செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அருகே, முருகன் கோவில் வேலில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் 3,500 ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்றின் மீது பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு, வேல் மட்டுமே கருவறையில் உள்ளது. இதற்கு, இப்பகுதி மக்கள் ரத்தினவேல் முருகன் என பெயரிட்டுள்ளனர். இக்கோவிலில், பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், (20ம் தேதி) இரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. இப்பூஜையில், ஒன்பது நாள் உற்சவத்தின் போது வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன் திருமணத் தடைகள், நோய்கள் நீங்கும்…
-
- 9 replies
- 1.2k views
-
-
ரஷ்ய பாராளுமன்றத்தில் குட்டைப் பாவாடைக்குத் தடை _ வீரகேசரி இணையம் 3/26/2011 10:21:03 AM Share ரஷ்ய பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பாராளுமன்றத்திற்குள் குட்டைப் பாவாடையுடன் சமூகமளிப்பது தடை செய்யப்படவுள்ளது. குட்டைப் பாவாடை அணிவது பாராளுமன்றத்தினை அவமரியாதை செய்யும் வகையில் அமைவதாலேயே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் நடத்தைகள் தொடர்பிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. .
-
- 1 reply
- 794 views
-
-
தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம் Thursday, 24 March 2011 17:57 தென்பிராந்திய நிருபர் : தனது நரைத்த தலை முடிக்கு கறுப்பு நிற "டை' பூசி வந்த ஆசிரியை மரணமான சம்பவம் மாத்தறை ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. தெலிஜ்ஜவிலைகருக்களையைச் சேர்ந்த வீ.ஜி.இந்திராணி (56 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணமானார். இவர் தனது நரைத்த முடிக்கு சில காலம் கறுப்பு நிற "டை' பூசி வந்துள்ளார் எனவும் அதனால் தலைவலி மற்றும் நோய்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் "டை' பூசுவதையும் சில காலம் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நிகழ்வு ஒன்றிற்காக தன்னை அழகுபடுத்த மீண்டும் தலை முடிக்கு கறுப்பு நிற …
-
- 12 replies
- 742 views
-
-
இதில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதிநாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு பா நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு: 1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே 1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலக…
-
- 9 replies
- 663 views
-
-
நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மகளாக பிறந்தவர் எலிசபெத் டெய்லர். 1942ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய எலிசபெத், "நேஷனல் வெல்வெட்", "கிளியோபேட்ரா", "பட்டர்பீல்ட் 8" உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் …
-
- 10 replies
- 1.3k views
-
-
அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்ததை அடுத்து ஒரே நாளில் லட்சாதிபதியானார் துபையில் வசிக்கும் 5 வயது இந்தியச் சிறுவன் ஒருவன். இப்ராஹிம் ஃபகிமுதீன் ஷேக் என்ற அந்தச் சிறுவனுக்கு துபையின் தேசிய கடன் பத்திர கழகத்தின் சார்பில் பரிசுச் சீட்டுக்கான பிப்ரவரி மாத குலுக்கலில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. இவரது குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இவரது பெயரில் தந்தை ஷேக் கடன் பத்திரக் கழகத்தில் பத்திரங்களை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் மாதா மாதம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும். பிப்ரவரி மாத குலுக்கலில் ஃபகிமுதீனுக்கு பரிசு விழுந்துள்ள தகவல் அவரது தந்தைக்கு அந்த நிறுவனத்தால் தொலைபேசியில் சொல்லப்பட்…
-
- 2 replies
- 1k views
-
-
தாம் எந்த மதத்திடனும் இணைந்தவர்கள் இல்லை என அடையாளப்படுத்துபவர்கள் மூலம் ஒன்பது நாடுகளில் மதம் இல்லாமல் போய்விடும், இவ்வாறு ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள், கூறியுள்ளார்கள். இந்த ஒன்பது நாடுகளிலும் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட "கணித எதிர்வுகூறல்" (mathematical model) மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இந்த நாடுகளில் மக்கள் தாம் எந்த மதத்திடனும் தம்மை இணைத்தவர்கள் அல்ல என சனத்தொகை கணிப்பில் கூறுவார்கள் என்பதே இந்த எதிர்வுகூறலாகின்றது. கீழ்வரும் நாடுகளே அவை: அவுஸ்திரேலியா ஆஸ்திரியா கனடா செக் குடியரசு பின்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நியூசிலாந்து சுவிற்சலாந்து Religion may…
-
- 0 replies
- 533 views
-
-
இங்கிலாந்துநாட்டில் கல்வி பயிலவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைய கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையானவிசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயர் கல்வி படிக்க இங்கிலாந்திற்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக முதற்கட்டமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் போலியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணப்…
-
- 0 replies
- 457 views
-
-
பீர்( beer) போத்தலை இலகுவாக திறப்பதற்கான 20 வழிகள். http://www.youtube.com/watch?v=sJV5HW61yoE
-
- 1 reply
- 706 views
-
-
கல்லறை வீரர்கள் மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? ஆவிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புதைபொருள் அகழ்வு ரெறக்கோட்டா வீரர்கள் என அழைக்கப்படும் இந்தக் களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. இவற்றை சீனாவின் பண்டைய தலைநகராகிய ஷியான் நகரில், 1974 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுத்தார்கள். வயலொன்றில் கிணறு தோண்டும்போது தற்செயலாக இந்த ரெறக்கோட்டா வீரர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். இதுவே சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அகழ்வென்று நம்பப்படுகிறது. கி.மு 210 இல் இறந்த சீனாவின் ஷிஹுவாங் என்னும் பேரரசனின் கல்லறை இது என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அத்துடன் யுனெஸ்கோ நிறுவனத்த…
-
- 0 replies
- 547 views
-
-
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வருடப் பலன் சொல்லும் போது .................................. குறிப்பிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட தேதிக்குள் இயற்கை சீரழிவுகள், மாற்றங்கள் வரும் என்று சொல்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டினுடைய விவரமும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் ஒரளவிற்கு நம்மால் கணிக்க முடியும். சில நாடுகளுடைய இயற்கை அமைப்புகளை வைத்து குறிப்பிட்ட கிரகங்கள் குறிப்பிட்ட நாடுகளை ஆள்கிறது என்ற கணக்கை வைத்திருக்கிறோம். ஆனால், மேலும் விளக்கம், உருவான ஆண்டு இதெல்லாம் கிடைத்தால் முழுமையாகக் கணிக்க முடியும். பொதுவாக, புத்த மத நாடுகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதை முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் சனி புதன் வீட்ட…
-
- 2 replies
- 740 views
-
-
-
புலி சிங்கத்தை ஒரு கடியில் கொன்றது! துருக்கியில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் நடந்த சம்பவம். இரண்டு கூண்டுகளையும் பிரித்து நின்ற வேலியில் காணப்பட்ட சிறு துவாரத்தினூடே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்றது புலி. அங்கே நடந்த சண்டையில் புலியானது சிங்கத்தின் கழுத்தில் கடித்தது. அதனால் மூளையிலிருந்து இருதயத்திக்குச் செல்லும் பிரதான நாளம் புலியின் பற்களால் கிழிக்கப் பட்டதால் சிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. Tiger kills lion in Turkish zoo A Bengal tiger has killed a lion at the Ankara Zoo in Turkey after it entered the lion's enclosure via a hole in the fence that separated the two animals. Skip related content RELATED PHOTOS / VIDEOS Tiger kills lion in Tu…
-
- 2 replies
- 1.5k views
-
-
23 வயதில் பேத்தியானாள் ரிஃப்கா விற்கு 13 வயதில் மகள் பிறந்தாள். ரிஃப்காவின் மகள் 11 வயதில் ஒரு மகனைப் பெற்றாள். ரிஃப்காவிற்கு இப்போது 25 வயது. link
-
- 3 replies
- 635 views
-
-
மஸ்டா நிறுவனத்தை ஆட்டாமல் ஆட்டிவிட்ட சிலந்திப் பூச்சிகள் அமெரிக்காவில் தயாராகி விற்பனையான மஸ்டா-6 இரகக் கார்களில் 65.000 கார்களை மறுபடியும் தொழிற்சாலைக்கு திருப்பி அனுப்பும்படி அந்நிறுவனம் கேட்டுள்ளது. இந்தக் கார்களில் சுமார் 20 கார்கள் திடீரென நின்றுள்ளன. இதற்குக் காரணம் சிலந்திப் பூச்சிகளின் வேலை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவேதான் அக்கார்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன. சிலந்திகள் மஸ்டா கார்களின் எரிபொருள் சுழர்ச்சிப் பகுதிக்குள் நுழைந்து அங்கு பாதுகாப்பான கூட்டை அமைத்துவிடுகின்றன. பெற்றோல் போகும் பகுதிக்கு அருகில் உள்ள கருவியில் கூடமைத்து குளிர்காலத்தை இவை வெப்பமாகக் கழிக்கின்றன. வடஅமெரிக்கப் பகுதியில் வாழும் 5 – 10 மி.மீ அளவான யெலோ செக் ஸ்பைடர் என்ற சிலந…
-
- 0 replies
- 613 views
-
-
தனது நோயாளர்களை இரகசியமாக படம் எடுத்த வைத்தியர் தனது நோயாளர்களை இரகசியமாக அவர்களை நிர்வாணமாக படம் எடுத்தார் ஒரு கனேடிய வைத்திய சுவாசைப்பை நிபுணர். இதற்காக இவர் நான்கு மாதம் வேலை செய்வதில் இருந்து நிர்பாட்டப்பட்டதுடன் மூவாயிரம் கனேடிய டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 56 வயதுடைய இவர் இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவர். மேலும் இவர் மொன்றியல் நகரில் உள்ள உலகப்புகழ் பூத்த மக் கில் (Mc Gill) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரும் ஆவர். MONTREAL-A Montreal doctor has been suspended and fined for filming female patients with a hidden camera while they were naked. Quebec’s College of Physicians says it has suspended Dr. Barry Rabinovitch for four month…
-
- 7 replies
- 1k views
-
-
இது சாத்தியமா? http://www.youtube.com/watch?v=vpxEmD0gu0Q&feature=player_embedded
-
- 5 replies
- 829 views
-
-
ஆண்களே இதனைப் படிக்காதீர்கள்.. தாய்க்குலம் படித்து தண்டனையையும் தீர்மானிக்கட்டும் [sunday, 2011-02-27 12:14:23] தன்னை ஒரு கர்ப்பிணி எனக் கூறி வைத்தியசாலையில் அனுமதி பெற்றுக் கொண்ட ஒரு பெண்ணின் நாடித் துடிப்பை அறிய முயன்ற போது அவள் கர்ப்பிணியல்ல.. நடிப்பில் துடிப்புமிக்கவள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது. தன்னை ஒன்பது மாத கால கர்ப்பிணி என்று கூறிக் கொண்டு தனது தாயுடன் வந்த ஒரு பெண் கொழும்பு, களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளாள். பாவம்.. கர்ப்பிணிப் பெண்ணல்லவா? டாக்டர்கள் விரைந்து செயற்பட்டனர். குறிப்பிட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் நாடித் துடிப்பை முதலில் அறிந்து கொள்ளும் வழமையான பணியை அந்த டாக்டர்கள் ஆரம்பித்துள்ளனர். ஆனால,; …
-
- 3 replies
- 724 views
-
-
சிற்பங்களாக மாறிய பழங்கள்.. நமது கைகளில் தேசிப்பழம் அல்லது தோடம்பழம் கிடைத்தால் என்ன செய்யலாம்? உடனே ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? ஆம் சாதாரணமாக நாங்கள் எல்லோரும் அப்படித் தான் சிந்திப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? தேசிப்பழம், தோடம்பழம் என்பவற்றைக் கொண்டு ஒரு திருவிழாவை கொண்டாடியுள்ளனர். அத்தோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அதனைக் கொண்டு சிற்பங்களாக அலங்கரித்துள்ளனர். இதுவே அதன் சிறப்பம்சமாகும். பிரான்ஸின் மென்டன் நகரில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் விழாவானது வருடாந்தம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளத…
-
- 0 replies
- 496 views
-
-
- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும். - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே - தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழி…
-
- 0 replies
- 455 views
-
-
குடியிருக்கச் சென்ற வீட்டினுள் பேய்: தம்பதியர் பதறியடித்து ஓட்டம் [Friday, 2011-02-25 02:14:12] குடியிருக்கச் சென்ற வாடகை வீட்டினுள் பேய் நடமாட்டத்தைக் கண்ட தம்பதியர் பதறியடித்துக்கொண்டு வீட்டைக் காலிபண்ணிய சம்பவம் ஒன்று மீகாதன்னவில் இடம்பெற்றுள்ளது.மத்துகமவுக்கு அண்மையில் உள்ளது மீகாதன்ன என்ற ஊர். அங்குள்ள வீடொன்றுக்கு புதுமணத் தம்பதியர் குடியிருக்கச் சென்றுள்ளனர். பெருந்தொகைப் பணத்தை முற்பணமாக செலுத்தி வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குடியிருக்கச் சென்ற இவர்கள் அங்கு நிம்மதியாக குடித்தனம் நடத்த முடியவில்லை. இதற்குக் காரணம் பேயின் நடமாட்டம் என தெரிவிக்கப்படுகிறது. இரவு வேளையில் பேயின் நடமாட்டத்தை இத் தம்பதியர் உணர்ந்துள்ளனர். தலைவிரி கோலத்தில் பெண் ஒருவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள் பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகு…
-
- 0 replies
- 429 views
-
-
காதலர் தினத்தில் ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது. தனது காதலரும் நடிகருமான ரிதேஷ் தேக்முக்கை திருமணம் செய்து கொள்ள இருதரப்பிலும் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' 'உத்தமபுத்திரன்' போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலை மணமகன் வீட்டார் எதிர்த்தனர். ஒரு நடிகை தனக்கு மருமகளாக வருவதா என்று வெளிப்படையாக கண்டித்தார் விலாஸ்ராவ் தேஷ்முக் மனைவி. மேலும் ஜெனிலியாவுக்கும் மிரட்டல்கள் வந்தன. ஆனால் தங்கள் காதலில்…
-
- 29 replies
- 2.6k views
-
-
125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டு பிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து…
-
- 1 reply
- 662 views
-
-
முத்தமிட்டு சாதனை படைத்த தாய்லாந்து ஜோடிகள் வீரகேசரி இணையம் 2/15/2011 6:17:05 PM தாய்லாந்தைச் சேர்ந்த ஜோடிகள் சுமார் 46 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 9 செக்கன்கள் வரை முத்தங்கொடுத்து சாதனை படைத்துள்ளனர். பேங்கொக்கைச் சேர்ந்த எக்காச்சி மற்றும் லக்ஸான டிரானா ரெட் ஆகியோரே இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர். காதலர் தினத்தினை ஒட்டி நடத்தப்பட்ட இப்போட்டி நிகழ்சியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் பட்டாயா நகரில் ஆரம்பமாகியது. சுமார் 14 ஜோடிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற ஜோடிக்கு 1600 அமெ.டொலர் பெறுமதியான வைர மோதிரமும், 3200 அமெ.டொலர் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்குபற்றிய பெண்ணொருவர் போட்டி ஆரம்பமாகி …
-
- 0 replies
- 513 views
-