Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி! யாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1362036

  2. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இப்போது உள்ள‌ சூழ‌லில் சோச‌ல் மீடியாக்க‌ளில் எங்க‌டை உண‌ர்வை வெளிப்ப‌டுத்த‌ முடியாது...........அன்மையில் த‌லைவ‌ரின் 69வ‌து பிற‌ந்த‌ நாளை முன்னிட்டு என‌து த‌ங்கைச்சி tiktokகில் த‌லைவ‌ரை ப‌ற்றி வீடியோ போட்ட‌தால் ச‌கோத‌ரியின் ரிக்ரொக் முற்றிலுமாய் முட‌க்க‌ப் ப‌ட்டு விட்ட‌து...........44ஆயிர‌ம் பார்வையாள‌ர்க‌ள் ச‌கோத‌ரியின் ரிக்ரொக்கில் இருந்தார்க‌ள் 1மில்லிய‌ன் லைக்...............ஒரு வீடியோ போட்ட‌தால் நிர‌ந்த‌ர‌ த‌டை...........யூடுப்பிலும் அதே வீடியோவை போட்டா யூடுப் நிறுவ‌ன‌ம் உட‌னை அதை நீக்கி விட்ட‌தாக‌ சொன்னா.................இளைய‌தலைமுறை பிள்ளைக‌ள் கூட‌ சோச‌ல் மீடியாக்க‌ளை தான் அதிக‌ம் விரும்புகின‌ம்.................இனி வ‌ரும் கால‌ம் அவ‌ர்க‌ளின் கால‌ம்…

  3. தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மரணம் ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த தம்பதியினர் இளையராஜா (50) மற்றும் கலைச்செல்வி (40). இவர்களுக்கு, ஸ்ரீஹரி பாண்டியன் என்ற மகனும், சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இதில், இளையராஜா மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 -ம் ஆண்டு கலைச்செல்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின் இறப்பை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மனைவிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று இளையராஜா…

    • 13 replies
    • 1.3k views
  4. பட மூலாதாரம்,INSTAGRAM/@SRINITHYANANDA 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களுக்கு நித்யானந்தா பற்றிய அறிமுகம் தேவையில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நித்யானந்தா தலைவராக தன்னை அறிவித்துக்கொண்ட தேடியும் கிடைக்காத ஒரு நாடான 'கைலாசா'வுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக பாராகுவே நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பராகுவே விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சின் தலைமைப் பணியாளர் அர்னால்டோ சாமோரோ இந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த அறிக்கையில், கைலாசாவுடன் வெளியுறவை மேற்கொள்ள பாராகுவே அரசாங்கம் மிகவும் விருப்பத்தோடு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். …

  5. ஜெர்மனியிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற தம்பதி இடையே நடுவானில் சண்டை ஏற்பட்டதால், விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கணவன், மனைவி இடையே எப்போது சண்டை வரும், எப்போது ஒன்று சேருவார்கள் என்று கணிக்கவே முடியாது. திடீரெனச் சண்டைபோடுவார்கள், அடுத்த நிமிடமே சேர்ந்துகொள்வார்கள். அந்த வகையில், ஜெர்மனியின் ம்யூனிச் நகரிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்ற லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த தம்பதிக்கு இடையே, நடுவானில் தகராறு ஏற்பட்டது. அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தன்னை மிரட்டுவதாகக் கூறி, பைலட்டிடம் மனைவி புகார் செய்தார். விமானப் பணியாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் சண்டையை…

  6. பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு, அமெரிக்க வரலாற்றில் பிடிபடாத ஒரே கடத்தல்காரர் கூப்பர் மட்டுமே. கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் ஆஸம் பதவி, பிபிசி நியூஸ் 27 நவம்பர் 2023 நவம்பர் 24, 1971 அன்று, டீன் கூப்பர் என்ற நபர், அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் விமான நிலையத்தில், வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குப் பயணம் செய்யும் டிக்கெட்டை வாங்கினார். நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸின் கவுன்டரில் இருந்த ஊழியர்களுக்கு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிக்கலான குற்றத்தை இந்த நபர் செய்யப் போகிறார் என்பது அப்போது தெரியாது. 52 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த விதமான துப்பையும் கண்டுபிடிக்க முடியவில…

  7. எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும் அதிகமாகவேயிருக்கும். 1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள் இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேண…

  8. 25 NOV, 2023 | 06:06 PM தனது பிறந்த நாளுக்கு டுபாய்க்கு அழைத்துச் செல்லாத கணவரை தாக்கி கொலை செய்த குற்றத்தில் மனைவி ஒருவர் இந்திய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் புனே நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.! உயிரிழந்தவர் இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி சந்தேக நபரின் பிறந்த நாள் என்றும், கடந்த நவம்பர் 5ஆம் திகதி இவர்களது திருமண நாள் என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான மனைவி தனது பிறந்த நாளுக்காக டுபாய் செல்ல விரும்புவதாக கணவரிடம் தெரிவித்தும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில், இவர்களது திருமண…

  9. 45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த …

  10. கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு November 23, 2023 11:31 am கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. கடந்த 20…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆர்சி அடண்டிரில்லா பதவி,பிபிசி பங்களா 16 நவம்பர் 2023 இஸ்ரேல் நாடு, யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி தேசத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உருவானது. யூதர்களின் இருப்பு மற்றும் உரிமைகளின் பின்னணியில் இஸ்ரேல் உருவான போதிலும், இஸ்ரேலை ஆதரிக்காத பல யூதர்களும் உள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூத விரோதத்திற்கு பதிலாகவும், பாலத்தீனிய பிரதேசத்தில் ஒரு யூத அரசை நிறுவுவதற்கான நோக்கத்துடனும் யூத தேசிய இயக்கம் எனப்படும் 'சியோனிசம்' (Zionism) தோன்றியது. ஹீப்ரூ விவிலியத்தில், சியோன…

  12. விசா கோரி 50 தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் கைது : மனநிலையை ஆராயவும் உத்தரவு! பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது. குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். பிரான்ஸ் தூதரகத்தின் எலிசபெத் டெசன் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் …

  13. 21 NOV, 2023 | 11:03 AM புதுடெல்லி: மணிப்பூர் மாநிலம் இம்பால் விமானநிலையம் அருகே பறக்கும் தட்டு (யுஎஃப்ஓ) பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பறக்கும் தட்டை தேடும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. வழக்கமாக வானத்தில் பறக்கும்தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தெரிவதாகத் தகவல் வெளியாகும். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். இவை பறக்கும் தட்டுகள், வேற்று கிரகங்களில் இருந்து வரும் வேற்று கிரக வாசிகளின் விமானங்கள் என்ற தகவல்களும் வெளியாகும். ஆனால், இவை பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில்தான் நடைபெறும். இந்நிலையில் இதேபோன்ற தொரு சம்பவம் மணிப்பூர் மா…

  14. புலம்பெயர் இலங்கையரை இலக்கு வைத்து இலங்கை எங்கும் காணி, வீடு, கடைகள் என ஆதன மோசடிகள் பரவலாக நடை பெறுவதாக தெரிகிறது. சில இடங்களில் பொலீசாருக்கு அல்லது உள்ளூர் காடையர்களுக்கு பணமும் கொடுத்து பயமுறுத்தல்கள் நடந்துள்ளன. சில இடங்களில், உங்களுக்கு இதெல்லாம் பெரிய சொத்தா, எமது பிள்ளைக்கு சீதனமா கொடுங்களன், கரை சேர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று எமோசனல் தாக்குதல் நடக்கிறது. இலண்டணில் ஒரு வைத்திய நிபுணர். பிள்ளைகள் இல்லை. மணைவியும் அவருமாக வெள்ளவத்தையில் பல ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அவ்வப்போது போய் தங்கி வருவார்கள். இந்நிலையில் வைத்தியர் கோவிட் காலத்தில் இறக்க, விதவை மணைவி போனவருடம் போயிருக்கிறார். வீட்டில் வேறு யாரோ... விசாரித்தால் வ…

  15. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும்வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என மருத்துவர்கள் நம்புகிறார்கள். https://thinakkural.lk/a…

  16. யாழில் தங்க நகை அணியாத பெண் மீது தாக்குதல்! தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீதியில் யாரும் அற்றவேளை குறித்த பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்காததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப…

  17. ஜேர்மனியில், பொருட்களேற்றும் கப்பல் ஒன்றை இயக்கிய பெண் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக் கப்பல் ஒன்று ரைன் நதி வழியாக சென்றுகொண்டிருந்திருக்கிறது. அசாதாரண விபத்து இந்நிலையில் கப்பல் கேப்டனுக்கு பதிலாக துணை கேப்டனாக இருந்த பெண் ஒருவர் அந்த கப்பலை செலுத்திக்கொண்டிருந்திருக்கிறார். அவர் மது போதையில் இருந்ததால், Iffezheim என்னும் பகுதியில், நீர்மின் நிலையத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பில் வேகமாக சென்று கப்பலை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதிய வேகத்தில் நீர்மின் நிலையத்துக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு உ…

  18. கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிய மனைவி : கணவன் பலி. திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2023/1359509

  19. 18 NOV, 2023 | 12:40 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துள்ளார். இதன் போது அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்துள்ள நிலையில் தூக்கில் அகப்பட்டுள்ளார். இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். …

  20. 85 வயதான் இந்த பாட்டி தட்டத்தனி ஆளாக 1999 இல் இருந்து முல்லைத்தீவு காட்டில் வாழ்கின்றாராம்..

  21. எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத் தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான…

  22. Published By: DIGITAL DESK 3 17 NOV, 2023 | 12:27 PM யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிடும்போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் பிட்டு சாப்பிட்ட போது, அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியபோது, வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து, இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அ…

  23. உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி விடுதலை! உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலியை 57 முறைகள் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்தபோது அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஆரம்பத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 120 கிலோவாக இருந்த திமித்ரியின் உடல் எடை கடந்த ஒரே ஆண்டில் 200 கிலோகிராமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உடல் எடையை குறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.