Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஈரான் மீதான தாக்குதலில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்: பென்டகன் அறிவிப்பு Mar 11, 2026 - 09:19 AM ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் நேற்று (10) தெரிவித்தார். "Operation Epic Fury ஆரம்பமானது முதல் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 140 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்" என பார்னெல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோருக்குச் சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களில் 108 பேர் ஏற்கனவே பணிக்குத் திரும்பியுள்ளனர். 8 வீரர்கள் தொடர்ந்தும் பலத்த காயமடைந்தவர்களின் பட்டியலில் உள்ளதுடன், அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன." உயிரிழப்பு ஏற்படக்கூடிய அல்லது ஆபத்தான நிலையிலுள்ள வீரர்களே 'பலத்த காயமடைந்தவர்களின்' பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் முன்னர் CNN செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார். இதுவரை இப்போராட்டத்தில் 7 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இறுதியாக உயிரிழந்த வீரரின் உடல், கௌரவ மரியாதைகளுடன் கடந்த திங்கட்கிழமை மாலை டெலாவேரில் உள்ள டோவர் (Dover) விமானப்படைத் தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தாக்குதல்களின் தீவிரத்தைப் பொறுத்து வீரர்கள் உடனடியாகச் சிகிச்சை பெறாத சந்தர்ப்பங்களும் உள்ளதால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறுபடவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmli0ghc0008356phiyzha2p
  3. உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை Mar 11, 2026 - 10:36 AM ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது "வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்" என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD கவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் UNCTAD பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும். இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும். UNCTAD இன் தரவுகளின்படி, உலகளாவிய கச்சா எண்ணெயில் 38 சதவீதமும், எல்பிஜி (LPG) எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 19 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. உலகளவில் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றது. இந்த நீரிணை ஊடாக அனுப்பப்படும் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. எனவே, இதன் தாக்கம் ஆசியப் பிராந்தியத்திலேயே மிக அதிகமாக உணரப்படும் என UNCTAD சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmlkg6vr000b356pytkhpsm4
  4. இது ஒரு நல்ல விடயம். அரசிடம் மாடு கேட்டு கோரிக்கை வைத்தவர்களுக்கு ஜேபி பட்டம் கொடுத்தது, தகுதி இல்லாத தமது ஆதரவாளர்களுக்கு ஜேபி பட்டம் கொடுத்தது என முன்னாள் அரசியல்வாதிகள் செய்த அட்டகாசங்கள்! ஜேபி பட்டத்தின் மரியாதையே போச்சு.
  5. புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு Mar 11, 2026 - 10:04 AM ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பெயரிடப்பட்டார். ஈரானிய மக்களின் இந்தத் தெரிவை வடகொரியா ஆதரிப்பதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmljn9ah000a356pld7oxxaz
  6. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு Mar 11, 2026 - 08:46 AM மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எவ்வாறாயினும், ஈரானால் அவ்வாறு ஏவப்பட்ட 7 பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாகச் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmlgtuf10007356pohwsge4s
  7. லிட்ரோ எரிவாயு விலை ரூ.300 ஆல் உயர்த்தப்பட்டது Published By: Vishnu 10 Mar, 2026 | 10:30 PM இன்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.300 ஆல் அதிகரிக்கப்படும், மேலும் அதன் புதிய விலை ரூ.3990 ஆக இருக்கும். https://www.virakesari.lk/article/240666
  8. மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு Mar 11, 2026 - 08:20 AM 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (EDL) மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் (NTNSP) ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களுக்கும் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைப் பகிர்வுத் திட்டத்தின்படி, அனைத்து மின்சார சபை ஊழியர்களும் உரிய 4 நிறுவனங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் சட்டப்பூர்வமாகத் தமது கடமைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2477/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பணிக்குச் சமூகமளிக்க மறுப்பது பாரதூரமான குற்றமாகும். சில ஊழியர்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை முதன்மை நிறைவேற்று அதிகாரிகளான பொறியியலாளர் எஸ்.ஐ. குமார மற்றும் பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற போதிலும், அதன் மூலம் ஊழியர்கள் தமது உடனடிக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என முகாமைத்துவம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிராக, அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் கடும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmlfxtbf0005356pg1bpslsg
  9. கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள் Mar 10, 2026 - 06:52 PM வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தோல் நோயியல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், இந்த சர்வதேச மாநாட்டின் தலைவருமான தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் நயனா மதரசிங்க, இந்த மாநாடு முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும் எனக் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் தோல் நோயியல் துறையைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இம்மாநாட்டின் போது 45 வெளிநாட்டு வளவாளர்கள் தோல் நோயியல் துறையின் புதிய போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதேவேளை, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150 தோல் நோய் நிபுணர்களும் வளவாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmkn22630014356pygzvp3v2
  10. விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக - அரசாங்கத்திடம் மனோ கணேசன் கோரிக்கை 10 Mar, 2026 | 05:28 PM (க.சிவலிங்கமூர்த்தி) மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாரிய விலை உயர்வுகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதாகவும் விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். வெ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பது வெறும் இரண்டு துறைகளுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இது உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என அனைத்திலும் ஒரு சங்கிலித் தொடரான விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் நலிவடைந்துள்ள மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இந்தத் திடீர் விலை உயர்வுகளால் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலப் பேரிடர்களின் போது ஜனாதிபதியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணங்கள் கூட இன்னும் முழுமையாக இம்மக்களைச் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட இருப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக விசேட நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். சமையல் மற்றும் ஏனைய தேவைகளுக்காகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும். அத்துடன், மலையக மக்களின் பிரதான உணவுத் தேவையான கோதுமை மாவை சலுகை விலையில் தடையின்றி விநியோகிப்பதற்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணங்கள் எவ்வித பாகுபாடுமின்றி, தோட்டங்களில் வசிக்கும் அனைத்துத் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் அல்லாத குடும்பங்களுக்கும் சென்றடைவதை மாவட்ட மற்றும் பிரதேச செயலர்கள் ஊடாக அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். நிவாரணப் பொதிகளுக்கு அப்பால், தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினையான காணி உரிமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே தற்போதைய தேவையாகும். பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசிப்பிடத்திற்காகக் குறைந்தது 10 பேர்ச் காணியையாவது சட்டப்பூர்வமாக ஒதுக்கித் தர வேண்டும். இது மக்களின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும். இதற்காகத் தற்போது நடைமுறையிலுள்ள காணி குத்தகைச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டத் திருத்தங்களுக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி மாத்திரமன்றி, ஏனைய எதிர்க்கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றன. எனவே, அரசாங்கம் மேலும் காலம் தாழ்த்தாது இந்த காணி உரிமையினை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/240648
  11. Today
  12. இது வேற பிரச்ச்னை…. ஓம் ஆனால் பாருங்கள் இவர்களின் மாய உலகத்தில் எப்போதும் சர்வாதிகாரிகளு ம் கொடுங்கோலர்களுமே இவர்களுக்கு ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் அந்த மாய உலகத்தில் வாழும் போது கூட அவர்கள் சொந்த வாழ்கையில் மட்டும் புத்தி கூர்மை நன்றாக வேலை செய்யும் கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் இருந்து விலகி சென்று கிலோ மீட்டர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடைவெளியை ஆவது பாதுகாப்பு கருதி கடைபிடித்து கொள்வார்கள்
  13. sSprtoneodmc14002thgcc7uf4c5l1 h1451cma8haa9ahcm091g1i7clihi · சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன். . சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த் தார். . ''என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்! . என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன். . வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக்கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது. . அழகு ஒரு காரணம்... ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு. . அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம். . அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?'' . சாமி நிதானமாகக் கேட்டார், ''அது கிடக் கட்டும்... மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?'' . சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான். . ''சா... சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?'' . ''உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்! நீயாவது நிம்மதியா இரு!'' என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் 'சாமி'கள்.....!
  14. தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறமாட்டாது. எப்போது தேர்தல் தினம் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் நாளை வரும் போட்டி விபரங்களில் முதல் 20 போட்டிகளின் விபரங்கள் மட்டுமே இருக்குமென்றும் தேர்தல் தேதிகள் தெரிந்த பின்பு மிகுதி விபரங்கள் வரும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. மிகுதி விபரங்கள் சிலவேளை ஏப்ரல் மாதத்தில் அதாவது முதலாவது போட்டி ஆரம்பித்தபின்பும் வரலாம்.
  15. நல்ல விடயம் விசுகர் . ......ஆரோக்கியமாய் இருக்கும் பிள்ளைகளுக்கு அறிவுரை போதும் மாத்திரை வேண்டாமே ......!
  16. சேரன் செங்குட்டுவன் Cheran Senguttuvan | Sivaji,Rajasulochana,SSR | kalaignar Karunanithi.......!
  17. வணக்கம் வாத்தியார் . ........! இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : பருவம் போன பாதையிலே என் பார்வையை ஓட விட்டேன் அவன் உருவம் கண்ட நாள் முதலாய் என் உள்ளத்தை ஆட விட்டேன் பெண் : காதல் என்றொரு நாடகத்தை என் கண் விழி மேடையில் நடித்ததில்லை அதை கற்றுத் தந்தவன் திரு முகத்தை கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை பெண் : இதழில் வைத்த ஒரு புன்னகையில் என் இதயத்தை அளந்து விட்டான் இரவில் வந்த பல கனவுகளில் என் இறைவன் வளர்ந்து விட்டான் பெண் : எனக்கு எனக்கென்று இருந்த இளமையை தனக்கென்று கேட்டு விட்டான் இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல் என்னைக் கொடுத்து விட்டேன் பெண் : கொடியின் இடையில் ஒரு பாரமில்லை என் வழியில் நடந்து வந்தேன் குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை என் காலம் கடந்து வந்தேன் பெண் : மாலைப் பொழுதில் இளம் தென்றல் தொடாத மலராய் நானிருந்தேன் மன்னன் வந்த அந்த வேளையிலே அவன் மடியில் ஏன் விழுந்தேன் ......! --- பருவம் போன பாதையிலே ---
  18. காளான் மிளகு வறுவல் . ...... மாமிச கறி சுவையை அடிச்சு தூக்கிடும் .......! 😂
  19. வீதியோரம். மலர் ...........2. அந்தப் பெண் கொஞ்சம் தெம்பு வந்து எழுந்து தன் நிலையைப் பார்க்கிறாள். நேற்று மாலை நடந்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றது. கிழிந்த ஆடைகளோடு உடலெல்லாம் இரத்தம் வழிந்து உறைந்து இருக்கு. திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க அவனுக்கு நினைவுகள் வருவதும் போவதுமாய் புசத்திக் கொண்டு இருக்கிறான். அந்நேரம் ஏதோ ஸ்லோகங்கள் சொல்லியபடி காவியுடை தரித்து தலை மழித்த சாதுக்களும் சிறுவர்களும் அவ்வழியே நடந்து வருகின்றனர். அவர்கள் இவர்களின் நிலையைக் கண்டு விசாரித்து விட்டு இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை மறித்து அவர்களை பன்சாலையில் சேர்க்கும்படி சொல்லி கொஞ்சம் பெரிய சிறுவர்களை அவர்களுடன் அனுப்பிவிட்டு தாங்களும் விகாரையை நோக்கி விரைந்து நடக்கின்றனர். பௌத்த விகாரையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பிக்குமாரும் ஓரிரு வயதான பிக்குணிகளுமாய் சிரத்தையுடன் செய்கிறார்கள்.அவர்களின் காயங்களைக் கழுவி நீராட்டி மூலிகை தைலங்களால் வலிகுறையும் பொருட்டு நன்றாகத் தேய்த்து அமைதியாகத் தூங்க வைத்து விடுகிறார்கள். அப்படி மாலை ஐந்து மணிவரை நன்றாக உறங்கியவர்கள் பின் ஒவ்வொருவராய் எழுந்து வெளியே வருகிறார்கள்.அவர்களை வராந்தாவில் இருந்த பிக்குமார் அங்கன வந்து அமரும்படி கூறுகிறார்கள். அப்போது அங்கு வந்த தலைமைப் பிட்சுவானவர் பொதுவாய் அவர்களின் நலன்களை விசாரித்துக் கொண்டே பெயர் விபரங்களையும் கேட்டுக் கொள்கிறார். அதில் அந்த வாலிபனின் பெயர் விநோதன் என்றும், பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும், சிறுவன் யுகேந்திரன்,மற்றும் சிறுமி சுஜிதா என்றும் தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் அவர்கள் முன்பின் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்திருக்கவில்லை.நேற்று அந்த ஜீப்பில் கிடந்து வந்து வீதியில் விழுந்ததுவரை எதுவும் தெரியாது. நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு வாரங்கள் மாதங்களாய் எங்கெங்கோ காம்புகளில் ஆளாளாய் கைமாறி சொல்லொனா சித்திரவதைகள் அனுபவித்துக் கொண்டு வந்த நிலையில் ஏதோ அவங்களுக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் எல்லோரையும் கொண்டுவந்து வீதியில் வீசி விட்டுப் போய் விட்டார்கள்.இவர்களின் கதையைக் கேட்ட பிக்கு பிக்குணிகள் எல்லோரும் மிகவும் பச்சாதாபப்பட்டு வார்த்தைகளால் இவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.சிலநாளில் அவர்கள் அந்த வளாகங்களில் நடக்கவும் மடத்துக்கு தேவையான சில சில வேலைகள் செய்யவும் தயாராகி விடடார்கள். சில வாரங்களின்பின் சாதுக்களின் முறையான சிகிச்சையாலும் கவனிப்பாலும் உடல் தேறி நன்றாகக் குணமடைந்து விட்டனர். அன்று நல்ல பௌர்ணமி நாள். காலை நேரம் தலைமைப் பிக்குவானவரும் மற்றும் சிலரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடந்து வந்து அன்று எந்த வீதியோரத்தில் அவர்கள் விழுந்து கிடந்தார்களோ அங்கே வந்து சேர்ந்தார்கள். அங்கு கிடுகுகளால் ஒரு நீண்ட கொட்டில் போடப்பட்டு தரையில் பலதரப்பட்ட காய்கறிகள்,பழவகைகள், வாழைக்குலைகள் எல்லாம் ஓலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு மூலையில் களிமண்ணால் பிடித்த அடுப்பும்,சில சமையல் பாத்திரங்களும், ரெண்டு வாளிகளும் இருக்கின்றன. அடுத்த மூலையில் சில பாய்கள், தலையணைகள், போர்வைகளுடன் அவரவர்களுக்கேற்ற ஆடைகள் துவாய்கள் என்று எல்லாம் இருக்கின்றன. பிக்குவானவர் அவர்களிடம் இப்போதைக்கு நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான சில பொருட்கள் தந்திருக்கின்றோம். பின்னாலே ஒரு பெரிய குளமும் இருக்கின்றது. அங்கு முதலைகளும் கபரகொய்யாக்களும் பெரிய பெரிய மீன்கள் பாம்புகள் இருப்பதால் பிள்ளைகளுடன் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் போதும், இரவுகளில் அவ்வழியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு யானைகளும் வந்து போகும். முக்கியமாய் பிள்ளைகள் கவனம். ஒருநாளும் தனியே விடவேண்டாம். நரி, ஓநாய்,பாம்புகள் போன்றவையும் நிறைய இருக்கின்றன. இந்த பொருட்கள் யாவும் உங்களுக்காக நாங்கள் மக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு வந்தவையே. நீங்கள் விகாரையில் தங்கியிருந்த நாட்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாங்களும் எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமான சொற்ப சாமான்களே வைத்திருக்கிறோம். நாளைக்கு என்று எதையும் நாங்கள் சேர்த்து சேமித்தோ வைத்திருப்பதில்லை.நாம் அணியும் ஆடைகள் கூட சனங்களிடம் யாசகமாய் பெற்று ஊசி நூல் கொண்டு கைகளால் தைத்து அணிகிறோம்.கூடியவரை பகவான் புத்தமுனி போதித்த நெறிகளில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வருகின்றோம்.இனி நீங்கள் இவைகளைக் கொண்டு வீண் ஆடம்பரங்களை நாடாமல் உங்களின் தேவைகளை சுருக்கி வாழ்ந்து வரவும். பிள்ளைகளைப் பார்த்து நீங்கள் இருவரும் தினமும் காலையில் சிலமணி நேரம் பன்சாலைக்கு வந்து பாடங்கள், பாஷைகள், உடற்பயிற்சிகள், கலைகள், கைவினை வேலைகள் என்று கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்காக அங்கு பாடசாலையும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.பின் மாலையில் நீங்கள் இங்கு வந்து இவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்று சொல்ல அவர்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அப்படியே செய்கிறோம் சாமி என்கிறார்கள். பின் சாதுக்களும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு தம் வழியே செல்கின்றார்கள்.....! மலர் . ........ 2. 🌼🌼
  20. இது எமது சமூகம் பெண் பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை சார்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவு மட்டுமே. யாழ் களத்தில் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். அவர்களே உங்கள் கேள்விக்கு சரியான பதில் தர முடியும் வேண்டும். நன்றி.
  21. கோயில் நிலைய வித்துவான்களே 10 க்கு மேல் இருக்கும் நீங்கள் வேற .......! 😂
  22. வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை Mar 10, 2026 - 05:20 PM மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும், அதன் விலைகள் அதிகரித்துள்ளதாலும், எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் அந்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ஆரம்பித்துள்ள போர்ச் சூழலினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் வியட்நாமும் உள்ளடங்குகிறது. வியட்நாம் தனது எரிசக்தித் தேவைகளுக்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளிலேயே தங்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வியட்நாமின் முன்னணி எரிபொருள் வர்த்தக நிறுவனமான பெட்ரோலிமெக்ஸ் (Petrolimex) தரவுகளின்படி, கடந்த மாத இறுதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன: பெற்றோல் - 32% டீசல் - 56% மண்ணெண்ணெய் - 80% விலை அதிகரிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாடு காரணமாக தலைநகர் ஹனோயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் நீண்ட வரிசைகளை இன்று (10) காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmkjqksd000y356pdr5e3tco
  23. இந்தியாவும் சீனாவும் எத்தனை நாட்களுக்குத் தேவையான எண்ணெயை சேமித்து வைத்துள்ளன? பட மூலாதாரம்,Getty Images 10 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் பொருளாதார தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையும், வளைகுடா எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. சனிக்கிழமை இரவு இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. எண்ணெய் விலையில் ஏற்படும் குறுகிய கால உயர்வு என்பது, உலக அமைதிக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு சிறிய விலையே என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு 30 நாள் அனுமதியை டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. ஆனால் தீவிரமடைந்து வரும் மோதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது. தாக்கம் என்ன? தற்போதைய சூழலில் எண்ணெய் விலை உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என பிபிசி ஹிந்தியின் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள வெளிநாட்டு கொள்கை நிபுணர் ஹர்ஷ் வி. பந்த், உலகின் பெரிய பொருளாதாரங்களுக்குக் கூட சிரமங்கள் உருவாகும் எனவும் பலவீனமான பொருளாதாரங்கள் அதிக அழுத்தத்தை சந்திக்கும் எனவும் கூறுகிறார். "இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகளிலிருந்து பெறும் வகையில் மாற்றியுள்ளது. யுக்ரேன் போர் தொடங்கியபோது இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கியது. மத்திய கிழக்கு உலக எண்ணெய் சந்தையின் முக்கிய மையமாக இருப்பதால் அங்கு ஏற்பட்ட மோதல்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என பந்த் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவில் எவ்வளவு எண்ணெய் இருப்பு உள்ளது? தற்போது அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அனுமதி அளித்திருந்தாலும், முன்னதாக அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவிற்கு வரும் ரஷ்ய எண்ணெய் வரத்து குறைந்தது. எரிசக்தி நிபுணர்கள் இந்தியாவின் எண்ணெய் இருப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர். ''ஹோர்முஸ் நீரிணை வழியாக தினமும் 137 கப்பல்கள் சென்ற நிலையில், கடந்த சில நாட்களில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மட்டுமே செல்ல முடிந்ததாக" பிபிசி நிகழ்ச்சியில் ஆற்றல் நிபுணர் நரேந்திர தனேஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தெற்காசிய நாடுகள் இந்தப் பகுதியில் இருந்து வரும் எண்ணெயை அதிகம் சார்ந்துள்ள நிலையில், தற்போது இங்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளதாக குறிப்பிடும் அவர், கடந்த ஓர் ஆண்டாக சீனா தினமும் சுமார் 10 லட்சம் பீப்பாய் எண்ணெயை இரானில் இருந்து வாங்கி தனது கையிருப்புகளில் சேமித்துள்ளதாக விவரிக்கிறார். "கடந்த 365 நாட்களில் அவர்கள் சேமித்துள்ள எண்ணெய், அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவர்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தாது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவின் எண்ணெய் கையிருப்பைப் பற்றி நரேந்திர தனேஜா கூறும் போது, இந்தியா உலகம் முழுவதும் 41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், தற்போது நிலத்தடியில் உள்ள இந்தியாவின் வியூக ரீதியான கையிருப்பு சுமார் 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என குறிப்பிடுகிறார். "இதற்கு மேலாக சேமிப்பு தொட்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வணிக கையிருப்புகளை சேர்த்தால் சுமார் 50 நாட்களுக்கு போதுமான எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் அனைத்து தொட்டிகளையும் முழுவதுமாக காலி செய்ய முடியாததால், நடைமுறையில் சுமார் 40 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் உள்ளது," என நரேந்திர தனேஜா கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images எதிர்கால விளைவு இப்போது பீதியடையத் தேவையில்லை என்று நரேந்திர தனேஜா கூறுகிறார். ''உண்மையில், நமது கவலை எண்ணெய் கிடைக்குமா என்பது அல்ல, மாறாக அதன் விலை என்னவாக இருக்கும் என்பதுதான். இரான் போர் தொடங்கியபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 65 டாலராக இருந்தது, ஆனால் இப்போது அது உயர்ந்துள்ளது.'' என்கிறார் அவர். ''இதுவரை அரசு எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் போர் நீண்ட காலம் தொடர்ந்தால், அரசு எப்போதும் விலைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஒரு கட்டத்தில் அரசு மற்றும் நிறுவனங்கள் விலையை குறைவாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால், 'இனி அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்', 'நுகர்வோருக்கு என்ன செய்தி வரும்' போன்ற கேள்விகள் எழும்'' என்கிறார் அவர் குண்டுகள் விழுவது நின்றுவிடலாம், ஆனால் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்களுக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பல மாதங்கள் ஆகும் என்று சர்வதேச விவகார நிபுணர் பிரம்மா செல்லனி கூறியுள்ளார். "இரானில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மற்றும் பொது பகுதிகள் மீது குண்டுவீசித் தாக்குவதன் மூலம், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதேபோன்ற பதிலடியை தூண்டுகின்றன. மேலும் ஆழமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன," என்று பிரம்மா செல்லனி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். மேலும், "வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பு ஏற்கெனவே சேதமடைந்துள்ளது. இதில் ஏவுகணைகளைத் தடுக்கும் முயற்சிகளால் ஏற்பட்ட சேதங்களும் அடங்கும். உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், தளங்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் விநியோக அமைப்புகளின் மீதான அழுத்தம் ஆகியவை குண்டுவீச்சு நின்ற பிறகும் பல மாதங்களுக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கும்," என்றும் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8g1183n1go
  24. உங்கள் சிரமத்திற்கு நன்றி! கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்
  25. இரத்ததானம் செய்வோர் உடனே உதவுங்கள். இளைஞர்களே, கனரக வாகன சாரதிகளே, தனியார் பொதுப்போக்குவரத்து சாரதிகளே வேகத்தை குறைத்தும், அவதானமாகவும் வாகனங்களை செலுத்தி தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பீர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.