அந்தத் திட்டத்திற்கான எனது பங்களிப்பு இப்போதே தயாராக உள்ளது அந்தப் பங்களிப்பின் தொகையை இங்கே எழுதுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை . பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும் ஒளிவு மறைவு இல்லாமல் தெரியப்படுத்தலாம் என்றால் எழுதுகின்றேன் . அண்ணை, கொமட் 35000 - 70000 ரூபா வரை உள்ளது. நாங்கள் 50000 ரூபா என்று சராசரி விலை குறித்து வைப்போம். கைகளால் பிடித்து நகர வெள்ளிரும்பு பைப் 15000 ரூபா(ஏற்கனவே இரும்பு பைப் போட்டு உக்கிவிட்டது) 2 லான்ட் மாஸ்ரர் மண் 24000 ரூபா 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா 8 பைக்கற் சீமந்து 20000 ரூபா 20 (3/8) கம்பி 20000 ரூபா 1 கிலோ கட்டுக்கம்பி 4000 ரூபா பொருட்கள் கொண்டுவர கூலி 1000 ரூபா மேசன், பிளம்பிங் கூலி 35000 ரூபா மொத்தச் செலவு 184000 ரூபா(கொஞ்சம் கூடிக் குறையலாம்) எனக்கு அறிமுகமான எலக்ரீசியன் தம்பி நேரில் சென்று பார்த்து தந்த விபரங்கள்.
  10. பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்…..😂 கோவியத் கால அணுகுண்டு மட்டும் இல்லாவிட்டால் புட்டினின் ரஸ்யாவை நாயும் மதியாது என நேற்று எழுதினேன்…அது இன்று நிருபணமாகிறது. பிரித்தானிய விமானப்படை, மற்றும் பிரித்தானிய தளங்கள் இந்த ஆப்பரேசனில் பங்கெடுத்ததாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது நடந்து முடிந்த சூடு ஆறமுன்னம், நேட்டோ எம்மை கைவிட்டாலும் நாம் நேட்டோவை கைவிடமாட்டோம் என உளறியுள்ளார் தம்பர்.
  11. எனக்கு இது சூ…லேஸ் கட்டுவதை மனதில் வைத்து எழுதியது போல தெரியவில்லை.
  12. உண்மைதான் ஐயா… இப்போதைக்கு மேலே சொன்னபடி (பொன்னாலை திருத்த வேலை, காரைநகர்5, சுழிபுரம்-சார் பகுதிகள்5 என்பதை செய்வோம். இவை முடியும் தறுவாய்க்கு வரும் போது ஒரு திட்ட மீளாய்வை செய்வோம். அதன் போது பதிவதை செய்வதா அல்லது இன்னும் பொறுத்து செய்வதா என முடிவு செய்யலாம். நாட்டில் நடைமுறை மேலாண்மை ஏராளன்(project implementation oversight) . உதவி - வாத்தியார் அண்ணா மற்றும் நான். நிதி திரட்டல் (fund raising). குசா அண்ணா. ஏனையோர் எவரும் முன்வரலாம். ஏராளன் பகிருவார். Hybrid (இரெண்டு மாதிரியும்) முறையில் செய்யலாம். நான் முதலில் ஒரு தொகையை கொடுத்து விட்டு, பின்னர் மாதாந்தம் அனுப்பலாம் என நினைக்கிறேன். முயலுவோம். குறைந்தபட்சம் - பொன்னாலை வேலையை ஆரம்பித்து விட்டோம் எண்டால் deadline ஐ மீட் பண்ணியதாகும்.
  13. நல்லது. பரீட்சார்த்தமாகவும் இருக்கும். படிப்பினையையும் தரும். அந்தத் திட்டம் நல்லமுறையில் நடந்தால் புது உத்வேகமும் கிடைக்கும். இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை. என்னிடம் இந்தக் கேள்விகள் இருக்கின்றன, முன்னோடி அமைப்பை ஏதாவது நாட்டில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப் போகின்றோமா? (இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்) இதை நடைமுறைப் படுத்துபவர்(கள்) யார்? வங்கி விபரங்கள் என்ன? திட்டங்களுக்கென்று பணம் தரப்பட வேண்டுமா? அல்லது மாதாந்தமாக/ அன்பளிப்புகளாக பெறும் பணத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படப் போகின்றனவா? வரும் தைப் பொங்களுக்கு தொடங்கலாமா?
  14. டிரம்பை தமிழ் ஶ்ரீ அண்ணா அப்படித்தான் வாஞ்சையாக அழைப்பார்😂
  15. ஒரு சின்ன ஐடியா. பெரிய திட்டங்கள் அனைத்தையும் செய்ய தொடங்க முன் ஒரு pilot திட்டத்தை run பண்ணுவோம் அல்லவா? அதைப்போல் இந்த பொன்னாலை மாற்றுதிறனாளி சகோதர்களின் திருத்த வேலையை முதலில் ஒரு pilot ஆக செய்வோமா? உடல்நிலையால் அவர்கள் முன்னுரிமைக்கும் தகுதியானோரே. கருத்தை சொல்லவும்.
  16. எனது வாட்ஸ் அப் இலக்கத்திற்கும் அனுப்பிவிடுங்கள்.🙏 நீங்கள் முதல் தெரிவித்த தொகையை அனுப்பி விடுகின்றேன்.
  17. நன்றி. இங்கே பதிவிடுவது நல்லது என எண்ணுகிறேன். சம்மதமே.
  18. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை ; அவர் இந்தியாவில் இருப்பதாகவும் தகவல் இல்லை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 07 Jan, 2026 | 03:21 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை என இடம்பெறும் விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் அவர் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் நேரடி தொடர்பான சாரா ஜெஸ்மின் தொடர்பில் 2020க்கு பின்னர் கோட்டாப ராஜபக்ஷ் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசாரணைக்குழுவின் 3ஆவது விசாரணையிலேயே சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக தெரிவிப்பதற்கு முயற்சித்தார்கள். என்றாலும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக நாங்கள் யாரும் நம்புவதில்லை. அவர் தப்பிச்சென்றுள்ளார் அல்லது தப்பிச்செல்ல சிலர் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தார். அதேநேரம் பாதுகாப்பு பிரதி அமைச்சரான அருன ஜயசேகர, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். அத்துடன் சாரா ஜெஸ்மின் தப்பிச்சென்றதும் இந்த காலப்பகுதியிலாகும். அரசாங்கம் பாதாள குழுக்களை கைதுசெய்ய திறந்த பிடியாணைகளை பெற்று செயற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகியும் சாரா ஜெஸ்மினை கைது செய்ய ஏன் பிடியாணை பிறப்பிக்காமல் இருக்கிறது. அத்துடன் இந்த அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், நாட்டுக்கு வந்து சென்றார். ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இவ்வாறான கலந்துரையாடல்களின்போது, சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருந்தால், அவரை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடி இருந்தீர்களா? அதேநேரம் சாரா ஜெஸ்மினை கண்டுபிடிக்க ஏன் திறந்த பிடியாணையை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறது என கேட்கிறேன் என்றார். அதற்கு அமைச்ர் தொடர்ந்து பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இடம்பெற்றுவரும் விசாரணைகளில் இருந்து ஒருசில தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை எனவும் விசாணைகளில் இருந்து தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.. அதேபோன்று சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. என்றாலும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்களின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஏதாவது சதித்திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றதா என்ற விசாரணையே புதிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுகிறது. அதனால் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவை ஏற்படும் பட்சத்தில் சாரா ஜெஸ்மினை கைதுசெய்ய பிடியாணை பெற்றுக்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/235443
  19. மிக வித்தியாசமான ஒரு விறுவிறுப்பான திரைப்படம். கடைசி சில நிமிடங்கள் அல்லது வினாடிகள் வரைக்கும் முடிவை ஊகிக்க முடியாது. அந்த முடிவை புரிந்து கொள்வதற்கு கூட சில கணங்கள் எடுக்கலாம். ஏராளன் quote பண்ணியுள்ள வசனங்கள் தரும் அர்த்தம் தான் படம். இப்படியான சிக்கலான அதே நேரம் யதார்த்தமான உண்மையை திரைக்கதை ஆக்கும் கலை மலையாள இயக்குனர்களுக்கு கை வந்த கலை. படத்தில் வரும் நாய்கள் தான் உண்மையான கதா நாயகர்களோ என்று எண்ணத் தோன்றும். நேற்றிரவு பார்த்தேன்.. ஒரு போதும் இப் படம் நினைவில் அழியாது இருக்கும். வித்தியாசமான படங்களை விரும்புகின்றவர்களுக்கான சினிமா படம் இது.
  20. புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.
  21. சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா 07 Jan, 2026 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம். சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் இலங்கையை மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/235467
  22. மனிதன் தன் விருப்பத்துக்காக/சுயநலத்திற்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.