செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7127 topics in this forum
-
தமிழ்மக்களின் முதன்மை தலங்களில் ஒன்றாக விளங்கும் கதிர்காம முருகன்ஆலய வளாகத்தில் உல்லாச விடுதி அமைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. கதிர்காம முருகன் ஆலய வளாகத்தில் நிலத்தினை கையகப்படுத்தி அங்கு உல்லாச விடுதிஅமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் கோரிக்கையினை இரத்து செய்யுமாறு நீமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கதிர்காம முருகன் ஆலயத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் நிலப்பரப்பினை கையகப்படுத்தி அங்கு விளையாட்டு திடல் உல்லாச விடுதிகளை அமைக்கும் முயற்சியினை சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது இதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பாக வி…
-
- 0 replies
- 333 views
-
-
முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை – தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு:-சீவீகே சிவஞானம் காணிகளை மட்டும் அல்ல சுடலைகளை கூட கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர் என அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அலை நிகழ்ச்சியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நடராஜா குருபரனால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு காரசாரமான பதிலை அளித்த அவர் முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் குறித்து தெரிவித்த போது முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என சீவீகே சிவஞானம் தெரிவித்துள்ளார். மிகுதியை ஒலிவடிவில் கேளுங்கள…
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் எலும்புகளை உக்க வைப்பதற்கே இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது. யுத்தம் முடிவுற்று மூன்றாண்டுகள் முடிவுற்ற நிலையில் மேற்படி பகுதியில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில், அங்கிருக்கும் போர் எச்சங்களையும் குறிப்பாக போர்குற்றம் தொடர்பான எச்சங்களையும் அழிக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. http://eeladhesam.com/
-
- 0 replies
- 317 views
-
-
8 வயது மகளை பப்பில் மறந்துவிட்டுச் சென்ற யு.கே.பிரதமர் லண்டன்: குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பப்பில் மதிய உணவு சாப்பிட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது 8 வயது மகள் நான்சியை அங்கேயே வி்ட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா, மகள் நான்சி(8) மற்றும் 22 மாதக் குழந்தையான பிலாரன்ஸ் மற்றும் நண்பர்களுடன் கேட்ஸ்டென்னில் உள்ள ப்ளவ் இன்னில் மதிய உணவு உண்டார். அதன் பிறகு தனது பாதுகாவலர்களுடன் அவர் ஒரு காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். குழந்தைகள் சமந்தாவுடன் வருவார்கள் என்று நினைத்து அவர் சென்றுவிட்டார். நான்சி தனது அப்பாவுடன் காரில் சென்றுவிட்டார் என்று நினைத்து சமந்தா வேறொரு காரில் வீட்டு…
-
- 5 replies
- 709 views
-
-
இலங்கை-இந்திய இராஜதந்திர உறவுகளைச் சீர்குலைப்பதற்கு வைகோ மற்றும் சீமான் குழுவினர் சதி செய்கின்றனர். இதன் வெளிப்பாடே தமிழகத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும் என்று சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இத்தகைய போராட்டங்களைப் பெரிதாக்கி இந்தியாவுடன் பகையை ஏற்படுத்திக் கொள்வது தேவையற்ற விடயமாகும். ஏனெனில் உள்நாட்டிலும் வெளிநாட்டுத் தூதரகங்கள் முன்பாகப் படுத்துப் புரண்டெல்லாம் போராட்டங்கள் செய்கின்றனர். இதற்காக அமெரிக்கா, இலங்கையிடம் கோபித்துக் கொண்டால் அதில் அர்த்தம் இல்லை. எனவே அர்த்தமற்ற விடயங்களுக்கு விளம்பரங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று …
-
- 0 replies
- 501 views
-
-
75 வயது மாது.. தனது கட்டுடலை.. இன்றும் பேணி வருகிறார்... அவர் சொல்கிறார்.. வயது.. என்று ஒன்றுமில்லை.. அது வெறும் இலக்கம்...! உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வயது.. ஒரு தடையே இல்லை. எங்க எங்க பாட்டிங்க.. சோத்து ஆன்ரிங்க.. 45 - 50 வயதிலையே.. ஓய்வுக்கு போயிடுறாங்க..! காண்க.. இந்தக் காணொளி.. http://www.bbc.co.uk...gazine-18346128
-
- 2 replies
- 610 views
-
-
கனடாவில் தமிழ் மொழிக்கு சிறப்புக் கௌரவம் வழங்கும் வைபவம் ஒன்று நாளை மாலை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்” கில் இடம்பெறவுள்ளது. மேற்படி வைபவத்தில் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு தொடக்கம் தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை மாகாணப் பாராளுமன்றத்தில் டொன்வெலி மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் குடோ முன்மொழிய முதல்வர் மற்றும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வழிமொழிவார்கள். மேற்படி வைபவம் இடம்பெறுவது, கனடிய தமிழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையை தரும் என்றும் எதிர் காலத்தில் கனடாவின் மத்திய பாராளுமன்றமும் தை மாதத்தை தமிழர்களின் மாதமாக கனடா முழுவதிலும் அங்கீகரிக்கும் வகையில் கடிதமொ…
-
- 0 replies
- 274 views
-
-
விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து, அம்மாநில தலைநகர் கவுகாத்தி நோக்கி, நேற்று காலை, ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றபோது, நடுவானில் விமானத்தின் முன்சக்கரம் கீழே விழுந்தது. இருந்தாலும், மிகுந்த திறமையாகச் செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் விமானிகள். இதனால், 48 பயணிகள் உட்பட 52 பேர் உயிர் தப்பினர். அசாம் மாநிலம் சில்சார் விமான நிலையத்திலிருந்து, தலைநகர் கவுகாத்திக்கு நேற்று காலை, ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் 48 பேர், விமானியான கேப்டன் ஊர்மிளா, துணை விமானி யாஷூ மற்றும் பணியாளர்கள் என, மொத்தம் 52 பேர் இருந்தனர். சில்சார் விமான நிலையத்தில்…
-
- 6 replies
- 767 views
-
-
சீனாவைச் சேர்ந்த சிறுமியொருவரின் உடலில் பெரும்பகுதி அடர்த்தியான உரோமங்களால் சூழப்பட்டுள்ளது. லியூ மிங்குயுங் எனும் 6 வயதான சிறுமியே இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாள். அவள் பிறக்கும்போதே அவளின் உடலில் 60 சதவீமான பகுதியில் இவ்வாறான உரோமங்கள் காணப்பட்டன. இச்சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போது சிறுமியின் தாய் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இச்சிறுமியை பாலர் பாடசாலையில் சேர்த்த அவளது தந்தையும் திரும்பிவரவில்லை. பெற்றோர்களால் கைவிடப்பட்ட லியூ மிங்குயுங் குறித்து பத்திரிகையில் விளம்பரமொன்றை பிரசுரித்த பாலர் பாடசாலை நிர்வாகம், சிறுமியின் உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்புகொள்ளுமாறு கோரியிருந்தது. ஆறுமாதம் கழித்து, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரரின் தாத்தா ஒருவர…
-
- 0 replies
- 360 views
-
-
லிவிவ்: யூரோ கோப்பையின் பரபரப்பான போட்டியில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் யூரோ கோப்பை தொடரில் ஜெர்மனி வெற்றி துவக்கத்தை பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணியை டென்மார்க் வீழ்த்தியது. ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலையில் உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 'குரூப் பி' பிரிவை சேர்ந்த போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் மோதி கொண்டன. பரபரப்பான ஆட்டத்தில், துவக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட போதும், அவரால் ஒரு கோல் கூட…
-
- 0 replies
- 523 views
-
-
சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவுள்ளது. லெனினின் உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல் கடந்த 88 வருடகாலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் இந்த உடலைப் பார்வையிட்டு வருகின்றனர். சோவியத் யூனியன் சிதறுண்டு போன பின்னரும் கூட லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லெனின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1924ம் ஆண்டு 53வது வயதில் லெனின் மரணமடைந்தார். அவரது உடலை இத்தனை காலமாக அடக்கம் செய்யாமல் வைத்திரு…
-
- 0 replies
- 484 views
-
-
பிரான்ஸ் நாட்டில், 114 வயதான மூதாட்டி மரணமடைந்தார். பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் மாகாணத்தின் பான்ட்சாட்டியு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் மேரி தெரஸ் பார்டெட். 114 வயதான இவர் கடந்த 2ம்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். உலகின் ஆறாவது மிக வயதான பெண்ணான இவர் நேற்று காலமானார். உலகில், 110 வயதுக்கு அதிகமாக வாழ்ந்தவர்கள் பற்றிய, 70 பேரின் தகவல்கள் மட்டுமே, ஜி.ஆர்.ஜி., எனப்படும் முதியோர் ஆய்வு மைய பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் மேரி தெரசின் பெயரும் இடம் பெற்றுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 7 replies
- 627 views
-
-
பிருத்தாணியா வாழ் தமிழர்களே! உங்கள் மனச்சாட்சியுடன் நாங்கள் யார்? எங்கள் அடையாளம் என்ன? என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்போம் அன்று அடையாள அட்டைகளை காட்டி காட்டியே எங்கள் அடையாளங்களை தொலைத்தவர்களாய் அகதிகளாகி இலங்கைத்தீவுக்குள் சுதந்திரமாக வாழ வழியற்றவர்களாகி சொந்த வீடு வாசல் சொந்த பந்தம் ஏன் எத்தனையோ உயிர்களைக்கூட பலிகொடுத்து அந்த மாங்கனித்தீவை விட்டு வெளியேறி வந்தோம் ஆனாலும் கூட பரந்த உலகில் சுதந்திரமாக இறக்கைகளை விரித்துப்பறப்பதற்க்குக்கூட இயலாது இறக்கைகள் வெட்டப்பட பறவைகளாய் கள்ளத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் கடல் அலைகள் அழைத்துச்சொல்லும் திசைகள் நோக்கி உயிரையே பணயமாக வைத்து இன்று எங்கெல்லாமோ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாங்கள் அகதிகளாய் வந்தால் கூட யாருக்க…
-
- 0 replies
- 532 views
-
-
-யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 / 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு- முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. நிகழ்வில் அனைத்து நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து, ஒவ்வொரு மக்களவையின் தலைவர் அல்லது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர் மாநாட்டில் கலந்துகொண்ட தமது நாடுவாரியான மக்களவை உறுப்பினர்களை அறிமுகம்செய்து வைத்தனர். தொடர்ந்து, அந்தத்த நாடுகள் ரீதியாக தாம் மேற்க…
-
- 0 replies
- 429 views
-
-
சிறிது காலம் ஆகிவிட்டது ஆண்டுகள் மூன்று கடந்தது அன்று நானும் அழுதேன். என் இனமும் அழுததே நம் இனத்தில் துலைத்த உயிர்கள் பல ஆயிரம் இது யாருக்கு தான் தெரியப்போகுது´ .உங்கலுக்கு புரியும்? யாருக்கு தெரிய வேண்டுமோ. அவர்களுக்கும் தெரியும். உலகமே வேடிக்கை பார்த்தது. யாருக்கு ஏன் என்றும் கேக்கவில்லை குற்றவாளிகளின் பெயரும் தெரியும் . பெயருக்கு செந்த காரர்களும் இவர்லோ? அமைதி காக்கும் உலகமே அமைதி ஆனதும் ஏன்? ஆயிரக்கணக்கில் வதையுண்டு மடித்தது முள்ளிவய்கலில். இவர்கள் இனவேறி யுத்தம் செய்யவில்லை மறக வாழ்வதற்காகவே போராடினார்கள். சித்தனைக்கு பல கேள்விகள். சித்தனை சிர் குளையுமே. உயிரின் விலை இடத்தை பொறுத்ததே? இனத்தை பொறுத்ததே? வாழ்கையின் பெறுமதியை யார் தான் த…
-
- 0 replies
- 432 views
-
-
திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கே.கே.நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நாளை காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து காலை 7.15 மணிக்கு பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். மாலை 6 மணிக்கு தென்சென்னை திமுக சார்பில் கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழ கன் எம்எ…
-
- 18 replies
- 1.6k views
-
-
படித்தவையில் பிடித்தவை அப்பப்பா, நான் அப்பன் அல்லடா! காதலியை இன்னொருவர் தள்ளி கொண்டு போய் விட்ட சோகத்தில் தண்ணி மேல் தண்ணி போட்டு கொண்டிருந்த அந்த வேல்ஸ்காரருக்கு ஆறுதல் சொல்ல வந்தார் அந்தப் புதிய பெண். பப்பில் (Pub) முதல் சந்திப்பு. ஒரு மாதம் ஓடி விட்டது. ஒருவாறு சோகம் குறைந்து புது மாப்பிளை போல வலம் வந்த நம்மாளுக்கு மீண்டும் சோதனை. புதிய பெண்ணும், வேறு ஒருவர் கிடைத்து, விலகி விட, சரி போகுது போ, ஒரு மாதம் சும்மா ஜாலியா போச்சுது, அது போதும் என நம்ம வேல்ஸ்காரரும் பிழைப்பினைப் பார்க்கப் போய் விட்டார். சரி. சனியன் அத்துடன் விட்டால் பரவாயில்லை. திடீரென ஒருநாள், அந்த பெண் அவரிடம் வந்து, 'அத்தான், உங்கள் பிள்ளை என் வயிற்றில்' என்று சொன்னால் எப்படி இருந்திரு…
-
- 10 replies
- 1.7k views
-
-
மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் காட்டெருமை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூர் மாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பஜ்பே விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை 9 மணியளவில் விமான ஓடுபாதையில் காட்டெருமை ஒன்று திடீரென புகுந்து தறிகெட்டு ஓடியது. அதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான சேவையை ரத்து செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள் விமான நிலையம் வந்தனர். பஜ்பே விமான நிலையம் அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைக்கப்பட்டு உள்ளதால், காட்டெருமை எங்கு பதுங்கியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் போராடி எரிபொருள் நிரப்பும் நி…
-
- 0 replies
- 539 views
-
-
புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குநர் பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம். பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலம், சேனல் 4 முதலான ஊடகங்கள் மூலம் உலகின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் - என்கிற பதாகையுடன் நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உணர்வே இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் தமிழ்ச் சனங்களைச் சாடுவதில் நமக்கு வழிகாட்டியாக இருக்…
-
- 0 replies
- 294 views
-
-
பைக்கில் வந்த வாலிபருடன் ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட போலீஸ்காரர்! பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜகவினர் சென்னை திருவல்லிக்கேணியில் 31.05.2012ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போக்குவரத்துப் பிரிவு போலீஸ்காரர் மடக்கி நிறுத்தினார். ஏன் என்னை மடக்கினீர்கள் என்று கேட்டு முடிப்பதற்குள், அந்த வாலிபர் முகத்தில் சரமாரியாக குத்துவிட்டுள்ளார் போக்குவரத்து போலீஸ்காரர். இதையடுத்து இருவருக்கும் கைகலப்பானது. பின்னர் வாலிபர் தப்பித்து ஓடவும், போலீஸ்காரர்…
-
- 2 replies
- 1.5k views
-
-
மனிதர்களின் கண்ணீரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல வகையான உப்புகள் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களிடம் ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீரின் வகைகளினால் இந்த உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஹொக்டன் தெரு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். துக்கத்தினால் ஏற்படும் கண்ணீர், தும்மும் போது ஏற்படும் கண்ணீர், வெங்காயம் வெட்டும்போது ஏற்படும் கண்ணீர், சிரிப்பின் போது ஏற்படும் கண்ணீர், கோபத்தின் போது ஏற்படும் கண்ணீர் என ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீர் மூலம் சுமார் 7 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உப்புகளும் மாறுபட்ட சுவை கொண்டவை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 327 views
-
-
உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன. ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது. இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச் செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமியின் புகைப்பட…
-
- 0 replies
- 552 views
-
-
தாயகத்தில் கறுப்பு உலகத்தில் இருலுக்குள் வாழும் பல்லாயிரக்கணக்கான கணவனை இழந்த பெண்கள் இதில் எத்தனை பெண்கள் வாழத்துடிக்கின்றனா் சமூகத்தின் கண்டறியாத சம்பிரதாயத்தால் சிக்குண்டு தவிக்கின்றனா் ஒரு தலைமுறைக்கு உட்பட்ட பெண்கள் வாழ்விழந்து நிக்கின்றனா் யாரும் கண்டுகொள்ள வில்லை ஏன் எதற்க்கு யாரால் இன் நிலை இவா்களுக்கும் எலும்பு தசை இரத்தம் … உடையவா்கள் அல்லவா இவா்களின் உறவினா்கலே இவா்களுடன் உரையாடுங்கள் சமூகத்தில் சக மனிசியாக முன் நிறுத்துங்கள் அவா்களும் வாழவேண்டும் மறு வாழ்வு அழித்துப்பாருங்கள் அவா்களின் பாலை வனமும் பூந்தோட்டமாக மாறும் சமூகத்தில் இருளுக்குள் வாழும் அகல் விளக்குகளை திரியிட்டு ஒளி ஏற்றுங்கள் நானும் அதன் வலி உணா்ந்தவன் பென். இன…
-
- 0 replies
- 450 views
-
-
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்திற்கு பயன்படும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்குகின்றன. எனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மாற்று எரிபொருளை தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை, தொழில்நுட்பத்தின் மூலம் கார்களை இயக்குவது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக செயற்கை இலை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரிய ஒளி மூலம் ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் மின் சக்தியை உருவாக்கி கார்களை இயக்க முடியும…
-
- 1 reply
- 868 views
-
-
வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக திருமணம் கருதப்படுகின்றது. சிலர் தங்களது திருமண வைபவத்தை விசித்திரமான முறையில் நடத்துகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஓர் ஜோடி தமது திருமண வைபவத்தை மயானமொன்றில் நடாத்தியுள்ளது. Diane Waller, Randy Kjarland ஆகியோரே இவ்வாறு கல்லறையில் தமது திருமண வைபவத்தை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தமது பெற்றோர் உறவினரை திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் இவ்வாறு மயானத்தில் திருமணத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த திருமண வைபவத்தில் உயிருடன் இருக்கும் 60 உறவின நண்பர்களும் கலந்து கொண்டனர். குறித்த இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தாய், தந்தை, உறவினர்…
-
- 0 replies
- 460 views
-