Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சர்வதேச அழகுராணி நாவிதன்வெளியில் சரஸ்வதி அழகுசிலையை திறந்துவைத்தார்! By Gowsith ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேசஅழகி (MISS INTERNATIONAL UK -2020-2022) செல்வி இவஞ்சலின் லட்சுமணர் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) அவரால் நிறுவப்பட்ட 10அடி உயர சரஸ்வதி சிலையை நேற்றுமுன்தினம் (20)ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திறந்துவைத்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர். இலங்கை சுற்றுலாஅதிகாரசபை அவர்களுக்கான விருந்தினர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் கூடவே அதன்பிரதிநிதிகளும் …

  2. தலவாக்கலையில்.... மரம் விழுந்து வீதியில் சென்ற ஆசிரியர் உயிரிழப்பு! தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை மல்லியப்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆசிரியரின் மரணத்திற்கு நீதியை பெற்று தருவதாக வழங்கிய உறுதி மொழிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் ஆசிரியரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் என பொது மக்கள் எச்சரித்துள்ளனர். நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் உள்ள ஆலமரத்தை வெட்டும் பொழுது அதன் கிளைகள் அவ்வீதியினூடாக மோட்டர் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஒருவர் மீது முறிந்து வீழ்ந்…

  3. சரக்கு கப்பலில் தீ விபத்து: ஜேர்மனியின் 4,000 சொகுசு கார்கள் தீக்கிரை! மிகப் பெரும் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏறக்குறைய 4,000 சொகுசு கார்கள் தீக்கிரையாகியுள்ளன. போர்த்துகலின் அசோர்ஸ் தீவுகளின் கடற்கரைக்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலில், இந்த தீவிபத்து ஏற்பட்டது. பனாமா கொடியிடப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் கப்பல், ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு வோக்ஸ்வாகன் குழுமத்தின் வாகனங்களை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பலில் போர்ச், அவுடி மற்றும் லம்போகினி உள்ளிட்ட சொகுசு கார்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை மாலை இந்தக் கப்பலில் தீப்பிடித்ததாகவும், இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போர்த்துகலின் கடற்படை மற்றும் விமானப்படை, கப்பலில் …

  4. ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் சந்தீப் சாஹு பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BISWA RANJAN/BBC மருத்துவராகவும், சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போலவும் நடித்து 17 பெண்களை வலையில் சிக்கவைத்து மோசடி நபரை புவனேஷ்வர் போலீசார் கைது செய்துள்ளனர். 66 வயதான ரமேஷ் சந்திர ஸ்வைன், புவனேஷ்வரின் கண்ட்கிரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்ப…

  5. விமானத்தை கடத்தி அமெரிக்க அரசை தோற்கடித்த தனி ஒருவன் D.B.cooper

  6. யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார். பின்னர் தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். …

  7. உத்தரபிரதேசத்தில்... கிணற்றில் தவறி விழுந்த, 13 பெண்கள் உயிரிழப்பு! உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்த நிலையில், பலகை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நட…

  8. கையடக்கத் தொலைபேசியின் உதவியுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய பாடசாலை அதிபரின் மகன் – மன்னாரில் சம்பவம்! மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலையிலேயே உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார். இந்த நிலையில் கணித பாட பரீட்சையின்போது அதிபரின் மகன் பரீட்சை மண்டபத்திற்குள் மறைமுகமாக கையடக்கத் தொலைபேசியொன்றை கொண்டுசென்றுள்ளார். மேலும் கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்…

    • 1 reply
    • 328 views
  9. அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது SayanolipavanFebruary 13, 2022 புத்தளம் பாலாவி 2ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கெபெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சார்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர் குறித்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கழுகும் புத்தளம் …

  10. நாம் அருந்தும் தேனீர் கோப்பைக்குப் பின்னால் மறைந்திருக்கும் தோட்டப் பகுதி மக்களின் சோக அவலத்தை காண்பிக்கும் வகையான புகைப்பட கண்காட்சி கண்டியில் 'டீ கஹட' என்று தொனிப்பொருளில் தி. சேனநாயக்க தெரு புஷ்பதன மண்டபத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்புகைப்படக் கண்காட்சியில் பதுளை மற்றும் தலவாக்கலை ஆகிய நான்கு தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களால் எடுக்கப்பட்ட 100 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. https://www.tamilmirror.lk/கலை/தனர-கபபககப-பனனல-மறநதரககம-சகம-ட-கஹட/56-291046

  11. கணவனை கொலை செய்து 7 ஆவது மாடியில் இருந்து வீசிய மனைவி மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அம்போலி பகுதியை சேர்ந்தவர் சாந்தனுகிருஷ்ண சேஷாத்ரி (54). தனியார் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெய்ஷீலா, மகன் அரவிந்த் (26). பொறியல் பட்டதாரி. இந்நிலையில், சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார், சேஷத்ரியின் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்தினர். அதில் சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இதற்கு முன்பு கூட அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களது வீட்டிலும் நடத்திய சோதனையில், வாஷிங் ம…

  12. யாழ்.நகர் மத்தியில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்த நாய் : February 10, 2022 யாழ்.நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கடித்துள்ளது. யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்…

  13. பிரித்தானியாவில்.... மூன்றில் ஒரு பகுதி சிறுவர்கள், உற்சாக பாணத்தை அருந்துகின்றனர்: ஆய்வில் தகவல்! பிரித்தானியாவில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர்கள் உற்சாக பாணம் அருந்துவதாக, ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் இளம் பருவத்தினர் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உற்சாக பாணத்தை அருந்துகிறார்கள் எனவும் சிலர் கிட்டத்தட்ட தினமும் அருந்துகிறார்கள் எனவும் ஆய்வு தெரிவிக்கின்றது. அதிகமாக உற்சாக பாணம் அருந்துபவர்களுக்கு தலைவலி மற்றும் தூக்க பிரச்சனைகள் வரலாம் என்று பி.எம்.ஜே. ஓபன் அறிக்கையின் ஆசிரியர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நுகர்வு மோசமான கல்வி விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல கடைகள் ஏற்கனவே 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானங்களை விற்பனை செய்வதை …

  14. Published by T Yuwaraj on 2022-02-11 21:21:02 மாத்தறை ஹக்மன நகரில் பொலிஸார் நடத்திய சோதனையில், சுகவீனம் காரணமாக உயிரிழந்த பிச்சைக்காரின் ஆடைகளில் இருந்தும், அவரிடமிருந்த பல்வேறு பைகளில் இருந்தும் சுமார் 400,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹக்மன, கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் மலை உச்சியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்ததாகவும், வெளியில் செல்லும் வழியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த நபரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நபருக்கு உறவினர்கள் …

  15. யாழில். நடமாடும் கஞ்சா வியாபாரி கைது! யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://athavannews.com/2022/1266360

  16. குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு 6 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (07-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, அதன் 21 வயது வரையிலான கல்வி, வளர்ப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழ…

  17. இங்கிலாந்தில் கேம்ரிஷ் நகரில் Travelodge விடுதி ஒன்றில் நிலம் கூட்ட பாவிக்கப்பட்டு வந்த தானியங்கி வக்கூம் கிளீனர்.. திறந்திருந்த கதவுக்குள்ளால்.. தப்பி ஓடிவிட்டது. நாள் கடந்தும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ரோபோ கிளீனர் தற்போது ஒரு பத்தைக்குள் செருகி இருந்த நிலையில் மனிதக் கிளீனரால் கண்டுபிடிக்கப்பட்டு.. மீண்டும் அதன் குடும்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாம். இதைப் போன்ற ஒன்று தான் தப்பி ஓடியுள்ளது. Robot vacuum cleaner escapes from Cambridge Travelodge. https://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-60084347

  18. 'தண்ணீருக்காக தன்னந்தனியாக வெட்டிய சுரங்கம்' - பத்மஸ்ரீ விருது பெறும் கர்நாடக விவசாயியின் உத்வேகக் கதை தண்ணீருக்காக தன்னந்தனியாக சுரங்கம் வெட்டி, தரிசு நிலத்தை மரப் பண்ணையாக மாற்றிய கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி அமை மகாலிங்க நாயக் பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளார். உத்வேகமூட்டும் இவரது வாழ்க்கைக் கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம். கடந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் கோவையைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி பாப்பம்மாள். தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து இயற்கையான உணவு என ஆரோக்கியமான முறையில் வாழ்ந்து வருகிறார் பாப்பம்மாள். விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட மூதாட்டி பாப்பம்மாளை கௌரவிக்கும் விதமாக பத்ம விருது வழங்கப்பட்டது. மூதாட்டி பாப்பம்மா…

    • 5 replies
    • 749 views
  19. வெளிநாட்டு மாப்பிள்ளை பூனைக்குட்டிக்கு செய்த வேலையால் பொன்னுருக்கை கைவிட்டு தப்பியோடிய பெண் வீட்டார் யாழில் பூனையால் குழம்பிய பிரான்ஸ் மாப்பிளையின் கல்யாணம்! ஓடித்தப்பிய மணமகள் யாழ் மானிப்பாய்ப் பகுதியில் ஓரிரு நாட்களில் திருமணம் ஆகவிருந்த பிரான்ஸ் மாப்பிளையின் கனவைக் குழப்பி மரணமடைந்தது பூனை ஒன்றால் நடக்கவிருந்த திருமணம் தடைப்பட்டு விட்டது. கடந்த வாரம் பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது கல்யாணத்திற்காக வந்திருந்த 32 வயதான மாப்பிளை பெண் பார்க்கும் படலம் முடிவடைந்து கல்யாணத்திற்கான ஆயத்த வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாப்பிளை தங்கியிருந்த வீட்டில் மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து பொன்னுருக்கு நடைபெற இருந்த நேரத்தில் வேட்டியுடன…

  20. மனித எச்சம் மீட்பு: மூவர் கைது செ.கீதாஞ்சன் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர். இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …

  21. யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல் – இருவர் காயம் – ஒருவர் கைது January 12, 2022 யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்றாம் வருடத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனும…

  22. நேர்த்திக்கடனில் நபரின் தலை துண்டிப்பு சித்தூர் நேர்த்திக் கடனில், ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர். அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞரான சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் நன்றாக மது அருந்தி முழு போ…

  23. கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு January 16, 2022 மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கயுவத்தை கடலில் நேற்றைமுன்தினம் (14) நீராடிய ஏழு சிறுவர்களில் கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவா்கள் இருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்தச.அக்சயன் (வயது 16), ஜீவானந்தா சுஜானந்தன் (வயது 16) (வயது 16) ஆகிய இரு சிறுவர்களது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (15) பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா்…

  24. கொழும்பை அச்சுறுத்தும் முதலைகளைப் பிடிக்க கடற்கரைகளைச் சுற்றி பொறிகள்! தெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெஹிவளை கடற்கரையில் நபர் தாக்கி கொன்ற முதலையைப் பிடிக்கவே வனவிலங்கு அதிகாரிகள் காலி முகத்திடல் கடற்கரையில் கூண்டு வைத்து வருகின்றனர் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். இதனையடுத்து, கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர், 14 அட…

  25. கொழும்பு துறைமுக நகரத்தின் காலி முகத்திடலை ஒட்டிய செயற்கைக் கடற்கரை பகுதியில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள், முதலை தண்ணீரில் இருந்து வெளியேறி, கரையில் குடியேறுவதை வெளிக்காட்டியுள்ளது. முன்னதாக வெள்ளத்தை, தெஹிவளை, கல்கிசை ஆகிய கடற்பரப்புகளில் மூன்று முதலைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கைக் கடற்கரையில் காணப்பட்ட முதலையானது, முன்னர் காணப்பட்ட முதலையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையில் உள்ள நீர் ஓடை மூலம் ஊர்வனங்கள் கடல் பகுதிகளுக்குள் நுழைவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவதான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.