Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. முவாய் தாய் உலக சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு 3 தங்கம்: நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! 20 Mar, 2026 | 04:04 PM தாய்லாந்தில் நடைபெற்ற 7ஆவது 'முவாய் தாய்' உலக சம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 5 வெற்றிக் கிண்ணங்களைச் (சம்பியன் பட்டிகள்) சுவீகரித்த இலங்கை வீரர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை நாடு திரும்பினர்.Geographic Reference தாய்லாந்து முவாய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, அந்நாட்டின் பட்டாயா நகரில் கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 11 வயதுடைய செஹாஸ் அகிசா, 10-11 வயதுப் பிரிவில் உலகச் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இந்தப் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் தேசியச் சம்பியனாகவும், கடந்த ஆண்டின் சிறந்த வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், 14-15 வயதுப் பிரிவில் போட்டியிட்ட டில்லன் ஜூலியன் தனது பிரிவில் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்தார். மேலும், தினெல் ஷமிக்க, இயன் அனுஹாஸ் மற்றும் இசுரு அமில ஆகியோரும் தமது திறமைகளை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிப் பதக்கங்களுடன் இன்று காலை நாடு திரும்பிய இந்த ஐவரையும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை முவாய் தாய் சங்க அதிகாரிகள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். https://www.virakesari.lk/article/241464
  3. ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளார் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 02:59 PM ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241466
  4. மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது Mar 20, 2026 - 06:40 AM ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் முன்மொழிவோம். நிறுவனங்கள் நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழி முறைகளை நோக்கி நகர்வதற்கு உதவும் முதலீடுகள் மூலம், தொழில்துறைக்கு நிதி உதவியை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்னிருந்த நிலையை விட, தற்போது ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையானது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmy7a7ei0001356p6zcrngn1
  5. உண்மையில் இது எனக்கு கொஞ்சமும் விளங்கி கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கின்றது. பொய்கள் போலிகளை கேட்டு சந்தோசபடுவது ஏன் என்பது விளங்கி கொள்ள முடியாதது தான். இது பற்றி நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டது இவர்கள் இராமன் பெரியவனா இராவணன் பெரியவனா சீதையா இப்படியான கற்பனைகளை கேட்பதில் அலாதியான விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர். இப்போது இவர்களுக்கு ரஷ்யா ஈரான் வட கொரியா. மேற்குலக நாடுகளில் இவர்கள் மிகவும் வசதியான சுதந்திரமான பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொண்டு இப்படியான யுரியுப்புகளை கேட்டு சந்தேசபடுகின்றார்கள். இப்படியான தமிழ்யுரியுப்பர்கள் காட்டில் பண மழை. கவனித்தீர்களா தமிழ் அடியான் யுரியுப்பர் இவர்களை சந்தோசபடுத்துவதற்காக பொய் செய்தி தயாரிக்கின்றார் அதை ரஞ்சித் அண்ணா சுட்டிகாட்டி எழுதிய கருத்தையே தமிழ் அடியான் நீக்கிவிட்டார்.
  6. மொக்கு அமெரிவுக்கு தெரியவில்லை, இஸ்ரேலின் உள் திட்டம், அமெரிக்காவும் அழியவேண்டும், மதிக்கிழக்கில் அமேரிக்கா எந்த செல்வாக்கும் செலுத்த முடியாத அளவுக்கு என்பது
  7. @goshan_che நான் வடகொரியாவுக்கு ஒன்று ரஷ்யாவுக்கு ஒன்று விண்ணப்பம் அனுப்பி வைக்கட்டுமா
  8. Today
  9. இது அதிர்ஷ்ட வசத்தால் உருவாக்கிய வாய்ப்பு அல்ல என்ற தோற்றத்தையே வீடியோ இல் பார்க்க கூடியதாக உள்ளது. முதலில் , இரான் , விமான தாக்குதலுக்கு தேவையான பின் கட்டுமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானம் ,நிலத்தில் உள்ள ரேடார், இலத்திரனியல் யத கட்டுமானங்களை, மற்றும் growlers (இது வெளியிடப்பாவில்லை ), இவையே எதிரி ரேடார், இலத்திரனியல் யுத்த முனைவுகளை முடக்குவது, விமான தாக்குதலில் போது. GROWLERS சவூதியில் தாக்கப்பட்டதை வெளிவிடவில்லை. அதனால், இது புதிய ஆயுதம் தொழிநுட்பத்தால் ஏற்பட்டதா, அல்லது பின்கட்டுமான பற்றாக்குறை / இல்லாமையால் இரான் செய்யக்கூடியதாக இருந்ததா என்பதும். அல்லது 2 ம் காரணமாக இருக்கலாம்.
  10. கிறிஸ்தவ மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது என்பது, பிழையாக விளங்கப்படுள்ளது, இல்லை வேண்டுமென்றே திரிபு படுத்தப்பட்டுள்ளது என்றுதான் நான் நினைக்கிறன். கல்வி சம்பந்தப்பட்ட துறை இருக்கும்போது போலீசார் தீர்த்து வைத்தனர் எனக்கூறி பொலிஸாருக்கு பொன்னாடை போர்த்துவதிலிருந்தே தெரிகிறது. பொலிஸாருக்கு அந்தப்பிரச்சனையில் தலையிடவோ அல்லது போலீசாரிடம் இதைப்பற்றி முறையிடவோ தேவையில்லை, அப்படி போலீசார் தீர்த்து வைத்திருந்தாற்கூட பொன்னாடை போர்த்துவதன் அவசியமென்ன? அவர்களுக்கு அரசாங்கம் எதற்கு சம்பளம் வழங்குகிறது? மாறி மாறி கொழுத்துவோமென சவால் விடுகிறார்கள். அன்பையும் கருணையையும் சமத்துவத்தையும் பொறுமையையும் போதிக்க வேண்டியவர்கள் எடுத்ததற்கெல்லாம் கொளுத்துவோம் என்று எச்சரிக்கிறார்கள்.
  11. அமெரிக்காவுக்கு நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, தன் அதிகாரமே பெரிது. நாளைக்கே இஸ்ரேலுக்கு எதிரான அறிக்கையும் வரலாம், அதே போலவே நெத்தன்யாகுவும், ஈரான் தனது சொந்த தாக்குதலாலேயே வீழ்ந்தது என்று உரிமை கொண்டாட நினைக்கிறார். இவர்களில் யாருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையானவர்களுமில்லை. சிலர் நெத்தன்யாகுவை வாலாட்டும் நாய் என்று விமர்ச்சிக்கிறார்கள். ட்ரம்புக்கு பெருத்த அவமானம், நட்பு நாடுகள் அவருக்கு கை கொடுக்க மறுத்தது. அவர் போய் சீண்டுவார் மற்றைய நாடுகள் அவரை காப்பாற்ற தங்கள் வீரரை பலி கொடுக்க வேண்டும். இப்படி இவரை தனித்து விட்டாற்த்தான் பாடம் படிப்பார். இது எங்கள் போரல்ல, எங்களை கேட்டு போர் தொடங்கப்படவில்லையென முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டன.
  12. சீனாவின் ஆயுத உதவி ஈரானுக்கு மறைமுகமாக கிடைத்து விட்டது போலும்?
  13. நாடு முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்குது ........! 👍
  14. ஈரானில் உயிரிழப்பு 3100 ஐ கடந்தது Mar 20, 2026 - 09:09 AM அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் இந்த புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல் இதுவரையில் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 1,394 பேர் பொதுமக்கள் என்றும், அவர்களில் குறைந்தது 210 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,153 பேர் இராணுவத்தினர் என்றும், ஏனைய 639 பேரின் மரணங்கள் எவ்வகையைச் சேர்ந்தவை என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmyco1vf0007356pwkjbmyi8
  15. இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு பட மூலாதாரம்,Ronen Zvulun/POOL/AFP via Getty Images படக்குறிப்பு,வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இரானின் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், "அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்றார். பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. இதில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்ட இரானிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'இஸ்ரேல் தன்னை போரில் ஈடுபட கட்டாயப்படுத்தியது' என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொடர்ந்து மறுத்து வருகிறார். 'நாங்கள் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம், அவர்கள் முதலில் தாக்குவார்கள் என்று நான் நம்பினேன்' என்று இந்த மாதத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறினார். இருப்பினும், இரான் போர் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, புதன்கிழமையன்று இரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலை டிரம்ப் மறைமுகமாக விமர்சித்தார். அது குறித்துத் தனக்கு "எதுவும் தெரியாது" என்றும் அவர் கூறினார். இரானின் எரிவாயு வயல்கள் மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல், டிரம்புக்குத் தகவல் தெரிவித்ததா என்று நெதன்யாகுவிடம் கேட்டபோது, "இஸ்ரேல் தனித்தே செயல்பட்டது" என்று அவர் கூறினார். மேலும்,"மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் எங்களைக் கேட்டுக்கொண்டார், நாங்கள் அவ்வாறே செய்கிறோம்," என்றும் கூறினார். "இரானின் உயர்மட்டத் தலைமையில் பிளவு" பட மூலாதாரம்,ATTA KENARE/AFP via Getty Images படக்குறிப்பு,இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் (கோப்புப் படம்) லெபனானில் உள்ள ஹெஸ்பொலா குறித்த தனது திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, இஸ்ரேல் தற்போது ஒரு "பாதுகாப்பு அமைப்பை " உருவாக்கியுள்ளதாகவும், இது அதன் போராளிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் என்றும் நெதன்யாகு கூறினார். "எங்களிடம் எதிர்காலத்திற்கான திட்டங்களும் உள்ளன," என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், "எங்களது மிகப்பெரிய முன்னுரிமை இரான் தான். அங்கிருக்கும் அரசாங்கம் வீழ்ந்தால், ஹெஸ்பொலாவும் முடிவுக்கு வரும்," என்றார். இரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே பிளவுகளும் உள்நாட்டு பதற்றங்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, முன்னாள் அதி உயர் தலைவரைப் போன்ற "பிடிமானமும் அதிகாரமும்" இனி எவருக்கும் இருக்கப்போவதில்லை என்று கூறினார். இரானிய ஆட்சியில் விரிசல்கள் தோன்றி வருவதாகவும், "இந்த விரிசல்கள் அதிகரித்தால், ஆட்சி மாறக்கூடும்" என்றும் அவர் கூறினார். மேலும், "இரானிய ஆட்சி பலவீனமடைந்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன," என்று அவர் தெரிவித்தார். "இந்த ஆட்சி வீழும் வகையிலான சூழலை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அது நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம்" என்றார். இந்த ஆட்சி நீடித்தாலும், "அது மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும்" என்றும், இறுதியாக, "இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வது இனி இரானிய மக்களின் கைகளில்தான் உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றனவா? பட மூலாதாரம்,Joe Raedle/Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா ஏன் போரில் நுழைந்தது என்பது குறித்து அந்நாட்டில் உள்நாட்டு விவாதம் நடைபெற்றுள்ளது. பிபிசி செய்தியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியரின் கூற்றுப்படி, இரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடங்கிய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைக் காட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முயன்று வருகிறார். அமெரிக்கா ஏன் இந்தப் போரில் இறங்கியது மற்றும் அதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பது குறித்து அமெரிக்காவிற்குள் கணிசமான உள்நாட்டு விவாதங்கள் எழுந்துள்ளன. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் இந்த வாரம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது. ஜோ கென்ட் டிரம்பின் நீண்டகால கூட்டாளியாகவும், அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் பிரிவுடனும் தொடர்புடையவராக இருந்தார். தனது ராஜினாமா கடிதத்தில், "இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் எழுதியுள்ளார். பின்னர் கன்சர்வேட்டிவ் வர்ணனையாளர் டக்கர் கார்ல்சனுடனான சுமார் இரண்டு மணி நேர நேர்காணலில் தனது கருத்துகளை அவர் விரிவாக விளக்கினார். "இந்த முடிவு இஸ்ரேலால் உந்தப்பட்டது" என்றும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை போருக்குச் சம்மதிக்க வைக்க இஸ்ரேலிய அதிகாரிகள் வழக்கமான நடைமுறைகளை மீறிச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் புதன்கிழமையன்று, இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அமெரிக்காவிற்கு முன் கூட்டியே தெரியாது என்று ட்ரூத் சோசியல் சமூக ஊடகத் தளத்தில் டிரம்ப் எழுதியிருந்தார். சிலர் இதனை அமெரிக்க அதிபரின் கோபத்தின் அறிகுறியாகப் பார்த்தனர். தனது அறிக்கைகளின் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நோக்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்ற கருத்தை நிராகரிக்க நெதன்யாகு தெளிவாக முயற்சி செய்து வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0le8kn6k2zo
  16. தேச விரோத செயல்களுக்காக மரண தண்டனையினை தமிழ் போராளிகளும் வழங்கியிருந்தார்கள், அந்த சூழ்நிலையில் இருந்த போது அதன் தீவிரம் பற்றி கருதாது வழமையான விடயமாக நாமும் கடந்து விட்டிருந்தோம். இங்கு ஒரு பேராசிரியர் இந்த தவறுகளை நியாயப்படுத்துகிறார். இலங்கையில் ஒரு போராளி குழுத்தலைவரை வெளிநாட்டு ஊடகங்கள் சில கம்போடிய பொல் பொட் போல கொடூரமானவர் என குற்றம் சாட்டிய கருத்துக்களை அங்கிருந்த போது பார்த்த போது, எந்த சம்பந்தமும் இல்லாத பிரச்சாரம் போல இருந்தது. ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் நிலையில் வரும் புரிதல்களுக்கும் அதற்கப்பால் இருக்கும் புரிதல்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும், ஆனாலும் ஈரானில் நடக்கும் இந்த படுகொலைகளை ஏற்க மறுக்கும் மனது இலங்கையில் நடந்த விடயங்களை ஏனோ இப்போதும் மேம்போக்காக கடந்துவிடுகிறது.
  17. இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா பட மூலாதாரம்,EPA இரானில் தாங்கள் நடத்தி வரும் போரினால் எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில், பகுதியளவிலான இரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து அந்நாடு பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஃபாக்ஸ் நேர்காணல் ஒன்றில் இந்த யோசனையை முன்வைத்தார், ‘சர்வதேச அளவில் அதிக எண்ணெய் கிடைக்க இது உதவும்’ என்றும் கூறினார். மத்திய கிழக்கு போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருகின்றன. இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அது நீண்டகால அமெரிக்கக் கொள்கையின் ஒரு வியக்கத்தக்க மாற்றமாக அமையும். மேலும் இது மிகவும் நிச்சயமற்ற பலனைக் கொண்ட ஒரு நடவடிக்கையாக இருக்கும். இது கச்சா எண்ணெய் விலைகளில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும், இரானிய ஆட்சிக்குச் செல்லும் நிதியை இது அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். போருக்கு முன்பு, இரானில் இருந்து வெளியேறும் எண்ணெயை வாங்கும் முதன்மை நாடாக சீனா இருந்தது; அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்த தடைகள் காரணமாக பெரும் தள்ளுபடி விலையில் அந்த எண்ணெய் பேரல்களை அது பெற்று வந்தது. வியாழக்கிழமை (மார்ச் 19) அன்று ஃபாக்ஸ் பிசினஸ் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த நேர்காணலில், “விற்பனைக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிப்பது, இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற எண்ணெய் தேவைப்படும் பிற நாடுகளுக்கு அந்த விநியோகங்களில் பெரும்பகுதியைத் திசைதிருப்ப உதவும் என்றும், அதே நேரத்தில் சீனாவை ‘சந்தை விலையை’ செலுத்த நிர்பந்திக்கும்” என்றும் பெசென்ட் கூறினார். ஏற்கெனவே கடலில் இருக்கும் இரானிய கச்சா எண்ணெய் மீதான விற்பனைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அவர் கூறினார், இது சுமார் 140 மில்லியன் பேரல்கள் ஆகும். இது 10 முதல் 14 நாட்களுக்கு உலகளாவிய எண்ணெய் விலைகளைக் குறைக்கும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். ஆனால், சாத்தியமான இந்த விலக்கு எவ்வாறு செயல்படும் அல்லது விற்பனை மூலம் கிடைக்கும் பணம் இரானிய அரசாங்கத்திற்குத் திரும்பச் செல்வதைத் தடுப்பதற்கான விதிகளை இது உள்ளடக்குமா என்பது குறித்த விரிவான தகவல்களை பெசென்ட் தெரிவிக்கவில்லை. இந்த முன்மொழிவு குறித்த கூடுதல் விவரங்களை வழங்க அமெரிக்க கருவூலத் துறை மறுத்துவிட்டது. இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா
  18. இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் Mar 19, 2026 - 09:41 PM ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (19) இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலுள்ள ஹைஃபா நகரின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பல இடங்களை இலக்கு வைத்து ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இதனால் பெரும் தீ விபத்துக்கள் ஏற்பட்டதுடன், அருகிலுள்ள கிரயோட் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினத்தில் மாத்திரம் இஸ்ரேலை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஒன்பதாவது ஏவுகணைத் தாக்குதல் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmmxo12ks0016356phqsb8s4a
  19. ஈரானால் தாக்கப்பட்டதா அமெரிக்க போர் விமானம்? Published By: Vishnu 20 Mar, 2026 | 06:24 AM ஈரான் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலால் சேதமடைந்த அமெரிக்க F-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. ஈரான் தாக்குதல் என நம்பப்படும் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க F-35 ரக போர் விமானம் ஒன்று, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாக, இவ்விவகாரம் குறித்து அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளரான கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ரக விமானம் "ஈரான் மீது ஒரு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது" அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறினார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹாக்கின்ஸ் தெரிவித்தார். "விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானியின் உடல்நிலை சீராக உள்ளது," என்று ஹாக்கின்ஸ் மேலும் கூறினார். "இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது." பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய போரில், ஈரான் ஒரு அமெரிக்க விமானத்தைத் தாக்குவது இதுவே முதல் முறையாகும். இந்த மோதலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் F-35 ரக விமானங்களைப் பயன்படுத்துகின்றன; இந்த விமானங்களின் விலை 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும். https://www.virakesari.lk/article/241415
  20. அவுஸ்ரேலிய இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகளை வெளிக்கொணர முற்பட்ட ஒரு ஊடகவியலாளரரது கணனி பொருள்கள் என்பனவற்றினை கைப்பற்றி பாரிய நெருக்கடி கொடுத்திருந்தும் அந்த விடயத்தினை அவர் பலத்த சிரமத்திற்கும் மத்தியில் வெளிக்கொணர்ந்திருந்தார், ஆனால் மக்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த காணொளி பார்ப்பதற்கு கடினமாக இருக்கும், சாதாரண மக்களை விலங்குகள் வேட்டையாடுவது போல வேட்டையாடுவார்கள், ஆனால் அது ஏனோ மக்களால் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை, அதற்குள் ஒரு கூட்டம் தேசிய வீரர்களை காப்போம் என கையெழுத்து வேட்டை வேறு நடத்தினார்கள்.
  21. யாழ். பல்கலைக்கழக கறுப்புக் கொடி விவகாரம் : மூன்று மாணவர்களிடம் ஐந்து மணி நேர விசாரணை 20 Mar, 2026 | 09:59 AM சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக கடந்த 13ஆம் திகதி திகதியிடப்பட்டு, 16ஆம் திகதி காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடிதம் 17ஆம் திகதியே பதிவாளரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு ஏதுவான நேரத்தை அறிவித்து, வருமாறு கூறப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை (19) காலை 09.30 மணிக்கு மாணவர்கள் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், மாணவர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில், அவை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241428
  22. பயணிகளை இடைநடுவில் இறக்கிய தனியார் பேருந்துக்கு மூன்று நாள் சேவைத் தடை 20 Mar, 2026 | 09:57 AM (எம்.நியூட்டன்) பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து வேறொரு தனியார் நிறுவனத்தின் (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களை ஏற்றிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை பயணிகளை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில் இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்து 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய பதிலளிக்காது முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதற்கான உறுதியுரையும் அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது. எனவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களுடன் (ஒளிப்படம் அல்லது காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார சபையின் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/241426
  23. ஓம் கிம்முக்கு மூக்கை பொத்தினால், வாயை ஆவென்று திறக்க தெரியாதவர். சிலவேளை சிறிமா சொல்லிய - பாண் இல்லாவிட்டால், ஏன் கேக் இல்லையா, சாப்பிட முடியாதா என்று சொன்னது - மேற்கி நிறுவன நினைவில் ஓடி இருக்கலாம். (மேற்கு கோர்த்து விளையாவதில் கில்லாடிகள் என்பதை அப்பாவியான சிந்தனை அறியவில்லை போலும்) ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நம்பலாம் சிறிமா முழுதாக இலங்கைதீவு வாழ்க்கை, கண்டி இராச்சிய ரத்வத்தை குடும்பத்தை சேர்ந்தவர் - ஆகவே ஒரே சூழலில் இருக்கும் போது பாண் / கேக்கின் அருமை தன்மை தெரியவில்லை என்று. மேற்கு (cia இதில் முன்னணியில்) உளவு நஞ்சுக் கிருமிகளே இந்த உணவு, தோற்றத்தை வைத்து கதைகட்டி, கோரா இழிவு பிம்பத்தை உருவாக்குவது. அதன் பின்பே அமெரிக்கா நஞ்சு கிருமிகள் எந்த காலத்தில் இருக்கின்றன என்பதை குறிக்க , ஆங்கிலத்தில் புழக்கமற்று போன சொல்லானா dotard என்பதை கொண்டு டிரம்ப் ஐ வாகொரியா வர்ணித்தது. பிரபாவை பற்றியும் CIA நஞ்சுக்கிருமிகள் தோற்றத்தை வைத்து, உணவையும் சேர்த்து கதை கட்டின என்பது .
  24. அத தெரண கருத்துப்படங்கள்.
  25. ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப் பட மூலாதாரம்,EPA/Shutterstock படக்குறிப்பு,ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சியுடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது டிரம்ப் இந்த கருத்தைத் தெரிவித்தார். இரு தலைவர்களின் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, மேலும் இது குறித்துக் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. செய்தியாளர் சந்திப்பில், அதிபர் டிரம்ப்பிடம், 'தாக்குதலுக்கு முன்பு, அது குறித்து ஜப்பான் போன்ற தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஏன் தெரிவிக்கவில்லை?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஒன்று, நாங்கள் அதிக சமிக்ஞைகளை கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்தபோது, மிகத் தீவிரமாகச் செயல்பட்டோம். நாங்கள் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை, ஏனென்றால் நாங்கள் ஆச்சரியப்படுத்த விரும்பினோம். இத்தகைய ஆச்சரியங்கள் குறித்து ஜப்பானை விட நன்றாக அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள், சரியா?" என்று கூறினார். இதற்கிடையில், டிரம்ப் பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) குறித்தும் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அமெரிக்கக் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியது. ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (மார்ச் 19) வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.