வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
சியாடெல்: அமேசானின் நிறுவனரும் அதன் செயல் அதிகாரியுமான (சிஇஓ) ஜெப் பிஜோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழக்கிறார். பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பில்கேட்ஸ். ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியானது. இதில், அதனுடைய வருவாய் குறைந்துள்ளது. இதனால், பங்குகள் முதலீட்டில் சுமார் 7 பில்லியன் டாலர் (ரூ.49,619 கோடி) இழந்துள்ளார். கடந்த வியாழனன்று பிற்பகல் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அமேசானின் பங்குகள் விலை 7 சதவீதம் அளவுக்கு சரிந்தன. இதனால் அதன் நிறுவனர் ஜெப் பிஜோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராகக் குறைந்தது. (ரூ.7,36,500 கோடி) அதேவேளையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸின் …
-
- 0 replies
- 668 views
-
-
வாஷிங்டன்: மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கே.பி.எம்.ஜி. நிறுவனம் உலக அளவில் மிக முக்கியமான தணிக்கை நிறுவனமாகும். உலக அளவில் நிதி மற்றும் வர்த்தக ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி. நிறுவனம் இந்தியா பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது; 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. வேகமாக வளரும் நாடாக கடந்த ஆண்டு வரை இருந்த இந்தியா தற்போது அந்த இடத்தை இழந்து விட்டது. இந்தியாவில் விற்பனை குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. சரியும் பொருளாதாரத்தை சீராக்க இந்திய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்க…
-
- 0 replies
- 269 views
-
-
மின் வணிகத்தின் அடிப்படைகள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 06 கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது. இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள். ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிட…
-
- 0 replies
- 549 views
-
-
மின்சார கார் - எதிர்காலம். மின்சார கார்கள் குறித்தும் இலன் மஸ்க் உடைய டெஸ்லா கார்கள் அதிகூடிய விலைக்கு வியாபாரமாவதும், அவர் இன்று உலகின் மிகப் பெரும் பணக்காரர் என்றும் பார்க்கிறோம். ஆனாலும், இந்த மின்சாரக்கார்களில், உள்ள முக்கிய பிரச்சனையே, சார்ஜிங் நேரமே. ஒவொரு காருக்கும், குறைந்தது 30 நிமிசம் தொடக்கம், 3 மணிநேரம் வரை நேரம் தேவை. அதேவேளை, போதிய சார்ஜிங் பாயிண்ட் இல்லாததால், இருக்கும் சார்ஜிங் பாயிண்ட்டில், லைனில் நின்று உண்டாகும் விரக்தியால், மின்சாரக் கார் களுக்கு இன்னும் மவுசு பெரிதாக வரவில்லை. உண்மையில், மின்சாரக்கார்களின் உற்பத்தி செலவு, பெற்றோல் கார்களின் உற்பத்தி செலவிலும் பார்க்க குறைவானது. ஒரு பாட்டரி, ஒரு மோட்டர் இரண்டுமே பிரதானமானவை. இவ…
-
- 3 replies
- 400 views
-
-
மின்சார கார் சந்தையில், அடியெடுத்து வைக்கும் புகழ்பெற்ற கார் நிறுவனம் – அதிர வைக்கும் அதிவேகம்! பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் பாற்றாக்குறை, எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரிய நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் மின்சார காரை வெளியிடவுள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் மின்சார காரான டய்கனை (Taycan) வெளியிட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகவிழா செப்டம்பர் மாதம் 4ம் திகதி நடைபெற உ…
-
- 0 replies
- 1k views
-
-
மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை மாற்றப்போவதாக எலோன் மஸ்க் அறிவிப்பு அமெரிக்காவைச் சேர்ந்த மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வரி விதிக்கப்படுவதாலும், வாழ்க்கைச் செலவு அதிகமுள்ளதாலும் ஆரக்கிள், எச்பி, டொயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் தலைமையகத்தை டெக்சாஸ் மாநிலத்துக்கு மாற்றிவிட்டன. அந்த வரிசையில் இப்போது டெஸ்லாவின் தலைமையகத்தை டெக்ஸாஸின் ஆஸ்டின் நகருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் ஆண்டுக் கூட்டத்தில் அறி…
-
- 0 replies
- 293 views
-
-
தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, தற்போது மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த நிலையில், தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. மின்சார பேட்டரிகளை விட ஹைட்ரஜன் செல் வாகனங்களுக்கு அதிக திறனைத் தருகின்றன. மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாக வகையிலும் உள்ளது. அதிக தூரம் பயணிக்கக்கூடிய, பேருந்து, சரக்கு வாகனங்கள், போன்றவற்றிற்கும் இத…
-
- 0 replies
- 501 views
-
-
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றும் (27) வீழ்ச்சியடைந்தது. நேற்றைய நாளில், ஐ.அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய், 169.25 எனப் பதிவாகியது. நேற்று முன்தினம், 169.05 என்ற அதியுச்ச வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்த ரூபாய், இரண்டாவது தொடர்ச்சியான நாளாக, நேற்றும் வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி, ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், இவ்வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 1.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய், இம்மாதத்தில் மாத்திரம், 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இவ்வாண்டில், 10.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirro…
-
- 1 reply
- 700 views
-
-
மீண்டும் வரும் ‘கொரோனா’ -அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸ் பரவுகையின் தாக்கம், இலங்கையில் அசுர தாண்வம் ஆட ஆரம்பித்து இருக்கிறது. பல இடங்களில், தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அடுத்த நிமிடமே, நாம் வாழும் சூழல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனேயே, ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை நாம், பாதுகாத்துக் கொள்வதில் காட்டிய அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, வென்றுவிடுவோம் என்கிற மமதையில், இலங்கை அரசாங்கம் விட்ட தவறுகளுமே, இன்றைய சூழ்நிலையில், வீரியம் கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியுமா என்கிற கேள்வியை, எழுப…
-
- 81 replies
- 9.5k views
-
-
மீண்டும்... கச்சா எண்ணை, விலை உயர்வு! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது. https://athavannews.com/2022/1298463
-
- 0 replies
- 396 views
-
-
-
- 0 replies
- 483 views
-
-
முகேஷ் அம்பானியின் டெலிகாம் வணிகத்தில் கொட்டும் பணமழை: மற்ற நிறுவனங்கள் நஷ்டம் ஆவது ஏன்? தினேஷ் உப்ரேதி பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தொலைத் தொடர்பு வணிகம். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது தம்பியும், இப்போது குமார மங்கலம் பிர்லாவும் 'கையை சுட்டுக்கொண்ட' தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை, ஏழை, பணக்காரர் என்று யாராக இருந்தாலும் ஏறக்குறைய அனைவரது கைகளிலும் மொபைல். நாளுக்கு நாள் மேம்படும் தொழில்நுட்பம். உலகின் மிகப்பெரிய டெலிகாம…
-
- 1 reply
- 519 views
- 1 follower
-
-
உலகின் 4 ஆவது பெரிய பணக்காரரான வாரன் பப்பெட், தற்போதுதான் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவே தொடங்கியுள்ளார் எனும் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பெர்க்சைர் ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓவுமான வாரன் பப்பெட், ஆப்பிள் நிறுவன பங்குகளிலும் பங்குதாரராக உள்ளார். இருந்தபோதும், சாம்சங் நிறுவனத்தின் பழைய பிளிப் மாடல் செல்போனையே அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குத் திரும்பியுள்ள அவர், ஆப்பிள் ஐ போன் 11 மாடலை தற்போது பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கால் செய்வதற்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வரும் வாரன் பப்பெட், பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள தனியாக ஐபேட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும…
-
- 1 reply
- 733 views
-
-
முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில்புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள் என தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஆதித்ய பிர்லா தொழில்குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில்புரிவதற்கும் உலகிலேயே மிகவும் சிறந்த இடம் இந்தியா எனக் குறிப்பிட்டார். எளிதாக தொழில்செய்வதற்கான சூழல், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, உற்பத்தித் திறன், காப்புரிமைகள், வனங்களின் பரப்பு என பல விஷயங்கள் வளர்ந்திருப்பதாகவும், அரசு அதிகாரிகளின் தலையீடு, வரிகள், வரி விகிதங்கள், ஊழல் போன்றவை குறைந்திருப்…
-
- 3 replies
- 353 views
-
-
முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்காகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளில் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகள…
-
- 0 replies
- 299 views
-
-
உலகின் மிக கூடிய சனத்தொகை கொண்ட சீனாவில், முன்னர் வறுமை காரணமாக, நிலத்தில், நீரில், வானில் என்று கிடக்கும் எதையுமே உணவாக பழகிக் கொண்டு விட்டனர். அப்படி, நாய்கள், பூனைகள், தேள்கள், வௌவ்வால்கள் என்று கிடைத்ததை உண்டு வாழ்ந்த சீனர்களுக்கு, பணம் வந்த பின்னர், விட முடியாத ஒரு உணவு முதலை இறைச்சி. அவர்களது தேவையினை பூர்த்தி செய்ய, ஆப்பிரிக்காவில், கென்யா நாட்டில் பண்ணை வளர்ப்பு முறை ஆரம்பித்து, வருடம் $240மில்லியன்க்கு ஏற்றுமதி செய்வதை பார்த்து, முதலைகள் நிறைந்த அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பெரிய எடுப்பில் பண்ணையினை ஆரம்பித்து விட்டார்கள். அழியக்கூடிய ஆபத்தில் உள்ள விலங்குகளை, காட்டில் அல்லது சூழலில் வேட்டை ஆடிக் கொள்வதை அரசு தடுக்கும். ஆனால் அதே விலங்…
-
- 21 replies
- 2.3k views
-
-
முதல் காலண்டில் சீன பொருளாதாரம் 18.3 சதவீத வளர்ச்சி! 2021ஆம் ஆண்டின் முதல் காலண்டில் சீன பொருளாதாரம் 18.3 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக சீனாவின் தேசிய புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டுக்கான தொழில் துறை உற்பத்தி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சில்லறை விற்பனை 34.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சீன பொருளதாரம் 6.8 சதவீதம் வீழ்ச்சி கண்டது. 1992ஆம் ஆண்டு முதல் காலாண்டு வாரியாக ஜிடிபி தரவுகளைப் பராமரிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவான மிகப் பெரிய காலாண்டு வளர்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210237
-
- 2 replies
- 463 views
-
-
தனக்கென ஒரு தனி வணிக சாம்ராஜ்யத்தையே கட்டமைத்த ஜாம்பவான் இன்று ஓய்வு பெறுகிறார்! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஜாக் மா. இன்று ஆன்லைன் வணிக உலகில் முன்னணி நிறுவனமாக உயர்ந்து நிற்கும் அலிபாபா நிறுவனத்தை 1999-ம் ஆண்டு 17 பேருடன் தொடங்கினார் இவர். அந்த 17 பேர் யார் தெரியுமா?...அனைவருமே இவரின் மாணவர்கள்தான். ஆம், இப்படி ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உண்டாக்குவதற்குமுன் இவர் ஒரு ஆசிரியர். சீனாவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வணிகம் பக்கம் திருப்பியதில் இவரின் பங்கு மிகப்பெரியது. சீனாவில் பலரும் டிஜிட்டலில் பணப்பரிவர்த்தனை செய்யத் தொடங்கியது இவரால்தான். சிறிய அடுக்குமாடிக்குடியிருப்பில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கிய இவரின் இன்றைய சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். இந…
-
- 0 replies
- 709 views
-
-
முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான Brandix அதன் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையை சூழலுக்கு இசைவான தொழிற்சாலையாக சிறந்த முறையில் கட்டமைத்து ஏனைய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக தமது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படும் சிறந்த நிலைபேராண்மை அபிவிருத்தி செயற்பாடுகளை பின்பற்றுவதில் தொடர்ச்சியாக முன்னணி வகிக்கும் இந்நிறுவனத்தின் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்தஸ்து இவ்வாண்டு கிடைத்துள்ளது. அது மாத்திரமின்றி இந்த தொழிற்சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முதலாவது Leed பிளாட்டனம் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 511 views
-
-
-
- 3 replies
- 400 views
-
-
மிகவும் பின்தங்கிய பகுதியான ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள கிரமம் ஒன்று முழுவதும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கி வருகிறது. மொராக்கோவின் Id Mjahdi என்ற கிராமத்தில் மொத்தம் 32 சோலார் பேனல்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 8.32 கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள 20 வீடுகள் பயன்பெறுகின்றன. ஆப்பிரிக்காவின் முதல் முழு சூரிய சக்தியுடன் இயங்கும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது Id Mjahdi கிராமம். சோலார் பேனல் பயன்படுத்துவதற்கு முன் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியையும், அடுப்பெரிக்க விறகுகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்திய மதிப்பில் ரூபாய் 1.33…
-
- 1 reply
- 314 views
-
-
மூன்று மாவட்டங்களில் நெல் கொள்வனவு 43 Views மூன்று மாவட்டங்களில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெற்கொள்வனவை ஆரம்பிக்க முடியுமென சபை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தடவை, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல், நிர்ணய…
-
- 0 replies
- 405 views
-
-
ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நிறுவன கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மெக் டொனால்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனக் கூறி உள்ளார். 52 வயதான ஸ்டீவ் விவகாரத்தானவர். 1993 முதல் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார். https://www.bbc.com/tamil/global-50284904
-
- 3 replies
- 443 views
-
-
மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் , 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், எதிர்காலத்துக்கு உகந்த நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் டைம்லர் முடிவெடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட் குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. https://www.polimernews.com/dne…
-
- 1 reply
- 486 views
-
-
Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் (UOM) ஆகியன இணைந்து இலங்கையில் உள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ஐ.சி.டி துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதனை இன்னும் இயலுமைப்படுத்தும் பொருட்டும், புரிந்துணர்வு ஒப்பந்தந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இது இலங்கை தனது “ஸ்மார்ட் நேஷன்” தொலைநோக்கு பார்வையை அடையும் பொருட்டு, அதனை ஆதரிப்பதற்கான Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALLஇன் ஓர் அங்கமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் கைச்சாத்திடும் நிகழ்வில், தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர்கல்வி, தொழில்நு…
-
- 0 replies
- 552 views
-