செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் கைது வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது குத்திக் கொல்லப்பட்ட பி.சி. கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்னர் எசெக்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமையன்று, லண்டன் மற்றும் நாடு முழுவதும் பல அமைதியான இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த போராட்டத்தின்போது 2017 வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட கீத் பால்மரின் நினைவிடத்திற்கு அருகில் ஒருவர் சிறுநீர் கழித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்…
-
- 0 replies
- 222 views
-
-
கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க நேரில் வரச் சொன்னதால் 100 வயது மூதாட்டியை கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்ற மகள் உதவித்தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுக்க நேரில் வரச் சொன்னதால், 100 வயதை தாண்டிய மூதாட்டியை கட்டிலோடு வங்கிக்கு மகள் இழுத்துச் சென்ற உருக்கமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: ஜூன் 15, 2020 03:30 AM புவனேசுவரம், என்னதான் விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், மனிதர்களின் மனம் மாறாவிட்டாலோ, விசாலமாகாவிட்டாலோ மக்களின் அவலங்கள் தீரப்போவது இல்லை என்பதை உணர்த்தும் உருக்கமான இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்து உள்ளது. கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏழைகளின் வாழ்வாதாரத்த…
-
- 0 replies
- 320 views
-
-
யாழில் அதிசயம் - படையெடுக்கும் மக்கள் யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145156?ref=imp-news
-
- 0 replies
- 288 views
-
-
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி: பெண்கள் உட்பட 08 பேர் கைது கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் 27 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் மற்றும் இரத்மலனை, அம்பலாந்தோட்டை, மாத்தறை, கரந்தெனிய, கும்புறுப்பிட்டிய,…
-
- 5 replies
- 606 views
-
-
கேரளாவில் உருவான கொரோனா தேவி ஆலயம்; கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. பதிவு: ஜூன் 13, 2020 11:53 AM திருவனந்தபுரம் சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர். வல்லரசு நாடுகளே கொரோனா வைரசுக்கு நடுங்கி வருகின்றன. பணக்காரன் முதல் ஏழை வரைவேறுபாடு இன்றி அனைவருக்கும் கொரோனா ஒரு அச்சமாக மாறி உள்ளது. …
-
- 1 reply
- 332 views
-
-
இறந்தவர்களை வெளியே எடுத்து குடும்பத்தாருடன் கொண்டாடப்படும் திருவிழா! இந்தோனேசியாவின் டோராஜாவில் வசிப்பவர்கள் தங்கள் இறந்த அன்புக்குரியவர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்லறைகளில் இருந்து வெளியே அழைத்துச் சென்று கொண்டாடுகிறார்கள். திருவிழா ‘மானீன்’ என அழைக்கப்படுகிறது. இறந்தவர்கள் சவப்பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டு, புதிய ஆடைகள் அணிவிக்கப் படுவார்கள் . தொலைதூரத்திலிருந்து வரும் உறவினர்கள் விருந்துண்டு, கதைகளை பரிமாற்றிக்கொள்ள வருகிறார்கள். இறந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சிகரெட்டுகள் கூட வழங்கப்படுகின்றன, ஏனென்றால் ஆவி உடலுக்கு அருகில் உள்ளது மற்றும் கவனிப்பை விரும்புகிறது என்பதால். (மருந்துகள் பயன்படுத்தி உடல்…
-
- 4 replies
- 660 views
-
-
மேக கூட்டங்களை கொண்டு நிலநடுக்கங்களை துல்லியமுடன் கணிக்கும் ஆச்சரிய மனிதர் உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சித்தன்புரா பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது (வயது 62). அட்டை பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், நிலநடுக்கங்களை பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தனது சிறு வயதில் இருந்து மேகங்களை கவனிக்க தொடங்கினார். பொழுதுபோக்காக இதனை மேற்கொண்ட அவர் கடந்த 20 வருடங்களாக மேக கூட்டங்களின் அளவு, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு நிலநடுக்கங்கள் மற்றும் அவற்றின் அடர்த்தி ஆகியவற்றை துல்லியமுடன் கணித்து கூறுகிறார். …
-
- 0 replies
- 287 views
-
-
நாயை... கடத்தி, கப்பம் – யாழில் சம்பவம். யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர், 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு வயோதிப தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ‘பொமேரியன்’ இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய், வீட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போயுள்ளது. அதனை அவர்கள் அயலில் தேடி அலைந்து எங்கும் கிடைக்காததால் மனமுடைந்திருந்தனர். நாய் காணாமல் போன அன்றைய தினம் மாலை, அவர்கள் வீட…
-
- 3 replies
- 493 views
-
-
ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்சி ஆசிரியை ஒருவர் மாதம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 05, 2020 13:40 PM லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங…
-
- 1 reply
- 555 views
-
-
இலங்கை வான்பரப்பில் அடையாளம் காணப்படாத உயிரினம் – கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடைய…
-
- 1 reply
- 388 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலி: எதிர்காலத்தில் பயணம் என்பது எப்படி இருக்கும்? ஷாம்சுதீன் கடந்த 40 வருடங்களாக சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இவர் சுற்றிக் காண்பித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில், சுற்றுலாத் துறையே முற்றிலும் மாற்றம் காணலாம் என ஷாம்சுதின் நம்புகிறார். பொது முடக்கம் நீக்கப்பட்டாலும் வரும் காலங்களில் சுற்றுலாத்துறை முன்பு இருந்தது போல இருக்காது என அவர் கூறுகிறார். மக்கள் சுற்றுலா சென்றாலும் குழுவாகச் செல்லாமல் தனித்தனியாகவே செல்வார்கள் என்கிறார் அவர். ‘’எதிர்காலத்தில…
-
- 1 reply
- 344 views
-
-
சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் விளையாட்டு விபரீதமானது: ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பதிவு: ஜூன் 06, 2020 11:38 AM கவுகாத்தி அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆலோசகரும், அறுவை சிகிச்சை நிபுணரான வாலியுல் இஸ்லாமிடம் சில நாட்களுக்கு முன்பு மொபைல் சார்ஜர் கேபிளை தவறாக உட்கொண்டதால் அவருக்கு வயிற்று வலி இருப்பதாகத் கூறினார். இதைதொடர்ந்து டாக்டர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து உள்ளார்.ஆனால் அவரது இரைப்பைக் குழாயில் எதுவும் கிடைக்காததால் அந்த நபர் பொய் சொலவதாக நினைத்தார். ஆனால் நோயா…
-
- 0 replies
- 351 views
-
-
இனி பொம்மைகளுடன் சாப்பிடலாம்! கனி கரோனா பெருந்தொற்றின் காரணமாக பல துறைகள் தலைகீழ் மாற்றங்களை எதிர்கொண்டுவருகின்றன. அந்த வகையில் உணவகத் துறை, இந்தப் பெருந்தொற்று காலத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. உலகம் முழுவதும் உள்ள உணவகங்கள் இந்த நேரத்தில் இயங்குவதற்குப் பல புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன லித்துவேனியத் தலைநகர் வில்னியஸின் மேயர், அந்த நகரின் சில இடங்களில் உணவகங்கள் வெளிப்புற 'கஃபே'க்கள் அமைப்பதற்கு ஏப்ரலில் முதற்கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்நகரில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், உணவகங்கள் உட்புறமாக இயங்குவதற்குப் புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளன. உணவகங்களில் தனிமனித இடைவெ…
-
- 0 replies
- 799 views
-
-
-
- 7 replies
- 789 views
-
-
டிக்டாக் செயலியால் காணாமல் போய் 2 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த வாய் பேச முடியாத முதியவர் அருண் சாண்டில்யாபிபிசி தெலுகு 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவில் பலர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி மகிழ்கின்றனர், பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் தெலங்கானாவில் உள்ள இந்த குடும்பம் டிக் டாக் செயலிக்கும் அதி…
-
- 1 reply
- 412 views
- 1 follower
-
-
உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள் இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது. மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா... என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொரு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து கிரங்கித்தான் போவார்கள். பிரம்மன் இயற்கையிலேயே அழகாக படைத்த பெண்களே தங்களை மேலும் மெருகேற்றி அந்த பிரம்மாவையே பிரம்மிக்க வைத்துவிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக உதட்டுக்கும், கண்ணுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே... அடேயப்பா...பெண்…
-
- 4 replies
- 1.4k views
-
-
நடிகையை பார்க்க, இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை! தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். எனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்த்துள்ளனர். இந்நி…
-
- 14 replies
- 1.8k views
-
-
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா(72).இவர் இரண்டு நாட்களுக்கு முன் 52 வயது நபரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அவரின் தலையை துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார். பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.அப்போது போலீசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரபலி கேட்டார், அப்படி செய்தால…
-
- 0 replies
- 359 views
-
-
மகள், பேரக்குழந்தைகள் என 4 பேருக்காக 180 சீட் கொண்ட விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர் 80 இருக்கைகள் கொண்ட விமானத்தை தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ. 20 லட்சத்திற்கு வாடகைக்கு ஒரு தொழில் அதிபர் எடுத்துள்ளார். 4 பேருக்காக விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர் கொரோனா வைரஸ் ஊர்டங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கி கொண்டது. கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள…
-
- 0 replies
- 413 views
-
-
இரட்டைக் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என பெயர் சூட்டிய பெற்றோர் கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. மீரட்டில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்கள் விநோத பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதற்கமைய ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என்ற பெயர்களை தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு முறையே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர். இது தொடர்பாகக் கூறும்போது, ‘இந்த இரண்டு பெயர்கள், அதாவது குவாரண்டைன் மற்றும் சானிட்டைசர…
-
- 0 replies
- 264 views
-
-
தெஹ்ரான் ஈரானின் வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரில் தூங்கி கொண்டிருந்த அஷ்ரஃபி என்ற 13 வயது சிறுமியை தந்தை அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார். மகளை கொலை செய்த பின்னர், தந்தை கையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட 13 வயதான ரொமினா அஷ்ரஃபி காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொள்வதற்கு தனது தந்தையின் எதிர்ப்பைத் தொடர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபி விரும்பியவர் 35 வயதுடையவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபியை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டில் தனக்…
-
- 0 replies
- 354 views
-
-
நாகத்தின் தாகத்திற்கு தண்ணீர் வழங்கிய வனத்துறை அதிகாரி! வைரலாகும் காணொளி!
-
- 1 reply
- 435 views
-
-
யாழ். மயிலங்காடு வேம்படி ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தான அம்மன் கடந்த வியாழக்கிழமை(21) மாலை திடீரெனக் கண் திறந்து பார்ப்பதாகத் தகவல் பரவியிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் குறித்த காட்சியை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் அம்மனின் கண்கள் மூடிப் பின்னர் மீண்டும் திறந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை(22) காலை-07 மணியளவில் மூலஸ்தானத் திருக்கதவு திறக்கப்பட்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்களினால் பிராயச் சித்த அபிஷேகம், பூசை வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன. அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் அம்மனின் கண் மீண்டும் மூடப் பெற்றது. அன்றைய தினம் பிற்பகல்-03.30 மணி முதல் ஆ…
-
- 0 replies
- 435 views
-
-
ஊரடங்கில் ஊருக்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்; மக்கள் அலறியடித்து ஓட்டம் ஆந்திர பிரதேசத்தில் வன பகுதியில் இருந்து 15 அடி நீள ராஜநாகம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்ததில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். பதிவு: மே 26, 2020 10:25 AM விசாகப்பட்டினம், நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 3 ஆயிரத்து 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1,896 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 56 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். ஆந்திர பிரதேசத்தின் செருக்குப்பள்ளி வனப்பகுதியில் …
-
- 0 replies
- 562 views
-
-
-
- 0 replies
- 396 views
-