Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை: கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி அமெரிக்காவில் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பதிவு: ஜூலை 13, 2020 14:36 PM வாஷிங்டன், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்ப…

  2. கூரிய ஆயுதங்களுடன் நடமாடிய இருவர் கைது! கிளிநொச்சி – புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் https://newuthayan.com/கூரிய-ஆயுதங்களுடன்-நடமாட/

  3. வலைக்குள் சிக்கிய சிறுத்தை காட்டு விலங்குகளை வேட்டைக்காக பொருத்தப்பட்டிருந்த கம்பி வலைக்குள் சிறுத்தை ஒன்று இன்று காலை (12) சிக்கியுள்ளது. கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட நிலையிலுள்ள சிறுத்தையை உயிருடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வலையில் சிக்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசியேற்றி உயிருடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/வலைக்குள்-சிக்கிய-சிறுத்/

  4. 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை! பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வருகை தந்த சந்தேகநபர், அந்த சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமன்மார் சந்தேகநபரை கொட்டனால் அடித்து கொன்றுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/5-வயது-…

  5. புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடை…

    • 2 replies
    • 601 views
  6. யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் …

  7. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 11, 2020 14:02 PM புதுடெல்லி உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கொரோனா நோயாளிகள் மூலம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்ச…

  8. பெரமுனவின் ஆதரவாளர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு! வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று (10) இரவு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டிருந்தார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையென தேடிய போது சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ஜனக்க நந்தகுமாரவின் ஆதரவாளரான சுந்தரபுரத்தை சேர்ந்த நித்தியானந்தம் (34-வயது) என்ற நபராவார். https://newuthayan.com/பெரமுனவின்-ஆதரவாளர்-கிணற/

  9. யாழில் விபத்து! முதியவர் படுகாயம்..! யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளான யாழ் வைத்தியசாலை மற்றும் நொதோண் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர். இருந்தும…

  10. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண் ஐதராபாத் சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் சமீபத்தில் வீட்டிலிருந்து மாயமானார்.இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததோடு தீவிர விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது 35 வயது பெண் ஒருவருடன் அந்த பெண் ஹைதராபாத்துக்கு சென்றது தெரியவந்தது.இது தொடர்பாக அவர்களை காரில் அழைத்து சென்ற ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவர் ஐதராபாத் முகவரியை கொடுத்தார். பின்னர் போலீசார் அங்கு சென்ற போது அதிர்ச்சியடைந்தனர்.காரணம் இரண்டு பெண்களும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது, மேலும…

  11. கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளைபாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். பதிவு: ஜூலை 09, 2020 16:26 PM லண்டன் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, துஇங்கிலாந் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து…

  12. ஐந்து வயது மகளை வெட்டிய தந்தை கைது! முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் நேற்று முன் தினம் (08) குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது 5 வயது மகளை கத்தியால் வெட்டியுள்ளார். சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக் குத்துக்குள்ளான சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். https://newuthayan.com/ஐந்து-வயது-மகளை-வெட்டிய-த/

  13. யாழில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/யாழில்-கத்திக்-குத்தில்/

  14. மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவச வடிவில் பரோட்டா விற்பனை மதுரையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பதிவு: ஜூலை 09, 2020 14:39 PM மதுரை, மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ண…

  15. ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...? தான் வேலைபார்க்கும் அனைத்து இடங்களிலும் தன்னை சுற்றி உள்ள ஆண்கள் மீது பாலியல் புகார் கூறும் பழக்கம் கொண்டவர் ஸ்வப்னா. பதிவு: ஜூலை 09, 2020 11:25 AM திருவனந்தபுரம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மத…

  16. வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் . இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவ…

  17. இரட்டை குட்டிகளை பெற்ற யானை மின்னேரிய தேசிய பூங்காவில் யானை ஒன்று இரட்டை யானைக் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வரலாற்றில் யானை ஒன்றுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். https://newuthayan.com/இரட்டை-குட்டிகளை-பெற்ற-ய/

  18. யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/146474

    • 0 replies
    • 366 views
  19. தெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை! யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மாவை கலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த 9 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ளது. இன்று (07) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 9 ஆடுகள் கொல்லப்பட்டதுடன் ஐந்து ஆடுகள் காயமடைந்துள்ளது. https://newuthayan.com/தெல்லிப்பழையில்-9-ஆடுகளை/

    • 12 replies
    • 2.1k views
  20. சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்.. அம்பாறை- நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் மோதலாக மாறிய நிலையில் இருவரும் சண்டியர்களாக மாறி மோதிக்கொண்டனர். மோதல் முடிந்தவுடன் இரு மருத்தவர்களும் ஏட்டிக்குபோட்டியாக ஆளுக்கொரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இரு மருத்துவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பணி நிமிர்த…

    • 2 replies
    • 449 views
  21. இரத்ததானம் வழங்கிய யாழ் டோனி ரசிகர் மன்றம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாளான இன்று (07) யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தினர் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியுள்ளனர். அத்துடன் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கி வைத்தனர். https://newuthayan.com/இரத்ததானம்-வழங்கிய-யாழ்/

  22. தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார். இதன்போதே அவரது மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர் வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு எந்ததொரு நோயும் இருக்கவில்லை. கடந்த 2…

  23. பாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்த்துள்ளார். இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் யாழ் பிராதான பஸ் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்து அதிஸ்ரலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார். தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை…

  24. உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 14:11 PM நியூயார்க் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம…

  25. ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை கண்டி – கடுகஸ்தோட்ட பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு 17 வயதுடைய சிறுவனும், 16 வயதுடைய சிறுமியுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றில்-குதித்து-சிறுவனு/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.