அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3275 topics in this forum
-
ஃபேஸ்புக்கில் புதுவரவு: 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை காண வசதி பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், 360டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பயனர்கள் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது, 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் படங்களை பதிவேற்றவும், பார்க்கவும் ஏற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பனோரமா 360 போன்ற ஆண்ட்ராய்ஸ் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360டிகிரி புகைப்படங்களை எடுத்து பதிவேற்றலாம். பதிவேற்றியவுடன் அந்தப் படம் பயனர்களது கணிணி திரைக்கு ஏற்றவாறு, அல்லது ஸ்மார்…
-
- 1 reply
- 332 views
-
-
உலகை முதன் முறையாக சுட்டெரித்த சூரியன்! உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண…
-
- 0 replies
- 445 views
-
-
சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ) புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 1,50,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. தற்போது 2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை கெப்லர் கண்டுபிடித்துள்ளது. அதற்கு கெப்லர் 1647பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் தற்போதுள்ள வியாழன் போன்று உள்ளது. இதன் அருகே 2 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் ஒரு சூரியன் பூமியில் இருப்பதைவிட பெரி…
-
- 0 replies
- 516 views
-
-
முட்டை ஓடு இல்லாமலும் கோழிக் குஞ்சு பொரியும்! ஜப்பான் மாணவிகளின் கண்டு பிடிப்பு. முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமங்களில் கோழி வளப்பவர்கள், முட்டை போட்ட உடன் பாதுகாத்து வைத்து அடை காக்க வைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். இன்றைக்குகோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது, இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களில்கூட வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. கோழிகள் தானாக ஒரு பாத…
-
- 2 replies
- 561 views
-
-
கரியமில வாயுவைப் பிடித்து அதை கல்லாக மாற்றுவதன் மூலம், பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என்று நம்புவதாக ஐஸ்லாந்தில் ஒரு அறிவியல் சோதனையை நடத்திவரும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 'கார்ப்ஃபிக்ஸ்' என்ற இந்த சோதனைத் திட்டத்தை நடத்திவரும் விஞ்ஞானிகள் கரியமில வாயுவை தண்ணீரில் கரைத்து , அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள். அப்போது அந்த வாயு, அந்த ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் ரசாயன மாற்றம் பெற்று திடமான சாக்பீஸ் போன்ற ஒரு பொருளாக மாறியது. இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பது என்பதாலும், இது போன்று ரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும், இது புவி வெப்…
-
- 0 replies
- 293 views
-
-
காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' அறிவியல் இதழில் வெளியான தகவல்:தென் கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை (கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப் யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூ லீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி, செல்லிடப் பேசி ஆகியவற்றின் திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், திரைகளை உருவாக்கத் தேவையான "ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு' தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரிய விஞ்ஞானிகள் வெ…
-
- 0 replies
- 296 views
-
-
பாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் “வட்ஸ் எப்” முதலிடம் பிடித்துள்ளது. சுமார்ட் ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (எப்ஸ்)செயலிகள் தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்” இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் எப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. “வட்ஸ் எப்” பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “வட்ஸ் எப்” இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சத…
-
- 0 replies
- 533 views
-
-
30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி? நன்றி, அர்ஜூன் (9790395796, 9500378441, 9500378449) . இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய ஒருவர் தான் விவசாயி அர்ஜூன் அவர்கள். அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449) ஆம். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி செய்த இரண்டாம் GD நாய்டு. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் நீங்களும் வளர வைக்கலாம். அது எப்படி? என்பதை பார்போம். . “இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு! அரசாங்கம் / பொறுப…
-
- 3 replies
- 3.4k views
-
-
செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும், பாறைப்படிவங்களும் உள்ளன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழத்தகுதியுள்ள கிரகமாக இருந்தது. அங்கு திரவநிலையில் தண்ணீர் இருந்துள்ளது.அங்கு இரும்பு மற்றும் கால்சியமும் அத்துடன் கார்பனேட்ஸ் எனப்படும் கார்பன் படிமங்களும் புதைந்து கிடக்கின்றன. அதுவே தண்ணீர் இருந்ததற்காக அடையாளமாக கருதப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது அங்கு கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவனபகுதிகளும் ஏற்பட்டுள்ளன என அமெரிக்க நிபுணர் ஜானிஷ் பிஷப் ஆய்வில் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158330&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 332 views
-
-
கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பை அறியும் வின்செங்கா என்ற மொபைல் ஆப்பை உகாண்டாவை சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ளார். தென் ஆப்பிகாவிலுள்ள உகாண்டா உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாகும். இங்கு உள்ள பொருளாதார நெருக்கடியும், போதிய அளவில் மருத்துவக் கருவிகள் இல்லாமையும், பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் இறந்து போவதற்கு காரணமாய் அமைகின்றன. பிரசவ காலத்தில் குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ளும் 'அல்ட்ராசவுண்ட்' எனப்படும் இயந்திரத்தினை வாங்கும் அளவிற்கு, உகாண்டாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நிதி இல்லை. இதனால், பல ஆண்டு காலமாக, கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ள, 'பி…
-
- 0 replies
- 845 views
-
-
தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் …
-
- 5 replies
- 807 views
-
-
இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது கெப்பளர் தொலைநோக்கி இதுவரை கண்டுபிடித்துள்ள 1284 கிரகங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தந்துள்ளார். “இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பலவும் பூமியைப் போன்றே உயிர்வாழக் கூடியதாக இருக்கின்றது” என்ற தகவல், இது தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது. இது பற்றி ஆய்வாளர் சுரேஸ் தர்மா விளக்கமளித்துள்ளார். மேலும் இயற்கை மனிதர்களுக்கு அல்லது பூமிக்கு ஏற்படுத்தும் அழிவுகள் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்த…
-
- 0 replies
- 315 views
-
-
பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல் புவியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் மீது விண்கல் மோதுவதால் பெரும் அதிர்வுகள் ஏற்படுகின்றன அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் மோதியுள்ளது என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். ஆய்வின் பல ஆச்சரியகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன …
-
- 0 replies
- 326 views
-
-
பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் உருவாக்கிய இயந்திரத்தில் தீக்காயம் உள்ளிட்ட காயங்களுக்கான முதலுதவி மருந்து, பிளாஸ்திரி, பேண்டேஜ் துணி, இறப்பர் கையுறை ஆகியவற்றை பணம் செலுத்திப் பெறலாம். பேஸ்போல் விளையாட்டின்போது தனது நண்பர்கள் காயமடைவதைப் பார்த்ததும் இது போன்ற இயந்திரத்தை உருவாக்கி, விளையாட்டு மைதானங்களில் வைப்பது குறித்த யோசனை அச்சிறுவனுக்கு எழுந்தது. காசு போட்டால் முதலுதவி சாதனங்கள் அளிக்கும் இயந்திரத்துக்கான வடிவத்தை தனது வகுப்பில் செயல்முறைப் பாடத்தின் கீழ் அளித்தான். பின்னர…
-
- 0 replies
- 361 views
-
-
வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா? வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத் தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும். இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும் பின்னும், குறியீடுகளைக் கொண்டு, எழுத்துக்களின் தன்மையை மாற்றியமைக்கலாம். அந்தக் குறிய…
-
- 0 replies
- 461 views
-
-
பூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல் பூமிக்கு போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இவ்வாறான கோள்கள் இனங்காணப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தை விட்டு தொலைவில் பயணிக்கும் 1 284 புதிய கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். அதேவேளை, பூமியை ஒத்த அளவுடையதும் மிக அருகில் உள்ளதுமான கோள்கள், பூமியை விட்டு 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுவது தெரியவந்துள்ளது. அத்துடன், 9.5 டிரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கோள்களின் பயணித்தை அவதானிக்க, போதியளவு வசதியுடைய விண்கலங்கள் இதுவரை க…
-
- 0 replies
- 554 views
-
-
உலகிலுள்ள 4 லட்சம் தாவர இனங்களில் 10% அழிவின் விளிம்பில் ------------------------------------------------------------------------------------------------------------ உலக தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இன்றைய நிலைமைகள் குறித்த முதலாவது விரிவான கணக்கெடுப்பின் முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள தாவரங்களில் ஐந்தில் ஒருபகுதி தாவரங்கள் பலவகையான ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் இவற்றில் சில தாவர இனங்கள் இல்லாமலே அழிந்துபோகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் உள்ள ராயல் பொடானிக் கார்டன்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உலகத் தாவரங்கள் குறித்த நம் புரிதலின் போதாமையை எடுத்துக்காட்டுவதாக தா…
-
- 0 replies
- 275 views
-
-
இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்! [Friday 2016-05-06 11:00] உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்ப…
-
- 0 replies
- 593 views
-
-
புதன் கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். 2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் காணலாம். இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி, 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி ஆகதி தினத்தன்றே புதன்கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 412 views
-
-
பூமியின் அளவையொத்த 3 புதிய கோள்கள்.! தனியொரு நட்சத்திரத்தை வலம் வரும் பூமியின் அளவையொத்த 3 புதிய கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கோள்கள் தமது தாய் நட்சத்திரமான 2மாஸ் ஜே23062928 – -0502285 என்ற நட்சத்திரத்தை வலம் வருகின்றன. அவை அந்த நட்சத்திரத்திலிருந்து உயிர் வாழ்க்கைக்கு சாத்தியமான ஒளியை பெற்று வருவதாக நம்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அந்தக் கோள்களில் ஒன்று பூமியிலுள்ளதையொத்த தட்ப வெப்ப நிலையைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. திரெப்பிஸ்ட் – -1 என்ற பிறிதொரு பெயராலும் அழைக்கப்படும் இந்த நட்சத்திரம் எமது சூரிய…
-
- 0 replies
- 412 views
-
-
வைஃபை வேகமாக இருக்க என்ன செய்யணும் பாஸ்? வரும் தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது, யார் ஜெயிப்பார்கள் போன்ற கவலைகள் எல்லாம் சீசனல். வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. அந்தக் கவலையை போக்குவது சக யூத்துகளான எங்கள் கடமை என்பதால் இந்த டிப்ஸ். இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும். * அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள். * ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வ…
-
- 1 reply
- 529 views
- 1 follower
-
-
நியூட்ரினோ இளையா 1930 ஆம் ஆண்டு வுல்ஃப்கேங் பெளலி பீட்டா சிதைவு (Beta decay) என்ற அணுக்கரு நிகழ்வில் உள்வரும் ஆற்றலையும் வெளிச்செல்லும் ஆற்றலையும் கூட்டி கழித்து பார்த்தார். கணக்கு தவறியது. ஆற்றல் அழிவின்மை விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஏதோ ஒரு புது துகளின் வழியே அந்த மிச்ச ஆற்றல் வெளியேறுகிறது என்று ஊகித்தார். பின்பு என்ரிக்கோ ஃபெர்மி இந்த புதிய துகளை அடிப்படையாகக் கொண்டு பீட்டா சிதைவு கோட்பாட்டை உருவாக்கினார். அந்த துகளுக்கு நியூட்ரினோ என்று பெயர் போடப்பட்டது. ஆனால் அதன்பிறகுதான் சிக்கல்கள் ஆரம்பித்தன. ஏனெனில் நியூட்ரினோ ஒரு நிறையிலி துகள். மேலும் மின்னூட்டம் அற்றது. பொருண்மையுடன் கிட்டத்தட்ட அது செயலாற்றுவதேயில்லை. 1000…
-
- 0 replies
- 713 views
-
-
Natural gas is an important source of energy worldwide, used for home heating, cooking, power generation, as well as commercial and industrial uses. Found in the earth’s crust, the biggest challenge is that many gas reserves are located far from the areas that need it. That’s where liquefied natural gas (LNG) comes into play. What is LNG? LNG is natural gas cooled to around minus 161 degrees Celsius, the temperature at which its main component, methane (>85%), liquefies. LNG is one of our cleanest energy sources, producing less carbon emissions than other fossil fuels, such as coal. It is also odorless, colourless, non-toxic and non-corrosive. By liquefy…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஆப்பிள் நிறுவன வருமானத்தில் வீழ்ச்சி தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அடுத்து என்ன எனும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிப்பு காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவே ஐஃபோனுக்கு முக்கியமான சந்தையாக இருக்கும் நிலையில், அங்கு விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவும் பகுதி அளவில் காரணமாகவுள்ளது. ஐஃபோன் தனது பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது போலத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிளின் வருவாயை தூக்கி நிறுத்…
-
- 0 replies
- 430 views
-
-
நிலத்தாய்க்கும் போர்வை தேவை! தென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது: 12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறேன். 750 தென்னை மரம் உள்ளது. ஆண்டுக்கு 7 முறை காய்பறிப்பு மேற்கொள்கிறேன். ரூ.8 லட்சம் வரை வருமானம் வருகிறது. காரணம் இயற்கை விவசாயம் தான். களைக்கொல்லியால் மணலாகி போன நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. மணலை மீண்டும் மண்ணாக மாற்ற வேண்டும். அதில் ஒரு வகை தான் மூடாக்கு. பயிர் கழிவுகளை நிலத்துக்கு திருப்பியளிப்பது. என் நிலத்தில் உள்ள தென்னை மட்டை, ஓலை ஆகியவற்றை வெளியே விற்பதில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் 50 …
-
- 2 replies
- 2.3k views
-