செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
கொழும்பை அச்சுறுத்தும் முதலைகளைப் பிடிக்க கடற்கரைகளைச் சுற்றி பொறிகள்! தெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெஹிவளை கடற்கரையில் நபர் தாக்கி கொன்ற முதலையைப் பிடிக்கவே வனவிலங்கு அதிகாரிகள் காலி முகத்திடல் கடற்கரையில் கூண்டு வைத்து வருகின்றனர் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். இதனையடுத்து, கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர், 14 அட…
-
- 0 replies
- 258 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தின் காலி முகத்திடலை ஒட்டிய செயற்கைக் கடற்கரை பகுதியில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள், முதலை தண்ணீரில் இருந்து வெளியேறி, கரையில் குடியேறுவதை வெளிக்காட்டியுள்ளது. முன்னதாக வெள்ளத்தை, தெஹிவளை, கல்கிசை ஆகிய கடற்பரப்புகளில் மூன்று முதலைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கைக் கடற்கரையில் காணப்பட்ட முதலையானது, முன்னர் காணப்பட்ட முதலையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையில் உள்ள நீர் ஓடை மூலம் ஊர்வனங்கள் கடல் பகுதிகளுக்குள் நுழைவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவதான…
-
- 8 replies
- 528 views
-
-
பரஸ்பரம் விருப்பத்துடன் கப்பிள் ஷேரிங் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து புகார் வராமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார்கள் போலீஸார். கேரள மாநிலம் கோட்டயம் சங்கனாசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுகச்சால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் வேறு ஆண்களிடம் தன்னை பாலியல் ரீதியாக பகிருவதாகவும், அவர்கள் இயற்கைக்கு முரணாக தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், வேறு ஆண்களுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு 'வைஃப் ஸ்வாப்பிங்' என்ற பெயரில் பல கும்பல்கள்…
-
- 1 reply
- 484 views
-
-
புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக சின்னப்பா நாகேந்திரராசா, 03.01.2022 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தான் கல்விக்கற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர் பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியிருந்தார்.சுற்றிநின்றோர் மெய்சிலிர்த்த நேரமிது. தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, ம…
-
- 19 replies
- 1.2k views
-
-
கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர் 393 அடி 3 அங்குல உயரத்தில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தில் அதிக கேட்ச் பிடித்ததற்கான சாதனையை தான் முதன்முதலில் முயற்சித்ததாக திமுதி ஷனோன் ஜெபசீலன் கூறினார். 393 அடி மற்றும் 3 அங்குல உயரத்தில் இருந்து விழுந்த பந்தை வெற்றிகரமாக பிடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெபசீலன் இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 2019 ஆம் ஆண்டு பிரிட்டனின் கிறிஸ்டன் பாம்கார்ட்னர் அமைத்த 374 அடி சாதனையை முறியடித்…
-
- 1 reply
- 621 views
-
-
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது. அந்நேரம் அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார். அதன்போது, பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது. குறித்த ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகி…
-
- 5 replies
- 581 views
-
-
வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு December 28, 2021 யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்…
-
- 14 replies
- 1.1k views
-
-
உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை சிறுவன்: குவியும் பாராட்டுக்கள். இலங்கையின் நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் உலக வரைபடத்தில் நாடுகளை அடையாளம் காணும் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் மிக வேகமாக உலக நாடுகளை அடையாளம் காணுவதில் இந்த சாதனை நிலைநாட்டியுள்ளார். உலக வரைபடத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவ்னீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவ்வாறு உலக நாடுகளை அடையாள…
-
- 0 replies
- 204 views
-
-
குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடிய, யாழ் தாயும் இரு சிறுமிகளும், நீரில் போயினர்! December 31, 2021 ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்ற இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர். நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் போது நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர். மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யு…
-
- 0 replies
- 402 views
-
-
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் ஐந்து வயது கறுப்பு பூனையான கீத், கடந்த மூன்று ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்த திருட்டுப் பூனையினால், அதன் உரிமையாளர் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார். குறித்த பூனை தினமும் திருடி வரும் பொருட்களை, வீட்டின் முன்பாக ஒரு பெட்டியில் அவர்கள் வைத்து விடுகிறார்கள். பொருட்களை தொலைத்தவர்களும் அந்த வீட்டிற்கு நேராக வந்து, பெட்டியிலுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள், காலணிகள், என நீளும் இந்த பட்டியல், போதைப்பொருள் வரையும் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் இரும்பு தகடு பொருத்தப்பட்ட 2.5 கிலோகிராம் எடையுள்ள காலணியொன்றையும் அது திருடி சென்றுள்ளது. பூனையை எப்படி திருத்துவதென தெரியா…
-
- 14 replies
- 825 views
- 1 follower
-
-
மின்னல் தாக்கிய நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு - (காணொளி இணைப்பு) இந்தோனேஷியா ஜகார்த்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் 35 வயதான நபர் ஒருவர், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் பயணித்த வேளை அவரை மின்னல் தாக்கியது. மழை பெய்து கொண்டிருந்த போது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் அவர் சென்றுள்ளார். இதன்போது, திடீரென அவரை மின்னல் தாக்கியதில் தீப்பொறிகள் வெளிவந்தன. இருப்பினும் அவர் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்…
-
- 0 replies
- 236 views
-
-
மட்டக்களப்பு நகர பார் வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்ததுடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து பையிலி்ட்டு கொண்டு செல்ல முட்பட்ட குறித்த வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணையும் அவரது தந்தையையும், அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவரும் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இ…
-
- 12 replies
- 967 views
-
-
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகின்றன. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி பல சம்பவங்கள் சமீப காலங்களில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்கு, மகள் ஒருவர் வரன் தேடியதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. …
-
- 2 replies
- 404 views
-
-
சிறுப்பிட்டியில் கேக்வெட்ட கெலியில் வந்திறங்கிய பிறந்தநாள் பெண்..
-
- 3 replies
- 659 views
-
-
நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான். https://vampan.net/wp-content/uploads/2021/12/269565160_242147331382458_1406662015373078646_n.mp4?_=1 https://vampan.net/34938/
-
- 5 replies
- 529 views
-
-
தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த யாழ். இளைஞன் - பரிதாபமாக பறிபோன உயிர் தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் தான் தங்கியிருக்கும் அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார். எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறி…
-
- 8 replies
- 614 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 3 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப் போன்று குறித்த பெண் தொழிலுக்கு சென்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அப்பெண்ணை வழிமறித்த ஒருவர் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தன்னை பொலிஸ் உத்தியோக்கதர் என்று கூறி நபர், அப்பெண்ணை மிரட்டி அவர் செல்லும் வழியில் அவரை பின் தொடருமாறு …
-
- 4 replies
- 726 views
-
-
சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம் Posted on December 8, 2021 by தென்னவள் 23 0 சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு எந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு கூட ஒரு எந்திரத்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆம், சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் …
-
- 49 replies
- 2.4k views
- 2 followers
-
-
ஆமையுடன் கைது December 12, 2021 சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப காவல்துறைப் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது https://globaltamilnews.net/2021/170274
-
- 0 replies
- 513 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) நபர் ஒருவருக்கு கை விலங்கிட்டு, அவரின் காரிலேயே அவரைக் கடத்தி அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், 30 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பம்பலபிட்டி - லோரன்ஸ் வீதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும் 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு - திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, தனது காரை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் முக…
-
- 1 reply
- 331 views
-
-
காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள். அம்பாறை மாவட்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன. குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும் வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இம் மாதக் கடைசியில் அம்பாறை மாவட்டத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்ப…
-
- 6 replies
- 633 views
-
-
ஆலயத்தில் திருடிய பணத்தில் நகைகள் செய்து அணிந்து வலம் வந்தவர் கைது December 1, 2021 ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். “கொடிகாமம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆலயத்திலிருந்த பொருள்களும் திருட்டுப் போயிருந்தன. அதுதொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. …
-
- 4 replies
- 586 views
-
-
தலை வேற லெவல்ல போய்க்கிட்டிருக்கு.. ஐநாவின் சிறும்பான்மையினருக்கான பிரச்சனைகளுக்கான 14வது அமர்வில் கைலாசாவின் பிரதிநிதி . கீழே உள்ள ஐநா வீடியோவில்
-
- 2 replies
- 391 views
-
-
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. திசையன்விளை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் நம்பியாறு அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு நம்பியாறு கால்வாய் மூலம் குளங்களுக்குச் செல்கின்றன. கிணற்றின் உள்ளே செல்லும் தண்ணீர் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தின் குளம் நிரம்பிய நிலையில் அந்தக் குளத்தின் படுகையில் இருக்கும் தனியாருக்குச் சொந்தமான கிணற்றுக்குள் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. சுமார் 40 கன அடி தண்ணீர் அந்தக் கிணற்றுக்குள் சென்ற போதிலும், இதுவரை கிணறு நிறையாமல் இருப்பதால் அந்த அதிசய கிணறு உள்ள இடத்துக்கு சுற்றுப்புறப் பக…
-
- 0 replies
- 381 views
-
-
ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன், 22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது. 38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்…
-
- 67 replies
- 4.7k views
-