பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்... அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது! எதிரியின் குண்டுகள் வெடிக்கும்... ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்! நாம் அணிவகுத்து…
-
- 12 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 564 views
- 1 follower
-
-
தமிழர் வரலாறு, ஒரிசா பாலு அவர்களின் கடல் ஆராட்சி
-
- 1 reply
- 674 views
-
-
புலிகளின் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினிக்காக சிங்கள கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்
-
- 1 reply
- 524 views
-
-
புதுக்கோட்டையில் புதைந்துள்ள தமிழர் பண்பாட்டு அடையாளங்கள்...! மதுரையை அடுத்த கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,500 ஆண்டு பழமையான பானைக் குறியீடுகளும், பல நூறு ஆண்டுகளாக இயங்கிவந்த இரும்பு உருக்காலை குறித்த தடயங்களும் கிடைத்துள்ளன. எழுத்துக்கு முந்தைய வடிவம் கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்துள்ள வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள ராமசாமிபுரம் மங்கலநாடு – அம்பலத்திடல் உள்ளிட்ட ஏரியாவில் சுமார் 173 ஏக்கரில் பண்டைக்கால பரப்பின் வாழ்விடம் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் வன்னிமரம், தமிழ…
-
- 2 replies
- 877 views
-
-
பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். அத்துடன், எங்களுடைய இளைய தலைமுறையினர் கலை இலக்கிய வரலாறுகளைத் தேடிப் பெற்றுக் கொள்வதன் மூலம் எங்களுடைய சமூகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். யாழ்.கோப்பாய்ப் பிரதேசத்தில் இலக்கியம் வளர்த்து மறைந்தோரை நினைவில் நிறுத்தும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சி.யோகேஸ்வரி எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது. கோப்பாய்க் கிறிஸ்தவக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்த…
-
- 0 replies
- 418 views
-
-
7ம் அறிவு உண்மையில் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சிறந்த ஓர் திரைப்படம்.போதிதர்மன் என்ற தமிழனை பற்றிய பல வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தியது. ஆனால் அந்த போதிதர்மன் போன்றே மற்றுமொரு தமிழ்துறவி சீனர்களால் இன்றளவும் வணங்கப்பட்டுவருவது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும். தமிழ்நாட்டில் பிறந்த “போகர் சித்தர்” பழனி முருகன் சிலையை உருவாக்கிய பெருமையையும் தன்னகத்தே கொண்டவர். பழனி முருகன் சிலையை உருவாக்கி பின் சைவ சமய கருத்துக்களையும் சில போதனைகளையும் பரப்ப சீனா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார். குறிப்பாக சீனாவில் தங்கியிருந்து சில ஆண்டுகள் ஆன்மீக சேவையாற்றினார். சீனாவில் “Lao-Tzu”என்ற பெயரில் அறியபட்ட போகர் சித்த…
-
- 0 replies
- 662 views
-
-
இசை, ஆன்மிகம், கல்விப் பணி, இதழியல் துறை என்று பல்வேறு தளங்களில் பரிமளித்தவர் விபுலாநந்தர் பழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர். 1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராமதாஸ், பழ.நெடுமாறன் | கோப்புப் படம். மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,''மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் 5 ஆயிரத்து 300-க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள், சங்க காலத்தில் நகர நாகரிகம் செழித்திருந்தது என்றும், தமிழ் நாகரிகம் தொன்மையானது என்றும் நிரூபிக்கின்றன. கிழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க அருங்காட்சி…
-
- 2 replies
- 687 views
-
-
சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில் நடைபெறும் அகழ் வாய்வில், நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட் டம், திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஜனவரி 18 முதல் நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் அகழ் வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 1 reply
- 593 views
-
-
ஒண்டு ரெண்டு மூண்டு நாலு ஒண்டு ரெண்டு மூண்டு நாலு எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா ஒட்டுமொத்த தமிழும் ஒரு நாள் உலகை ஆழும் தமிழா வெற்றி மட்டும் எமது மண்ணில் வீரம் நிறைந்தால் கிடைக்கும் எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா நேற்று இன்று இல்லை இன்று நேற்று இல்லை நாளை மட்டும் எம் கையில் வாழும் நாளில் உண்டு விட்டு விட்டு வாடா தமிழா வேற்றுமை வேண்டாமேடா சுட்டுத் திசையும் அவனே உன் முன் தொடர்ந்து செல்வாயாடா? எதிரி கொட்டியது போதும் பொறுமை தமிழா எழுந்து நீயும் வாடா எதிரில் உன்ன…
-
- 3 replies
- 844 views
-
-
-
- 1 reply
- 590 views
-
-
இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:- என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய மகான் அவர்களின் பிரிவுச் செய்தியை ஈழநாடு முன்னாள் உதவி ஆசிரியரும் முன்னாள் கொழும்பு அலுவலக நிருபருமாகிய கந்தசாமி அண்ணா அனுப்பியது கண்டபோது முதலில் அதிர்ச்சியடைந்தேன். நாட்டைவிட்டு திடீரென்று வெளிநாடு போன ஊடகவியலாளர்கள் போல பிரிவுத் துயரைஅதிர்ச்சியுடன் தந்தது . மகானை நான் கடைசியாகச் சந்தித்தது கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் முன்னுள்ள ஒரு விருந்தகத்தில் . அவர் இந்தியா போவதற்கு முன்னர் கொழும்பு வந்திருந்தபொழுது என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் -இல…
-
- 0 replies
- 881 views
-
-
-
அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூட…
-
- 23 replies
- 8.6k views
-
-
-
சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப…
-
- 4 replies
- 1.1k views
-
-
வாஸ்கோ ட காமா போன்ற ஐரோப்பியக் கண்டுபிடிப்பாளர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசிக்கும் முன்பு, சீனாவின் மிங் வம்சத்தைச் சேர்ந்த அதிசயக் கடல் தளபதியான ட்சங் ஹ, அவரது உலகக் கடல் பயணத்தின் ஒரு பகுதியாக இப்பகுதிக்கு ஒரு பெரும் படையோடு வந்தார். 1409-ல், இலங்கையில் காலி நகரில் அவர் ஒரு மும்மொழிக் கல்வெட்டை நிறுவினார். உலக அளவில் தமது வர்த்தகம் செழிப்புற வேண்டும் என்பதற்காக, அவர் அல்லாவையும் புத்தனையும் தென்னாவரம் நாயனாரையும் அதில் வேண்டிக்கொண்டிருந்தார். அந்தக் கல்வெட்டு சீன, பாரசீக, தமிழ் மொழிகளில் இருந்தது. அல்லாவையும் புத்தனையும் உங்களுக்குத் தெரியும். ஆனால், தென்னாவரம் கோயிலின் தெய்வத்தை உங்க ளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. வாஸ்கோ ட காமாவை உங்களுக்குத் தெ…
-
- 0 replies
- 510 views
-
-
யாழ்க்கள உறவுகளே வணக்கம். அப்பப்போ ஆங்காங்கே பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. அண்மைய வாரத்திலும் அப்படியொரு வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சலிப்பற்ற முறையிலும் அந்த அரங்கேற்றம் நடைபெற்றது. பலரது உரைகள் இடம்பெற்றது. அங்கே வாழ்த்திதழ் வழங்கிய ஒருவரின் உரை என்னைக் கீழ்வரும் வினாக்களை எழுப்பத் தூண்டியது. கீழேயுள்ள வினாக்களையொட்டி அல்லது பரதக்கலை சார்ந்து பயின்றவர்கள் ஆய்வுசெய்தவர்களிடமிருந்து, அறிந்துகொள்ளவும் தெளிவைப் பெறவும் விரும்புகின்றேன். எனவே கள உறவுகள் இது தொடர்பாக நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுவீர்களென எதிர்பார்க்கின்றேன். பரதம் தமிழரின் கலையாக இருந்து அ…
-
- 0 replies
- 737 views
-
-
மத்திய தொல்பொருள் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (படம்)கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள். (உள்படம்) பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணியை காண்பிக்கிறார் தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணி ஜன.18-ல் தொடங்கியது. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராக…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=5]புலம் பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள் பலர் தமது குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் வைக்காமல் என்னென்னவோ பெயர்கள் எல்லாம் வைக்கின்றார்கள். ம்.......... அவர்களுக்கு சிறிது இந்த இணைப்புகள் உதவும் என நினைக்கின்றேன்!!![/size] http://www.shaivam.org/snmstham.htm http://linoj.do.am/index/0-83 http://suunapaana.bl...og-post_26.html http://namvaergall.b...og-post_24.html
-
- 24 replies
- 8.9k views
- 1 follower
-
-
கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி என்பது காலம் காலமாக யானைகள் வாழ்விடம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் உள்ளது. குமிட்டிபதியில் காணக்கிடைக்கும் பெருங்கற்கால பாறை ஓவியம் கோவை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியிருக்கிறது. வன ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் கோவையில் சமீப காலமாக வனவிலங்குகள் ஊடுருவல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. இதனிடையே விவசாய பரப்புகளில் சேதம் விளைவித்து வரும் காட்டுயானை ஒன்றை பிடித்து, கும்கியாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். ஆனால் யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் கோவையின் தென்மேற்குப் பகுதி முழுவதும் ஒரு காலத்தில் யானைகளின் வாழ்வ…
-
- 0 replies
- 414 views
-
-
தமிழ் பேச. தமிழன் என்று சொல்ல வெக்கப்படும். தமிழனுக்கு இந்த காணெளி சமர்ப்பணம்..
-
- 0 replies
- 774 views
-
-
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 1972 ம் ஆண்டு ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெவ்வேறு கருத்துக்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் உலகச் சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ராமநாதபுரம் முன்னோடி விவசாயி தரணி முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு கலந்து கொண்டு பேசியதாவது: கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக 180 நாட் கள் பயணம் செய்கின்றன. ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக்…
-
- 0 replies
- 615 views
-
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் இந்திய தொல்பொருள் துறையின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச் சியில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளுடன் பண்ட மாற்று இருந்ததற்கான ஆதாரங் களும் கிடைத்துள்ளன. (மேலே: சுடுமண் காதணிகள் | கீழே: தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள்.| வலது: இறக்குமதி செய்யப்பட்ட அணிகலன்கள்) இந்திய தொல்பொருள் துறை யின் பெங்களூரு மத்திய தொல் பொருள் அகழ்வாய்வு பிரிவு சார்பில் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் கீழடியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியி…
-
- 2 replies
- 556 views
-