செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
Siri Raja சைப்பிரஸில் சட்டவிரோதமாக வாழ்ந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையரை விடுதலை செய்யும்படி கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இவர், கடந்த 20 வருடங்களாக சைப்பிரஸில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதுடன் அங்கு பணிபுரிந்தும் வருகின்றார். இவர் யூலை 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்காக மெனோயியா தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தம்பதியினர் 1993 இலிருந்து சைப்பிரஸில் சட்டரீதியாக வாழ்ந்து வருவதுடன் வேலையும் செய்துவருகின்றனர் என்று கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு ஆறு வயதாகும். இரண்ட…
-
- 0 replies
- 531 views
-
-
ஆர். தியாகு இன் புகைப்படம் ஒன்றை பிரபுகண்ணன் முத்தழகன் பகிர்ந்துள்ளார். தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்! எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர்!!! ""மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு.மிக அறிவு பெற்றதாய் தானே நினைத்துக்கொண்டு , திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார். ""சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்"" என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு. ஒரு முறை பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய…
-
- 0 replies
- 632 views
-
-
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாள் முக்கியமானது.அது சிலருக்கு திருமண நாளாய் இருக்கும்.சிலருக்கு நினைவு நாளாய் இருக்கும்.இன்றைய நாள் எனக்கு முக்கியமானது .ஆறுவருடங்களுக்கு முன் இதே நாளில் எனது இடது கால் போயிற்று.மன்னார் களமுனையில் கூப்பிடு தூரத்தில் நடந்த சண்டையில் எனது இரு கால்களும் சல்லடையாக்கப்பட்டது.இடது கால் இடுப்பில் இருந்து தோலில் தொங்கிய ஞாபகம்தான் என் இறுதி ஞாபகம்.நான் இறந்து போவதாய்த்தான் நினைத்தேன்.
-
- 8 replies
- 622 views
-
-
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த டி.பரங்கினி பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராகுல் என்ற 2 மாத குழந்தை உள்ளது.ஒரு மாதத்துக்கு முன்பு ராகுல் வீட்டில் இருந்தபோது அவனது உடலில் திடீரென தீப்பிடித்தது. வீடும் தீப்பற்றி கொண்டது. அவனை காப்பாற்றி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன் பிறகு பக்கத்து வீட்டில் மர்மமாக தீப்பிடித்தது. இதனால் பயந்துபோன ராகுலின் பெற்றோர் அவனை புதுவை அருகே உள்ள சிங்கிரி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்தபோதும் அவனது உடலில் தீப்பிடித்தது. அதன்பிறகு வானூர் அருகே உள்ள உறவினர் கிராமத்துக்கு சென்று தங்கினார்கள். அங்கு குழந்தையின் உடலில் தீப்பிடித்தது. பக்கத்து வீடு ஒன்றும் தான…
-
- 15 replies
- 2k views
-
-
காந்தியும் நித்தியானந்தாவும் இந்த இரண்டு நபருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, மன்மதலீலைக் கதைகள் இவர்களுக்கு உண்டு, காமத்தை அடக்காமல் மன்மதலீலைகளில் ஈடுபட்டவரை மகாத்மா என்கிறார்கள். மேலும் காந்தியை ஆன்மீகவாதி என்றால் அவரும் நித்தியானந்தாவைப் போன்றே ஒரு போலிச் சாமி என்பதே உண்மை. காந்தி உண்மையில் சிறந்த சுதந்திரப் போராட்டக்காரர் ஆனால் அவரொரு ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறுவது அவருக்குப் பொருத்தமற்றது. உள்ளதில் காமம் இல்லாமல் உள்ளத் தூய்மை கொண்டோரே ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறவேண்டும். அண்மையில் இந்தியா டுடேயில் காந்தியைப் பற்றிய மன்மதலீலைக் கதைகள் அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது. காந்திக்கு இரண்டு இளம் பெண்கள் தேவை அவர்களின் தோள்களில் தனது கையைப் போட்டுக் கொண்டு நடப்ப…
-
- 1 reply
- 2.4k views
-
-
ஒரேசமயத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசு </body> By General 2013-08-13 12:22:42 வடமேற்கு இங்கிலாந்திலுள்ள பண்ணையொன்றைச் சேர்ந்த பசுவொன்று ஒரேசமயத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. இவ்வாறு பசுவொன்று ஒரே சமயத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈனுவது 700000 க்கு ஒன்று என்ற விகிதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும். விர்ரல் எனும் இடத்திலுள்ள கிறீன் ஹவுஸ் பண்ணையைச் சேர்ந்த 901 ஆம் இலக்க பசுவே இயற்கையான முறையில் கருத்தரித்து இவ்வாறு 3 (காளை) கன்றுகளை அபூர்வமான முறையில் ஈன்றுள்ளது. இந்த 3 கன்றுக்குட்டிகளும் வெவ்வேறு மூலவுருக்கலங்களிலிருந்து விருத்தியாகியுள்ளன. htt…
-
- 14 replies
- 1.2k views
-
-
ஆயிரம் கோழிகளைத் திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிஹிந்தலை மின்சார சபை வீதியிலுள்ள கோழிப்பண்ணையொன்றிலிருந்தே கோழிகள் திருடப்பட்டதாகவும் விற்கப்பட்ட கோழிகளில் எஞ்சியிருந்த 93 கோழிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோழிகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியையும் கோழிகளை விற்று பெற்றுக்கொண்ட மூன்று இலட்சத்து 93 ஆயிரம் ரூபாவையும் முக்கிய சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 8 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கும் 10.30 மணிக்குமிடையில் கோழிகள் திருடப்பட்டதாகவும் அச்சந்தர்ப்பத்தில் பண்ணை உரிமையாளர் வெளிய…
-
- 0 replies
- 308 views
-
-
NaamTamilar Tirupur SamaranBala ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்திற்கு தீவிரவாத தாக்குதல் அபாயம் :;;;; ஏனென்றால் எத்தனையோ தேசிய இனங்களை அடிமைப் படுத்தி வைத்திருந்த காரணத்தால் - இந்தியாவின் போலி சுதந்திரத்தை யாரும் அனுபவிக்க முடியாத காரணத்தால் - அதன் மீது தாக்குதல் நடத்த அனைவரும் துடிக்கிறார்கள்.. இந்தியாவின் சுதந்திரத்தை காக்க ஒரே வழி - அமெரிக்கா போல பல நாடுகளின் கூட்டமைப்பாக மாற்றுவது.... ராணுவம், வெளியுறவு , பாதுகாப்பு, பணம் அச்சடிக்கும் உரிமை போன்றவற்றை மட்டும் தன்னகத்தே வைத்துக்கொண்டு- மற்றவையெல்லாம் அம்மக்களே தங்களை ஆண்டுகொள்வது - இதுவே இந்தியா என்கிற கூட்டமைப்பு நாடாக இருக்க முடியும்..... இல்லாவிடில் இந்தியா உடையும்....... சோவியத் யூனியன் உடை…
-
- 0 replies
- 361 views
-
-
விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகொப்டர், கியாஸ் பலூன், ரொக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1இலட்சம் டொலர் செலவில் விசேஷ உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர்களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுககட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பி…
-
- 0 replies
- 626 views
-
-
உலகத் தமிழர் இணைய இணைப்பு *********************************************** * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• * * ''அனைவரும் ஒன்று கூடுவோம். ... * * --------- ”சதியை முறியடிப்போம் .......”.. ''.. * * நாள் .-- 17-8-13, மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை.. * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• *********************************************** '' இலங்கை-இந்தியா-அமெரிக்காவின் சதியை முறியடிப்போம்.. ***********************************************
-
- 0 replies
- 456 views
-
-
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…
-
- 0 replies
- 385 views
-
-
தமிழால் இணைவோம் # உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள். Visit our Page -► தமிழால் இணைவோம்
-
- 0 replies
- 1k views
-
-
The Farmer- உழவன் நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்! உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’’ அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார், சொல்கிறார். 'எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ…
-
- 0 replies
- 335 views
-
-
காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை அவரது மனைவி புரட்டி எடுத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தெல்லிப்பழையிலுள்ள ஆலயம் ஒன்றில் ஆடிச் செவ்வாய் தினத்தன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவர் திருமணமாகி நான்கு வயதுள்ள ஆண் குழந்தைக்கு தகப்பனாக உள்ளார். இவர் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணொருவருடன் காதலில் வீழ்ந்துள்ளார். இதனை அறிந்த மனைவி கணவனுடன் சண்டை பிடித்துக் கொண்டு தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கணவன் தனது காதலியுடன் பல இடங்களுக்கும் காரில் சுற்றித் திரிந்துள்ளார். சம்பவ தினத்தன்று கோயிலுக்குள் இருவரும் இருப்பதாக…
-
- 13 replies
- 802 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நகர் ஒன்றில் சர்ச்கள், சந்தை, நீச்சல் குளம் உள்ளிட்ட பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு இடங்களிலும் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டின் மேற்கு ஜூரிச் நகரின் அருகே அமைந்துள்ளது பெர்ம்கார்ட்டன் நகரம். இங்கு கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் புதிதாக தஞ்சம் அடையும் அகதிகளுக்கான முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் நிர்வாகம் சமீபத்தில் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் கோயில், சர்ச், நூலகம்…
-
- 7 replies
- 607 views
-
-
கூடங்குளம் செய்திகள் வெளிச்சம் முக்கியம் மகனே ! --------------------------------------------- மகன்: அப்பா ஏன் அப்பா அவருக்கு ............ல தீ வைக்கிறாங்க? அப்பா: தீ வச்சாதானேடா மகனே வெளிச்சம் கிடைக்கும்! மகன்: வெளிச்சத்த வச்சி என்ன பண்ணலாம் அப்பா? அப்பா: வெளக்கு கொளுத்தி பன்னாட்டு கம்பனிகளுக்கு பிடிக்கலாம்! IPL match நடத்தலாம். வாண வேடிக்கை நடத்தலாம். சாலைகள், sez பார்க, அரசு கட்டிடங்கள், IT corridors க்கு தடை இல்லா ஒளி வெள்ளம் பாய்ச்சலாம். இலவச தொலைக்காட்சி பாக்கலாம். மகன்: தீ வச்சா அவருக்கு வலிக்காதா அப்பா? அப்பா: ஆனா நம் வளர்ச்சிக்கு வெளிச்சம் முக்கியம் மகனே! மகன்: அப்பா அவருக்கு வலிக்குதுனு நீங்களாவது எடுத்து சொல்லுங்கப்பா! அப்பா…
-
- 1 reply
- 502 views
-
-
பிரிட்டனில் இயங்கும் மாபெரும் தமிழர் நிறுவனம்: 82 மில்லியனுக்கு காணிகளை வாங்கியது! on 05 August 2013. லண்டனில் இயங்கிவரும் தமிழருக்குச் சொந்தமான மாபெரும் நிறுவனம் ஒன்று லண்டன் மையப்பகுதியில் 3.7 ஏக்கர் காணியை வாங்கியுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம் "லைக்கா மோபைல்" என்னும் இன் நிறுவனமே லண்டனில் உள்ள சவுத் குவே(மையப் பகுதி) £82 மில்லியன் பவுண்டுகள் செலவில் இக் காணியை வாங்கியுள்ளது. திரு.சுபாஸ்கரன் என்பவரால் நடத்தப்பட்டு வரும்... லைக்கா ரெல் குழுமத்தால், லைக்கா மோபைல், லைக்கா பிரயாண ஒழுங்கு, லைக்கா வங்கி (கிரெடிட் காட் வழங்கும்) நிறுவனங்கள் எனப் பல நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருடம் ஒன்றுக்கு பல மில்லியன் பவுண்டுகள் லாபமீட்டிவரும் இந்த நி…
-
- 13 replies
- 946 views
-
-
து நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், தங்கைக்கு பதிலாக பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரி சகோதரியொருவரை அடையாளம் கண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இரு சகோதரிகளும் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவ்விருவரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உயர்தரப் பரீட்சையின் நடனம் பாடப் பரீட்சையின் போதே இவர்கள் ஆள்மாறாட்டம் செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் கொலன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78099-20…
-
- 1 reply
- 335 views
-
-
Sk Rajen மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும், லேசர் கருவியை, பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள, லேசர் கருவி மூலம், நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று, "எண்டோதிலியல்' செல்களை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம். மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதி…
-
- 2 replies
- 431 views
-
-
புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து கனடாவில் தமிழ்ச் சிறுவன் சாதனை! புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து இக்கொடிய நோய்க்கு சாவுமணி அடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுஇளவயதிலேயே பல்கலைக்கழக மருத்துவக் கல்விக்கு அனுமதிக்கப்பட்ட மொன்றியலைச் சேர்ந்த உத்தமகுமாரன் அபிகுமாரனுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருது வழங்கும் வைபவம், 2013 ஆகஸ்ட் 4ம் திகதி பிற்பகல் ஸ்காபரோவிலுள்ள 'செந்தாமரை' மண்டபத்தில் நடைபெற்றது. -தமிழ் -கருத்துக்களம்-
-
- 12 replies
- 689 views
-
-
-
- 0 replies
- 541 views
-
-
Thamilmaran Kri 5 நிமிடங்களுக்கு முன்பு என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!0 “ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன். “”என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செ…
-
- 5 replies
- 3k views
-
-
அமெரிக்காவின் பெரும் பணம் படைத்தவர்களில் (இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல்) ஒருவரான , டிவி நட்சத்திரமான கறுப்பின பெண்ணான ஓபரா வின்பிரே, இன்னுமோர் கறுப்பின, புகழ் மிக்க பாடகியான டினா டேர்னர் இனது திருமண நிகழ்வுக்கு கலந்து கொள்ள சுவிஸ் சென்றிருந்தார். அங்குள்ள மிக ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் விலை உயர்ந்த அறையில் தங்கி இருந்தார். திரும்பும் போது, பெரும் நிறுவனம் ஒன்றின் ஒரு கைப்பைகள் விற்கும் கடை பகுதி சென்று, விற்பனை பெண்ணிடம், அவருக்கு மேலே இருந்த கைபையினை பார்க்க தருமாறு கேட்டார். அந்த பெண்ணோ, மேலும் கீழும் பார்த்து விட்டு, அது மிகவும் விலை கூடியது, உமக்கு கட்டுப்படியாகாது. என்று கூறி விட்டார். இல்லை. அதை சொல்ல வில்லை. அங்கே பக்கத்தில் இருக்கும் கறுப்பு நிற கைப்பையி…
-
- 1 reply
- 738 views
-
-
மொக்கை டான்சு என்றால்..................................இது தாங்க.
-
- 23 replies
- 1.8k views
-
-
புதிய கூட்டணியுடன் வருகிறார் ராமர் பிள்ளை ஜூனியர் விகடனில் இருந்து... பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார். ''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி. ''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு…
-
- 2 replies
- 635 views
-