செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=b26Z1dEb5ZE இணையத்தில்... இந்தப் படத்தை பார்த்த போது... தென்னிந்தியா அல்லது நம்மூர் போன்ற இடத்தில் நடந்த சம்பவம் மாதிரி தெரிகின்றது. வானத்தில் இருந்து திடீரென விழுந்து, எரிந்த "சற்றலைற்றைப்" பற்றிய செய்தி என்றால்... பத்திரிகைள், தொலைக்காட்சியில்... செய்தி வந்திருக்க வேண்டும். எனது கண்ணில் எதுவும் படவில்லை. இதனைப் பற்றிய.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
-
- 12 replies
- 741 views
-
-
மாஸ்கோ: வயாகரா மாத்திரைகளை பயன் படுத்தி வெற்றிகளைக் குவியுங்கள் என்று ரஷ்யப் பிரதமர் புதின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யா கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், மூன்றாம் இடம் பிடித்த ஜப்பான் மாணவர்கள் 24 பதக்கங்களையும் இரண்டாம் இடம் பிடித்த சீன மாணவர்கள் 26 பதக்கங்களையும் வென்றனர். 155 தங்கப் பதக்கங்களை வென்று, ரஷ்ய மாணவர்கள் முதல் இடத்தை பெற்றிருந்த போதும், வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் விமர்சித்தன. இந்நிலையில், பதக்கம் வென்ற ரஷ்ய மாணவர்களுக்கு தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் தலைமை தாங்கிப் பே…
-
- 1 reply
- 885 views
-
-
சென்னை: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது இதனைப் பயன்படுத்திய பயணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச தரத்தில், அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த முனையங்களை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி திறந்து வைத்தார். உள்நாட்டு முனையத்தில் கடந்த 3 மாதங்களாக வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள் முழுமையாக செயல்படத் தொடங்கினாலும், பன்னாட்டு முனையம் மட்டும் முழுமையாக செயல்படாமல் இருந்தது. இப்போது பணிகள் மற்றும் பணியாளர் நியமனம் போன்ற முழ…
-
- 13 replies
- 1.3k views
-
-
திருப்பூர் அருகே குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவரின் உடல் வெந்தது. தப்பி ஓடிய மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அண்ணாநகர் ஜோதிபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் தங்கபெருமாள் (வயது 43). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கோவையை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சர்மிளாவுக்கும் (37) திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ் (7), சச்சின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த சர்மிளா அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். மனைவி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது கணவர் தங்கபெருமாளுக்கு பிடிக்கவில்லை. அதனால் மனைவியை சத்தம் போட்டு வந்தார…
-
- 26 replies
- 1.8k views
-
-
இலங்கையில் குடும்ப சூழ்நிலையால் பிரிந்த சகோதரிகள், 47 ஆண்டுகளுக்கு பின், மதுரையில் மீண்டும் சந்தித்து, மகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்ட சம்பவம், நெகிழ வைத்தது.நெல்லை மாவட்டம் வால்வீச்சு ரஸ்தாவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி குருவம்மாள். மூத்த மகள் வள்ளி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது, 1942 ல் வேலை தேடி, இலங்கைக்கு குடும்பத்துடன் கண்ணையா சென்றார். கொழும்பு நகராட்சியில் கூலித் தொழிலாளியானார். பின், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தனர். இதில், 2 பேர் இறந்த நிலையில், 5 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர். வள்ளிக்கு, இலங்கையில் சுப்பையா என்ற கூலித் தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. 1966ல், கண்ணையா இறக்க, செய்வதறியாமல் தவித்த குருவம்மாள், குடும்ப சூழ்நிலை காரண…
-
- 3 replies
- 430 views
-
-
யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் அவ் விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார். விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கத்துக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கி விடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=5949
-
- 2 replies
- 243 views
-
-
ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவி ஒருவர் கழிவறைகளை சுத்தம் செய்தும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் பச்சாமா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி ரஜினி பன்சால்(38). அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அவர் இருக்கும் வீடு கன மழை பெய்தால் தாங்காது. பஞ்சாயத்து தலைவியாகிய அவர் பிழைப்பு நடத்த உள்ளூரில் உள்ள பெண்கள் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்கிறார். மேலும் கிராமத்தில் பிச்சையும் எடுக்கிறார். அவருக்கு வர வேண்டிய சம்பளம் பல மாதங்களாக வரவில்லையாம். அவரது மூத்த மகன் அனில் எழுதப்படிக்கத் தெரியாத ரஜினிக்கு அவரது பெயரை எழுத கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து அ…
-
- 0 replies
- 371 views
-
-
´´வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்'': தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க! ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40 வயது மீனவர் இன்னாசி, மார்க்கெட் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். பின்னர் பாருக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பிராந்தியை குடிக்க உட்கார்ந்தார். பாட்டிலைத் திறக்க முயன்றபோது அதற்குள் சின்னதாக ஏதோ இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர்கள் நன்கு உற்றுப் பார்த்தபோது பாட்டிலுக்குள் கிடந்தது குட்டிப் பாம்பு என்று தெரிய வந்து அதிர்ந்தனர். அரை அடி நீளத்தில் அந்த பாம்பு செத்துப் போய…
-
- 9 replies
- 1.7k views
-
-
பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை, அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வ…
-
- 7 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=gK6KxAqzU3U
-
- 0 replies
- 482 views
-
-
லண்டன்: மூளைச்சாவு அடைந்ததாக கருதி கண்களை அகற்ற முயன்ற போது, சம்பந்தப்பட்டப் பெண் திடீரென எழுந்து அமர்ந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில், அளவுக்கு அதிகமாக சில அபாயகரமான மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் கொலீன் எஸ் பர்ன்ஸ் என்ற இளம் பெண் ஒருவர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறிவிட்டனர். கொலீன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக கூறி அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோரிடம் அனுமதி கேட்டனர். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, முதல்கட்டமாக கண்களை ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப் பட்டது. ஆபரேஷனுக்கு மருத்துவர்கள் நிலையில், திடீரென எழுந்து அமர்ந்து…
-
- 6 replies
- 663 views
-
-
கொழும்பு திறந்த பல்கலைகழக சட்டபீட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமத்தம்பியினால், கொடுக்கப் பட்ட assignment இணை தாமதமாக கொடுக்க முற்பட்ட மாணவர், அது, நிராகரிக்கப்பட்டதால் , முன்னரே திட்டத்துடன் கொண்டு வந்த கத்தியினால், பல தடவை குத்தியதனால் உயிர் ஆபத்தான நிலையில் விரிவுரையாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார். குத்திய மாணவரும், சிவஞானசுந்தரம் சுரேந்திரயித், தற்கொலை முயற்சியில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார். ஆசிரியர், தலைமை ஆசிரியர் இப்போது விரிவுரையாளர் சொறி லங்காவில்.... அடுத்தது யார்?
-
- 11 replies
- 1.3k views
-
-
சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள்,மாணவிகளுடன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிகளின் இந்த விதிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், இது போன்ற தடைகளால் மாணவர்களிடையே தவறான எண்ணங்களை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் சமூக திறன்கள் மாணவர்களிடம் குறைந்து காணப்படுவதாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் அலுவலங்களில் மற்றவர்களுடன் சகஜமாக பணியாற்றுவது பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php…
-
- 1 reply
- 443 views
-
-
மனைவியை ஏமாற்றும் கென்ய மனிதன் http://www.youtube.com/watch?v=bE4lTabc03E
-
- 0 replies
- 449 views
-
-
அலுவலக ஊழியர்கள் மிகவும் அதிகமாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறைவாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கிறார்கள். பிற்பகல் 2.55 மணி ஆகும்போதுதான் அதிகமான ஊழியர்கள் வேலைசெய்யாமல் சோர்வாக இருக்கிறார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அலுவலகங்களில் உற்பத்தித்திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்பகல் 2.55 மணிதானாம். அலுவலக ஊழியர்கள் மதிய உணவு உட்கொண்டு முடித்துவிட்டு இருக்கும் நேரம் அது. அவ்வேளையில், பெரும்பாலான ஊழியர்கள் பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றினால் ஈர்க்கப்படுகிறார்களாம். குறித்த நாளின் மாலைவேளையில் என்ன செய்வது என்பது குறித்து பிற்பகல் 2.55 மணிய…
-
- 2 replies
- 729 views
-
-
தன்னை விட 70 வயது குறைவான பெண்ணை மணந்த 92 வயது ஈராக் முதியவர், இத்திருமணம் மூலம் தான் 20 வயது இளைஞனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். ஈராக் , பாக்தாத் அருகில் உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்த முசாலி முகம்மது அல்-முஜ்மாயிக்கு தற்போது வயது 92. விவசாயியான இவருக்கு 16 குழந்தைகள். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னதாக அவரது மனைவி மறைந்தார். 92 வயது தாத்தா ‘இளைஞனான’ அதிசயம்: பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை மணந்தார் இந்நிலையில் அவரது பேரன்கள் இருவருக்கு த்ஹிருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களோடு சேர்ந்து, முசாலியும் 22 வயதுள்ள இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார். இவர்கள் மூவரது திருமணமும் ஒரே மேடையில் நடை பெற்றது தான் வேடிக்கை. இந்த வித்தியாசமான திருமணாம், சு…
-
- 25 replies
- 2.3k views
-
-
64 வயது நபரால் 14 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் 64 வயதான பெரியப்பா முறையான நபரொருவர் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, சிங்தோட்டை வெலிபிட்டி மோதரையைச் சேர்ந்த இந்த 14 வயது மாணவி தனது பெரியப்பாவினால் 2012ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=5736
-
- 1 reply
- 384 views
-
-
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த கில்லாடி கல்யாண மன்னன். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர் பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார். வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம் புரண்டது. இதனால் வெங்கட்ராவின் வாழ்க்கை ஸ்டைல் மாறியது. கழுத்து நிறைய நகைகள், கையில் தாராளமான பணத்துடன் டிப்டாப்பாக திடீர் பணக்காரராக வலம் வந்த வெங்கட்ராவை ஊரே திரும்பி பார்த்தது. வெங்க…
-
- 0 replies
- 692 views
-
-
FORD FEST You are invited to join and enjoy celebrate With Rob Ford, Doug Ford and the FORD family Join us for live Music, Dancing, Food, Drinks, Halal Food and so much. Its a great opportunity to meet out MEGA cities MAYOR and Counselor Doug Ford. DATE : July 05,2013. TIME: 6pm - 10 pm LOCATION: THOMPSON MEMORIAL PARK 1005 Brimley Road, Scarborough. ( BRIMLEY & LAWRENCE) !!!! EVERY THING IS FREE !!!! SEE YOU ALL THERE On behalf of Ford Family Balan Alagaratnam.
-
- 1 reply
- 588 views
-
-
டாக்டர், இந்த கட்டுவிரியன் என்னைக் கடிச்சுட்டான்... மதுரை: தன்னைக் கடித்த கட்டுவிரியன் பாம்பை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மருத்துவர்களை அதிர்ச்சியில் மயக்கமடைய வைத்துள்ளார் மதுரைப் பெண் ஒருவர். மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 45 வயது பாண்டியம்மாள்-க்கு கணவர் இல்லை. வயல் வேலைகள் செய்து வருமானம் ஈட்டி வருகிறார். வழக்கம் போல், நேற்றுக் காலை வயலுக்குச் சென்ற பாண்டியம்மாளை, சுமார் 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. பாம்பு கடித்த வலியை பொறுத்துக் கொண்டு,அந்தப் பாம்பை எடுத்து சுழற்றி தரையில் அடித்து, அரைகுறை உயிராக்கி உள்ளார் அவர். பின் உடனடியாக அந்தப் பாம்பையும் தூக்கிக் கொண்டு தனக்கு வைத்தியம் பார்ப்பதற்காக மதுரை அரசு பொ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அந்த பெண்களை கைவிட்ட சுவிடன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் இலங்கையர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், மருத்துவரான தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சுவிடனில் வசித்து வருவதுடன், கடந்த 04 வருடங்களாக சந்தேச நபர் ஸ்கைப் மூலம் பெண்களை இவ்வாறு ஏமாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் சுவிடனில் இருந்து ஸ்கைப் மூலம் இலங்கையில் உள்ள செல்வந்த குடும்பங்களை சேர்ந்த இளம் பெண்ளுடன் தொடர்பு கொண்டு, அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். சில மாதங்கள்…
-
- 0 replies
- 484 views
-
-
இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இவ் விமானம் நேற்றிரவு 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் பிரேக் பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர். இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர். இலங்கை விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது 2 டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது. காற்று இல்லாத டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகள் அங்கேயே இறங்கவைத்து அவர்களை பஸ…
-
- 8 replies
- 564 views
-
-
இப்படியே பேய் பேய் என்று சொல்லி அதுகளின்ர மன அழுத்தங்களுக்கு மருந்து தேடாமல் விட்டு.. லூசாக்கிடுங்க..!
-
- 16 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்து வேளை அவரைத் துரத்திய நாயை தனது துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி நாயை கடித்துக் குதறியுள்ளார். இதனால் நாய்க்கு முகத்தில் காயமடைந்துள்ளது. அத்தோடு குறித்த இளைஞருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அருகிலுள்ள வீட்டுக்காரரின் உதவியுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின…
-
- 9 replies
- 622 views
-
-
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவிக்கு இடையே நடந்த சண்டைய விலக்கி விட முயன்றார் வாலிபர் ஒருவர். ஆனால் அவரை கணவர் தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார். விளம்பாவூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். 28 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு வீடடில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலு என்பவருக்கும், அவரதுமனைவி வேம்புவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. வாய்ச்சண்டை அப்படியே அடிதடியாக மாறியது. இதைப் பார்த்த சக்திவேலு அவர்களை விலக்கப் போனார். நீ யார்டா சண்டைய விலக்க என்று கோபமடைந்த வேம்புவின் கணவர் பாலு, சக்திவேலுவைப் போட்டுசரமாரியாக அடித்து உதைத்தார். இதில் சக்திவேல் படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
-
- 17 replies
- 1.8k views
-