மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size][size=2] [size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள…
-
- 0 replies
- 922 views
-
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012 தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள் தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள் அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள் காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள் தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன எமது தேசப்புதல்வர்களின் நாள் இந்த உன்னத மான புனிதமான நாளிலே அந்த மாவீரர…
-
- 37 replies
- 6.1k views
- 1 follower
-
-
மாவீரனே! மாவீரனே! -நீ மண்ணின் மைந்தனே! சாவேயுனைக் கரையாதடா-எங்கள் சந்ததிக்கே நீ உரைகல்லடா! வாழ்வுக் காகவே நீ வாழ்ந்த தில்லையே!-அன்னை தாழ்வை நிமிர்த்தவே-உயிர் தந்த பிள்ளையே! இந்தப் பொழுதிலே உன் இறக்கை முளைக்குதே! கந்தக் கோட்டத்தில் உன் கதைகள் கேட்குதே! விழிகள் உகுத்தநீர் வீழ்ச்சி காண்குதே! ஒளிகள் பொருந்திய உன் உயிரும் அழைக்குதே! சந்நிதி மருங்கில் உன்றன் சார்சிதை அழித்தும் விட்டார்! எம்மனச் சிறையில் உன்னை எவரடா அழிக்கக் கூடும்! இராட்சதர் வந்து எங்கள் இனத்தையே அழித்தும் விட்டார்! பிராட்டியும் கோனும் நின்ற பெருநிலம் மடக்கி விட்டார்! அரக்கர்கள் வருவார்! வந்து அசுரர்கள் ஆக நிற்பார்! இரக்கமில் லாதராகி எங்கள் …
-
- 0 replies
- 792 views
-
-
[size=5]யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. [/size] [size=5]உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. [/size] [size=5]சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.[/size] [size=5]ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம். எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்கள…
-
-
- 9 replies
- 1.7k views
-
-
[size=4]தமிழர்கள் வாழும் இடமெங்கும் தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழீழத் தாயகத்தில் மாவீரர் நாளை வெளிப்படையாக நினைவுகொள்ள முடியாவிட்டாலும், தங்கள் ஆழ்மனத்திற்குள்ளே பூசிக்கின்ற நாளாக இருக்கும்.[/size] [size=4]தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளில் மிகவும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.[/size] [size=4]தமிழீழ விடுதலைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்படுகின்ற நிலைக்கு வந்தபோதும், தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை வெவ்வேறு முனைகளில் நகர்த்துவதற்கான உத்வேகத்…
-
- 1 reply
- 798 views
-
-
வேகுந்தீ ஊடேயும் ஆகு(ம்)தி யானீரே வேங்கைம கர்க்கென்றும் வீழ்விலை யே! சாகுந்தீ ஆனாலும் போகும்பு லிக்கென்றும் சாவில்லை யாமிது சத்திய மே! தாகம்தீன் தெரியாது தூரம்தான் சலியாது போகும்தி சைகாணும் சூரியர் ரே! மோகம்பெண் நாடாது வேள்விக்குக் கோடாது வேருக்குள் நீராகும் மாவீர ரே! வீட்டினுள் பெண்களாய் வீழ்ந்துகி டக்காமல் நாட்டுக்காய் உதிர்ந்த நாரிய ரே! காட்டிக்கொ டுப்பாரும் கண்டதி சைக்குள்ளும் கால்கள்ப தித்தவெம் காரிகை யே! அண்ணன்தி சையோடும் ஆகிப்ப றந்தேகும் வண்ணக்கி ளியான மாதுக ளே! மண்ணின்ம டிக்குள்ளே மானப்போர் செய்திட்ட வஞ்சிக்கு என்றென்றும் சாவிலை யே! செங்களத் தின்னுயிர் சேரம ரித்திட்ட எங்களின் பிள்ளைக ளானவ ரே! இங்குபு லத்தெங்கும் ஈகச்…
-
- 2 replies
- 859 views
-
-
தன்னிகரில்லா ஒர் வீரசரித்திரத்தை தங்கள் ரத்தத்தால் எழுதிச் சென்ற நம் சொந்தங்களை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில் சாதாரண தமிழ்மகனா எனக்கு இருக்கும் ஆதங்கங்களை மட்டும் நீண்ட மனப்போராட்டத்தின் பின் இங்கு பதிவாக எழுதுகிறேன்! தலைவன் வழியில் போராடி மடிந்த செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கும் மாவீரர் நாளை பல பிரிவுகளாக பிரிந்து அனுஷ்டிக்கிறது எந்த கொள்கைகளுக்காக போராடி அவங்கள் வீரமரணம் அடைந்தாங்களோ அந்த நோக்கத்தை கொச்சைப்படுத்திறதாகவே அமையும்.மேலும் எதிரி கைகொட்டி சிரிக்கவும் போராட்டத்தை சிதைக்கவும் வாய்ப்பை நாமே உருவாக்கியிருக்கிறோம்! 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு'னு ச…
-
- 1 reply
- 783 views
-
-
கார்த்திகை 27 - மாவீரர் நாள் பிள்ளைகள் துயிலும் கல்லறைகளுக்கு நெய்விளக்கேற்றும் திருநாள். உள்ளே உடல் வியர்த்துக் கிடப்பவரை மனதால் வெளியே தூக்கி மெய் கழுவி வாசம் பூசி முத்தம் பொழிந்து மீண்டும் குழிவைப்பதான பாவனையில் சுற்றம் சூழும் பெருநாள். தெய்வங்களுக்குப் படைப்பதில்லையே தவிர வரம் கேட்டு வணங்கும் நாள். நீண்ட விதைவயலின் வரிசையில் கூடி நிற்கும் சுற்றத்துக்கு அவர்கள் குரல்கேட்கும் தினம். பத்துமாதம் சுமந்து பகலிரவாய்க் கண்விழித்து அமுத முலைகொடுத்து தூக்கிச் சுமந்தவர் முன்னே அவர்கள் விழிதிறக்கும் நாள். பெற்றவளின் முன்னே பெரிதாய் நெடிதுயர்ந்து அம்மா என அழைப்பார்கள். அந்த ஒற்றைச்சொல் போதுமே சுமந்தவள் மெழுகாய் உருக. விதைத்த…
-
- 2 replies
- 912 views
-
-
[size=4]நவம்பர் 21 தொடக்கம் 27![/size] [size=4]தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை நீத்த உத்தமவீரர்களை நினைவுகூரும் புனித வாரம் . இலட்சியக்கனவுடன் துயில்கொள்ளும்அந்த தெய்வங்களை பூஜிப்பதற்கு எமக்கு கிடைத்துள்ள அற்புத தருணம். தமது இனத்தின் அடிமைச்சங்கிலியை தகர்த்தெறிவதற்காக உயிரையே காணிக்கையாக்கிய அந்த தியாக செம்மல்களை வணங்குவதற்கு கிடைத்துள்ள தூய வாரம்.[/size] [size=4]ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளும் சிக்கிச்சீரழிந்து உரிமைகள் பறிக்கப்பட்ட வெறும் உடலங்களாக சிஙகளதேசத்தின் அடிமைகளாக வாழ்ந்த தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதம் தரித்து தாய்மண்ணுக்காக உயிர்துறந்த அஞ்சா நெஞ்சங்களையே இவ்வாரத்தில் நாம் நினைவு கூருகிறோம். தமது இனத்தின் விடிவே தமது …
-
- 8 replies
- 1.1k views
-
-
[size=3][size=4]17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size] [size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்…
-
- 8 replies
- 1.2k views
-
-
லெப்.கேணல் ஜொனி இயற் பெயர் - விக்கினேஸ்வரன் விஐயகுமார் இயக்கப் பெயர் - ஜொனி தாய் மடியில் - 21.05.1962 தாயக மடியில் - 13.03.1988 தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார். 1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் த…
-
- 0 replies
- 735 views
-
-
[size=3][size=4]11.11.1996 அன்று யாழ். கரைநகர் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை ஆகியோரின் நினைவு நாளும், யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளும் இன்றாகும்.[/size] [/size] [size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாள…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
[size=3][size=4]பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்க…
-
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
Thanks to RC-New Boys and Girls
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=4]04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size]
-
- 9 replies
- 1.3k views
-
-
[size=4]03.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம்
-
- 6 replies
- 1.9k views
-
-
[size=4] நவ 2, 2012[/size] [size=4] தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன். தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும். தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்…
-
- 5 replies
- 931 views
- 1 follower
-
-
[size=2] [size=4]02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size][/size][size=2] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size][size=2] …
-
- 9 replies
- 934 views
-
-
http://m.youtube.com/#/watch?v=rZKFKXLS9TI&desktop_uri=%2Fwatch%3Fv%3DrZKFKXLS9TI&gl=GB
-
-
- 20 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
[size=4]30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம் [size=6]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]
-
- 7 replies
- 717 views
-
-
[size=4]29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும் [/size][size=1] [/size][size=1] கரும்புலி 2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன் நாகராசா சண்முகசீலன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் அகத்தி இராமநாதன் நடராசா அம்பாறை கரும்புலி கப்டன் ஈழவன் திருச்செல்வம் ரொபேட்சன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் ஜீவன் (தினகரன்) கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்) நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி லெப்டினன்ட் கலைச்செல்வன் ஆறுமுகம் சந்திரகுமார…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிங்கள பேரினவாத அரசானது கடல்கடந்து தமிழ் மக்கள் மீது, தமிழீழ விடுதலைக்காக உழைத்தவர்கள் மீது தனது கொலைவெறியினை ஏற்படுத்தி மக்களின் மனதில் பயத்தினை உண்டு பண்ணும் வகையில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளின் படுகொலைக்கு உள்ளான லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் ஆகியோரது 16 வது ஆண்டு நினைவு வணக்கம் பிரான்சில் ஒபவில்லியே என்னும் இடத்தில் அவர்கள் துயில் கொள்ளும் துயிலும் இல்லத்தில் 26.10.2012 வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 15.30 மணிக்கு பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இவ் வணக்க நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. த. சத்தியதாசன் அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2ம் லெப். குழலினியின் சகோதரரும், கப…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=4]முல்லைத்தீவில் காவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, திருகோணமலையில் காவியமான கப்டன் அகத்தியன், கப்டன் நீலவாணன், 2ம் லெப். பூவிழி ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி (சின்னப்பு நந்தினி - செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இதேநாள் திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக வந்த படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது …
-
- 8 replies
- 872 views
-
-
பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [size=2][size=4]தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவ…
-
- 9 replies
- 1.3k views
-