செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7126 topics in this forum
-
ஜவஹர்லால் நேரு விருதுக்காக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா தேர்வு ஜவஹர்லால் நேரு விருதுக்காக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டிற்கான இந்த விருதுக்கு தகுதியானவரை தேர்வு செய்ய துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தலைமையிலான குழு தில்லியில் கூடியது. இக்குழுவின் முடிவில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில் ரூ.1 கோடி ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அடங்கும். www.newsonnews.com
-
- 0 replies
- 658 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நவ நாகரிக ஆடை கண்காட்சியில் இந்துக்களின் கடவுளர்கள் அவமதிக்கப்பட்டனர். திருமகளின் உருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடைகளை லிசா வுளூ என்கிற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்து இருக்கின்றார். இவ்வாடைகளை அணிந்து கொண்டு அழகி ஒருவர் நடை பயின்றார். காளியின் திருவுருவம் மலம் கழிக்கும் இருக்கையின் மேல் தட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது. ஹெய்டி கிலும் என்கிற அழகியின் காளியின் உருவத்தில் தோன்றி இருந்தார். இந்த ஆடைக் கண்காட்சி உலகு எங்கும் வாழும் இந்துக்களை மிகவும் புண்படுத்தி உள்ளது. http://athirchi.com/?p=4359
-
- 0 replies
- 585 views
-
-
May 7, 2011 / பகுதி: உலக வலம் / மே 21ம் திகதி உலகம் அழிந்து விடும்? உலகம் இந்த மே மாதம் 21ம் திகதி அழியப் போவதாக கனடாவின் 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.மைக்கேல் கார்சியா என்பவர் பேமிலி ரேடியோ நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் உலகம் அழியப் போவதாக ஹொரண்டோ, கால்கரி, கிங்ஸ்டன், விண்ட்சர், சாஸ்க்டூன், ஒட்டாவா, கியூபெக், மொன்றியல் உள்பட 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் அழியப் போவதாக நம்பும் தமது ரேடியோ நேயர்கள் ஆயிரக்கணக்கில் அமெரிக்கா, ஈராக், துருக்கி, லெபரைன் ஆகிய நாடுகளில் இருப்பதாகவும் கார்சியா தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் காரவான் வண்டி மூலம் கால்கரி, வான்கூவரில் பிரசாரம் செய்யப்படும் என்றும் நிறுவனத்தின் இண…
-
- 3 replies
- 1k views
-
-
தமிழ் இணைய ஊடகங்களின் ஆர்வக் கோளாறும்.. மொழி பெயர்ப்பும்.. பாவம்.. ஒபாமா வையும் விட்டு வைக்கவில்லை. ஒபாமா ஒசாமா வை கொன்றதும் கொன்றார் அவரைப் பற்றி பல கதைகள்..! இப்போ... தட்ஸ்தமிழ் என்ற தமிழக தமிழர்கள் நடத்தும் ஊடகம்.. சொந்த நாட்டு மக்களை அதன் தலைவரே குண்டு வைத்துக் கொல்ல திட்டமிட்டுள்ளார் என்று செய்திக்கு தலைப்பிடும் படி .. ஒசாமா.. வை கொன்ற ஒபாமா விற்கு கதியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோக.. இங்கிலாந்தில் பள்ளிகளிலோ... ஒசாமா கொலையோடு.. நிறவாத இனவாதம்.. தலைவிரித்தாடுகிறது.. கிளிங்டன்.. புஷ் கொல்லாத ஒசாமாவை ஒபாமா கொன்று விட்டார். எனவே ஒருவரை கொல்ல வேண்டும் எனில்.. கறுப்பரை புக் பண்ணு எங்கிறார்கள்.. பள்ளி மாணவர்கள் பகிடியாக. ஆனால் அதற்குள் புதைந்திருக்கும்.. நிறவா…
-
- 2 replies
- 1k views
-
-
மும்பை, மே 6: அமெரிக்காவையே கதிகலங்க வைத்த பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்பதை அறிந்து கொள்ள பயங்கரவாதி அஜ்மல் கசாப் அதீத ஆர்வம் காட்டியதாகத் தெரியவந்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்டுள்ள அஜ்மல் கசாப் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுல்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு கமாண்டோ படை சுட்டுக்கொன்று தூக்கிச் சென்றது குறித்து கசாபிடம் சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலை கேட்டதுமே கசாப் ஆர்வம் அடைந்தார். ஒசாமாவை கொன்றுவிட்டார்களா? என்ன சொல்கிறீர்கள்? அவரை யார் கொன்றது? எங்கு கொன்றார்கள்? எப்படி க…
-
- 0 replies
- 548 views
-
-
உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்துவந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு சுமார் 30 நிமிடங்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, உடல் நலம் கருதி 2 நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு தி…
-
- 0 replies
- 584 views
-
-
பேனையைத் திருடிய ஜனாதிபதி செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது. இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொ…
-
- 0 replies
- 770 views
-
-
ஸ்ரீ சத்ய சாயி பாபா சற்று முன்னர் காலமாகிவிட்டார்! ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 10:32 ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகிவிட்டார். tamilcnn
-
- 42 replies
- 5.5k views
- 1 follower
-
-
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை. அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம். இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்…
-
- 2 replies
- 798 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் இறந்த உடல் என்று கூறி இணையத்தளங்களில் வெளியான படம் போலியானது என்று தெரிய வந்துள்ளது. பின்லேடன் போலவே தோற்றம் கொண்ட கொல்லப்பட்ட ஒரு நபரின் படத்தை போட்டோஷாப் மூலம் திரித்து, லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட படம் போல சித்தரித்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியதுமே அவரது கொல்லப்பட்ட உடலைக் காண அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் எங்குமே புகைப்படம் வெளியாகவில்லை. அமெரிக்காவும் புகைப்படத்தை வெளியிடவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் டிவிக்களில்தான் முதல் முதலாக பின்லேடனின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் பின்லேடன…
-
- 0 replies
- 570 views
-
-
பிரித்தானிய இளவரசர் வில்லியம்சின் திருமணத்தைக் காண வேற்றுக்கிரகவாசிகள் வந்து இருக்கின்றனர் என்று நிபுணர்களால் சந்தேகிக்கப்படுகின்றது. அடையாளம் கண்டு பிடிக்க முடியாத பறக்கும் பொருட்கள் பல கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஆங்கில கால்வாய்க்கு மேலாக பறந்து திரிந்ததை பிரித்தானிய விமானிகள் அவதானித்து உள்ளனர். குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்ரர் மடத்துக்கு மேலான வான் பரப்பில் மர்மப் பொருள் ஒன்று பறந்து திரிந்ததற்கான தடயம் கிடைத்து உள்ளது. பூமியில் இடம்பெறுகின்ற மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை அவதானிக்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் புறப்பட்டு வருகின்றமை பொதுவான விடயம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். http://www.youtube.com/watch?v=mItx_d7oRVA&…
-
- 5 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 62 வயதான மிக்கி நில்சன் என்ற முதியவரொருவர் மதுபானத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி ஓடக்கூடிய கார் ஒன்றினை உருவாக்கியுள்ளார். இக்காரானது பழைய தேவையற்ற கழிவுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மாத உழைப்பின் பின்னர் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை மாளிகையின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஒபாமா இத்தகைய முயற்சிகள் நாட்டினரை பெருமிதம் கொள்ளச் செய்வதாகவும், இதனால் எதிர்காலங்களில் எரிபொருட்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31236
-
- 2 replies
- 559 views
-
-
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ராணா'படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சில காட்சிகளில் நடித்தார்.தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.எனினும் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும், மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவி…
-
- 1 reply
- 570 views
-
-
பலாங்கொடை மாராத்தென்ன தோட்டப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி ஒன்றிறை வன ஜீவராசிகள் பிரிவினரும் பொலிஸாரும்; இணைந்து நேற்று பிற்பகல் வேளையில் பிடித்துள்ளனர். மாராத்தென்ன தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கிடையில் ஒரு வித சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு ஆராய்ந்து பார்த்த போது மஞ்சள் நிறத்துடன் கூடிய விசாலமான புலி ஒன்றிருப்பதைக் கண்டுள்ளனர். இந்தப்புலிக் குறித்து தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரின் ஊடாக மாராத்தென்ன பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் பிரிவினக்கும் அறிவித்தனர். அந்தப்பகுதிக்கு வருகைத்தந்த பொலிஸாரும் வன ஜீவராசிகள் பிரிவினரும் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு புலியைப் பிடித்துள்ளனர். http://www.virakesa…
-
- 0 replies
- 647 views
-
-
புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (18:23 IST) பாபா மே 14ல் மீண்டும் வருவார்? மே 14&ம் தேதி மீண்டும் வருவேன் என சத்ய சாய்பாபா, கூறியுள்ளார். எனவே அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டாம் என்று கூறி பெண் பக்தர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் புட்டபர்த்தியில் பரபரப்பு ஏற்பட்டது. புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல், பிரசாந்தி நிலைய அரங்கத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, பாபாவுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் தாய் ஈஸ்வரம்மா சமாதியில், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சூர்ய மாதா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த லஷ்மி சுவாமி என்ற 2 பெண்கள் நேற்று திடீரென உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி அமர்ந்தனர். …
-
- 3 replies
- 490 views
-
-
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உதைத்துக் கீழே வீழ்த்தி விட்டுத் தாலிக்கொடியை அபகரித்துச்சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் புதுமடம் வீதியில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: புது மடம் வீதியில் உள்ள கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்தில் நடைபெற்ற சமுர்த்தி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவரைக் காலால் உதைத்துக் கீழே வீழ்த்திவிட்டு அவர் அணிந் திருந்த 7 1/2 பவுண் தாலிக் கொடியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். தாலிக்கொடியைப் பறி கொடுத்த பெண்மணி கண்ணீரும் கம்பல…
-
- 0 replies
- 879 views
-
-
இந்தோனேஷியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் 'டஸ்னர்' எனப்படும் அழிவின் விளிம்பிலுள்ள மொழியொன்றினை பதிவு செய்து காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். குறித்த மொழியானது தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது. இவர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமாவர். கடந்த வருடமே 'டஸ்னர்' மொழி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மீன் பிடிக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரே இம் மொழியை அறிந்தவர்களாவர். இதுவும் விசேட வைபங்களின் போதே உபயோகிக்கப்படுகின்றது. 'டஸ்னர்' மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்மொழியை பதி…
-
- 0 replies
- 564 views
-
-
கண்களால் பால் சொரியும் அதிசய மனிதன் (வீடியோ இணைப்பு) ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 09:34 சாதனைகள் என்பது பலரகம் ஒவ்வொன்றும் ஒருரகம் …இதுவும் ஒரு வித்தியாசமாக சாதனைதான். துருக்கியைச் சேர்ந்த Mohamed Yilmaz என்ற இளைஞர் ஒரு கோப்பை பாலினை மூக்கினூடாக உறிஞ்சி, உறிஞ்சப்பட்ட பாலினை கண்ணினூடாக 2 மீற்றர் 70 சென்றி மீற்றர் தூரத்திற்கு பீறிட்டுப்பாய்ச்சி உலக சாதனை புரிந்துள்ளார். http://www.youtube.com/watch?v=V1zgXfBxTUo&feature=player_embedded tamilenn
-
- 0 replies
- 580 views
-
-
மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்! ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் வியாழன், 14 ஏப்ரல் 2011 10:46 அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர். இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது. இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும…
-
- 33 replies
- 1.9k views
- 1 follower
-
-
கனேடிய கன்சவேடிவ் கட்சி சார்பில் பரஞ்சோதியை வேட்பாளராக நியமித்ததில் சர்ச்சை! வெள்ளி, 22 ஏப்ரல் 2011 13:53 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மரியாதை செலுத்திய ஒருவரை மே 2ஆம் திகதி கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் கன்சவேடிவ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது ஏன் என்று அக்கட்சியைச் சேர்ந்த பீட்டர்கென்ட் கேள்வி எழுப்பியுள்ளார். கன்சவேடிவ் கட்சி சார்பாக போட்டியிடும் ராகவன் பரஞ்சோதி சர்ச்சைக்குரிய வேட்பாளர். இவர் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு புலிகளுக்கு புகழாரம் சூட்டியவர். மாவீரர் தின யூ டியூப் வீடியோ காட்சிகளைப் பார்த்து விட்டே தான் இந்தக் கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு…
-
- 0 replies
- 380 views
-
-
புதன்கிழமை, 20, ஏப்ரல் 2011 (22:41 IST) சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்ததால் பரபரப்பு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பா பா, இதயம், நுரையீரல் பாதிப்பு காரணமாக அங்குள்ள சத்யசாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெ ற்று வருகிறார். அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. சாய்பாபா விரைவில் குணமாக வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கும் பக்தர்கள் பிரா ர்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புட்டபர்த்தி நகரில் உள்ள ஒருவரது வீட்டில் இருக்கும் சாய்பாபா சிலையில் எண்ணெய் தானாக வடிந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புட்டபர்த்தியில் ரஹீம் என்பவரது வீட்டில் 4 அடி உயர சாய்பாபா மெழுகு சிலை உள்ளது. அந்த சிலையி…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
போனில் வளர்த்த காதல்..காதலி அழகாக இல்லை..வாலிபர் தற்கொலை வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2011, 12:02[iST] கோவை: ஒருவரை ஒருவர் பார்க்காமல் போன் மூலம் வளர்ந்த காதல், நேரில் கண்டதும் கசந்து போனது. காதலி அழகாக இல்லை என்பதால் காதலன் ரயில் முன் குத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவையில் நடந்தது. கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் துண்டுகளான நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் நடராஜன் (24), கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு நேதாஜி நகர் முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரின் மகன் என்று தெரியவந்தது. தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது கிடைத்த வி…
-
- 0 replies
- 387 views
-
-
ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அந் நாட்டில் பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்வதை தடைசெய்யும் பொருட்டு சட்ட மூலமொன்றினை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மத சட்டதிட்டங்களின் படி நாய்கள் அசுத்தமானவையாக கருதப்படுகின்ற போதிலும் ஈரானில் பணம் படைத்தவர்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் மேற்கத்திய கலாசாரத்தினைப் பின்பற்றி இவைகளை பொது இடங்களில் அழைத்து வருவது சில நேரங்களில் இடையூறாக உள்ளதாக சர்ச்சைகளும் எழுந்தன. இச் சட்டமூலத்தின் படி செல்லப்பிராணி என்ற பெயரில் நாய்களை வளர்ப்பவர்கள் அவைகளை பொது இடங்களுக்கு நடைப்பயிற்சிக்காகவோ, வாகனங்களிலோ அழைத்து செல்லக் கூடாது. இதனை மீறினால் நாயின் உரிமையாளரிடமிருந்து …
-
- 2 replies
- 533 views
-
-
புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உயிருடன் சமாதியாகப் போவதாக பரவிய தகவலை அடுத்து நேற்று பகவானின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் ஒன்று கூடியதுடன் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.பெருமளவி லான பக்தர்கள் சாயிபாபாவின் ஆஸ்பத்திரி முன் திரண்டதுடன் வீதிகளில் சாயிபாபாவின் படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர். பகவானின் உண்மை நிலை யை அறியாமல் இந்த இடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமம் உள்ள பகுதியிலும் பகவானின் வைத்தியசாலை உள்ள பகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்பு பிரிவினர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். உலகெ…
-
- 1 reply
- 772 views
-
-
பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும…
-
- 26 replies
- 2.8k views
- 1 follower
-