செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின்.... மோட்டார் சைக்கிளில் இருந்து, பெட்ரோல் திருட்டு! யாழ். நகர் பகுதியில் யாழ். மாநகர சபை பெண் உறுப்பினர் உள்ளிட்ட இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற பெண் உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோல் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு அளிக்கப்ட்ட நிலையில், பாதுகாப்பு கமராக்களின் உதவிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார். …
-
- 1 reply
- 206 views
-
-
பெற்றோல், என கூறி... சிறுநீர், விற்பனை! நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்பனை செய்த ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2022/1288890
-
- 5 replies
- 399 views
-
-
காங்கேசன்துறையில்... தனிமையில் வாழ்ந்த 78 வயது மூதாட்டி, வன்புணர்வின் பின்... கழுத்தறுத்துக் கொலை! காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்…
-
- 1 reply
- 229 views
-
-
சித்திரவதைக்குத் தப்பி இலங்கையிலிருந்து பிரித்தானியா வந்த ஒருவர், ஆரம்பத்தில் தெருவோரமாக படுத்து உறங்கியிருக்கிறார். இன்று ஒரு சமையல் கலை நிபுணராக உயர்ந்து நிற்கும் அவரது பெயர் யோகி. 2008ஆம் ஆண்டு, குடும்பத்தைப் பிரிந்து பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்த யோகிக்கு பிரித்தானியாவில் யாரையும் தெரியாது. கொஞ்ச காலம் தெருவோரம் படுத்துறங்கி, பின்னர் Freedom from Torture என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு ஒரு அறையை பெற்றுக்கொள்ள உதவியபோது, அந்த அறைக்கு அருகில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அங்கு சென்றுதான் சாப்பிடுவாராம் யோகி. ஆனால், திடீரென ஒரு நாள் இதய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது யோகிக்கு. ஏற்கனவே குடும்பத்தைப் பிரிந்து தனியாக பிரித்தானியாவில் வருத்தத்தில் இர…
-
- 2 replies
- 509 views
- 1 follower
-
-
இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயின் பிறந்தநாளில் 100 கிலோ கேக் வெட்டியதுடன் 5000 கிராம மக்களுக்கு விருந்தளித்து உபசரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா துக்காநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா மர்தி. பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான சிவப்பா மர்தி தொழிலதிபர் ஆவார், இவர் தன்னுடைய வீட்டில் கிரிஷ் என்ற வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கிரிஷ் மீது சிவப்பா மர்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர், கிரிஷ்க்கு பிறந்தநாள் வந்துவிட அதை வெகுவிமர்சையாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக 100 கிலோ கேக் ஒன்றை செய்து, அதை கிரிஷ் வெட்ட ஊர் மக்களே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மே…
-
- 4 replies
- 524 views
-
-
தீக்காயங்களுடன்... வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும், நோயாளிகளின் எண்ணிக்கை... திடீர் அதிகரிப்பு. அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெற்றோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் கயான் ஏகநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு பெற்றோல் கிடைக்கிறது. மேலும், வீடுகளில் எண்ணெய்னையினை சேமித்து வைப்பதனாலும் இது போன்ற ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலைக் கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதி…
-
- 0 replies
- 236 views
-
-
காங்கேசன்துறையில்... சடலம் மீட்பு- கழுத்து நெரித்துக் கொலை செய்தமை உறுதி! காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கியத் தகவலை அடுத்து, இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார். நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் கா…
-
- 0 replies
- 328 views
-
-
R.Maheshwary / 2022 ஜூன் 16 , மு.ப. 10:01 - 0 - 413 FacebookTwitterWhatsApp எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்தவர் சிறிய லொறியொன்றில் இளநீர் விற்கும் ஒருவர் என்றும் மற்றையவர் சிறிய லொறியொன்றின் சாரதி என்றும் தெரியவந்துள்ளது. பண்டாரகமயிலிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் குறித்த இருவரும் 5 நாள்…
-
- 0 replies
- 552 views
-
-
5 வயது குழந்தையை... களனி ஆற்றில் எறிந்து விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது! வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது 5 வயது குழந்தையை எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 42 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1287136
-
- 8 replies
- 903 views
-
-
நீர்கொழும்பில் களவாக... தேங்காய் பறித்தவர் மீது, துப்பாக்கிப் பிரயோகம்! நபர் மரணம். நீர்கொழும்பு, கொச்சிக்கடை – ஏத்கால – கேரம் தோட்டப் பகுதியில் அனுமதியின்றி தேங்காய் பறித்த நபரொருவர் மீது காணி உரிமையாளர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குறித்த சந்தேகநபர் துப்பாக்கியுடன் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 218 views
-
-
எந்த ஜென்மத்திற்கும் இந்த மனைவி வேண்டாம்: நொந்த கணவர்கள் வெந்த மனதுடன் வேண்டுதல் மஹாராஷ்டிராவில் மனைவிகள் எல்லாம், 7 ஜென்மத்திற்கும் தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டுமென ஆல மரத்தைச் சுற்றி வந்து வழிபட்ட நிலையில், கணவர்கள் சிலர், இனி எந்த ஜென்மத்திற்கும் இதே வாழ்க்கை துணை வரக்கூடாது என பிரார்த்தனை செய்து அரச மரத்தை 108 முறை எதிர்திசையில் சுற்றி வழிபட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். கணவனின் வெற்றிக்கு தூண்டுதலாகவும், தோல்வியடையும்போது தோள்கொடுத்து அரவணைத்து தட்டிக்கொடுக்கும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாக கருதலாம். ஆனால், சில கணவன்மார்கள் மனைவி வரமாக அமையாமல், பாரமாக இருப்பதாக நினைக்கின்றனர். க…
-
- 41 replies
- 2.2k views
-
-
ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளை பத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாடு செல்லும் போது, அவரது மலம் பத்திரமாக பெட்டியில் ரஷ்யா எடுத்து வரப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பு பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான ரெஜிஸ் ஜென்டே, மிகைல் ருபெயன் இருவரும் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘பாரிஸ் மேட்ச்’ செய்தி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: புடின் வெளிநாடு சென்றால், அங்கு கழிப்பறையில் அவரது மலத்தை சேகரித்து பெட்டியில் வைத்து ரஷ்யா எடுத்து வரும் வேலையை, அவரது பாதுகாவலர்கள் செய்து வருகின்றனர். மல சோதனையில் புடின் உடல்நிலை குறித்த எந்த தகவல்களும் வெளிநாடுகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவ…
-
- 2 replies
- 353 views
-
-
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தை சேர்ந்தவர் சி.என்.பிஜு குமார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைக்கும் நோக்கில் 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு கோழி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் அசதியாக இருந்துள்ளது. அதனை கவனித்த பிஜு கூட்டிலிருந்து அதை எடுத்து, தனியாக விட்டுள்ளார். பின்னர் அந்தக் கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்துள்ளார். அதையடுத்து க…
-
- 9 replies
- 862 views
-
-
கிளிநொச்சியில்... அரிய வகை ஆமை, மீட்பு! கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். …
-
- 0 replies
- 253 views
-
-
ஒவ்வொரு சிகரெட்டிலும்... அபாய எச்சரிக்கையை அச்சிட, கனேடிய அரசாங்கம் முடிவு! ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிகரெட் பெட்டிகள் மீது புகைப்பதால் உடல்நிலத்துக்கு ஏற்படும் அபாயம் குறித்த எச்சரிக்கையை அச்சிடுவது 20 ஆண்டுகளுக்கு கனடாவில் கட்டாயமாக்கபட்ட போதும், தற்போது உலகிலேயே முதல்முறையாக இவ்வாறானதொரு நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது. இது குறித்து மனநலத் துறை அமைச்சர் கரோலின் பெனட் கூறுகையில், ‘சிகரெட் பெட்டிகள் மீது அபாய எச்சரிக்கை பொறிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் இத்தனை ஆண்டுகளில் மறைந்துபோயிருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், ஒவ்வொரு சிகர…
-
- 0 replies
- 154 views
-
-
கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன் (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா வகை மீன் இனமானது நேற்று (12) கிண்ணியா கடற்பரப்பில் மீனவர்களுக்கு சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சேர்த்தனர். கிண்ணியா கடலில் சிக்கிய 5,000 கிலோ எடை கொண்ட சுறா மீன் | Virakesari.lk
-
- 5 replies
- 466 views
-
-
மன்னார் வைத்தியசாலையின்... நோயாளர் விடுதியில், கத்திக்குத்து – ஒருவர் கைது! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1286780
-
- 0 replies
- 209 views
-
-
கதிரையில் இருந்து... தவறி விழுந்து, கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு! கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கதிரையில் இருந்து கீழே விழுந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்துள்ள நிலையில், குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து உடனடியாக குறித்த குழந்தை, முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…
-
- 0 replies
- 266 views
-
-
200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வேன் நித்யானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நான் இன்னும் சமாதியில் இருந்தாலும் சீடர்கள் மூலம் உடல் மனமும், ஆன்மாவும் ஒரே நிலையில் செயல்படுகின்றன. எனது சீடர்களின் பதிவுகளை நான் மிகவும் அரிதாகவே பகிர்கிறேன். எனது அன்பான பக்தர்கள், அன்பான சீடர்கள் மற்றும் கைலாசாவாசிகள் அனைவரையும் நான் விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக பரமசிவனின் கருணையுடனும், உங்கள் எல்லா ஆத…
-
- 0 replies
- 223 views
-
-
வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்ற ஏழு பேர் கைது ShanaJune 11, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மின் பயன்பாடு அற்ற டெட்ட…
-
- 0 replies
- 168 views
-
-
ஒரே விரலில் 129 கிலோ எடையை தூக்கி உலக சாதனை மின்னம்பலம்2022-06-11 உங்களால் அதிகமாக எவ்வளவு எடை தூக்க முடியும்? நம்மில் பலருக்கு வீட்டில் இருக்கும் சிலிண்டர்களை தூக்குவது கடினமாக உள்ள நிலையில் ஒருவர் ஒரு விரலில் 129 கிலோ எடையை தூக்கி உள்ளார். இதன் மூலம் இவர் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். மேலும் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சாதனையை நிகழ்த்தியவர் 48 வயதான ஸ்டீவ் கீலர். இவர் தனது 18 வயதில் இருந்தே கராத்தே பயிற்சி செய்து வருகிறார். அப்பொழுது ஒரு நாள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தனது நடுவிரலால் மட்டும் ஒரு சேட் எடையை முழுமையாக தூக்கி உள்ளார். அதற்குப் பின்னர்தான் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்…
-
- 0 replies
- 202 views
-
-
வீட்டில்... கஞ்சா செடிகளை வளர்த்து, விற்க... தாய்லாந்து அனுமதி! தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம். தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு, அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது. ‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்து…
-
- 2 replies
- 470 views
- 1 follower
-
-
ஹஜ் யாத்திரை... குறித்து, முக்கிய தீர்மானம் ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என முஸ்லிம்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த நபர்கள் ஹஜ்ஜுக்கு தேவையான டொலர்களை தமது நண்பர்கள் மூலம் கொண்டு வந்தபின்னரே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1285982
-
- 0 replies
- 181 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம காலமானார் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது சேன விதானகம டெய்லி நியூஸ் பத்திரிகையில் புகைப்பட ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 352 views
-