தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்களில் மிகவும் சுவையான காவியம் சிலப்பதிகாரம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத நூல். இதனால் தான் 'சொற்றேரின் சாரதி'யாம் 'பாரதி' தன் கவிதையில் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று புகழ்கிறார். இந்தச் சிலப்பதிகாரத்தில் ஏராளமான அரிய செய்திகள் உள்ளன. இதனைத் தமிழ் இலக்கியத்தின் 'என்சைக்ளோபீடியா' (கலைக் களஞ்சியம்) என்றால் மிகையல்ல. இதனை எழுதிய இளங்கோவடிகள் நமக்குப் பொற்கைப் பாண்டியனின் கதையை வழங்குகிறார். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து, செயற்கைக் கை பொருத்தப்பட்ட செய்தியை இதிலிருந்து ஊகிக்கலாம். அக்காலத் தமிழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. பொற்கைப் பாண்டியனின் (PANDYA…
-
- 0 replies
- 481 views
-
-
"பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து, ""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே!'' (தொல்.செய்யு-101) என்றே குறிப்பிட்டுள்ளார். நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் எ…
-
- 0 replies
- 569 views
-
-
நாலடியார் காலத்தில்… 1.பாதிரிப்பூ ‘கல்லாரே ஆயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகில்/ நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின் /ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு/ தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு’. (139) நறுமணப் பூவின் தொடர்பால் பானை நறுமணம் பெற்றதுபோல் கல்வியில் சிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் கல்லாதவர்க்கு அறிவு கிடைக்கும் என்பது இப்பாடல் நுவலும் பொருள். இதில் புதுமையான செய்தி ஒன்று காணப்படுகிறது புதுப் பானைகளில் பாதிரிப் பூவை நிரப்பி வைத்து விடுவார்களாம். அது மலர்ந்ததும், பூக்களை அப்புறப்படுத்தி விட்டாலும் அந்தப் பானையில் அதன் நறுமணம் ஏறியிருக்குமாம். அதில் ஊற்றி வைக்கிற நீரும் நல்ல மணமாக இருக்குமாம். பெரும்பாலான உரையாசிரியர்கள் புத…
-
- 0 replies
- 1.1k views
-
-
1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே" *** இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும் குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிகவிநாயகம் எழுதிய குழந்தைகள் பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன், …
-
- 0 replies
- 3.2k views
-
-
தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் – மு. பாலமுருகன் இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர். கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப் பாட்டில் சொல்லியுள்ளனர்.…
-
- 0 replies
- 1.5k views
-
-
வடமொழியால் விளக்க முடியாததை வள்ளுவன் விளக்கினான்.எப்படி தெரியுமா? நீதியரசர் ராமசுப்ரமணியன்
-
- 0 replies
- 1.6k views
-
-
'படிமப்புரவு: சொந்தமாக உருவாக்கியது' படை - தற்காலத்தில், ஒருநாட்டின் ஆணையமுள்ள படைக்கலம் ஏந்திய வீரர்கள் கூட்டத்தையும்(Military) அவற்றினுட்படும், மூவேறு பூதங்களிற்கான படைகளையும்[தரைப்படை(நிலம்), கடற்படை(நீர்), வான்படை(காற்று)], விதவிதமான போர்ச் செயல்கள் செய்யும் வீரர்களை அவர்தம் செயல்களிற்கு ஏற்ப தனித்தனிப் படையாக(force) பிரித்து (அதிரடிப்படை, தற்கொடைப்படை, துணைப்படை, எல்லைப்படை போன்றவை) அவற்றையும் படை என்னும் சொல்லால் குறிப்பதுவே படை என்னும் சொல்லின் பொருளாகும். பகுதி - படையில் உள்ள ஒரு சிறிதளவு(section) பக்கம் - படையின் ஒரு பக்கம்(side) கை - Flank (பண்டைய காலம் & தற்காலம்) இறகு - தற்காலத்தில் Wing-இற்கு நிகர…
-
- 0 replies
- 2.7k views
- 1 follower
-
-
ஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச் சாற்றினன்.. சிலம்பு - வரந்தரு காதை 32, 33. இந்தச் சிக்கலுக்கு இன்னது தீர்வு என்று எடுத்துக் கூறப்படும் செய்திக்குச் செம்மொழி என்று பெயர். நிறைமொழி, மறைமொழி, நன்மொழி என்ற வரிசையில் செம்மொழி என்பது தமிழின் ஒரு தனிப்பண்பு என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் “செவ்வை நன்மொழி” என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. மறுக்கவில்லை. அவ்வை அம்மையாவது போல, கொவ்வை கொம்மையாவது போல செவ்வை நன்மொழி என்பது செம்மொழி ஆகிறது எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன என்று கொள்ளலாம். அகநானூற்றுப் புலவர் மாமூலனார் குறிப்பிடும் செம்மொழியும், சிலம்பு குறிப்பிடும் செம்மொழி மாதவச்…
-
- 0 replies
- 23.1k views
-
-
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆங்கில அகராதி மற்றும் மரியம் வெப்ஸ்டர் போன்ற ஆங்கில மொழி அகராதிகளில் கீழ்க்கண்ட சொற்களின் மூலம் தமிழ் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள் •Anicut அனைக்கட்டு •Appam - ஆப்பம் / அப்பம் •Cash - காசு •Catamaran கட்டுமரம் •Cheroot சுருட்டு •Corundum 'ruby', குருந்தம் kuruntam or குருவிந்தம் kuruvintam (Source: OED) •Coir கயிறு •Curry கறி •Godown கிடங்கு •Idli இட்லி idli (Source: OED) •Illupi இலுப்பை •Kabadi/kabaddi கபடி கபடி •Maldivian மலை தீவு - மாலத்தீவு •Moringa முருங்கை •Mulligatawny மிளகுத்தண்ணீர் •Nadaswaram/nagaswaram நாகஸ்வரம் / நாதஸ்வரம் •Pariah பறையர் •Pandal பந்தல் •Pongal பொங்கல் •Poonga oil புங்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
Puradsifm பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்ற…
-
- 0 replies
- 2.6k views
-
-
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி ‘சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’ எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா பாடல்கள் மூலம் நாம் உணரலாம். மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப் பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி வாழ்ந்தார்கள். இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு இயற்கையைப் போற்றவும் செய்தனர். தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி, தன் துணை முட்டையிடுவதற்கு மெ…
-
- 0 replies
- 686 views
-
-
நாட்டார் பாடல் வகைகளில் ஒன்றான தாலாட்டுப் பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களில் ஒன்றாகும். ‘தால்’ என்பது நாவைக் குறிக்கும். குழந்தையை உறங்க வைக்க நாவை ஆட்டி ‘ரா ரா ரா ரா, லு லு லு லு’ என்று ராகம் இசைப்பதால் தாலாட்டுதல் பின்னர் தாலாட்டு என மருவியது. தாலாட்டுப் பாடலின் தொடக்கத்தில் இடம்பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆராட்டு, ரோராட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று வகைப்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் தாலாட்டுப் பாடல்கள் அனைத்து சமயம், மதம், ஜாதி சார்ந்த மக்களிடம் வழக்கத்தில் உள்ளது என்பதே இப்பாடல் வடிவத்தின் சிறப்பாகும். தாலாட்டுப் பாடலை குழந்தையின் தாய் மட்டும் அல்லாமல் பாட்டி, அத்தை, மூத்த சகோதரி போன்ற உறவினர்களாலும் பாடப்…
-
- 0 replies
- 639 views
-
-
“If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” – Dr.Semmal Manavai Mustafa 1. 2. 4 எட்டுத்தொகை அகநூல்களுள் உயிரினக் குழுமம் - Part 1 http://tamillanguagearchives.blogspot.in/2013/09/1-2-4-archive-mmstf-78-part-1.html 1.2.3 - திருந்திய மொழிகள் ; திருந்தா மொழிகள் - திருமுருகன் http://tamillanguagearchives.blogspot.in/2013/09/123-archive-mmstf-77.html 1.2.2 - தமிழ் மாணவர் ஆவணங்கள் - தொல்காப்பிய பொருளதிகார அமைப்புமுறை …
-
- 0 replies
- 942 views
-
-
தமிழை எதிர்ப்பவர்களுக்கு பயங்கர பதிலடி உலகநாயகி பழனி
-
- 0 replies
- 1k views
-
-
1.1 அறம் - விளக்கம் அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. (திருக்குறள் - நீதி இலக்கியம்…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
இன்றைய சூழலில் எல்லாப் பெண்களும் மலரணிகிறார்கள். அவர்களிடம் ஏன் மலரணிகிறீர்கள்? என்று கேட்டால்....... அவர்கள் சொல்வார்கள்..... அழகுக்காக அணிகிறோம்..... மணத்துக்காக அணிகிறோம்..... என்று இன்னும் பல காரணங்களைக் கூறுவார்கள்..... எப்போதிருந்து மலர் அணிகிறீர்கள் என்று கேட்டால்..... நீண்ட காலமாகவே அணிகிறோம் என்பார்கள்............. அவர்களில் பலருக்குச் சங்க கால மகளிர் மலரணியும் மரபு புதுமையாகவும், வியப்பாகவும் இருக்கும். ஆம்.... சங்க காலத்தில் எல்லாப் பெண்களும் மலரணியவில்லை. திருமணமான பெண்கள் மட்டும் தான் மலரணிந்தனர். திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை. அவ்வாறு திருமணம் ஆகாத பெண் ஒருத்தி மலரணிந்திருந்தால் அவள் யாரையோ காதலிக்கிறாள்.... அவன் சூட்டிய மலர் தா…
-
- 0 replies
- 698 views
-
-
தமிழுக்கு பெருமை சேர்த்த ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்! Posted By: 0333on: August 12, 2017In: உலகம்No Comments Print Email உலக மொழிகளில் சொற்களஞ்சிய அகராதிகளை உருவாக்கிவரும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக ஒக்ஸ்போட் தமிழ் இணைய அகராதியை வெளியிட்டுள்ளது. உலகத்திலுள்ள 100 மொழிகளில் அகராதிகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், முதலில் கிந்தி மொழியில் அகராதியை வெளியிட்டது. தற்போது தமிழ், மற்றும் குஜராத்தி மொழிகளில் அகராதிகளை வெளியிட்டுள்ளது. அகராதியை பார்க்க விரும்புபவர்கள்https://ta.oxforddictionaries.com/ இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம். http://thuliyam.com/?p=76091
-
- 0 replies
- 550 views
-
-
வல்லிசிம்ஹன் ஒரு பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது. ஒரு வாரம் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை - களவழி நாற்பது அகநானூறு: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை'' சீவக சிந்தாமணி: குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடி…
-
- 0 replies
- 151 views
-
-
அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பெற்றத் தமிழ் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் "மக்கள் வாசிப்பு" சார்ந்தவை. தமிழ் எழுத்துலகின் படைப்பாளிகளைக் குறித்து நாம் அறிந்திராத அரிய செய்திகளை, 'இவர்' 'அவர்'களை 'வாசித்ததன்' பின்புலத்தில் மண்ணின் மணம் கமழ, சுவையுடன் படைப்பது இவரின் தனித்துவம். விளையும் பயிர்! மாணவப்பருவத்திலேயே தம் படைப்புகளைத் தொடங்கிவிட்ட "எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களை"ப் உயர்நிலைப்பள்ளி நாட்கள் தொட்டு வாசித்…
-
- 0 replies
- 1.9k views
-
-
விதை என்றதும் நினைவிற்கு வருவது ஈழமண்ணில் இடுகாட்டில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் தான் நினைவிற்கு வருகிறது . " உங்கள் பாதங்களை இங்கே அழுந்த பதிக்காதீர்கள் இது வீரம் விதைக்கப்பட்ட மண் " என்று எழுதபட்ட வாசகத்திற்கு கீழே எங்கள் வீரர்களை விதைத்திருந்தார்கள் . அவர்களின் அன்பை கண்டு நெஞ்சம் விம்மி வெடித்தது எங்களின் கண்ணீரால் அவர்களின் பாதங்களுக்கு காணிக்கை மலர்களை செலுத்தினோம் . நிச்சயம் நாளை அந்த விதைகளின் விருச்சங்கள் இந்த மண்ணில் நிழலாய் படரும் என்று நிறைவுடன் காத்திருக்கிறோம். விதைகள் என்ற ஒரு நிலையை அடைய ஒரு மரம் எத்தனை விபத்துகளை சந்திக்க நேர்கிறது . கடும் புயல்களில் சாய்ந்துபோகாமல் ,கொடும் மழைக்கு கவிந்துபோகாமல், வரச்சிகளை தாங்கி ,வெப்பங்களை பொறுத்துக…
-
- 0 replies
- 855 views
-
-
-யானை சண்டை திருச்சிக்கு அருகிலுள்ளது உறையூர். ஒரு காலத்தில் சோழரின் தலைநகராக விளங்கியது . இதற்கு மற்றோரு பெயர் கோழியூர் . புறநாநூற்றில் (பாடல் 212) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் ‘கோழியோன்’ என்று பாடுகிறார். இதன் பின்னாலுள்ள கதையை வைத்து சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ‘வார்த்தா ஜாலம்’ செய்கிறார். சம்ஸ்கிருதத்தில் ‘வாரணம்’ என்ற சொல்லுக்கு யானை, கோழி/சேவல் என்று இரு பொருள் உண்டு. இவைகளை இளங்கோ அடிகள் ‘முறச் சிறை வாரணம்’, ‘புறச் சிறை வாரணம்’ என்று வருணிக்கிறார். அதாவது முறம் போன்ற காதுகளுடைய யானையும் புறத்தே சிறகுகளுடைய கோழியும் போரிட்டதில் இறுதியில் கோழி வென்றது. இதன் காரணமாக உறையூருக்கு ‘கோழியூர்’ என்றும் அதைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சோழனுக்கு ‘க…
-
- 0 replies
- 694 views
-
-
"செக்கச் சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர் ஆருயிரும் ஒக்கச் செருகும் குழல்மடவீர் உன் பொற்கபாடம் திறமினோ" - கலிங்கத்துப் பரணி செக்கச் சிவந்த செங்கழுநீர் பூக்களையும் இளைஞர்களின் உயிரையும் ஒன்றாகப் பறித்து செருகக்கூடிய கூந்தலையுடைய பெண்களே.. பூவையும் உயிரையும் கூந்தலில் செருகும் பூவையர்....!! இதில் கூடல் கொண்டதின் விளைவாக கண்கள் சிவந்து நிற்பதை செக்க சிவந்த கழுநீரை செருகுவதாகவும், அன்பால் கலந்து தம் நினைவிழந்துவிடும் இளைஞர்களின் உயிர் அவள் வசமாகிவிடும் நிலையினை உயிரை செருகுவதாகவும் கூறுவர்
-
- 0 replies
- 853 views
-
-
-
- 0 replies
- 440 views
-
-
"இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என் கதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)" குளிர்ச்சியான திங்களின் கதிர்கண்டு பொங்கும் கடல், வெம்மையான கதிரவனின் கதிர்களுக்கு பொங்காது. அதுபோல்தான் மானுடமும்.. வன்சொல்லை தவிருங்கள் ..உங்கள் வாழ்க்கை வளமாகும்!! இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 0 replies
- 1.8k views
-