Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செவ்வாய் கிரகத்தில் நன்னீர் ஏரி இருந்தற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் கல்லில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கியுரீயாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஒரு மலையில் இருந்து துளையிட்டு எடுத்த கல்லில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நன்னீர் ஏரி இருந்தற்கான படிமங்கள் கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப விஞ்ஞானி ஜான் குரோசிங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98741&category=WorldNews&language=tamil

  2. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஒரு பார்வை – குமாரநந்தன் தமிழில் அறிவியல் நூல்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிறேன். அதிலும் பொருள் செறிவுடன் புதிய விசயங்களை ஆராயும் நூல்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். இதற்கிடையே தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் அறிவியல் விஞ்ஞான விசயங்களைப் பெற வேண்டுமென்றால் என்ன செய்வது? கொஞ்சம் சிரமம் தான் இந்த சிரமம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவருடைய ஆர்வத்தையே கொன்றுவிடும். என்கிற அச்சம் இருந்தாலும் இப்போது பல விஞ்ஞான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் எப்போதும் முதலில் இருப்பதாக நான் நினைப்பது காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்கிற புத்தகம். இதன் மூல நூலாகிய A brief History of Time 1987 ல் வ…

    • 3 replies
    • 6.9k views
  3. உலகின் தீரா மர்மங்கள் மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ எழுதவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது எனது கடமையாகும். சரி... முதலில் உலகின் சில டாப் லிஸ்ட் தீரா …

  4. மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற, ஐந்து கிரகங்களை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின், "நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம், பல்வேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் பலனாக, சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள, ஐந்து கிரகங்களில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து கிடைத்த பல்வேறு ஆய்வறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த கிரகங்களில், தண்ணீர் இருப்பது, உறுதியாகி உள்ளது. ஆனால், ஒவ்வொரு கிரகத்திலும் வெவ்வேறு அளவில் தண்ணீர் உள்ளது. நாசா மையத்தின் சார்பில், விண்வெளியில், "ஹப்பிள்' தொலைநோக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன், ஐந்து கிரகங்களில், தண்ணீர் இருப்பத…

  5. மனிதர்கள் இறந்தபிறகும் அவர்களது மூளை இயங்கிக் கொண்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆம் என்கிறார் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். கேம்பிரிட்ஜ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் "மூளை என்பது மனதில் உள்ள ஒரு புரோகிராம் என்றே நான் கருதுகிறேன் அது கணினி போன்றது. மூளையை கணினியில் நகல் எடுத்து மரணத்திற்குப் பிறகும் கூட அதற்கு உயிரூட்ட முடியும் என்பது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமே" என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்! மூளையின் செயல்பாடுகளை கணியில் நகல் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மூளை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு மூளையை பிளாஸ்டிக்காக மாற்றி பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி அதன் முப்பரிமாண அமைப்பை கணினிக…

  6. சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர். பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது. எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உ…

  7. நாஸா நிறுவனம் சந்திரனில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் விண்வெளி சாதனைகளில் குறிப்பிடத்தக்கதாக இது அமையுமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நாஸா அறிவித்துள்ளது. விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகள் பலவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாஇ இத்திட்டம் தொடர்பான செயன்முறை கட்டங்களை வடிவமைத்து வருகிறது. அதன் அடிப்படையில் சந்திரனில் விதைக்கப்படும் விதைகள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும். பூமியில் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நீர்இகாற்று போன்றவற்றை பெற்றுக்கொடுப்பது அடுத்த கட்ட நடவடிக்கையாக நடைபெறும். சந்திரனில் தாவரங்களுக்கான …

  8. மூளை ஆராய்ச்சி : ஆண் மூளை வரை படம் பார்க்க, பெண் மூளை பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய .. ஆண்கள் மற்றும் பெண்களின் மூளையை பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்கள் மற்றும் பெண்களின் திறனை பற்றி கூறப்படும் சில பாரம்பரியமான கருத்துகள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களால் ஒரு வரைபடத்தை வாசிக்க முடியும், இதற்கு மாறாக, பெண்களோ வழி கேட்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்களின் மூளைகளில் இடது மற்றும் வலது அரைக்கோளத்திற்கு இடையே உள்ள நரம்பு இணைப்பு சற்று அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் மூளைகளில் நடத்தப்பட்ட ஸ்கேன் என்ற பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர். இதற்கு மாறாக, முன்னிருந்து பின் பக்கம் இணைக்கப்பட்ட…

  9. மனிதன் பல நூறு வருடங்கள் வாழ முடியும் என்பது அறிவியல் கூறுகிறது. நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் இது பற்றிய கதைகள் நிறைய உண்டு. இது பற்றிய உங்களின் கருத்தாடலை வரவேற்கிறேன் கொஞ்ச நாளைக்கு முன்பு எனது வலைப்பதிவில் நான் எழுதிய பதிவு இது... சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது. ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின ம…

  10. Unicode Technical Note #21: Tamil Numbers Originally, Tamils did not use zero, nor did they use positional digits (having separate symbols for the numbers 10, 100 and 1000). Symbols for the numbers are similar to other Tamil letters, with some minor changes. For example, the number 3782 is not written as ௩௭௮௨ as in modern usage. Instead it is written as ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨. This would be read as they are written as Three Thousands, Seven Hundreds, Eight Tens, Two; or in Tamil as ¬}²-ஆயŽர{¢-எ¸-¥‚²-எz-ப{¢-இரzž. [1] Reference [1] uses Tamil numerals for Chapter numbers. This usage is based on modern practice, using both positional digits and zero. Refer…

  11. நீங்கள் கனவு காண்பது உண்டா? இதை படித்தபிறகு கூட உங்களுக்கு கனவு வரலாம் !. கனவு கண்டுதான் ஏராளமான கதைகளும், கவிதைகளும், பாடல்களும்,விஞ்ஞான ஆராய்சிகளும், எண்ணற்ற கண்டுபிடிப்புகளும், ஏன் திரைப்படங்களும் உருவாகின. கனவு என்பது என்ன?, மனிதன் ஏன் கனவு காண்கிறான்?, கனவுகளுக்கும் மனித உள்ளத்திற்கும் என்ன சம்பந்தம்? கனவுகள் நம் வாழ்க்கையின் உட்பொருளை உணர்த்துகின்றனவா? கனவு மனித வாழ்க்கையில் எப்படி எப்போது ஏற்பட்டது? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடினார் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு. தூங்கும் மனம் தன் நினைவுகளை படமாக்கி பார்கிறது அதுதான் கனவு. படமாக்குவதும் மனம்தான் பார்பதும் மனம்தான் என்ற உண்மையை இங்கே நினைவு வைத்துக் கொள்ளவேண்டும். மனிதன் எப்போது சிந்திக்க தொடங்க…

  12. தூக்கம் பற்றிய ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு துறை நிண்ட்ஸ் (NINDS - National Institure of Neurological Disorders and Stroke) செயல்படுகிறது. முக்கியமாக வயசுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த வயதுகளில் நிம்மதியான தூக்கம் அவசியம் என்கிறார் பெண் டாக்டர் சிரேலி. ஒரு விசயம், விலங்குகள் தூங்கும் நிலையிலேயே எப்படி உசார் நிலையில் இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது. மூளை நுண் நரம்பு செயல்பாடு ஒழுங்காக நடக்க தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. தூக்கத்தின் போதே உடலின் பல பாகத்தின் செல்களில் உள்ள புரோட்டீன் சத்து அதி…

  13. கேன்சருக்கு நானோபாட்கள் - கத்தியில்லா அறுவை சிகிச்சை(புதிய தகவல்) ”கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை ” இது உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வியாதிகளில் இருந்து இருந்து விடுபட அணுப்பரிமாண நுண்கருவிகள் உடலின் உள் செலுத்தப்பட்டு நோய் நீக்கப்படும். இத்தகைய மருத்துவம் மருத்துவ உலகில் ஒரு மைல் கல். நானோபாட்கள் (Nano Bots) / “நானோ கிருமிஅழிபான்” / ”நானோபாட்ஸ்” (Nanobots) நானோ தொழில் நுட்பத்தாலும், மைக்ரோ சிப்புகளாலும் மிக மிக குட்டியாக வடிவமைக்கப்படும் நுண்கருவிகள் நானோபாட்ஸ். இவைகள் உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள், கேன்சர் மற்றும் நோய் கிருமிகளை போரிட்டு அளிக்ககூடிய மைக்ரோ ரோபோக்கள். விஞ்ஞானிகள் இது எப்படி இருக்கவேண்டும் இதில் என்னென்ன அம்சங்கள் இர…

  14. நிலாவில் மனிதன் கால் தடம் பதித்ததில் இருந்தே அதில் மனிதன் வாழ முடியுமா என்ற சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வரும் 2015ஆம் ஆண்டு வாக்கில், நிலாவில் நூக்கல் மற்றும் துளசி செடிகளை வளர்த்து, மனிதன் நிலாவில் வாழ முடியுமா, தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா என்பது குறித்து சோதனை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளில் நிலாவுக்குச் சென்று அங்கு தரைப் பகுதியில் 5 முதல் 10 நாட்களுக்குள் வேகமாக வளரும் செடிகளான துளசி, நூக்கல் விதைகளை மண்ணில் புதைத்து எடுத்துச் சென்று, அதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து பரிசோதிக்க உள்ளனர். இந்த விதைகளை சுற்றி கேமராக்கள், உணர்வறியும் கருவிகள், செடியின் தன…

  15. இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...! வாஷிங்டன்: உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது. உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது. படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை…

  16. பூமியின் காந்த மண்டலத்தை மேலும் தெளிவாக அடையாளப் படுத்துவதற்கான நோக்குடன் மூன்று ஐரோப்பிய (சாட்டலைட்) செயற்கைக் கோள்கள் ரஷ்யாவிலிருந்து இன்று ஏவப்படுகின்றன. பூமியின் ஆழத்தில், குழம்பு நிலையில் இருக்கும் புவி மையப் பகுதியில் காந்த மண்டலம் எவ்வாறு இயங்குகின்றது என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இந்த செயற்கைக் கோள்கள் உதவும். தொடர்புடைய விடயங்கள் தொழில்நுட்பம் மூன்று செயற்கைக் கோள்களும் பொதுவாக 'ஸ்வார்ம்' (SWARM) என்று அழைக்கப்படுகின்றன. அண்மைய பல ஆண்டுகளாக பூமியின் காந்த மண்டலம் பலவீனமடைந்து வருகின்றமைக்கான காரணங்களை ஆராய்வதற்கும் விஞ்ஞாளிகள் இந்த செயற்கைக் கோள்களை பயன்படுத்தவுள்ளனர். பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை த…

  17. வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். (Prof Arun Dharmarajan / பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன்) http://www.sbs.com…

  18. செவ்வாய் கிரகத்தில் கிரானைட் மலைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் மலைகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை. இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று அங்கு கிரானைட் பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எரிமலையின் கடும் வெப்பத்தினால் உண்டாகும் பாறைகள் ‘கிரானைட்’ ஆக மாறுகிறது. அதுபோன்ற பாறைகள் செவ்வாய் கிரகத்தில் பெருமளவில் உள்ளன. எனவே அவை கிரானைட் மலைகள் மற்றும் பாறைகளாக இருக்கலாம். இந்த தகவலை ‘நாசா’வை ச…

  19. குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் – படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு! மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம். ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்…

  20. சூரியன் தலைகீழாகத் திரும்பலடையவுள்ள முக்கிய நிகழ்வு அடுத்த சில வாரங்களில் இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இதன்போது செய்மதிகள் மற்றும் ரேடியோ அலைகளில் குறுக்கீடு ஏற்படலாம் என நாஸா தெரிவித்துள்ளது. சுமார் 11 வருடங்களுக்கு ஒரு முறை காந்தப் புலத்தின் எதிர்முனைவுகளால் சூரியன் இவ்வாறு திரும்பலடையும். இது சூரியன் சுழற்சியின் முடிவில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இது எப்போது இடம்பெறும் என சரியாகக் கணிக்க முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அடுத்த 3 வாரங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இம்மாற்றத்தினால் ஏற்படும் புவிகாந்தபுல அலைவுகளால் செய்மதிகள் மற்றும் வானொலி அலைகளில் பாதிப்பு ஏற்படுத்தலாம் …

  21. Aatika Ashreen உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் – சீனாவின் அரிய கண்டுபிடிப்பு இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது. ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப…

    • 0 replies
    • 776 views
  22. சமுத்­தி­ரங்­களின் இர­க­சி­யங்­களை ஆராய்ச்சி செய்­த­வ­தற்­காக பல்­வேறு வச­தி­க­ளைக்­கொண்ட மிதக்கும் ஆய்­வு­கூ­ட­மொன்­றினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்­டு­மான நிபுணர் ஜெக்ஸ் ரோஜரி என்பவர் வடி­வ­மைத்­துள்ளார். ஸீ ஓபிடெர் என அழைக்­கப்­படும் இந்த ஆய்­வு­கூட கப்பல் கட்­டு­மானப் பணிகள் 2014ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. 1000 தொன் நிறை­யு­டைய இக்­கப்­பலின் 170 அடிகள் உய­ர­மான முக்­கால்­வாசிப் பகுதி நீரில் அமிழ்ந்து காணப்­படும். இதன் மூலம் கடலின் ஆழத்­தி­லுள்ள நீர் வாழ் உயி­ரி­னங்கள் மற்றும் சூழல் தொடர்­பான ஆய்­வினை மேற்­கொள்ள முடி­யுமாம். வாழ்­விடம் மற்றும் சமை­ய­லறை வச­திகள் கொண்ட இந்த மிதக்கும் ஆய்­வு­கூ­டத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் வரை­யி­ல…

  23. மிகப் பிரகாசமான வால் நட்சத்திரங்களில் ஒன்றான ஐஸோன் ISON என அழைக்கப்படும் வால் நட்சத்திரத்தினை இலங்கையர்கள் தெளிவாக அவதானிக்கலாம் என இலங்கை வானியல் சங்கம் தெரிவித்துள்ளது. “இந்த நூற்றாண்டின் வால் நட்டத்திரம்” எனக் கூறப்படும் ஐஸோனானது, இந்த தசாப்தத்தில் அல்லது நூற்றாண்டில் பூமியைக் கடக்கும் மீ உயர் பிர­கா­ச­மான வால் நட்சத்திரம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு வான் பரப்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலைவேளையில் ஐஸோன் வால் நட்சத்திரத்தினை அவதானிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. பகல்வேளையானாலும் சூரிய வெளிச்சத்தை மிஞ்சும் வகையில் ஐஸோனின் வெளிச்சம் அமையும். வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடியதாக இருக்கும். சிலவேளையில் வெளிச்சம் கண்ணில் வலியை ஏற்படுத்தலாம் என நாஸ…

  24. பூமியில் எங்கே விழுமெனத் தெரியாமலிருந்து ஐரோப்பாவுக்குச் சொந்தமான விண்வெளியின் பெராரி என அழைக்கப்படும் செய்மதி நேற்று அந்திலாந்திக் சமுத்திரதில் வீழ்ந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. இச்­செய்­ம­தி­யா­னது புவி­யீர்ப்பு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக உயர் தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்டு 2010ஆம் ஆண்டு விண்­ணுக்கு செலுத்­தப்­பட்­டது. அதன் எரி­பொருள் முடி­வ­டைந்ததுடன் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்துடனான தொடர்பையும் இழந்திருந்தது. இதனையடுத்து எங்கு? எப்போது? விழுமென விஞ்ஞானிகளால் ஊகிக்கமுடியாதிருந்த நிலையிலேயே நேற்று ஜி.ஓ.சி.ஈ எனப்படும் விண்வெளியின் பெராரி பூமியில் வீழ்ந்துள்ளது. 1,100 கிலோ கிராம் நிறையுடைய இந்த செய்மதியின் சுமார் 275 கிலோ கிராம் நிறைய…

  25. அப்பிள், கூகுள், அமேசன் போன்ற நிறுவனங்கள் டெப்லட் கணனிகளை முடியுமான வரை சிறிய உருவில் , மெல்லியதாக தயாரிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் பெனசொனிக் நிறுவனமோ 20 அங்குல திரையைக் கொண்ட டெப்லெட் கணனியொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. 'டப் பேட்' என அழைக்கப்படும் இது கூகுளின் நெக்ஸஸ் 7 டெப்லட்டை விட 3 மடங்கு பெரியதாகும். விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மேற்படி டெப்லட்டின் நிறை 2.26 கிலோகிராம்களாகும். இந்நிறையானது அப்பிளின் புதிய ஐபேட் எயாரை விட 5 மடங்கு அதிகமானதாகும். இது தவிர 8ஜிபி ரெம், 256 ஜி.பி. நினைவகம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளதுடன் Intel i5 1.9GHz புரசசர் மூலம் இது இயங்குகின்றது. பெரிய திரையைக் கொண்டிருப்பதனால் 2 மணித்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.