Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்கிருக்கிறாய்.. எங்கிருக்கிறாய் என் தமிழினமே.. உன் பாட்டன் முப்…

    • 0 replies
    • 535 views
  2. இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே. ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம். குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்… ௧) ஆபிரிக்கா, மடக…

  3. ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு! மச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ள…

  4. Started by akootha,

    காணொளியில் உள்ளது போல் கனடாவில் படைப்பாளிகள் கழகம் கனடிய அரசின் அங்கிகாரத்துடன் 'தமிழர் திருணம் ' நடத்தி வைக்கின்றது. இதுவரையில் 50 இக்கும் அதிகமான திருணங்களை இனிமையாக நடத்தி வைத்திருக்கும் கழகத்தை உங்கள் வீட்டுத் திருணத்திற்கும் அழையுங்கள்: 416 281 1165

    • 0 replies
    • 1.2k views
  5. அந்தமான் மொழிகள் குறித்த அகராதி இந்தியாவின் அந்தமான் தீவுகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள மொழிகள் குறித்த முதல் அகராதியை பிரிட்டனில் உள்ள ஒரு பேராசிரியர் தொகுத்துள்ளார். அந்தமான் தீவுகளில் பேசப்படும் நான்கு மொழிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. அந்தமானின் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அகராதியை தொகுக்கும் உத்வேகம் தமக்கு ஏற்பட்டது என்று இந்த அகராதியைத் தொகுத்து பேராசிரியர் அன்விடா அபி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. அந்தமானில் பேசப்படும் போ என்ற மொழி பேசும் கடைசி நபர்…

  6. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் தொடர்பான ஆவணங்கள் இந்திய மாநிலமான கோவாவில் இருக்கின்றன. கோவா பழஞ் சுவடி காப்பகத்தில் போத்துக்கேயர்களின் காலனித்துவ ஆட்சி தொடர்பான ஆவணங்களின் மூலப்பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. கோவா (GOA) போத்துக்கேயர்களின் கிழக்கு தலைமை ஆட்சி பீடமாக இடம் பெற்றது. அமைதிப் பிரியரான இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேரு படை நடவடிக்கை மூலம் கோவாவைக் 1961ல் கைப்பற்றினார். ஆதன்பிறகு கோவா யூனியன் பிரதேசமாக மத்திய அரசினால் ஆட்சி செய்யப்பட்டது. இன்று அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழஞ் சுவடிக் காப்பகமும் பழம் பொருள் காப்பகமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. போத்துக்கேயர் யாழ் மன்னனை வ…

  7. கணினி ஆங்கிலத்திற்கு கணினித் தமிழ் ஈடுகொடுக்க முடியாமற் போனதற்கு உலகத் தமிழர்களின் அக்கறை இன்மையே முழுமுதற் காரணம். மொழி அடையாளத்தைப் பேணுவதில் காட்டாத ஆர்வத்தை ஆங்கிலத்திற்கு காட்டுகின்றனர் என்பது சமூகவியலாளர்களின் முடிவு. மலேசிய நண்பன் பத்திரிகையில் ஞாயிறு தோறும் தொடர் கட்டுரை எழுதும் எமது மனம் கவர்ந்த கருத்தாளர் ஆ.திருவேங்கடம் என்பார் 2011 ஒக்ரோபர் 16ம் நாள் இதழில் “தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் முன்னோடிகள்” என்று தலைப்பிட்டுள்ளார். ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் என்ற இரு சொற்களை மகுடமாகக் கொண்ட கட்டுரைத் தொடர் விழிப்பூட்டலைத் தனது மையக் கருவாகக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்பு திருவேங்கடம் அவர்களின் 80ம் இலக்கக் கட்டுரையில் காணப்படுகிறது. அவரு…

  8. மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் மாவீரன் பண்டாரவன்னியனின் 207 ஆவது நினைவுநாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும…

  9. தீபத் திருநாள் - தீபாவளி எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி ஒரு முன்னோட்டம். தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை.வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, 1. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது. 2. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமண…

  10. ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு விலங்குகள், பறவைகளில் ஆண், பெண் இனங்கள் இருப்பது போலவே, சில மர வகைகளிலும் ஆண், பெண் மரங்கள் உள்ளன. ஈஞ்ச மரமும், பப்பாளி மரமும், பனை மரமும், தாழம் புதரும் இதற்கு நல்ல உதாரணங்கள். பப்பாளி தமிழ்நாட்டுக்கு அண்மைக் காலத்தில் வந்த பயிர், எனவே பழைய இலக்கியங்களில் அதுபற்றிக் குறிப்புகள் இல்லை. ஆனால், பனை தமிழர் வாழ்வொடும் பண்டுதொட்டே நெருங்கிய உறவுடைய மரம், தமிழ்நாட்டின் தேசிய மரம். பனையின் எல்லாப் பகுதிகளும் பயன்படுவதால், கற்பக விருட்சம் என்பது அதன் புகழ்ப் பெயர். சேரர்களின் சின்னம் பனை. வேளாண்மைக் கடவுளான பலராமன் பனைமரக் கொடி கொண்டவன், கண்ணனின் அண்ணன் பலதேவன் எப்பொழுதும் பனங்-கள் கிண்ணம் கையில் பிடித்திருப்பவன…

    • 2 replies
    • 1.8k views
  11. கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி.. கேட்டதுமே ஒரு வித குற்ற உணர்வு எம்மை உறுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எமக்கே உரித்தான வாழ்வியலைப் பற்றி எமக்குக் கூற ஒரு கண்காட்சி.. அதை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருந்தது என்பது இக்கண்காட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. இந்தக் கண்காட்சியால் ஏற்பட்டிருக்கும் சகல சாதகமான மாற்றங்களுக்குமான பெருமைகூட வரலாற்றுத் துறையையே சாரும். எமது நிலையை எண்ணி நாம் நாண வேண்டிய தருணம் இது; இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல், விழித்தெழ வேண்டிய தருணம் என்று சொல்லாமல் சொல்லிய பெருமையும் இந…

  12. 19.10.11 தொடர்கள் உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்படுவதாகவும், காலநடையில் பலமொழிகள் வழக்கழிந்து போவதாகவும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஆறாயிரம் மொழிகளுள் ஆறுமொழிகளே உயர்தனிச் செம்மொழிகள் என்று போற்றப்படுகின்றன. லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவையே அந்த உயர்ந்த பெருமைக்கு உரியவை. இப்போது லத்தீன் பேச்சு வழக்கில் இல்லை. கிரேக்கம் வழக்கழிந்து மீண்டும் மறுவுயிர்ப்பைப் பெற்றிருக்கிறது. ஹீப்ரு மொழியிலிருந்து பிறந்த ‘இவ்ரித்’ மொழியையே இன்று இஸ்ரேலியர்கள் பேசுகின்றனர். சமஸ்கிருதம் தெய்வமொழியாகி மனிதர்கள் பேசமுடியாமல் மரித்துப் போனது. சீனமும் தமிழும் மட்டுமே இடையறாமல் இன்றுவரை மக்கள் நாவ…

  13. இணைய வெளியில் தமிழுக்கென தனிக்கொற்றம் ( .Tamil - gTLD) - தேவையான முன்னெடுப்புகள் நம்முடைய வலைப்பூக்கள், இணையத்தளங்களின் கொற்றங்கள் (domain).com , .net, .in என அல்லாது .Tamil (உதாரணமாக www.desiyam.com என்பதற்குப் பதிலாக www.desiyam.tamil )என்ற வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில் இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில் இருந்து ஒரு நண்பரை நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது. சிலப்பல ஸ்பானிய மொழி வாக்கியங்களுடன் அவரைச் சந்திக்க தயாராக இருந்தபோது, தன்னை ஒரு கட்டலோனியன் (Catalonia) என அறிமுகப்படுத்திக் கொண்டார். வடகிழக்கு ஸ்பெயினின் தனியான சுதந…

  14. இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம். சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது. 'ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் …

  15. தமிழை வாழ விடுவோம்! - சந்திரமெளலி 'தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவ ளென்றுணராத இயல்பின ளாமெங்கள் தாய்.' என்று பாரதி பாரதத் தாயைப் பற்றிப் பாடியது தமிழ் தாய்க்கும் முற்றும் பொருந்தும். "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி!" என்று உணர்ச்சி வயப்பட்ட முழக்கங்களை ஒதுக்கிப் பார்த்தாலும், நடுநிலையான மொழி ஆராச்சியாளர்கள் உலகின் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்று என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். அறிஞர்களின் ஆய்வுப்படி கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரு), இலத்தீன், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஐந்து மொழிகள் உலகின் மற்றெல்லா மொழிகளையும் விட மிகப் பழமையான மொழிகள். இவற்றில் தமிழைத் தவிர ம…

  16. பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்…

  17. கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தன. யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூ…

  18. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு. இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று. இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே! இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே …

  19. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளலாம். பொன்னாலும் நவமணிகளால் ஆக்கப்பட்ட ( வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. அந்த மதிப்புகளை பணமதிப்பு, பொருள் மதிப்பு , மனமதிப்பு என மூன்று வகைப்படுத்தலாம். முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் இனத்தில் ஆண்களும், பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர் . உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்…

  20. உடையார் பாரி வரலாறு -2 ` பாரிவள்ளல் மகள்களாகிய அங்கவை சங்கவைக்குத் திருமணம். ஔவையாரே முன்னின்று நடத்திவைக்கிறார். மணமகன் திருக்கோவலூர் மலையமானாகிய தெய்வீகன். விநாயகப் பெருமானிடம் சொல்லி சேர சோழ பாண்டியர்களுக்குத் திருமண அழைப்பு எழுதச ்செய்வித்தார். அவர்கள் ஏற்கனவே பாரியிடம் பெண்கேட்டுப் போர் தொடுத்தவர்கள். இரண்டு பெண்கள்; மூன்று பேர் பெண் கேட்டார்கள். எவ்வகையில் பார்த்தாலும் யாராவது ஒரு வேந்தன் போர் தொடுப்பான். அவர்கள் நோக்கம் போரேயன்றி மண உறவல்ல. யாருக்குமே கொடுக்கவில்லையென்றாலும் போர் தொடுப்பார்கள். பாரியின் இறப்புக்குப் பின்னர் மூவேந்தர்களும் பறம்புநாட்டை அபகரித்துக்கொண்டார்கள். பாரி மகளிர் அபலைகளாக அநாதைகளாக ஒரு காட்டின் ஓரத்தில் விறகு பொறுக்கி ஜீவனம…

  21. யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன்…

  22. நார்மாண்டி படையிறக்கம் அல்லது நார்மாண்டி தரையிறக்கம் (Normandy landings) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த படையிறக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இப்படையெடுப்பின் முதல் நடவடிக்கையான பிரான்சு கடற்கரையில் படைகளைக் கரையிறக்கும் நடவடிக்கைக்கு நெப்டியூன் நடவடிக்கை (Operation Neptune) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதுவே நார்மாண்டிப் படையிறக்கம் என அழைக்கப்படுகிறது. இந்தக் குறியீடு நார்மாண்டி படையெடுப்பு மற்…

    • 3 replies
    • 1.5k views
  23. கிராமப்புற மக்கள் எந்த செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து இருக்கும். இடையிடையே எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களுமாக ஏற்றப்பாட்டு அமைந்திருக்கும். ஏற்றப் பாட்டு பிள்ளையாரே வாரும் பெருமாளே வாரும் சிவனாரே வாரும் வேலவரே வாரும் சிவனும் பெருமாளும் சேர்ந்து ரதமேற அரியும் சிவனும் அமர்ந்து மலலேற குருவும் பெருமாளும் கூடி ரதமேற பொற் கொடையும் தேரும் போக வரவேணும் அறுவதியா லொண்ணு அறுவதியா ரெண்டு அறுவதியா மூணு அறுவதியா நாலு அறுவதியா லஞ்சி அறுவதியா லாறு அறுவதியா லேழு அறுவதியா லெட்டு ஆரணி நடுவ தாம்பர நடுவ வேலூரு நடுவ வெத்தல கிடங்கு வெள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.