Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நோர்வே நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுகள் (cluster bombs ) எனப்படும் கொத்தணிக் குண்டுகள் மீதான பயன்பாட்டை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலகில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட முன் வந்து கையெழுத்திட ஆரம்பித்துள்ளன. உலகில் போராயுதங்களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புக்களில் கிளஸ்ரர் குண்டுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வரும் கிளஸ்ரர் குண்டுகளை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் உற்பத்தி செய்து தமது இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பது மட்டுமன்றி மலிவு விலைகளில் ஏழை நாடுகளுக்கும் விற்று பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வ…

    • 8 replies
    • 1.4k views
  2. வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது. ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு…

  3. கனடிய வானில் பாரிய நெருப்பு கோளமாக ஒளிர்ந்து மாயமான விண்கல் வீரகேசரி நாளேடு 11/24/2008 9:10:57 PM - வட கனடா பிராந்திய வானில் கண்ணைக் கூசும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த பிற்பாடு பூமியில் விழுந்த விண்கல்லை தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் களம் இறங்கியுள்ளனர். இது கடந்த ஒரு தசாப்த காலத்தில் கனடாவில் விழுந்த மிகப் பெரிய விண்கற்களில் ஒன்றாக விளங்கும் கல்காரி கோள்மண்டல பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அலன் ஹில்டென் பிரான்ட் தெரிவித்தார். சஸ் காதூள் எனும் இடத்துக்கு மேலே வானத்தில் நெருப்புக் கோளமாக ஒளிர்ந்த மேற்படி விண்கல், வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது ஒளிர்ந்து சில நிமிடங்களில் மாயமானதாகவும் அக்கல் கனடிய பிராந்தியமொன்றில் விழுந்திருக்கலாம் என தாம் நம்ப…

  4. வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து ! வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம…

  5. அனைவருக்கும் வணக்கம் இங்கே Balance Scorecard பற்றி தெரிந்தவர்கள் இருப்பீர்கள் என நம்புகின்றேன். இந்த Balance Scorecardai Human Resourceil பயன்படுத்துவதால் ஏற்படும் 4 நன்மைகள் (chances) தீமைகள் (risks) எதுவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இது பற்றி நான் ஒரு சிறிய வேலைத்திட்டம் செய்யவேண்டியுள்ளதால் உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். உதவிகளிற்கு நன்றி.

  6. விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம் மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட, இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார். கடந்த 15 வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது. ""உயிரியல் இரசாயன இழையங்…

  7. 2004ம் ஆண்டு மார்க்கழித் திங்கள் 26ம் நாள் இந்தோனிசிய சுமாத்திராத் தீவுகளில் ஏற்பட்ட கடலடிப் பூகம்பத்தின் விளைவாக தோன்றிய சுனாமி இந்து சமுத்திரத்தில் குறிப்பாக இந்திய உபகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட முதற் பெரிய ஆழிப்பேரலை தாக்கம்(சுனாமி) அல்ல என்றும் ஏலவே முன்னரும் அவ்வாறான பெரிய சுனாமிகள் தோன்றிருக்கின்றன என்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ஏலவே சில தமிழ் இலக்கியக் குறிப்புக்களிலும் இப்பிராந்தியத்தில் முன்னரும் சுனாமி தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) குறிப்பாக 2004ம் ஆண்டு ஆழிப்பேரலைத் தாக்கத்துக்கு உள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தரைத்தோற்ற பாறைப் படிவாராய்சியில் இன்றைய காலத்தில் இருந்து …

    • 3 replies
    • 1.9k views
  8. சந்திராயனின் பயணப்பாதை. Fig:bbc.com இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய…

  9. உடலுறவின் போது சில ஆண்களில் விந்து அடங்கிய சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றம் என்பது துரிதமாக நிகழ்வதற்கு (premature ejaculation) அவ்வாண்கள் கொண்டுள்ள மரபணுவும் காரணம் என்று நவீன ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுவரை காலமும் ஆண்கள் மத்தியில் நிலவும் உளவியல் பாதிப்பே இதற்கு முழுமைக் காரணமாக கற்பிக்கப்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உளவியல் காரணிகளோடு மரபணுக் காரணியும் இணைந்திருப்பது தற்போதே கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக serotonin எனும் ஓமோனின் அளவுக் கட்டுப்பாட்டோடு தொடர்புடைய ஜீன் ஒன்றே ஆண்களில் மேற்குறிப்பிட்ட நிலைக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. serotonin இன் செயற்பாடு மூளையில் சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றத்தோடு தொடர்புடைய பகுதியில் உள்…

  10. வீரகேசரி நாளேடு - பூமியிலுள்ளவர்கள் விண்வெளிக்கு சுலபமாக செல்வதற்கு உதவும் வகையில் மின் தூக்கியை வடிவமைப்பதில் 100 க்கு மேற்பட்ட பொறியியலாளர்களைக் கொண்ட ஜப்பானிய குழுவொன்று மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதியுயர் விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்படி மின்தூக்கியை அமைப்பது தொடர்பான திட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஆராயப்படவுள்ளது. பூமி மேற்பரப்பில் அடித்தளத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மின்தூக்கி, விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் வரை ஊடுருவிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி மின் தூக்கியுடன் இணைத்து அமைக்கப்படும் பாரந்தாங்கியானது அதனது சமநிலையைப் பேணும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மின்த…

  11. பாலத்தின் உறுதியை அறிவது எப்படி? ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு. ஆகஸ்டு மாதம் 2008ல் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார். இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வ…

  12. இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து விடுதலை அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் நிரூபிப்பு இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேற்படி பரிசோதனையின் பிரகாரம் இறை நம்பிக்கையுடைய 12 றோமன் கத்தோலிக்கர்களுக்கு கன்னி மரியாளின் உருவப் படத்தையும் 12 நாஸ்திகர்களுக்கு அவர்கள் லியோனார்டோ டாவின்சியின் 13 ஆம் நூற்றாண்டுப் படத்தையும் வழங்கி, அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. இதன்போது மேற்படி மின் அதிர்ச்சியால் இறை நம்பிக்கையுடைய கத்தோலிக்கர்கள் பெரிதாக வலியை அனுபவம் செய்யவில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலை…

  13. நம்ப முடியவில்லை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.3k views
  14. வெண்ணிலா (வானத்து நிலவு ) ஆண் ? பெண் ?வெண்ணிலா (வானத்து நிலவு ) ஆண் ? பெண் ? குறிப்பு : மதி , ,நிலாமதி , வெண்ணிலா , நிலா போன்ற சொற்கள் தவிர்க்க பட வேண்டும் . சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா ? சந்திரன் ....ஆண் நிலவே நீ சாட்சி .......நீதிபதி ( ஆண் ) வா வெணிலா உன்னை தானே வானம் தேடுதே மேலாடை மூடியெ ஊர்கோலமாய் போவதேன் .. .மேலாடை பெண்களுக்கு உரியது . (நிலவு பெண் ) நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா (தேய்பிறை ஆண் ) அம்புலி மாமா அம்புலி மாமா ........(ஆண் ) நிலவு ஆணா/பெண்ணா ........கருத்தாடலாமா ?விரும்பியவர்கள் கருத்து சொல்லலாம்.

  15. கடன் சுமையினால் வங்குரோத்து நிலையை அடையும் நிலையில் உள்ள லீமன் சகோதரர்கள் என்ற முதலீட்டு வங்கியை காப்பாற்றுவதற்கு உலகெங்கும் உள்ள இந்துக்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். வங்குரோத்து நிலை தவிர்க்கப்பட்டு இறுதி நேரத்தில் முதலீட்டாளர்கள் முன்வந்தால் பிரதியுபகாரமாக இரத்தினக்கல் பதித்த தேர் கட்டுவதாக வழிபாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கைலாயத்தில் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://afp.google.com/article/ALeqM5hxEeaW...bAifTpKwz-qW1Cw

  16. Started by kurukaalapoovan,

  17. 13 ஆண்டுகள் செலவு செய்து சுமார் 27 கிலோமீற்றர்கள் வட்டமான நிலக்கீழ் சுரக்கத்தில் அமைக்கப்பட்ட Large Hadron Collider (LHC) எனும் மொத்துகைக் குழாய் - குறுக்கு வெட்டு முகம். கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல…

  18. கருப்பையில் குழந்தைகளை சுமக்கும் குறிப்பாக ஆண் குழந்தைகளை சுமக்கும் பெண்கள் உடற்பூச்சு வாசனைத் திரவியங்களை (perfumes and scented creams) பாவிப்பதால் ஆண் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை மற்றும் விதை சார்ந்த புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக எலிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. வாசனைத் திரவியங்களில் இருக்கும் சில இரசாயனங்கள் இந்த விளைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதால் மனிதப் பெண்களும் இவற்றை கர்ப்ப காலத்தின் போது பாவிப்பதை தவிர்ப்பது நல்லது என்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது. செய்தி: http://kuruvikal.blogspot.com/

    • 13 replies
    • 2k views
  19. உலகின் வருங்காலம் பிறப்பின் இறப்பு 1983 இல், டெர்ரி எர்வினும் அவர்தம் பூச்சியல் குழுவினரும் பனாமா மழைக்காட்டில் ஒற்றை மரத்தின் மீது கொடிய பூச்சிமருந்தை அடித்தார்கள். சில பூச்சிகள் ஊர்ந்து வெளியேறின. சில இறந்து நிலத்தில் விழுந்தன. எர்வின் அணியினர் அந்த மர இனத்துக்குரியதாக மட்டுமே 163 தனித்தனி வண்டினங்கள் வாழக் கண்டனர். அந்த மழைக் காட்டில் 50000 தனித்தனி மர இனங்களில் தாராளமாக 80 இலட்சத்துக்கு மேற்பட்ட புது பூச்சியினங்கள் வாழந்து வரக் கூடுமென அவர் கணக்கிட்டார். பூச்சிகள், சிலந்திகள், வேறுவகைக் கணுக்காலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் வண்டுகளின் பங்கு 40 சதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மழைக்க் காட்டுத் தழையிலை மேற்பரப்பில் வாழும் பூச்சியி னங்களின் எண்ணிக்கை மட்டும்…

    • 0 replies
    • 972 views
  20. ஆண்கள் மலட்டுத்தன்மையை அறிந்துகொள்ள..... இக்குறிப்பு ஆண்களுக்கு மட்டுமே வாசகர்களுக்கு இது ஆண்களுக்கு மட்டும் உரிய தகவல், திருமணம் செய்ய முன்னரும் செய்தபின்னரும் ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் கவலை தனக்கும் தன் மனைவிக்குமாக குழந்தை பிறக்கவேண்டும் என்பதே சிறிது காலம் முயற்ச்சி செய்தும் குழந்தை பிறக்காவிட்டால் பயம் உச்சத்தின் எல்லைக்கே போய்விடும் அத்துடன் வைத்தியரிடம் போகவும் மறுப்பார்கள் காரணம் தன் மனைவி நன்றாக இருந்து தனக்குதான் மலட்டுத்தன்மை இருக்கு என்று வைத்தியர் சொல்லிவிடுவாரோ என்ற பயம். முழுப்பழியையும் எங்கள் சமூகம் அந்தப்பெண்ணிலேயே செலுத்திவிடும். வைத்திய ஆலோசனையுடன் குழந்தை பெறவும் ஆசை, அனால் போகவும் பயம் என்றிருப்பவகர்களுக்கு தாங்களாகவே தங்கள் மல…

    • 29 replies
    • 9.1k views
  21. சூரிய சக்தி மூலம் தொடர்ந்து 3 நாட்கள் பறந்த விமானம் புதிய உலக சாதனை படைப்பு வீரகேசரி நாளேடு 8/25/2008 7:25:26 PM - இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் ஆட்களற்ற விமானமொன்று தொடர்ந்து 3 க்கும் மேற்பட்ட நாட்கள் வானத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. "செபைர் 6' என்ற இந்த விமானமானது இரவு நேரத்தின் சூரிய ஒளியால் சக்தியூட்டப்பட்ட பற்றறிகளைப் பயன்படுத்தி இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அரிஸோனா மாநிலத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் யுமா புரோவிங் தளத்தில் மேற்படி விமானத்தினை பறக்க வைக்கும் செயற்கிரமம் இடம்பெற்றது. படையினருக்கு உதவும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கும் இலக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மேற்படி விமானத்தின் செயற்பாட்…

  22. வீரகேசரி நாளேடு - செவ்வாய்க் கிரகமானது எதிர்வரும் 27ஆம் திகதி பூமிக்கு மிக நெருங்கி வரவுள்ளதாகவும் அது பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டாவது சந்திரன் போன்று தோற்றமளிக்கும் எனவும் அராபிய பத்திரிகைகள் அண்மையில் அறிக்கையிட்டிருந்தன. இந் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை நிபுணர்கள் மேற்படி எதிர்வு கூறல் அறிக்கைகளை நிராகரித்துள்ளனர். எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க் கிரகமானது வானத்தில் பெரிய முழுநிலவு போன்று தோற்றமளிக்கும் எனவும் அதனால், வானத்தில் இரு சந்திரன்களைப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் எனவும் இணையத் தளங்கள் பலவற்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாயானது ஒவ்வொரு 780 நாட்களுக்கும் ஒரு தடவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்கையி…

  23. Started by nedukkalapoovan,

    பொதுவாக ஒரு மனிதன் கொட்டாவி (Yawn) விட்டால் அருகில் இருக்கும் மனிதர்கள் தாமாகவே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள். இந்த இயல்பு குரங்குகள் அடங்கும் பிறைமேற் விலங்குகளிலும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழும் நாய் கூட மனிதர்கள் கொட்டாவி விட தானும் விட்டுக் கொள்வதை பல முறை நடைமுறை வாழ்க்கையில் கண்டிருப்பினும் ஆய்வு ரீதியாக மனிதர்களை ஒட்டி நாய்களும் கொட்டாவி விடுகின்றன என்ற உண்மை தற்போதே வெளிப்பட்டுள்ளது. ஆய்வுசாலையில் ஒரு மனிதன் கொட்டாவி விடும் போது நாயும் அதனைப் பிரதிபண்ணிக் கொள்ளும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அசதி, களைப்பு, பசி போன்ற காரணங்களால் எழும் கொட்டாவியை ஏன் இன்னொருவர் பிரதிபண்ணுகிறார் என்பது இன்னும் விளங்க முடியாத அதிசயமாகவே இருக…

    • 4 replies
    • 1.5k views
  24. மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌பிரப‌ஞ்சமு‌ம் (இயற்கை) இழ‌ந்து வருவது ஏராள‌ம் எ‌ன்பதை நா‌ம் உணராமல் இரு‌ப்பது வேதனை‌க்கு‌ரியது. பு‌தியனவெ‌ல்லா‌ம் ந‌‌‌ன்மை பய‌க்குமேயானா‌ல் ஏ‌ற்புடையது தா‌ன், ஆனா‌ல் பழைய ப‌ண்பாடுகளை ஆராயாம‌ல் புறந்தள்ளிவிடுவது விவேக‌மாகாது. ப‌‌ண்டைய ப‌ண்பாடுக‌ளி‌ல் உணவு உ‌ள்பட அனை‌த்‌திலு‌ம் ஒரு காரண‌ம், ந‌‌ன்மை இ‌ல்லாம‌ல் இ‌ல்லை. உதார‌ணம் எ‌‌ள்ளிலிருந்து பெறப்படும் ந‌ல்ல எ‌‌‌ண்ணெ‌ய் இ‌ன்று வழ‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து ‌மறைந்துவிடும் ‌நிலை‌யி‌ல் உள்ளது. எ‌ண்ணெ‌ய் வகைக‌ளி‌ல் த‌னி‌ச்‌சிற‌ப்பு வா‌ய்‌ந்தது நல்லெண்ணெய். இது ம‌ற்ற எ‌ண்ணெ‌ய்க‌ள் போ‌ல் இர‌த்த‌த்‌தி‌ல் கொழு‌ப்பு சேர ‌விடுவ‌தி‌‌ல்…

  25. பொதுவாகவே குழந்தைகளை பெறும் விடயத்தில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறையும் என்பது மருத்துவ உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் கூட அவர்களால் தந்தையாக முடியும் அதாவது, ஆண்களின் வயதுக்கும் அவர்களின் தந்தையாகக் கூடிய தன்மைக்கும் நேரடி தொடர்பில்லை என்றே இதுவரை பரவலாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த கருத்து தவறு என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் பன்னிரெண்டாயிரம் தம்பதிகளிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களைப்போலவே ஆண்களுக்கும் 35 முதல் 40 வயதாகும் போது, அவர்களின் இனப்பெருக்க ஆற்றல் கணிசமாக குறைவதாக தெரியவந்திருக்கிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.