Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்! [Friday 2016-05-06 11:00] உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்ப…

    • 0 replies
    • 585 views
  2. புதன் கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். 2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் காணலாம். இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி, 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி ஆகதி தினத்தன்றே புதன்கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/ar…

    • 0 replies
    • 406 views
  3. பூமியின் அள­வை­யொத்த 3 புதிய கோள்கள்.! தனி­யொரு நட்­சத்­தி­ரத்தை வலம் வரும் பூமியின் அள­வை­யொத்த 3 புதிய கோள்­களை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். அந்தக் கோள்கள் தமது தாய் நட்­சத்­தி­ர­மான 2மாஸ் ஜே23062928 – -0502285 என்ற நட்­சத்­தி­ரத்தை வலம் வரு­கின்­றன. அவை அந்த நட்­சத்­தி­ரத்­தி­லி­ருந்து உயிர் வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான ஒளியை பெற்று வரு­வ­தாக நம்­பு­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். அத்துடன் அந்தக் கோள்­களில் ஒன்று பூமி­யி­லுள்­ள­தை­யொத்த தட்ப வெப்ப நிலையைக் கொண்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. திரெப்பிஸ்ட் – -1 என்ற பிறி­தொரு பெய­ராலும் அழைக்­கப்­படும் இந்த நட்­சத்­திரம் எமது சூரி­ய…

  4. வைஃபை வேகமாக இருக்க என்ன செய்யணும் பாஸ்? வரும் தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது, யார் ஜெயிப்பார்கள் போன்ற கவலைகள் எல்லாம் சீசனல். வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. அந்தக் கவலையை போக்குவது சக யூத்துகளான எங்கள் கடமை என்பதால் இந்த டிப்ஸ். இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும். * அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள். * ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வ…

  5. நியூட்ரினோ இளையா 1930 ஆம் ஆண்டு வுல்ஃப்கேங் பெளலி பீட்டா சிதைவு (Beta decay) என்ற அணுக்கரு நிகழ்வில் உள்வரும் ஆற்றலையும் வெளிச்செல்லும் ஆற்றலையும் கூட்டி கழித்து பார்த்தார். கணக்கு தவறியது. ஆற்றல் அழிவின்மை விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஏதோ ஒரு புது துகளின் வழியே அந்த மிச்ச ஆற்றல் வெளியேறுகிறது என்று ஊகித்தார். பின்பு என்ரிக்கோ ஃபெர்மி இந்த புதிய துகளை அடிப்படையாகக் கொண்டு பீட்டா சிதைவு கோட்பாட்டை உருவாக்கினார். அந்த துகளுக்கு நியூட்ரினோ என்று பெயர் போடப்பட்டது. ஆனால் அதன்பிறகுதான் சிக்கல்கள் ஆரம்பித்தன. ஏனெனில் நியூட்ரினோ ஒரு நிறையிலி துகள். மேலும் மின்னூட்டம் அற்றது. பொருண்மையுடன் கிட்டத்தட்ட அது செயலாற்றுவதேயில்லை. 1000…

  6. Natural gas is an important source of energy worldwide, used for home heating, cooking, power generation, as well as commercial and industrial uses. Found in the earth’s crust, the biggest challenge is that many gas reserves are located far from the areas that need it. That’s where liquefied natural gas (LNG) comes into play. What is LNG? LNG is natural gas cooled to around minus 161 degrees Celsius, the temperature at which its main component, methane (>85%), liquefies. LNG is one of our cleanest energy sources, producing less carbon emissions than other fossil fuels, such as coal. It is also odorless, colourless, non-toxic and non-corrosive. By liquefy…

  7. ஆப்பிள் நிறுவன வருமானத்தில் வீழ்ச்சி தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அடுத்து என்ன எனும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிப்பு காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவே ஐஃபோனுக்கு முக்கியமான சந்தையாக இருக்கும் நிலையில், அங்கு விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவும் பகுதி அளவில் காரணமாகவுள்ளது. ஐஃபோன் தனது பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது போலத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிளின் வருவாயை தூக்கி நிறுத்…

  8. நிலத்தாய்க்கும் போர்வை தேவை! தென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது: 12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறேன். 750 தென்னை மரம் உள்ளது. ஆண்டுக்கு 7 முறை காய்பறிப்பு மேற்கொள்கிறேன். ரூ.8 லட்சம் வரை வருமானம் வருகிறது. காரணம் இயற்கை விவசாயம் தான். களைக்கொல்லியால் மணலாகி போன நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. மணலை மீண்டும் மண்ணாக மாற்ற வேண்டும். அதில் ஒரு வகை தான் மூடாக்கு. பயிர் கழிவுகளை நிலத்துக்கு திருப்பியளிப்பது. என் நிலத்தில் உள்ள தென்னை மட்டை, ஓலை ஆகியவற்றை வெளியே விற்பதில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் 50 …

    • 2 replies
    • 2.3k views
  9. சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு அம்சம். இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் பிரதான நோக்கம் ஆகும். உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து பூமி வருகிறது. சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன. இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத உயிர்கள்…

  10. சமூகத்தின் பட்டகம் முதன்மை பட்டி அறிவியல் கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?: ஸ்டீபன் ஹாக்கிங் ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மக…

    • 0 replies
    • 674 views
  11. வியாழனின் துணைக்கோளுக்கு விண்கலத்தை அனுப்ப ஆய்வுகள் வியாழன் கிரகத்தின் துணைக் கோளை ஆராய்வதற்கு சிறந்த வழியைபரிசீலிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் இந்த வாரம் கூடுகின்றனர். பல நாடுகள் வியாழன் கிரகம் மற்றும அதன் துணைக்கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே 2020ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்கா இது தொடர்பில் எடுத்துள்ள முயற்சிகளுக்கு, இவர்களது எண்ணங்களும் கருத்துக்களும் கூடுதல் உதவியாக அமையக்கூடும். தொலைதூர உணர்வுக் கருவிகளை பயன்படுத்துவது தொடக்கம், உறைபனி படர்ந்துள்ள அதன் மேற்பரப்பை ஊடுருவி உள்ளே சென்று ஆராய்வது வரை, பல ஆலோசனைகளை இவர்கள் விவாதிப்பார்கள். இதில் எந்தக் கருத்து அல்லது ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ,அதற்கு முதலில் ஐர…

  12. உடலுக்கு அவசியமான கொழுப்பமிலங்களில் ஒன்றான ஒமேகா 3 யை அதிகம் உருவாக்கும் மாடுகளைச் சீனா மரபணு மாற்றம் மூலம் உருவாக்கியுள்ளது. இந்த ஒமேகா 3 பொதுவாக மீன்களில் அதிகம் காணப்பட்டாலும்.. மீன் உணவுக்கு உலகளாவிய அளவில் உள்ள தட்டுப்பாடு காரணமாக.. இந்தச் சீனக் கண்டுபிடிப்பு முக்கியமாகிறது. இதே ஒமேகா ஐ மரபணு மாற்றம் மூலம் பங்கசுக்களில் பெருமளவில் உருவாக பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயன்று வரும் நிலையில்... சீனா இதனை மாடுகளில் உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றம் குறித்த ஆய்வில் எங்களது பேராசிரியர் ஒருவரும்.. ஈடுபாட்டைக் காட்டியுள்ளமை.. இங்கு குறிப்பிடத்தக்கது. பங்கசுகளில் ஒமேகா 3 ஐ அதிகளவில் உருவாக்குவது தொடர்பான ஆய்வில் நாங்களும் அவருடன் இணைந்து பணியாற்றி இர…

  13. மற்றோர் சூரிய குடும்பத்துக்கு நுண்கலனை அனுப்பத் திட்டம் ஒரு நுண்ணிய விண்கலனை, ஒரு தலைமுறை காலத்துக்குள் மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு அனுப்பும் அதிரடியான திட்டம் ஒன்று தொடங்கப்படுகிறது. கணினிகளில் வைக்கப்படும் சில்லுகள் ( சிப்ஸ்) போன்ற அளவுள்ள இந்த நுண்ணிய கலன்கள் சாதாரணமாக இது போல மற்றொரு சூரியக் குடும்பத்தை அடைய வேண்டுமானால், பல ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் பயணிக்கவேண்டியிருக்கும். தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பயணித்தால் , இது போல மற்றொரு சூரியக் குடும்பத்துக்குப் போய்ச்சேர 30,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த சின்னஞ்சிறு கலன்கள் கொள்கையளவில், நமக்கு அ…

  14. இனி உங்கள் மெசேஜ்களை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது! வாரத்திற்கு ஒரு அப்டேட் தட்டிக் கொண்டே இருக்கிறது வாட்ஸ் ஆப். அதே போன்ற ஒரு அப்டேட் தான் சமீபத்தில் வந்துள்ளது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான மற்றும் பாதுகாப்பான அப்டேட். நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது. நாம் அனுப்பும் மெசேஜ், "பப்ளிக் கீ" மூலமாக என்க்ரிப்ட் (குறியீடுகள் மூலம் மறைக்கப்பட்டு) செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடைகிறது. வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவ…

  15. பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி ஜெயக்குமார் | இதழ் 148 | 06-04-2016| அச்சிடு ‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத்தளங்களில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், ஆயிரம் டாலர் சம்பாதித்தேன்’ என படங்களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம். ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வெப்சைட்டுகளில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும், பணத்தை கம்ப்யூட்டரில் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். இவர்களெல்லாம் வெவ்வேறு நாடுகளின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் அடுத்தகட்ட கொள்ளைதான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை. இந்த பணப்பரி…

  16. கூகிளின் தானாக ஓடும் துவிச்சக்கர வண்டி

    • 0 replies
    • 514 views
  17. ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போதைய சமூகத்தில் அதிக கேள்வி நிலவி வருகின்றது. இந்நிலையில் , அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி போன்ற உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எவ்வாறாயினும் , இதன் காரணமாக எதிர்காலத்தில் குற்றங்கள் அதிகரிக்கலாம் என வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் போலியான கெமரா மற்றும் லேசர் கதிர் மூலம் இலக்கை இனங்காணும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=154665&category=CommonNews&language=tamil

  18. குமரிக் கண்டம் என்பது சுமேரியாவில் இருந்தே வந்தது.

  19. 300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. இந்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப்படும் என்று 1994-ம் ஆண்டு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி அறிவித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ். இவர் தற்போது இந்தப் புதிருக்கு விடையைக் கண்டுபிடித்துள்ளார். இதனால், அறிவித்…

  20. ஜப்பானில் ஒரு வேளாண்மை புரட்சி புவியியல் பார்வையில், பசிபிக் கடலின் மிக ஆபத்தான பகுதியில் ஒரு சிறு நிலக்கீற்று தான் ஜப்பான். அங்கு எந்நேரமும் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நிகழும் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், பல்வேறு சோகங்களையும் ஜப்பான் சந்தித்துவிட்டது. ஆனால், மின்னணு பொருட்கள், சிறிய ரக கார்கள் என, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு தொழில்நுட்பத்தில் ஜப்பான் முன்னோடியாக இருந்து உள்ளது. அதே போல், தற்போது தாவர தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் உலகத்திற்கே வழிகாட்டி வருகிறது ஜப்பான். ஜப்பானில் கடும் இட நெருக்கடி, பாரம்பரிய சிறு வயல்களை ஒருங்கிணைப்பதில் பிரச்னைகள், மாறி விட்ட உணவு பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால், தனக்கு தேவையான உணவில்…

    • 0 replies
    • 1.1k views
  21. Scannerக்கு பதிலாக smart phoneஇல் புதிய Processor ஆவணங்களை Scan செய்து அனுப்புவதற்கு இனி Scan இயந்திரங்கள் தேவையில்லை. அதனையும் தற்போது உங்கள் smart phoneஇன் உதவியுடனேயே செய்துக் கொள்ளலாம். அதற்காக CamScanner என்ற ஒரு புதிய Processor அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் பௌதீக ஆவணங்களை மிகவும் தெளிவாகவும், இலகுவாகவும் Digital ஆவணங்களாக மாற்றிக் கொள்ளலாம். இந்த Processor இல் வேண்டுமாயின், மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி இலக்கங்களை வழங்கி உங்களுக்கென்று பிரத்தியேக கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் இணைய சேமிப்பகத்தில் உங்கள் ஆவணங்களை சேமித்து வைப்பதற்கு 200MB இடம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி CamScanner மூலம் Digital…

  22. மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் அவை பறவைகள் மூலமும் பரவுகிறது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபததில் இது குறித்து ஆய்வு நடத்தினர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான பறவைகள், வவ்வால்கள் மற்றும் பாலூட்டி இன விலங்குகளிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர்.ஆவற்றில் மலேரியா நோயை பரப்பும் கிருமிகள் இருந்தன. அதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி நடத்திய போது மலேரியா கிருமிகள் முதலில் பறவைகளிடம் இருந்து தான் பரவுகிறது என தெரிய வந்தது. அதன் பிறகுதான் அவை வவ்வால்கள் மற்றும் பாலூட்டிகளுக்கு பரவுகின்றன.அதே நேரத்தில் மனித…

  23. எப்படி? இப்படி?- 1 குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்... தொடர்’வதற்கு முன்.. அன்புள்ள உங்களுக்கு… வணக்கம். பள்ளி நாட்களில் இருந்தே துப்பறியும் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். முத்து காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம். ‘இரும்புக் கை மாயாவி’-க்கு ரசிகர் மன்றம் வைக்காததுதான் பாக்கி. துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சாம்பு என்னை வெகுவாக கவர்ந்தார். பிறகு, சுஜாதாவின் கணேஷ்-வஸந்த். கல்லூரி காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் பைத்தியமானேன். ஜெய்சங்கர் நடித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களை விடாமல் பார்ப்பேன். அவர்தானே அப்போது தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்! ஒரு படத்தில் சி.ஐ.டியான ஜெய்சங்கர் தன் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்…

    • 38 replies
    • 13.7k views
  24. பார்த்தீனியம் செடியைக் கட்டுப்படுத்தி உரமாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்து மேல்புறம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் என். தமிழ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பார்த்தீனியம் நச்சுக் களைச் செடி நன்கு உயரமாக வளர்ந்து ஆழமாக பரவும் வேர்களைக் கொண்டது. இதன் இலைகள் கேரட் இலைகளைப்போல இருக்கும். செடிகளின் நுனிப்பகுதியில் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் ஏராளமான விதைகள் இருக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் பரவி முளைவிடும். இவை மழைக்காலத்தில் நன்கு வளர்ந்துவிடும். பொதுவாக சாலையோரங்கள், புறம்போக்கு நிலங்கள், தண்டவாளப் பகுதி, ஆற்றங்கரையோரம், கழிவுநீர் வாருகால், விளைநிலங்களில் அதிகம் காணப்ப…

    • 0 replies
    • 572 views
  25. 136 ஆண்டுகளில் பிப்ரவரியில் பதிவான வெப்ப அளவு இவ்வளவா? நாசாவின் அதிர்ச்சி தகவல் கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்த பிப்ரவரி மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பிப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போது, பிப்ர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.