செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7130 topics in this forum
-
2019-10-08@ 17:07:38 ரோம்: பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா சபையில் உரையாற்றிய இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மையை இத்தாலியில் பாலத்திற்கு அடியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு நடந்தது. இதில், சுவீடனில் இருந்து வந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக பேசினார். மேலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு என்ன தைரியம்? என உலக நாடுகளை கடுமையாக சாடினார். இதற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இவரால் ஈர்க்கப்பட்ட பள்ளிச் சிறார்கள், உலகின் பல்வேறு பகுதி…
-
- 0 replies
- 348 views
-
-
அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமானோரை கொலைசெய்த முதியவர் – குற்றத்தை ஒப்புக் கொண்டார்! அமெரிக்காவின் ரெக்ஸாஸைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த நாட்டின் வரலாற்றில் அதிகளவான கொலைகளை செய்தவர் என்று அறியப்பட்டுள்ளார். 79 வயதான சாமுவெல் லிட்டில் (Samuel Little) என்ற குறித்த முதியவர் 93 பேரை கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். 1970 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே அவர் இந்த கொலைகளைச் செய்ததாக தெரியவந்துள்ளது. அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். அவர் கொலை செய்ததாகக் கூறப்பட்ட பெண்களின் உயிரிழப்புகள் போதைப்பொருள் காரணமாகவும் விபத்துகளால் நிகழ்ந்ததாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 2014 ஆம் ஆண்டில் அவர் மூன்று கொலைகளுடன் தொடர்புபட்டிருந்த நி…
-
- 1 reply
- 391 views
-
-
ஐநா சபையில் மோடி *"யாதும் ஊரே யாவரும் கேளீர்"* என பேசுவதற்கு முன்னால்... ஐநா சபையின் முகப்பு வாசலில் எழுதப்பட்ட ஒரே ஒரு வாக்கியம் *"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும், ரஷ்யாவில் உள்ள lumbha யூனிவர்சிட்டி வாசலிலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற வாசகம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் சிறப்புகளில் சில உங்கள் பார்வைக்கு ... சீனாவில் தமிழ் வானொலி சேவை இந்திய நேரப்படி 7 30 லிருந்து 8 30 வரை தினமும் நடைபெறுகிறது. அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா எனும் அருங்காட்சியகத்தின் வாசலில் "கற்றது கை மண் அளவு" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பல்கலைக்கழகத்தின் வாசலில் சங்கத் தமிழின் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோய்களை குணப்படுத்தும் விசேட ஆற்றல் கொண்ட 344 வயதான ஆமை உயிரிழப்பு! 344 வயதான அலக்பா என்ற ஆமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, அலக்பா என்ற பெண் ஆமை மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது. ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மாத்திரம் இரண்டு வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பாதுகாத்து வந்தனர். ஆபிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் விசேட ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்து ஆமையை பார்வையிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் அலக்பா என்ற குறித்த ஆமை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த…
-
- 1 reply
- 352 views
-
-
பொலியாவில் கரடு முரடான மலைப் பாதையில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆண்டஸ்(Andes) மலைத்தொடரில் வளைவு நெளிவான பாதையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. மழை, மூடுபனி, கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்த இந்த மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி மிர்தா முனோஸ் பங்கேற்றார். தனது மகன் திடீரென மரணமடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காக சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள மிர்தா முனோஸ், தனது 6 பேரக்குழந்தைகளுடன் சைக்கிள் பந்தயம் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். https://w…
-
- 0 replies
- 312 views
-
-
எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்தது சரக்கு விமானம் – ஐவர் உயிரிழப்பு! உக்ரைனில் வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான குறித்த விமானம் ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்தது. பயண தூரம் மிகவும் அதிகம் என்பதால் உக்ரைன் நாட்டின் லிவில் நகரில் உள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து துருக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், துருக்கியின் லிவில் விமான நிலையத்தை அடைய 1 கி.மீ தொலைவு இருந்தபோது விமானத்தின் எரிபொருள் முற்றிலும் தீ…
-
- 0 replies
- 334 views
-
-
பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மனித குரங்குகள் அமர்ந்திருப்பது போல கேலியாக சித்தரித்து வரையப்பட்ட ஓவியம், சுமார் 85 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற பொதுமக்கள் அவையில் எம்.பி.க்களுக்குப் பதிலாக, மனித குரங்குகள் அமர்ந்திருப்பது போலவும், அந்த மனித குரங்குகளை சபாநாயகர் இருக்கையில் இருக்கும் இன்னொரு மனித குரங்கு வழிநடத்துவது போலவும் சித்தரித்து 13 அடி நீளத்தில் கடந்த 2009ம் ஆண்டில் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தை Banksy என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத ஓவியர் வரைந்திருந்தார். பிரபல Sotheby நிறுவனத்திடம் இருந்த ஓவியம், ஏலத்தில் விடப்பட்டது. சுமார் 13 நிமிடங்களில் அந்த ஓவியம், இந்திய மதிப்பில் 74.39 கோடி ரூபாய்க்…
-
- 1 reply
- 563 views
-
-
ஈராக்கில் 9 வயது முதலான சிறுமிகளை ஒரு மணி நேரத்துக்கு வரதட்சணை கொடுத்து இன்பத் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மதகுருக்கள் அனுமதிப்பதாக பிபிசி துப்பறிந்த ஆவணப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி ஐ பிளேயரில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் படி, ஈராக்கின் புனிதமான இடங்களில் ஒன்றான கர்பலாவுக்குச் சென்ற பிபிசி பத்திரிக்கையாளர் ஆவணப்படத்தை யாரும் அறியாமல் படம்பிடித்தார். இன்பத் திருமணம் என்பது மனைவியை விட்டு விலகியிருப்பவர், ஏதேனும் சிறுமியை தன் தற்காலிக மனைவியாக்கி சுமார் ஒரு மணி நேரம் முதல் அவருடன் உறவு கொள்வதாகும் என விளக்கமளித்துள்ளார். இதற்காக வரதட்சணையை அச்சிறுமிக்கு வழங்குதையும் சுட்டிக்காட்டினார். ஈராக்கில் தடை செய்யப்பட்ட இன்பத் திருமண முறையை பத்தி…
-
- 0 replies
- 288 views
-
-
பெண்கள் இருவரும் தங்களது பயணத்தை அகமதாபாத்தில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பர்தோலி என்ற இடத்தில் தொடங்கினர். முதல் நாள் மாலை 5 மணிக்கு தொடங்கிய பின்னோக்கிய ஒட்டம் மறுநாள் இரவு 9 மணிக்கு தண்டி என்ற இடத்தில் முடிந்தது. பிரதமர் மோடிதான் தங்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தார் என்று பெண்கள் கூறியுள்ளனர். Bardoli-Dandi: கின்னஸ் சாதனைக்காக குஜராத்தை சேர்ந்த 2 பெண்கள் 13 மணி நேரம் பின்னோக்கி ஓடியுள்ளனர். இந்த 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார் என்று அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். ட்விங்கிள் தாகர் மற்றும் ஸ்வாதி தாகர் என்ற அந்த இரு பெண்கள் தங்களது பயணத்தை…
-
- 3 replies
- 572 views
-
-
சீனாவில் முன்னாள் மேயரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம் பறிமுதல்! சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம், பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைக்குவின் முன்னாள் மேயரான 58 வயதான ஸாங் குய், என்பவரின் வீட்டிலிருந்தே குறித்த பெருமளவான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸாங் குய்யின் வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டிலிருந்து தங்க பிஸ்கட்டுகள், நகைகள் என 13.5 தொன் தங்கத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதன்போது, 37 பில்லி…
-
- 0 replies
- 179 views
-
-
கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்..! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது ! தங்களின் கணவர் என நினைத்து மனைவிகள் வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி பழனியம்மாள். இவரது வயது 42. கணவன், மனைவி இருவரும் ஒரு வேலை விஷயமாக சமீபத்தில் மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது ரங்கசாமி பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்திருந்தார். வழியில் பெட்ரோல் தேவைப்பட்டதால், தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு பங்க்கிற்கு ரங்கசாமி சென்றுள்ளார். ஆனால் அவ…
-
- 19 replies
- 2.3k views
-
-
உக்ரேன் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க வயதான பெண்ணை திருமணம் முடித்த இளைஞர்! உக்ரேனில் இளைஞர் ஒருவர் கட்டாய ராணுவ சேர்க்கையை தவிர்க்கும் முகமாக வயதான பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் மேற்கு – மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த 24 வயதான இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக 81 வயதான மூதாட்டியை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரேனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டமாகும். அதேவேளை, ஒரு ஆண் உடல் ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து, அவரை கவனித்து வந்தால் அந்த ஆணுக்கு கட்டாய ராணுவ சேவையில் இரு…
-
- 1 reply
- 493 views
-
-
17 வருடங்கள் குகையில் மறைந்திருந்த குற்றவாளியை கண்டுபிடித்த ஆளில்லா விமானம்! சீனாவில் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு பொலிஸாரிடமிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த ஒருவரை ஆளில்லா விமானத்தின் காணொளிகளைக் கொண்டு சீன பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சீனா பொலிஸாரின் இந்த சாதுர்யமான நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள 63 வயதான சாங் ஜியாங் என்பவர், 2002 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் ஜியாங் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்…
-
- 0 replies
- 312 views
-
-
பிரான்ஸ் "ஸ்பைடர் மான்" ஜேர்மனியில் கைது! பிரான்ஸ் ஸ்பைடர் மான் என அழைக்கப்பட்டும் Alain Robert கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் உள்ள Frankfurt skyscraper கட்டிடத்தில் Alain Robert 30 நிமிடங்களில் 152 மீற்றர் உயரம் ஏறியுள்ளார். அது அக்கட்டடத்தின் 42 ஆவது தளம் அமைந்துள்ள இடம் எனவும், தரையில் இருந்து 500 அடி உயரம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இன்றி அவர் கட்டிடத்தில் ஏறியதை அடுத்து, ஜேர்மனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக இவர் உலகின் மிகப்பெரிய கட்டிடமான பேர்ஜ் கலிஃபா (Burj Khalifa) இல் ஏறியதுக்…
-
- 1 reply
- 604 views
-
-
‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?! மனைவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் செல்போனுக்கு அனுப்பிய வில்லன் யாரென்று தெரிந்து கொள்ள செய்தியை முழுமையாக படியுங்கள். பி.என்.எஸ்.பாண்டியன் Updated on : 25 September 2019, 10:37 AM கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு தினந்தோறும் அவர் மனைவி உடைமாற்றும் நிர்வாண வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன. இதனால் திடுக்கிட்டுப் …
-
- 6 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 316 views
-
-
தந்தையின் உயிரை காப்பாற்றிய கைக்கடிகாரம் குறித்து மகன் பெருமிதம்! அமெரிக்காவில் தந்தையொருவரின் உயிரை காப்பாற்ற அப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியதாக அவரது மகன் “பேஸ்புக்”கில் நெகிழ்ச்சியுடனும் பெருமிதமாகவும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரை சேர்ந்த பொப் என்பவர் அண்மையில் விபத்தொன்றில் சிக்கி மீண்டு வந்தமை குறித்து அவரது மகன் கேப் பர்டெட் என்பவர் கைக்கடிகாரத்தின் தொழினுட்பம் குறித்து பாராட்டியுள்ளார். அண்மையில் கேப், தனது தந்தையின் வருகைக்காக வீட்டில் காத்திருந்தார். அப்போது பொப் அணிந்திருந்த அப்பிள் கைக்கடிகாரத்தில் இருந்து கேப் பர்டெடுக்கு ஒரு குறுந்தகவல் கிடைக்கப்பெற்றது. அதில் பொப் அணிந்திருந்த அப்பிள் கைக்கடிகாரம் க…
-
- 0 replies
- 438 views
-
-
அவுஸ்ரேலியாவின் பொப் பாடல் சகோதரிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றம்! அவுஸ்ரேலிய சிட்னி விமான நிலையத்தில் வைத்து பொப்பிசை பாடகிகளான இரண்டு சகோதரிகள் விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பொப்பிசை பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகியோர் இரட்டை சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா சகோதரிகள் சிட்னி விமான நிலையத்திற்கு சென்று, குவாண்டாஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறி பயணத்திற்கு தயாராகினர். அந்த தருணத்தில் விமான பணி பெண் ஒருவருக…
-
- 0 replies
- 255 views
-
-
60வயது கிழவன் தனது தங்கைச்சியின் மகளை கர்ப்பம் ஆக்கி விட்டு லண்டனுக்கு திரும்பி வந்தவருக்கு நடந்த நிலையை பாருங்கோ , 2009ம் ஆண்டு இறுதி கட்ட யுத்ததில் தனது பெற்றோர சிறு வயதிலே இழந்த பிள்ளைக்கு , லண்டனில் இருந்து ஊருக்கு போன அந்த பிள்ளையின் சொந்த மாமா தனது தங்கைச்சியின் பிள்ளை என்று கூட பார்க்காம அந்த பிள்ளையின் விருப்பம் இன்றி அந்த சின்ன பிள்ளையுடன் காம வெறியாட்டம் ஆடி இருக்கிறார் , அந்த கிழடு நான் வசிக்கும் நாட்டில் பென்சன் எடுத்து கொண்டு லண்டனில் வசிக்கிறார் , அந்த கிழடு எப்ப லண்டனில் இருந்து இங்கை வருவார் என்று காத்து இருந்த நாங்கள் , அவர மடக்கி போட்டு குத்த நல்ல திட்டம் போட்ட ந…
-
- 144 replies
- 16.4k views
- 1 follower
-
-
பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது! இத்தாலியில் வனப் பகுதியொன்றில் பன்றி வேட்டைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் வைத்த குறி தவறி அவரது தந்தையின் உயிரை காவு கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சந்தேகநபர் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று இரண்டு பேரும் தென் மாகாணமான சலேர்நோவில் உள்ள போஸ்டிக்லியோனில் காணப்படும் அடர்ந்த புதர் பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புதர் பகுதியில் ஏதோவொன்று அசைவதை அவதானித்த இளைஞன் தனது துப்பாக்கியை இயக்கியுள்ளான். அது பன்றி என நினைத்து அந்த இளைஞன் இலக்கு வைத்த நிலையில், மறுமுனையில் வேட்டையில் ஈடுபட்டிருந்த தந்தையின் மீது துப்பாக்கி குண்டு தாக்கியுள்ளது.…
-
- 0 replies
- 290 views
-
-
(ஜெயந்தி) ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும். புதிய முயற்சியாக ஆண்கள் விரும்பி அணியும் தொப்பிகளில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழுக்கைகளில் முடி வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தானாக சிறியமின்கலன்கள் மூலம் மின்னை உற்பத்திசெய்து உச்சந்தலையில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொப்பி வழுக்கைத்தலையில் ஒரு மாதத்திற்குள் முடியை மீண்டும் வளரவைக்கும் என ஆராய்ச்சியா…
-
- 1 reply
- 352 views
-
-
கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் மரா என்ற தேசிய விலங்கியல் பூங்காவில், வெள்ளை நிற புள்ளிகளுடன் அரிய வகை வரிக்குதிரை வளர்ந்து வருவதாக கூறி, அதுதொடர்பான புகைப்படத்தை அண்மையில் பூங்கா நிர்வாகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதனை கண்டு ஆச்சரியப்பட்ட பலரும், அதனை நேரில் படம் பிடிக்க பூங்கா நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தகவலை உண்மை என உறுதி செய்த சுற்றுலா வழிகாட்டியும், புகைப்பட கலைஞருமான ஆன்டனி டோரா என்பவர், இந்த அரிய வகை வரிக்குதிரையை முதன் முதலில் பார்த்து, புகைப்படம் எடுத்தது நான் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், வரிகளுக்கு பதில் வரிக்குதிரையின் உடலில் வெள்ளை நிற புள்ளிகளை பார்த்தபோது, இடம்பெயர்வ…
-
- 1 reply
- 470 views
-
-
கடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு September 22, 2019 அமெரிக்க இளைஞர் ஒருவர் தன்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் என்பவர் தன் தோழி கெனிஷாவுடன் தன்சானியாவில் உள்ள பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந’;தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் நீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்து தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் நீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்த …
-
- 1 reply
- 360 views
-
-
பி.வி.சிந்துவை தூக்கிட்டு வந்து கல்யாணம் செய்யாமல் விடவே மாட்டேன்... கலெக்டரிடம் கெஞ்சி ரவுசு பண்ணும் ராமநாதபுரம் தாத்தா..! பிரபல பேட்மின்ண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். தெலங்கானாவை சேர்ந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று பெறுமை சேர்த்தார். ஏற்கனவே பேட்மிண்டனில் பல்வேறு சாதனை புரிந்த பி.வி.சிந்து இந்த சாதனைக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் புகழ்பெற்று விட்டார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம்,…
-
- 9 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து…
-
- 8 replies
- 1.3k views
-