Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் ஆந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசத்தின் குறியீடாக பார்க்கப்படுவதாலோ என்னவோ ஆந்தை பகலில் வெளியில் வருவதில்லை. சூரியன் மறைந்தவுடன் கூட்டைவிட்டு வெளியே வரும். பொதுவாக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், கல் இடுக்குகள், பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் என பகலிலும் இருட்டு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே தங்கிக் கொள்ளும். அந்தி மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில் ஆந்தை ‘கெர்ர்.... என்ற ஓசையுடன் வெளியே வரும். இதை மக்கள் கெட்ட சகுனத்தின் முன்னறிவிப்பாக பார்க்கிறார்கள். ஆந்தை அலறினாலே, "யாரோ இறக்க போறாங்க..!" என்று கிராமங்களில் பேசிக்கொள்வது வழக்கம். வேதத்திலும் மாய உலகங்களின் கதைகளிலும் ஆந்…

  2. செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம்: நாஸா கவலை செவ்வாய் கிரகத்தை “உரசி“ செல்லும் அளவுக்கு ஒரு வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைக் கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து அமெரிக்கா நாஸா கவலை கொண்டு செவ்வாயை சுற்றுகிற தனது செயற்கைக்கோள்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அந்த வால் நட்சத்திரத்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவதில்லை. சொல்லப் போனால் அந்த வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது செவ்வாய்க்கும் அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இருந்தாலும் விண்வெளிக் கணக்குப்படி இது “மிக அருகில்” என்றே கருதப்படுகிறது. அமெரிக்காவின் இரு விண்கலங்கள் இப்போது செவ்வாய் கி…

  3. ஒரு பகுதியில் புதிதாக அறிமுகப்படுத்தும் உயிரினத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் என்னென்ன? எல்லா நாடுகளிலும் அயல்நாட்டினர் வந்து குடியேறுவது காலங்காலமாக நடந்துவருவதே. அதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. எந்தவொரு நாட்டிலும் சுத்த சுதேசிகள் மட்டுமே இருப்பது தற்காலத்தில் சாத்தியமில்லை. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, வேறு பல உயிரினங்களுக்கும் பொருந்தும். நாடுவிட்டு நாடு செல்லும் ஆய்வாளர்களும் பயணிகளும் குடியேறிகளும் மாலுமிகளும் அறிந்தும் அறியாமலும் தமது சொந்த ஊரிலிருந்து உயிரினங்களை எடுத்துவந்து புது இடங்களில் குடியேற்றிவிடுகிறார்கள். கோதுமை, தேயிலை போன்ற நன்மைதரும் பயிர்களும், வேலிகாத்தான், ஆகாயத் தாமரை, பார்த்தீனியம் போன்ற கேடு செய்யும் பயிர்களும் இவ்வாறே உலகெ…

  4. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு பரவிய பார்த்தீனியம் களை, முதன்முதலாக 1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த பார்த்தீனியம், திரும்பும் இடமெல்லாம் பெருகியுள்ளது. 11.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த களைச்செடியின் இலைகள் பார்ப்பதற்கு காரட் இலைகளைப் போன்று காணப்படுவதுடன் இவை கிளைவிட்டு பூக்கும் இனத்தைச் சார்ந்தவையாகும். மேலும், நமது சாகுபடி பயிருடன் ஒப்பிடுகையில் இவை ஒவ்வொன்றும் 15,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. மேலும், இவ்விதைகளின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இவை எளிதில் காற்றின் மூலமாகவும், மனித மற்றும் விலங்குகள் செயல்பாட்டின் மூலமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு…

  5. iSTREAM ஆட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை. உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே…

  6. தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும். கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது? ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர். இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுட​னேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்ற​வையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை. ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்? யாஹூ, கூகோல், மில்லியன், கோடி இந்தக் …

    • 1 reply
    • 572 views
  7. எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்! ர.ராஜா ராம மூர்த்தி மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும், காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமிக்க கார் நிறுவனங்களே மின்சார கார் தயாரிப்பிலும், ஆராய்ச்சியிலும் சொதப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு மின்சார காராக மட்டுமில்லாமல், உலக ஆட்டோமொபைல் துறைக்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது, டெஸ்லா மாடல் S காரின் வெற்றி. 2009-ல் அமெரிக்க அரசின் எரிசக்தித் துறையிடம் இருந்து வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனில்தான் துவங்குகிறது, டெஸ்லா மாடல் S காரின் வரலாறு. புகழ்பெற்ற டி…

  8. மரபணு மாற்று பயிர்களை பரிசோதனை அடிப்படையில் சாகுபடிக்கு அனுமதிக்கலாம்' என, மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.இது குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு விதமான கருத்துக்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: மா.கம்யூ., - எம்.பி., டி.கே.ரங்கராஜன்:விஞ்ஞானத்துக்கு நாங்கள் ஒரு போதும் எதிரியில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள் மற்றும் பயிர்கள், மேலை நாடுகளில் வெற்றியடைந்த ஒரு, 'பார்முலா' என சொல்லப்படுகிறது.அதை நம்பலாமா, நம்பக் கூடாதா என்ற ஆராய்ச்சிகளுக்குள் நாம் செல்லத் தேவையில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள், பயிர்கள…

    • 0 replies
    • 475 views
  9. கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம் நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க இது ஏற்ற சமயமாகும். இவற்றில் வெள்ளி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களை சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் காணலாம். செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம். வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது. அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொல…

  10. வானியல் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவும் தேடத் தேட ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டிருப்பதுமானவை பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ள கரும் துளைகள் (Black holes) ஆகும். பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் நம்மால் கணக்கிட முடியாத மிக வலிமையான ஈர்ப்பு விசையுடன் தொழிற்படும் event horizon எனும் நிகழ்வை ஏற்படுத்தும் கரும் துளைகளின் அபார ஈர்ப்பு விசையில் இருந்து மிக நுட்பமான ஒளி கூட தப்ப முடியாது என அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். இப்படிப் பட்ட ஓர் இடத்தில் இருந்து கூட சில சில நுட்பமான கதிர்கள் வெளியாவதாகவும் இக்கதிர்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் குறித்த பகுதி ஒன்றில் கரும் துளைகள் உள்ளனவா அல்லது இல்லையா என எதிர்வு கூற முடியும் என்ற தனது மிகத் தனித்துவமான தத்துவத்தை இந்த நூற்றாண்டில் ஒர…

  11. எய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. ஒரு நோயாளியின் உடலில் பதுங்கியிருக்கும் ஹெச் ஐ வி கிருமியை வலுக்கட்டாயமாக வெளியே வரவைப்பதற்கு வழிகண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தொடர்புடைய விடயங்கள் உடல்நலம் ஹெச் ஐ வி கிருமி ஒரு நபரின் மரபணுத் தொகுதியுடைய அங்கமாகவே ஆகிவிடுகிறது.பல ஆண்டுகள் அவரது உடலில் ஒன்றும் செய்யாமல் பதுங்கி இருந்துவிட்டு பிற்பாடு அது தலைதூக்குகின்ற ஒரு தன்மை இருக்கிறது. ஹெச் ஐ வி கிருமியை முழுமையாக அழிக்க முடியாததற்கு அதனுடைய இந்த தன்மையும் ஒரு காரணம். ஹெச் ஐ வி கிருமி மரபணுக்களில் ஒளிந்துகொண்டிருந்தவர்கள் ஆறு பேருக்கு, வீரியம் குறைவான கீமோதெரெபி கொடுத்தபோது அவர்களது …

  12. பாமக நிறுவனர் ராமதாஸ்| கோப்புப் படம். மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கும், சோயாபீன்ஸ் எண்ணெய் இறக்குமதிக்கும் அனுமதி தரும் மதிப்பீட்டுக் குழுவின் முடிவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி, கத்தரி ஆகியவற்றை வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயை இறக்குமதி செய்யவும் இக் குழு அனுமதித்திருக்கிறது. இம்முடிவு பேரதிர்ச்சியையும், வேளாண்மையின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்துகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வுக்கு அனுமதிப்ப…

  13. கடந்த,1920முதல் இன்று வரை, வரலாற்று ஆய்வாளர்களுக்கு சவாலாக இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் வேர்கொண்ட, ஹரப்பா, மொகஞ்சதாரோ தான். ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சியை தொடர்ந்து, சிந்து சமவெளி குறித்து, சென்னை, ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன, இயக்குனர், ஜி.சுந்தர் மற்றும், ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேசியதில் இருந்து... * ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பற்றி? ஜி.சுந்தர்: சென்னையில், 1994ல் துவக்கப்பட்டது, ரோஜா முத்தையா நூலகம். அதில், 2007ல் துவக்கப்பட்டதுதான், ரோஜா முத்தையா சிந்துவெளி பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் முதல் மதிப்புறு ஆலோசகராக, ஐராவதம் மகாதேவன் இருந்தார். அவரை தொடர்ந்த…

    • 0 replies
    • 591 views
  14. பலவீனமான ரத்த நாளங்களின், சீரான ரத்த ஓட்டத்திற்காக பயன்படும் உலோகத்திலான, 'ஸ்டென்ட்'டால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, உயிரி தொழில்நுட்பத்திலான கரையும் ஸ்டென்ட் பற்றி கூறும், மருத்துவர் ஜி.செங்கோட்டுவேல் :நான், இதய சிகிச்சை நிபுணராக, சென்னை யில் பணியாற்றுகி றேன். இதயத்தின் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக செய்யப்படும் சிகிச்சை, 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும். இச்சிகிச்சையின் போது நீளமாக, பலவீனமாக இருக்கும் ரத்த நாளங்களின், சீரான ரத்த ஓட்டத்திற்காக, நிரந்தரமாக பொருத்தப்படுவது, 'ஸ்டெண்ட்!'இந்த ஸ்டென்ட், மெல்லிய வலைப்பின்னலோடு, உலோ கத்தால் செய்யப்பட்டது. உலோகத்தால் செய்யப்பட்ட ஸ்டென்ட்டை பொருத்தும்போது, அது நிரந்தரமாக உடலிலேயே தங்கி விடும். இதனால், இயல்பிலேயே சுர…

    • 1 reply
    • 493 views
  15. மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் அறிந்த தேனி தொழில் அதிபர்: 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பு. நம் முன்னோர்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தினமும் குளத்தில் குளிக்கும் போதும் குளித்து முடித்த பின்னும், ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரைக்கு வெளியே போட்டு விடுவார்கள். இப்படி செய்வது, குளத்தினை தினமும் தூர்வாருவதற்கு சமம். குளிக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வெளியேற்றும் போது, குளம் எப்போதும் ஆழமாகவே இருக்கும். நீர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்தளவிற்கு அப்போது பொறுப்பான சமூகம் இருந்தது. அதேபோல் ஆற்றிலோ, குளத்திலோ சிறுநீர் கழிப்பதோ, மலம் கழிப்பதோ, மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வது போன்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். அது குடிநீர், குளிக…

  16. எல்லோரும் கவனிக்கத் தவறிவிட்ட நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தி சொல்வது என்ன? சிறு, குறு தொழில் பிரிவுகள் தொடங்குமாறு அரசு ஊக்குவிப்பதுதான் சமூக நீதிக்கு வழிவகுக்கும். 1970-களில் மலேசியா இந்த மாதிரியான பிரிவுகளை ஊக்குவித்ததால் வெறும் 2%-லிருந்து 1990-ல் 20% ஆக இவை உயர்ந்துவிட்டன. இதைத்தான் நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தியும் வலியுறுத்துகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றிய பெரும்பாலான விவாதங்கள் அந்நிய நேரடி முதலீடு, முதலீட்டு ஊக்குவிப்பு, வரிச் சலுகைகள் போன்றவற்றைச் சுற்றியே நடைபெறுகின்றன. நிதிநிலை அறிக்கையின் பத்தி 102 குறித்து யாருமே அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் சரிபாதியைப் பற்றியது! பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்…

    • 0 replies
    • 552 views
  17. இயற்கை விவசாயப் பொருட்கள் விற்கப்படும் ‘நவதானியா’ கடையில் கஜலட்சுமி. வேளாண் பொருட்களையே மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காக நாங்கள் மிகவும் அக்கறை கொள்கிறோம். ஆனால், மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லையே’ என ஆதங்கப்படுகிறார் மதுரை கோமதிபுரத்தில் இருக்கும் ‘நவதானியா ஆர்கானிக் அண்ட் எக்கோ ஃபிரண்ட்லி குட்ஸ் ஷாப்’ உரிமையாளரான கஜலட்சுமி. ‘இயற்கை இவரது கடையின் விசேஷமே அரிசி, பருப்பில் இருந்து வற்றல், வடகம் வரை அனைத்துமே இயற்கை விவசாயத்தில் விளைந் தவை, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களால் செய்யப் பட்டவை. இயற்கை விவசாயத்தின் பயனை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடையை ஆரம்பித்தார் கஜலட்சுமி. அதற்கு முன்பு, வீடுவீடாய் போய் இயற…

    • 0 replies
    • 498 views
  18. காயமடைந்த மூளையின் நினைவுகளை மீட்டெடுக்க புதிய முறையை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு 4 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.240 கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு நவீன ஆய்வுத்திட்ட முகாமை (டிஏஆர்பிஏ), நினைவுகள் மீட்டெடுப்பு திட்ட மேலாளர் ஜஸ்டின் சான்செஸ் கூறியதாவது... கடந்த 2000 வது ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களும், ஆண்டு தோறும் 17 லட்சம் அமெரிக்க மக்களும் மூளை காயமடைவதால் தங்களின் நினைவுகளை இழக்கின்றனர். அவர்களின் நினைவுகளை மீட்டெடுப்பது அவசியம். குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இதுபோன்ற சூழல்களில் அடிப்படை நிகழ்வுகள், இடங்கள் உள்ளிட்ட நினைவுகள் மங்கிவிடுகின்றன. தேசத்துக்காக உ…

  19. சும்மா ஒரு தகவலுக்காகத்தான்……….! நவீன சந்தையில் ஒரு பொருள் விற்பனைக்கு வரும் போது, அந்தப் பொருளை நாம் வாங்குவதற்காக, நம்மையறியாமலே நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூட்டுக் கடைகளுள்ள ஒரு பெரும் சந்தைக்கு (Shopping Mall), நீங்கள் குடும்பத்துடன் போகும் போது, அங்கு எதை வாங்குவது, எதை வாங்கக் கூடாது என்பதை நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். அநேகமாக நம் முடிவின்படிதான் அந்தப் பொருளை நாம் வாங்குகிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டுமிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் அந்த விற்பனை நிறுவணத்தின் கண்ணுக்குத் தெரியாத மறைமுக நிர்ப்பந்தத்தின் மூலம், அவர்கள் தெர்வு செய்யும் வகையிலேயே பொருட்களை வாங்குகிறோம். "இது என்ன பேத்தல்! எனக்குப் பிடித்தால் நான் வாங்குகிறேன், பிட…

  20. இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது. நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன. அந்த கிரகங்களில் நமக்கு…

  21. 'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை மூலம், கொசுக்களை அழிக்க உதவும் நொச்சி கன்றுகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு வழங்கி வரும், அதன் நிர்வாக அறங்காவலர், ரட்சகன்: கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்கள் நோய்வாய்ப்படாமல் சுகாதாரமாக வாழவும், 'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை உருவாக்கி, பல்வேறு முயற்சிகளை, பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலங்களில், கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நொச்சி செடியை வளர்ப்பதால், இயற்கையான முறையில் கொசு பெருக்கத்தை தடுக்க முடியும் என, சென்னை மாநகராட்சி, கடந்த ஆண்டு அறிவித்தது. அதனால், நொச்சி செடிகளை உருவாக்குவதற்கான மாநகராட்சி, 'டெண்டரில்' லாப நோக்கமின்றி நாங்களும் பங்கேற்று, நொச்சி செடிகளை வளர்த்து வருகிறோம்.இதற்காக, உளுந்த…

    • 0 replies
    • 1.6k views
  22. புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அழகு படுத்திப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இந்த விருப்பத்தால் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அறையும் எப்படி அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்பதைக் காண்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகச் சிலர் வீட்டு உள் அலங்கார நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெறுவதுடன், வீடு அழகுபடுத்தும் பணிகளை அவர்களிடம் ஒப்படைப்பதுண்டு. சிலர் தங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் வீடுகளில் செய்யப்பட்டிருக்கும் அழகுபடுத்தல் பணி களைப் போய்ப் பார்த்து அதில் சில மாற்றங்களைச் செய்து தங்கள் வீடுகளில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்வதுமுண்டு. இருப்பினும், சிலருக்குப் பிற வீடுகளைக்காட்டிலும் தங்கள…

    • 0 replies
    • 549 views
  23. இந்திய தொழிலக கூட்டமைப்ப்பின் (சிஐஐ) பட்ஜெட் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி எஸ்.மகாலிங்கம். டிசிஎஸ் நிறுவனத்தின் 15வது நபராக சேர்ந்து, 42 வருடங்களாக டிசிஎஸ்-ல் பணிபுரிந்த அவரிடம் பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம். டிசிஎஸ் வாழ்க்கை, ஓய்வு, தொழில்முனைவு உள்ளிட்ட பல விஷயங்களை மேலாக பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாடலின் தொகுப்பு இதோ... சார்டட் அக்கவுன்ட்டண்டான நீங்கள் டிசிஎஸ்-ல் எப்படி நுழைந்தீர்கள்? படித்து, பயிற்சி முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எதாவது கன்சல்டிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் வேலை பார்த்து, பிறகு எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். மூன…

    • 0 replies
    • 336 views
  24. கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல் இத்தாலியின் நியூட்ரினோ கண்டறியும் கருவி காலையில் எழுந்து செய்தி பார்க்கிறீர்கள். உங்கள் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. உங்களது எதிர்வினை எப்படி இருக்கும்? அட போங்க நீங்க வேற ஒரு குடும்ப அட்டை வாங்குவதற்கே ஆறு மாசம் அலையணும். இதில் பேருந்து நிலையம் எல்லாம் வேண்டும் என்றால் ஒரு தலைமுறைக்காவது போராடனும். அரசாவது நமக்கு தேவையான திட்டத்தை தானாக முன்வந்து தருவதாவது என்று உங்களில் பலர் நினைக்கலாம். அவ்வாறு நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீண்ட காலமாகவே நம் நாட்டில் நிலைமை அவ்வாறு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நடுவண் அரசு 900 கோடி ரூபாய் மதிப்பிலான நியூட்ரினோ ஆராய…

    • 0 replies
    • 528 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.