செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் காட்டெருமை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூர் மாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பஜ்பே விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை 9 மணியளவில் விமான ஓடுபாதையில் காட்டெருமை ஒன்று திடீரென புகுந்து தறிகெட்டு ஓடியது. அதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான சேவையை ரத்து செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள் விமான நிலையம் வந்தனர். பஜ்பே விமான நிலையம் அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைக்கப்பட்டு உள்ளதால், காட்டெருமை எங்கு பதுங்கியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் போராடி எரிபொருள் நிரப்பும் நி…
-
- 0 replies
- 532 views
-
-
புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குநர் பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம். பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலம், சேனல் 4 முதலான ஊடகங்கள் மூலம் உலகின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் - என்கிற பதாகையுடன் நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உணர்வே இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் தமிழ்ச் சனங்களைச் சாடுவதில் நமக்கு வழிகாட்டியாக இருக்…
-
- 0 replies
- 292 views
-
-
பைக்கில் வந்த வாலிபருடன் ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட போலீஸ்காரர்! பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜகவினர் சென்னை திருவல்லிக்கேணியில் 31.05.2012ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போக்குவரத்துப் பிரிவு போலீஸ்காரர் மடக்கி நிறுத்தினார். ஏன் என்னை மடக்கினீர்கள் என்று கேட்டு முடிப்பதற்குள், அந்த வாலிபர் முகத்தில் சரமாரியாக குத்துவிட்டுள்ளார் போக்குவரத்து போலீஸ்காரர். இதையடுத்து இருவருக்கும் கைகலப்பானது. பின்னர் வாலிபர் தப்பித்து ஓடவும், போலீஸ்காரர்…
-
- 2 replies
- 1.5k views
-
-
மனிதர்களின் கண்ணீரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல வகையான உப்புகள் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களிடம் ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீரின் வகைகளினால் இந்த உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஹொக்டன் தெரு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். துக்கத்தினால் ஏற்படும் கண்ணீர், தும்மும் போது ஏற்படும் கண்ணீர், வெங்காயம் வெட்டும்போது ஏற்படும் கண்ணீர், சிரிப்பின் போது ஏற்படும் கண்ணீர், கோபத்தின் போது ஏற்படும் கண்ணீர் என ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீர் மூலம் சுமார் 7 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உப்புகளும் மாறுபட்ட சுவை கொண்டவை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 324 views
-
-
உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன. ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது. இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச் செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமியின் புகைப்பட…
-
- 0 replies
- 549 views
-
-
தாயகத்தில் கறுப்பு உலகத்தில் இருலுக்குள் வாழும் பல்லாயிரக்கணக்கான கணவனை இழந்த பெண்கள் இதில் எத்தனை பெண்கள் வாழத்துடிக்கின்றனா் சமூகத்தின் கண்டறியாத சம்பிரதாயத்தால் சிக்குண்டு தவிக்கின்றனா் ஒரு தலைமுறைக்கு உட்பட்ட பெண்கள் வாழ்விழந்து நிக்கின்றனா் யாரும் கண்டுகொள்ள வில்லை ஏன் எதற்க்கு யாரால் இன் நிலை இவா்களுக்கும் எலும்பு தசை இரத்தம் … உடையவா்கள் அல்லவா இவா்களின் உறவினா்கலே இவா்களுடன் உரையாடுங்கள் சமூகத்தில் சக மனிசியாக முன் நிறுத்துங்கள் அவா்களும் வாழவேண்டும் மறு வாழ்வு அழித்துப்பாருங்கள் அவா்களின் பாலை வனமும் பூந்தோட்டமாக மாறும் சமூகத்தில் இருளுக்குள் வாழும் அகல் விளக்குகளை திரியிட்டு ஒளி ஏற்றுங்கள் நானும் அதன் வலி உணா்ந்தவன் பென். இன…
-
- 0 replies
- 442 views
-
-
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்திற்கு பயன்படும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்குகின்றன. எனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மாற்று எரிபொருளை தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை, தொழில்நுட்பத்தின் மூலம் கார்களை இயக்குவது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக செயற்கை இலை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரிய ஒளி மூலம் ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் மின் சக்தியை உருவாக்கி கார்களை இயக்க முடியும…
-
- 1 reply
- 864 views
-
-
வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக திருமணம் கருதப்படுகின்றது. சிலர் தங்களது திருமண வைபவத்தை விசித்திரமான முறையில் நடத்துகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஓர் ஜோடி தமது திருமண வைபவத்தை மயானமொன்றில் நடாத்தியுள்ளது. Diane Waller, Randy Kjarland ஆகியோரே இவ்வாறு கல்லறையில் தமது திருமண வைபவத்தை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தமது பெற்றோர் உறவினரை திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் இவ்வாறு மயானத்தில் திருமணத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த திருமண வைபவத்தில் உயிருடன் இருக்கும் 60 உறவின நண்பர்களும் கலந்து கொண்டனர். குறித்த இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தாய், தந்தை, உறவினர்…
-
- 0 replies
- 456 views
-
-
ராமேசுவரத்தில் இன்று அதிகாலை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு ராமேசுவரத்தில் அடிக்கடி கடல் உள் வாங்குவது, கடல் கொந்தளிப்பு என கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தில் திடீரென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள் வாங்கியது. அக்னி தீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை, சங்கு மால் கடற்கரை ஆகிய இடங்களில் கடல் உள்வாங்கியதால் 500 மீட்டர் தூரத்திற்கு பாறைகளாக காட்சியளித்தது. இன்று காலை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வந்து பார்த்தபோது நாட்டு படகுகள் தரை தட்டி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீன்பிடிக்க செல்லு…
-
- 0 replies
- 646 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 5/25/2012 11:29:37 AM யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது. மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய…
-
- 2 replies
- 745 views
-
-
இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க http://siliconshelf.wordpress.com/
-
- 0 replies
- 2k views
-
-
சூரிச்சில் 122 வருட கட்டடம் ஒன்று 60 மீற்றருக்கு மேற்குப்புறமாக நகர்ந்தப்படும் காட்சி. புகையிரதபாதை போடுவதற்காக இக்கட்டிடம் மேற்குப்பக்கமாக நகர்த்தப்பட்டதாம்.இன்னும் 100 ஆண்டுகள் இக்கட்டிடம் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. http://youtu.be/87iJf8pIyX4
-
- 4 replies
- 616 views
-
-
மே 24,2012,01:02 IST சிவகங்கை:சிவகங்கை சிவன் கோயிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் ஒரு ஜோடி மாற்றி தாலி கட்டியதால் குழப்பம்ஏற்பட்டது.வைகாசி முகூர்த்தம் என்பதால்நேற்று சிவகங்கையில் பல்வேறுஇடங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.சிவகங்கை சிவன்கோயிலில் நேற்று காலை 30க்கும்மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்திருந்தஉறவினர்கள் கூட்டம் அதிகமாகஇருந்தது. ஒவ்வொரு ஜோடிதிருமணமும் முறையாக கோயில்நிர்வாகத்தில் பதிவு செய்து, ரசீதுபெற்று நடத்தப்பட்டன. இந்நிலையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இரு ஜோடிகள்அங்கு வந்தனர். உறவினர்கள் மணமக்களை அருகருகே அமரவைத்திருந்தனர். அப்போது,கூட்டம் அதிகமாக இருந்ததால், மணமகன் ஒருவர் நிச்சயம் செய்யப்பட்ட மணமகளுக்கு பதில…
-
- 9 replies
- 1.1k views
-
-
கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது... வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு திருநங்கைகள் போராட்டம்! மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயத்தை மாற்றியதைக் கண்டித்து மதுரையில் திருநங்கைகள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். அதேபோல மாற்றுத் திறனாளிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் சகாயம். நேர்மையானவராக அறியப்பட்ட இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனம். திமுக, அதிமுக என்று பாகுபாடு காட்டாமல் ஸ்டிரிக்ட்டாக இருந்தவர் சகாயம். தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இவரைக் கண்டு அப்போதைய திமுக ஆட்சியாளர்களே கையைப் பிசைந்தபடி இருந்தனர். …
-
- 1 reply
- 547 views
-
-
உலக நாடுகளில் முதல் பத்து மகிழ்வான நாடுகள்: 1. Denmark > Life satisfaction score: 7.8 > Employment rate: 73% (6th highest) > Self-reported good health: 71% (17th highest) > Employees working long hours: 1.92% (4th lowest) > Disposable income: $23,213 (15th lowest) > Educational attainment: 76% (18th lowest) > Life expectancy: 79.3 (11th lowest) 2. Norway > Life satisfaction score: 7.6 > Employment rate: 75% (4th highest) > Self-reported good health: 80% (8th highest) > Employees working long hours: 2.66% (5th lowest) > Disposable income: $30,465 (3rd highest) > Educational attainment: 81% (t…
-
- 1 reply
- 652 views
-
-
ஈழமண்ணில் இந்தியப்படைகள் நிகழ்த்திய கொலை வெறியாட்டம் சிங்களம் முள்ளிவாக்காலில் நிகழ்த்தியளவிற்கு இல்லை என்றாலும் தமிழ் மக்களது நெஞ்சங்களில் நெருஞ்சி முள்ளாக என்றைக்கும் வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். 1987ம் ஆண்டு அமைதிப்படை என்ற நாமகரணத்தோடு இராசீவ் காந்தியின் பிராந்திய நலன் என்ற சாக்குமூட்டையினை முதுகில் சுமந்து ஈழமண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய இராணுவத்தினர் தமிழ் மக்களிற்கு எதிராக அரங்கேற்றிய கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. எமது துன்பங்களில் இருந்து எம்மை விடுவிக்க உண்மையில் அமைதிப்படைதான் வந்துள்ளதாக நினைத்து நாம் ஆனந்தக் கூத்தாடி ஆராத்தி எடுத்து மலர்மாலை அணிவித்து நெற்றித்திலகமிட்டு வரவேற்றவர்கள் பின்னாலில் எமது இனத்தை வேட்டையாடி மாறாவடுவை எமது நெஞ்சங்களில் பத…
-
- 1 reply
- 579 views
-
-
காற்றில் இயங்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட காரை சமீபத்தில் டாடா வெற்றிகரமாக சோதனை செய்தது. பைசா செலவில்லாமல் செல்லும் இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு கார் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காற்றை சக்தியாக கொண்டு இயங்கும் புதிய காரை ஐரோப்பாவை சேர்ந்த எம்டிஐ நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. சமீபத்தில் இந்த காரை வெற்றிகரமாக சோதனை செய்ததாக டாடா மோட்டார…
-
- 6 replies
- 640 views
-
-
55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி ஆண் நாயொன்றுக்கும் பெண் நாயொன்றுக்கும் 55,000 அமெக்க டொலர் செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரூபின் என்ற பெண் நாய்க்கும் கார்ட்டர் என்ற ஆண் நாய்க்கும் பாம் டிஸேர்ட்டிலுள்ள வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். மேற்படி திருமணத்தை மத குருவான ஹரி பார்பர் நடத்தி வைத்தார். ஆண் நாயின் உரிமையாளரான ஆன் இத் திருமணம் குறித்து விபரிக்கையில், "நான் எனது மகனை (கார்ட்டரை) இழக்கவில்லை. மாறாக …
-
- 16 replies
- 1.5k views
-
-
உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம் 634 மீட்டர்கள், அதாவது 2080 அடி உயர கோபுரமாகும் இது. சீனாவில் உள்ள கேன்டன் கோபுரம் 600மீ, அதாவது 1968.5 அடி உயரம் கொண்டது. அதனையும் தாணி விட்டது டோக்கியோ ஸ்கை டிரீ. ஆனால் துபாஇயில் உள்ள புர்ஜ் கலிப்பா என்ற விடுதி 828 மீட்டரக்ள் உயரம் கொண்டது, அதாவது 2,717 அடி உயரம் கொண்டது. ஒரு கட்டிடம் என்ற அளவில் இது மிக உயரமானது. ஆனால் டோக்கியோ ஸ்கை டிரீ ஒரு கோ…
-
- 0 replies
- 376 views
-
-
பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இந்து கோயிலை மர்ம நபர்கள் நேற்று சூறையாடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ளது பெஷாவர். இந்நகரில் 160 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோரக்நாத் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்தியா -பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மூடப்பட்டிருந்தது. கோயிலை திறக்க அனுமதி கோரி இந்து அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கோயிலை திறக்க கடந்த ஆண்டு பெஷாவர் ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்பின், கோரக்நாத் கோயில் திறக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வந்தன. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தினமும் கோயிலில் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், மர்ம நபர்கள் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென கோயி…
-
- 3 replies
- 657 views
-
-
விலாசத்தைக் கூறி எஜமானியை வந்தடைந்த பறவை தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற வேளை வழி தவறிய பறவையொன்று, தனது எஜமானியின் வீட்டு விலாசத்தைப் பொலிஸாரிடம் தெரிவித்து மீளவும் எஜமானியுடன் இணைந்து கொண்ட விசித்திர சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. டோக்கியோ நகருக்கு மேற்கேயுள்ள சகமிஹரா நகரிலுள்ள தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற மேற்படி பறவை வழி தவறி ஹோட்டலொன்றை சென்றடைந்துள்ளது. இதன்போது அப்பறவை, ஹோட்டலுக்கு வந்த விருந்தினரின் தோளில் அமர்ந்து கொண்டது. இந்நிலையில் அவர் அப்பறவையை பொலிஸாடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து மூன்று நாட்களாக மௌனமாக இருந்த அப்பறவை, நான்காம் நாள் தனது பெயரையும் எஜமானியின் வீட்டு விலாசத்தையும் கூறியுள்ளது. 'பிகோசான்' எ…
-
- 4 replies
- 894 views
-
-
நிலத்திற்குக் கீழ் அமைந்துள்ள அதிசய நகரம் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு நகரம் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது. Coober Pedy என்று அழைக்கப்படும் இந் நகரத்தில்வீடு, பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலை போன்றன காணப்படுகின்றன. மிக மோசமான வெப்பத்தின் காரணத்தால் இந் நகரம் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந் நகரில் அமைந்துள்ள வீடுகள் மூன்று படுக்கை அறைகள், குசினி, குளியலறை, பொழுது போக்கிடம் ஆகியவற்றை கொண்டனவாக அமைந்துள்ளன. எந்நேரமும் இந் நகரம் குளிர்மையாக காணப்படுவதால் எயர் கண்டிஷன் வசதிகள் தேவை இல்லை. இந்நகரத்தை பார்வையிட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வந்த வண்ணம் உள்ளார்கள். …
-
- 10 replies
- 1.4k views
-
-
இருப்பு கொள்வனவில் ஈடுபட்ட இரு நபர்களால் மாற்றுத் திறன் கொண்ட இளம் யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். காரைநகரில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. காரைநாகர் வியாவில் பகுதியில் தாயும் மாற்றுத் திறன் கொண்ட மகளும் தனித்து வசித்து வந்த வீட்டிற்குச் சென்ற மேற்படி இரும்பு வியாபாரிகள் அவர்கள் தனித்து இருப்பதினை அறிந்து கொண்டு மாற்றுத் திறன்கொண்ட மகள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் தாம் வந்த ஆட்டோவில் தப்பித்துச் செல்ல முற்பட்ட வேளை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி மேற்படி இரும்பு வியாபாரிகளையும் மடக்கிப் பித்து நய்யப்புடைத்துள்ளனர். மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடைய …
-
- 0 replies
- 533 views
-
-
[media=]http://www.youtube.com/watch?v=coYoIHj91HA&feature=related
-
- 4 replies
- 878 views
-
-
நடுவப் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள். 14-05-2012. எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களுக்கு, எமது விடுதலைப் போராட்டம் இன்று ஓர் இக்கட்டான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. இன்றுள்ள நிலைமையை மாற்றித் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வதற்குப் பல்வேறு திட்டங்களை எமது மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நாம் செயற்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வகையில் எமது விடுதலை அமைப்பின் முடிவுகளையும் செயற்பாடுகளையும் எமது உறுப்பினர்களுக்கும் எமது மக்களுக்கும் அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டியது எமது முக்கியமான கடமையாகும். எமது விடுதலை அமைப்பின் ஓர் அங்கமான அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடாகத் தற்போதுள்ள சூழலில் இதனைச் …
-
- 3 replies
- 882 views
- 1 follower
-