Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கருணா மீது தாக்குதல்….?? March 12, 201511:49 am கருணா என்கின்ற முரளிதரன் மீது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதலை நடத்தியுள்ளது. இவர் கொள்ளுப்பிட்டி க்கு அண்மையில் உள்ள இரவு விடுதிக்கு சென்றதாகவும் இவரை பின் தொடர்ந்தவர்கள் திடீரென்று இவரை தள்ளி விழுத்தி இவரின் தலையிலும் முகத்திலும் தாக்கி விட்டு இரண்டு மோட்டார் சயிக்கில்களில் தப்பி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. இவரின் பாதுகாப்பு பொலிசார் இவரின் பிரத்தியோக வாகனத்திலேயே இருந்ததாகவும், கத்திய சத்தத்தினை கேட்டு இறங்கி ஓடி வருவதுக்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இப்படி ஒரு செய்தி முகநூலில் பரவுவதுடன் இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. http://www.jvpnews.com/srilanka/100817.html

  2. மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் கிட்டதட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடன் அடகுக் கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் என்பவர். தன்னுடைய குடும்பத்துடன் கிடாரிப்பட்டியில் வசித்து வந்தார். அங்கு "ஐயப்பா அண்ட் கோ" என்ற பெயரிலான அடகுக் கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். மேலும், கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கிடாரிப்பட்டியின் ஊர்க்கணக்குகளையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஊர்மக்கள் கொடுத்து வைத்திருந்த 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடனும், ஊர்க்கணக்கு பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். இவரால் அடகு பிடிக்கப்பட்ட நகைகள் மட்டும் 2 கிலோ இருக்கும் என்று ஊர் மக்கள் தெரிவ…

  3. சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ஒருவர் சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். எதுவும் தென்படாத நிலையில் தனது வீட்டிற்கு வந்து விட்டார். மறு நாள் மதியம் அதே பகுதியில் உள்ள ஒரு மீனவர் தான் வழக்கமாக மீன் பிடிக்கும் உத்தா ஆற்றில் கார் ஒன்று பாதி மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூழ்கியிருந்த காரை மீட்புப் படையினரைக…

  4. அமெ­ரிக்­காவில் 37 வயது தாயும், 20 வயது மகளும் ஒரே தினத்தில் சில நிமிட இடை­வெ­ளியில் குழந்­தை­களை பிர­ச­வித்த சம்­பவம் ஒன்று இடம்பெற்­றுள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த அஞ்ஜெலா பட்ரம் என்ற தாயும் தெர­னிஷா பில்லப்ஸ் என்ற மக­ளுமே இவ்­வாறு ஒரே தினத்தில் குழந்­தை­களை பிர­ச­வித்­துள்­ளனர். தம்பா பொது மருத்­து­வ­ம­னையில் அஞ்­ஜெலா பெண் குழந்­தையை பிர­ச­வித்து 34 நிமி­டங்­களில் தெர­னிஷா ஆண் குழந்­தையை பிர­ச­வித்­துள்ளார். அஞ்­ஜெ­லாவின் குழந்­தைக்கு ராய எனவும் தெர­னி­ஷாவின் குழந்­தைக்கு ஜெரி மிசோட் எனவும் பெயர்கள் சூட்­டப்­பட்­டுள்­ளன. தமது பிர­ச­வங்கள் குறைந்த நாட்கள் வித்­தி­யா­சத்தில் இடம்பெற­வுள்­ளதை முன்கூட்­டியே அறிந்­தி­ருந்த போதும், ஒரே தினத்தில் சில நிமிட வித்­த…

    • 5 replies
    • 443 views
  5. 2,500 ஆண்டுகள் பழமையான மனித மூளை ஒன்று இங்கிலாந்தில், கடந்த 2008-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தலை வெட்டப்பட்ட நிலையில் சேற்றுக்குள் புதைந்தவாறு கண்டெடுக்கப்பட்ட, ஒரு மனித மண்டை ஓட்டுக்குள் மூளை சேதம் அடையாமல் கிடைத்தது. அவரது மூளை சிதையாமல் இருக்கக் காரணம் என்ன வென்றும், அதற்கு சேறு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை ஆராய்ச்சி செய்து வரும் 34 பேர் கொண்ட விஞ்ஞானிகள், இது சுமாராக 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரின் மூளையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அந்த மனிதர் கொல்லப்பட்ட போது, அவருக்கு 26 முதல் 45 வயது இருக்கலாம் என்று பற்களை கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த ம…

  6. ஸ்லிமான்: வீடு வாங்கினால் மணப்பெண் இலவசம் என்ற இந்தோனேசிய விளம்பரம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரத்தின் கடைசி வரிகளில் "ஒரு அரிய வாய்ப்பு" இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டின் உரிமையாளரான 40 வயது நிரம்பிய வீனா லியாவின் நிழற்படமும் வெளியாகி இருந்தது. இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய நாட்டின் அனைத்து ஊடகங்களும், அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி படை எடுத்தன. அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி …

  7. ஓபிஎஸ் நீங்க "கவர்".. நத்தம் "மிட் ஆன்".. வளர்மதி நீங்க "சில்லி".. ! சென்னை: எப்படிப் பார்த்தாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு பக்தி, பவ்யம், ஒரு பயம்.. இதெல்லாம் இல்லாமல் அமைச்சர்களைக் கற்பனை செய்து பார்க்க முடியாது போல. வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு படத்தைப் பார்த்தால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி.. உச்சி மண்டை கிடுகிடுக்க டிவி பெட்டிகளில் போட்டிகளைப் பார்த்து வேட்டி நுனியைத் திருகியபடி ரசிகர் கூட்டம் டென்ஷனில். இப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை டென்ஷனிலிருந்து திசை திருப்பி, விக்கல் வரும் அளவுக்கு கிச்சுக்கிச்சுக் காட்டும் வகையில் உள்ளது இந்தப் படம். ஓபிஎஸ் நீங்க அம்மா கிரிக்கெட் ஆட வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த கற்பனை…

  8. ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை, மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில் படம் எடுத்துள்ளார். மேலும், ஆற்றில் குளித்துவிட்டு ஒரு மாணவி மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றி இருக்கிறார். அதையும் அந்த வாலிபர் படம் பிடித்து உள்ளார். அப்போது, இதை அந்த மாணவி எதேச்சையாக பார்த்திருக்கிறார். உடனே அந்த மாணவி கூச்சல் போட்டுள்ளார். அதிர்ச்சியில் அந்த மாணவி போட்ட கூச்சலை, அந்த கிராம மக்களும் மற்ற மாணவிகளும் கேட்…

  9. நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா! தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது. இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப் பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. "உலகிலேயே முன் தோன்றிய மூத…

  10. மன்னன் இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இராவணன் மன்னனுக்கு புஷ்பக விமானம் ஒன்று இருந்தாக கூறப்பட்டுள்ளது. சீதையை மறைத்து வைத்த இடம் எனக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள சீதா எலிய பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. சீதா எலிய கோயில் தற்போது இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். சீதையை கடத்தி வர பயன்படுத்திய புஷ்பக விமானம், மன்னன் இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூஜை வழிப்பாடு செய்து வருகின்றனர். மஸ்கெலியா, மவுசாகலை நீர்தேக்கம் மற்றும் கெனியோன் நீர் மின் நிலையத்திற்கு மேல் ஐந்து கன்னிமார் மலைக்கு அருகில் மவுசாக…

  11. ஹோண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் நிலதிற்கு அடியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்கால நகரம் ஒன்று மண்ணுக்குள் புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1000வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெர…

  12. Out of media player. Press enter to return or tab to continue. தன்னைத் தானே தபாலில் அனுப்பிய மனிதர் 7 மார்ச் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 10:18 ஜிஎம்டி ரெக் ஸ்பியர்ஸ் 1964-இல் தனது தபால் பயணத்தை தொடங்க முன்னர் லண்டனில்1960-களில் ஆஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ்லண்டனிலுருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தனது மகளின் பிறந்த நாளுக்குள் தான் வீட்டுக்குச் செல்லத் தீவிரமாக முயன்றும், அது முடியாமல் போகவே இந்த வழியை தான் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆன நிலையில், தனது இந்த சுவாரஸ்யமான பயண …

    • 0 replies
    • 569 views
  13. Started by nunavilan,

    விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி. இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர…

  14. தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவி ஆசீர்வதித்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது. ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=127758&category=Puthinam&language=tamil

    • 11 replies
    • 3.5k views
  15. நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவரை சிறையை உடைத்து, வெளியே இழுத்துவந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த 35 வயதான சையத் பரீத்கான் என்பவர், நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பலாத்கார சம்பவம் தொட…

  16. b17b306f0f9a261b9b99a897b1aa8d23

    • 0 replies
    • 376 views
  17. கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பயணிகள் விமானம் என்பதால் மிக மெதுவாகவே அது கடற்கரையை நோக்கி வருகிறது. விமானத்தின் நிழல் சில நொடிகளில் கடற்கரையை இருட்டாக்குகிறது. இதற்குள் சுதாரித்த பயணிகள் தங்கள் கேமராக்களில் இந்த அரிய தருணத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்கின்றனர். சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்கவும் பகீரத முயற்சி செய்கின்றனர். விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை தொட்டு விடலாம் எ…

    • 3 replies
    • 883 views
  18. ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில் அவர் கண் எதிரே தாலி கட்டினார் மகன். பாதசாரிகளே பார்வையாளர் களாக இருந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஓமலுரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத் (22), சேலத்தில் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், கருப்பூர் பரவைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகள் திவ்யா(23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதல், பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கோபிநாத்தின் …

    • 7 replies
    • 1.5k views
  19. புதுடெல்லி, உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களில் மெர்செர் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் உள்ள சிறந்த நகரங்களில் ஐதராபாத் நகரம் தான் வாழ்தற்கு சிறந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வாழ்வதற்கு சிறந்த காரணிகளான வாழ்க்கை தரம், மற்றும் சுற்றுசூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டதாக ஆய்வு கூறியுள்ளது. ஐதராபாத்தில் சர்வதேச விமானங்கள் மற்றும் பொதுசேவை வசதிகள் அதிகம் காணப்படுகிறது. ஆங்கிலம் சரளமாக பேசும் பள்ளி மாணவ மாணவிகள் சர்வதேச பள்ளி கூடங்கள் இங்கு உள்ளது. எனவே உலக வாழ்க்கைக்கு சிறந்த தரம் கொண்ட நகரம் ஐதராபாத் தான் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. http://www.dailythanthi.com/News/India/2015/03/05141801/Mercers-Quality-of-Livin…

  20. பாட்னா, பீகார் மாநிலம் சிதாமார்கி மற்றும் மதுபானி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அட்டகாசம் செய்து, 6 பேரது உயிரை பலிவாங்கிய காட்டு யானை தனது இயற்கை வாழிடமான நேபாளம் நாட்டிற்கு சென்றது. பீகாரில் யானை தாக்கியதில் 4 பேர் காயமும் அடைந்தனர். இதுதொடர்பாக வனஅதிகாரி எஸ்.எஸ். சவுதாரி பேசுகையில், “நாங்கள் வெற்றிகரமாக காட்டு யானையை நேபாளத்திற்கு அனுப்பிவிட்டோம். மதுபானி மாவட்டம் ஜெய்நகரில் சர்வதேச எல்லையை அதிகாலை 2:30 மணியளவில் யானை கடந்துவிட்டது. நாங்கள் இதனை யானையின் பாத தடங்களை கொண்டு ஆய்வு செய்தோம்.” என்று கூறினார். மற்ற யானைகளுடனான மோதலையடுத்து காட்டு யானை இந்தியாவிற்குள் காட்டுப்பகுதியில் நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பீக…

  21. மண்ணோடு மண்ணாக புதைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் வீடு! (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:54.39 மு.ப GMT ] இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன. இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர். அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தேவாயலத்தின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்ற…

    • 7 replies
    • 680 views
  22. வடக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மத்தயில் இலங்கையின் ஆள ஊடுருவும் அதி சக்தி வாய்ந்த புலனாய்வுத் துறையினர் உள் நுளைந்து மக்களின் மன நிலையை திசை திருப்பும் வேலைகளில் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஈடுபடுவது கடந்த புதன் (04.03.2015) அன்று யாழ்.மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன் அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர். இவற்றில் இவர்கள் மத்தியல் ஆபத்தான மனிதர்கள் ஊடுருவியமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள விசேட செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளதுடன் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது… கடந்த காலங்களில் இராணுவப் பு…

    • 1 reply
    • 402 views
  23. ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் செய்த போது 9000 அடி உயரத்திலிருந்து குதித்தபோது நிலைகுழைந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக மரணத்திலிருந்து தப்பித்தார். கிரிஸ்டோபர் ஜோன்ஸ் எனும் ஆஸ்திரேலியா வாலிபர், ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 9000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து டைவ் செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயக்கமுற்றார். தரையை அடைய 30 விநாடிகளுக்கு முன்னதாக அதனை கவனித்துக் கொண்டிருந்த ஜோன்ஸின் பயிற்சியாளர் சாதூர்யமாக செயல்பட்டு மயக்கமுற்றிருந்த ஜோன்ஸிற்கு சுய நினைவை வரவழைக்க அவர் மீது தாக்குதல் நடத்தினார். எனினும் ஜோன்ஸின் அசைவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பயிற்சியாளர் மேலும் தாமதிக்காமல், ஜோன்சின் பாராசூட்டை பிடித்து இழுத்து வ…

    • 0 replies
    • 436 views
  24. இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளத…

  25. கற்பனை காட்சி போன்று தோற்றமளிக்கும் ஒரு கலைப்பிரியரின் வனவிலங்கு படம் சமூக ஊடகம் முழுவதிலும் வெகு வேகமாக பரவிவருகின்றது. ஒரு தெளிவற்ற சிறிய வனப்பகுதி உயிரினம் இறகுகள் கொண்ட நண்பரின் மேல் சவாரி செய்கின்றது. இது யு.கே. கிழக்கு லண்டன் பகுதியில் பச்சை மரங்கொத்தி ஒன்றை கொல்ல நினைக்கும் ஒரு மரநாயின் அசாத்திய முயற்சியை சித்தரிக்கின்றது. வன விலங்கு புகைப்பட கலைஞர் ஜேசன் வார்ட் இப்படத்தை ருவிட்டரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்கு புகைப்பட பிடிப்பாளரான மார்ட்டின் லி-மே என்பவர் இப்படத்தை இவருக்கு அனுப்பியுள்ளார். செவ்வாய்கிழமை காலை 7,000ற்கும் மேற்பட்ட தடவைகள் இப்படம் ருவிட்டரில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் இப்படம் குறித்து சில சந்தேகங்கள் எழுந்ததாகவும் ஆ…

    • 0 replies
    • 347 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.