செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
துபாய்: துபாய் சாலையில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் ஓடியோடி எடுத்தனர். துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் முக்கிய சாலையில் கடந்த 11ம் தேதி சூறாவளிக் காற்று வீசியது. அப்போது திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள் சாலையில் பறந்து வந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடியோடி பணத்தை அள்ளினர். வாகன ஓட்டிகள் அனைவரும் கை நிறைய பணத்தை எடுத்துச் சென்றனர். அந்த பணம் எங்கிருந்து பறந்து வந்தது, யாருடையது என்றே தெரியவில்லை. சுமார் 2 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை காற்றில் பறந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விரட்டினர். திடீர…
-
- 9 replies
- 747 views
-
-
யு.எஸ்.- 26-மணித்தியால நீண்டநேர கடினமான சத்திரசிகிச்சையின் பின்னர் 10-மாதங்களே ஆன பெண் குழந்தைகள் நற்றலி ஹோப் மற்றும் அடெலின் வெயித் மாற்றா ஆகிய இருவரும் பின்னர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். ரெக்சஸ் சிறுவர் வைத்தியசாலையை சேர்ந்த மருத்துவ குழு குழந்தைகளை மார்பிலிருந்து நுரையீரல், இதய அகவுறை, உதரவிதானம், கல்லீரல், குடல், பெருங்குடல் மற்றும் இடுப்பு கூட்டணி வரை பிரிக்க வேண்டியதாக இருந்தது. இச்சத்திர சிகிச்சைக்கு 30-பேர்கள் அடங்கிய குழுவினருக்கு மிகவும் கவனமாக திட்டமிட மாதங்கள் சென்றன. பெண்கள் இருவரும் பல உறுப்பு அமைப்புக்களை பகிர்ந்து கொண்டபடியால் சத்திர சிகிச்சை சுலபமானதாக இருக்கவில்லை என குழந்தை மருத்துவ அறுவைச் சிகிச்சையாளரும் Texas Children’s Fetal Center இணை இயக்க…
-
- 3 replies
- 421 views
-
-
எண்ணெய் வளத்திலும், செல்வச் செழுமையிலும் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் துபாய், சத்தமில்லாமல் இன்னொரு மகத்தான சாதனையையும் தற்போது நிகழ்த்தியுள்ளது. அதிநவீன கட்டிடக் கலைவண்ணம், பசுமையான சுற்றுப்புறம், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வளாகம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த (2014) ஆண்டில் சுமார் 7 கோடியே 4 லட்சம் பயணிகள் வந்து சென்றதன் மூலம் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பை இதுவரை தக்கவைத்திருந்த லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி, தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. இதே காலகட்டத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தின் வழியாக சுமார் 6 கோடியே 81 லட்சம் பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இதை வைத்து பார்…
-
- 4 replies
- 768 views
-
-
மாப்பிள்ள நான்தான்.. அந்த சட்டை என்னோடதில்லை.. இந்திய கிரிக்கெட் சீருடை சர்ச்சை பற்றி பெடரர்! துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது என்னவோ உண்மைதான் என்றாலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்று கூறி பாகிஸ்தான் ரசிகர்களை கூல் செய்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் இருப்பது போன்ற போட்டோ சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் வைரலாக பரவிவருகிறது. இந்திய யூனிபார்முடன் பெடரர் இந்த போட்டோ கடந்த 15ம்தேதி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்த தினத்தில்தான், நைக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பெடரரும் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த ‘Mars One’ என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘The Mars 100’ என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் பூமியிலிருந்து சுமார் 100 நபர்களை தெரிவு செய்து, 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியிறுக்க முடிவெடுத்தது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசம் நிறைந்த பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் சுமார் 2 லட்சம் நபர்கள், தங்களின் பெயர்களை பதிவு செய்தனர். இவர்களில் ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், பொலிவியா, வியட்நாம், ஜப்பான், ஈராக், உக்ரெய்ன் மற்றும் சீனா…
-
- 6 replies
- 1.3k views
-
-
உலக முடிவில் தவறி விழுந்த மனிதர், பயணத்தை தொடர்ந்தார் நுவரெலியா, ஹோட்டன் சமவெளியில் அமைந்துள்ள உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் சுமார் 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (21) நடைபெற்றது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதா என்ற 35 வயதுடைய நபரும் அதே நாட்டைச் சேர்ந்த லின்டா என்ற 31 வயதுடைய பெண்ணும் கடந்த 10.02.2015 அன்று நெதர்லாந்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 14.02.2015 அன்று சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்துள்ளனர். இதன் பின்பு வெள்ளிக்கிழமை (20) மாலை நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர…
-
- 9 replies
- 610 views
-
-
பிரித்தானியாவில் தாய் ஒருவர், இறந்த மகளின் கருவை தனது வயிற்றில் சுமக்க கடந்த 4 வருடமாக போராடி வருகிறார். 59 வயதாகும் அந்த பெண்ணின் மகள், கடந்த 45 வருடங்களுக்கு முன் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால், தன்னால் கருவுற முடியாது என்ற பயத்தில் அந்த பெண்மணி, 2008ம் ஆண்டு லண்டனில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தனது கருமுட்டையை சேமித்து வைத்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், அந்தப்பெண்மணி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்னால் தனது தாயிடம், என் கருமுட்டையை கொண்டு நீ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பிறந்த உன்னுடைய கருப்பையிலேயே என்னுடைய குழந்தையும் வளர வேண்டும் என தனது இறுதி ஆசையை கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் …
-
- 0 replies
- 339 views
-
-
மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அமெரிக்க பெண் கைதி ஒருவர் மிகப்பெரிய உணவு பட்டியலை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சாப்பிடத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெல்லி ரெனி கிசென்டானெர். தற்போது 46 வயதாகும் இந்த பெண்மணி மரண தண்டனை கைதி ஆவார். 1997–ம் ஆண்டு கணவர் டக்ளஸ் கிசென்டானெரை கள்ளக்காதலன் கிரிகோரி ஓவனின் உதவியுடன் கத்தி முனையில் கடத்திச்சென்று கொடூரமான முறையில் கெல்லி ரெனி கொன்றார். பின்னர், கணவரின் காரை தீ வைத்து கொளுத்தியதுடன், உடலை எரித்து காட்டு மிருகங்கள் தின்பதற்காக அடர்ந்த காட்டுக்குள்ளும் வீசினார். எனினும் போலீசின் பிடியில் கெல்லி ரெனி சிக்கினார். கணவரின் பெயரில் உள்ள காப்பீட்டுத் தொகை மூலம் தனது வீட்டி…
-
- 0 replies
- 518 views
-
-
மோடியின் கோட் சூட் 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது 20 பிப்ரவரி 2015 தங்க ஜரிகையில் பெயர் கொண்ட மோடியின் சூட் வீண் செலவு என்று விமர்சனங்கள் வெளியாகியிருந்தன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தடவை மட்டுமே அணிந்திருந்த, சர்ச்சையை கிளப்பியிருந்த கோட் சூட் ஒன்று அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரியான ஹித்தேஷ் பட்டேல் தனது தந்தைக்காக இந்த ஆடையை வாங்கியுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது மோடி அணிந்திருந்த இந்த கோட், வர்த்தகர் ஒருவரால் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆடையில் மோடியின் பெய…
-
- 1 reply
- 443 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த தந்தை யொருவரும் மகளும் வர்த்தக விமானமொன்றில் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். கெப்டன் பீட்டர் எலியட்டும் அவரின் மகளான லாரா எலியட்டும் அண்மையில் பேர்மிங்ஹாம் நகரிலிருந்து டெனேரிவ் நகருக்கு முதல் தடவையாக விமானத்தை செலுத்திச் சென்றனர். பிரிட்டனில் வர்த்தக விமானமொன்றில் தந்தையும் மகளும் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றியது வரலாற்றிலேயே இது தான் முதன் முறையாம். தாமஸ் குக் நிறுவனத்தின் விமானமொன்றை இவ்விருவரும் செலுத்திச்சென்றமை குறிப்பிடத்தக்கது. தாம் எதிர்காலத்திலும் அடிக்கடி இவ்வாறு இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது 30 வயதான லாரா …
-
- 2 replies
- 443 views
-
-
நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ்டான் கார்டர், மனைவி ஸ்டீபனி கார்டரின் தலைமுடியை அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் முகர்ந்து பார்த்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளராக ஆஷ்டான் கார்டர் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் கலந்து கொண்டார். பதவியேற்ற பின்னர் ஆஷ்டான் கார்டர் உரையாற்றினார். அப்போது, அவரது மனைவி ஸ்டீபனி கார்டர் மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோர் நின்றனர். ஆஷ்டான் கார்டர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியின் தோள்பட்டையின் மீது கையை வைத்த ஜோ ப…
-
- 4 replies
- 681 views
-
-
இந்தியா தமிழ் நாட்டிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித வாழ்விடங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்ய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண த…
-
- 11 replies
- 823 views
-
-
இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் லோரைன் என்ற விமானி, பிரபல விமான சேவை நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் 19 ஆண்டுகள் விமானியாக பணியாற்றிய அனுபவசாலி. ஆனால், 2006-ல் அந்நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காரணம் 19 ஆண்டுக்கால பணியின் பலனாக அவருக்கு கிடைத்த வியாதி. நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதான 7 ஆண்டுகளில் பிஏஈ 146 ரக ஜெட் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தின் இன்ஜினை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் கரும் எண்ணெய் புகை வெளியாகும். ஆனால் அது இவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் அப்போது நினைக்கவிலை. அவருக்கு ஏற்பட்டது ‘ஏரோடாக்சிக் சிண்ட்ரோம்’ என்ற நோய். தொடக்கத்தில் இந்த நோயின் பாதிப்பால் கை விரல்கள் மற்றும் கால்களில் உணர்ச்ச…
-
- 1 reply
- 334 views
-
-
கனடா- குளிர்காலத்தின் ஆழ்ந்த உறைபனி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்கவர் பனி கற்பாறைகளாக மாற்றியுள்ளதோடு சுற்றுபுறங்களில் உள்ள மரங்களை சுற்றி படிககற்கள் தொங்குவது போன்று காட்சியளிக்கின்றன. இக்காட்சிகள் உல்லாச பயணிகளை கவர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா ஆறு உறைபனியினால் மூடப்பட்டுள்ளபோதும் வீழ்ச்சி முற்றாக உறைந்து விடவில்லை. ஆனால் வீழ்ச்சியின் விளிம்பு அருகில் உள்ள பிரமாண்டமான பனி கட்டமைப்பு சுற்றுலா பயணிகளை காந்தமாக ஈர்க்கின்றதென கூறப்பட்டுள்ளது. இந்த உறைபனி நிலைமை விரைவில கரைந்து விடும் என எதிர்பார்க்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா பகுதி வெப்பநிலை தான இதற்கு காரணம். - See more at: http://www.canadamirror.com/canada/38266.html#sthash.Ov1hJx…
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தன் வாயில் வாளை வைத்து செய்த சாகசம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள டலாஸ்(Dallas) பகுதியை சேர்ந்த வெரோனிக்கா ஹெர்ணான்டெஸ்(Veronica Hernandez) என்ற பெண் தற்போது 9 மாத கர்ப்பணியாக உள்ளார். இவர் 14 அங்குலம் கொண்ட நீண்ட வாள் ஒன்றை தன் வாயினுள் வைத்து, அதை முழுவதுமாக விழுங்கி சாகசம் செய்துள்ளார். இந்த அபாயகரமான சாகசத்தை பார்த்த பார்வையாளர்கள் வாயடைத்து போனதுடன் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், இவ்வாறு செய்வதை நான் ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளேன் என்றும், எனது இச்செயல் ஆபத்தாக இருந்தாலும் அது என் குழந்தையை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் தெ…
-
- 0 replies
- 266 views
-
-
பொண்ணு பொறந்தாச்சு! மைலா லாவ்ரி நான்கு மாதங்களே ஆன இந்தப் பெண் குழந்தைக்காக 206 ஆண்டுகள் இங்கிலாந்தில் ஒரு குடும்பம் காத்திருந்தது. ஐந்து தலைமுறைகளாகப் பெண் குழந்தையே பிறக்காத குடும்பம் அது! மார்க் லாவ்ரி, மைலாவின் தந்தை. ஹன்னா இவரின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதலில் மார்க்கைத் திருமணம் செய்யும்போது இவருடைய குடும்ப வரலாறைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அடுத்தடுத்து ஆண் பிள்ளைகள் பிறக்கவும் அந்தப் பெண் அதை காரணமாகக் காட்டி விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டாராம். மார்க் மனம் நொந்திருந்த நேரத்தில் அறிமுகமான ஹன்னாவிடம் தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 'இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தபோதே என் குடும்பப் பின…
-
- 1 reply
- 451 views
-
-
கனடா செய்தி பொலிஸ் அதிகாரிக்கு தர்ம அடி கொடுத்து "எஸ்கேப்" ஆன இளம்பெண்கள் சுற்றிவளைப்பு (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 01:07.32 பி.ப GMT ] கனடாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இரு இளம்பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள பிரம்டன்(Brampton) நகரில் உள்ள பள்ளி ஒன்றின் தடை செய்யப்பட்ட இடத்தினுள், நேற்று முன் தினம் இளம்பெண்கள் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இத்தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்களை கைது செய்ய முயன்றுள்ளார். ஆனால் இதை கவனித்த அவ்விரு பெ…
-
- 3 replies
- 463 views
-
-
வாலிபரை, கீழே தள்ளி.... இழுத்துச் சென்ற பேய்: சிசிடிவி கேமராவில் பதிவு. வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு நிழல் உருவம் வாலிபர் ஒருவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வாலிபர் ஒருவர் காரிடாரில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிழல் போன்ற உருவம் அந்த வாலிபரை கீழே தள்ளி அவரது வலது காலைப் பிடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது அந்த வாலிபர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து அந்த உருவம் அங்கிருந்து மறைந்துவிட்டது. உடனே அந்த வாலிபர் பீதியில் எழுந்து வந்த வழியே ஓடிவிட்டார். இந்த காட்சி ஹோட்டல் காரிடாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை அந்த…
-
- 32 replies
- 8.3k views
-
-
ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த ஆமையின் மீது ஏறி நின்றவாறு உள்ள தனது புகைப்படங்களை ஃபே ஸ்புக்கில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஃபசல் ஷேக். இவர் கடந்த ஆண்டு மே மாதம் நேரு உயிரியல் பூங்காவுக்கு சென்றபோது, அங்குள்ள விலங்குகளைப் படம் எடுத்திருக்கிறார். அப்போது அங்கு காணப்பட்ட ஓர் ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்து வெளியிட்டால் ஃபேஸ்புக்கில் அதிக விருப்பங்கள்(லைக்ஸ்) கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார். அதனால் உடனே, விலங்குகளைப் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவி குதித்துள்ளார். பின்னர் அங்கிருந்த ஆமையின் அருகே சென்று, அதன் மீது ஏறி நின்று படம் எடுத்து, அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.…
-
- 6 replies
- 1k views
-
-
கிரேக்கத்தில் கொரினத்தில் அஸ்புரோ கம்பொஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச் சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு கொண்ட கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தினமான கடந்த ஜனவரி 25 ஆம் திகதியிலிருந்து யேசுவின் உருவச்சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக குறித்த தேவாலய மதகுருமார் தெரிவிக்கின்றனர். அந்த சிலையின் கண்களிலிருந்து தெளிவான எண்ணெய் தன்மையான மணமற்ற திரவம் சொரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/02/20/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0…
-
- 0 replies
- 386 views
-
-
ராபரேலி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் ஒரு திருமணம் கோலாகலமாக நடநது கொண்டு இருந்தது. மணமகள் இந்திரா (வயது 23) மணமகன் ஜூகல் கிஷோர் (வயது 25). வர்மாலா என அழைக்கப்டும் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு நடந்து முடிந்தது. மந்திரம் முழங்க இந்திரா கூடி இருந்த கூட்டத்தினர் நடுவே கிஷாரின் மனைவி என உறுதி செய்யப்பட்டார். திடீர் என மணமகன் சுருண்டு விழுந்தார் அவ்ருக்கு வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அனைவரும் பதற்றம் அடைந்தனர். உடனடியாக மணமகனின் உறவினர்கள் மணமகனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். மணமகள் மட்டும் இப்போது தனியாக நின்றாள். கிஷோரின் இந்த நிலை குறித்து தனக்கு ஏன் சொல்லவில்லை என கூறி பெற்றோரிடம் சண்டை போட்டார். உடனடியாக தனக்கு வேறு மணமகனை பார்த்து இந…
-
- 3 replies
- 612 views
-
-
பூமி, சூரியனை சுற்றவில்லை, சூரியன்தான் சுத்துது: சவூதி மத குரு. ரியாத்: பூமி சூரியனை சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் ஒருவர் ஷேக்கிடம் பூமி நிற்கிறதா அல்லது நகர்ந்து கொண்டிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ஷேக் கூறுகையில், பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை என்றார். தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார். ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ச…
-
- 13 replies
- 812 views
-
-
அவசர போலீஸ் என்பதற்கு அர்த்தம் தெறிக்க உழைத்திருக்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டில் உள்ள ஆக்லேண்ட் போலீஸார். ஆக்லேண்டில் வாயிட்மாட்டா துறைமுகத்தை ஒட்டிய சாலைப் பகுதி செம டேஞ்சரான ஏரியா. காரணம் - சாலையை ஒட்டிய சிறு இறக்கத்தில் ஆழ்கடல் ஆரம்பித்து விடுகிறது. எனவே, ‘கார், பைக்கில் வருபவர்கள் எப்போதுமே அலெர்ட்டாக இருக்க வேண்டும்’ என்கிற எச்சரிக்கைப் பலகையையும் தாண்டி கடலுக்குள் தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்தி விட்டார், 63 வயதான அந்தப் பெண்மணி. கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் சொல்ல, தடாலென காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் பால்வாட்ஸ் மற்றும் சைமன் ருஸெல் என்னும் போலீஸ் அதிகாரிகள். ‘‘இது மிகவும் ஆழமான பகு…
-
- 6 replies
- 701 views
-
-
செவ்வாய் கிரத்திற்கு செல்வதற்கான ஒரு-வழி பயணத்திற்கு உலகம் பூராகவும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 100-பேர்களடங்கிய குறுகிய பட்டியலில் கனடாவை சேர்ந்த ஆறு பேர்கள் தெரிவாகியுள்ளனர். நெதர்லாந்தை அடிப்படையாக கொண்ட Mars One என்ற அமைப்பு சிவப்பு கிரகத்தில் மனித குடியிருப்பை ஸ்தாபிக்க எண்ணியுள்ளது. இதற்கான தெரிவில் மூன்றாவது சுற்றில் 100-பேர்களை தெரிவு செய்துள்ளது. வேட்பாளர்களில் ஒன்ராறியோவை சேர்ந்த நால்வரும், பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். யுகொனை சேர்ந்த ஒருவரும் தெரிவாகி மூன்றாவது சுற்றில் நீங்கி விட்டார். Mars One ஆரம்பத்தில் ஒரு-வழி பணிக்காக உலகம் முழவதிலும் இருந்து 200,000விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இவற்றில் 8,243 கனடிய விண்ணப்பங்களாகும். சாரணர் தலைவரும…
-
- 0 replies
- 384 views
-
-
http://youtu.be/cK_MNCvjSps சீனாவில் சிறுவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து கழிவுநீர் குழாயிற்குள் பட்டாசை கொளுத்தி போட்டதால் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டனர், ஆனால் அந்த கொண்டாட்டத்தை சற்று வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்த இவர்கள், அங்கிருந்த கழிவுநீர் செல்லும் குழாயின் நுனியில் பட்டாசை வைத்து தீ வைத்துள்ளனர். பட்டாசில் தீ பற்றிய அடுத்த வினாடியே பெறும் சத்தத்துடன் பட்டாசு வெடித்து அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். கழிவுநீர் செல்லும் குழாயிற்குள் எரிவாயு இணைப்பு இருந்ததை அந்த சிறுவர்கள் கவனிக்க தவறியதால், பெறும் வெடி விபத்து ஏற்பட்டது. சிறுவர்களில் ஒருவன் தூக்கி…
-
- 3 replies
- 409 views
-