வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு விற்கப்படாத போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் எரிபொருள் தொட்டியில் கழிவுப்பொருள்கள் காணப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு நடந்ததாக கூறப்படும் இரண்டு விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்த அமெரிக்க விமானப்போக்குவரத்து துறை மற்றும் நாடாளுமன்ற குழு நடத்தும் விசாரணை முடிந்து ஏப்ரல் மாத வாக்கில் மீண்டும் பறப்பதற்கான அனுமதி கிடைக்கும் என போயிங் எதிர்பார்க்கிறது. அதே சமயம் சியாட்டில் (Seattle) நகருக்கு அருகே உள்ள உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் தொழில்நுட்பக் குறைபாடு ஏதும் இல்லை என்று விசாரணைக் குழு…
-
- 4 replies
- 732 views
-
-
பெண்களுக்கு இயல்பாகவே கிரியேட்டிவிட்டி அதிகம். அதனைச் செயலுருப்படுத்தினால் அவர்கள் செல்லக்கூடிய தூரம் மதிப்பிட முடியாதது மட்டுமல்ல அதனால் அவர்கள் அடையக்கூடிய திருப்தியும் மகிழ்ச்சியும் எல்லையில்லாதது. கண்டியில் இயங்கும் எல்லிஸ் டிரசர்ஸ் (Elle's Treasures) என்ற கூட்டுறவு அமைப்பானது பெண்களின் யோசனையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறது. இவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்தான் என்றா யோசிக்கிறீர்கள்? நம் அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் நமக்கே சிலபோது எரிச்சலாக இருக்கும். நாலு வருடங்களுக்கு முன்பு வாங்கி ஒரேயொரு முறை திருமண விழாவொன்றில் அணிந்துவிட்டு மடித்துவத்தை சேலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு நிகழ்வு, பயணம் என்று வரும்போது அத…
-
- 0 replies
- 732 views
-
-
சுயசார்பு பொருளாதாரம் சாத்தியமா? முகம்மது ரியாஸ் riyas.ma@hindutamil.co.in அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத…
-
- 0 replies
- 730 views
-
-
லண்டன் பங்குச் சந்தையை... வாங்கும், ஹாங்காங்..! ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட் லண்டன் பங்குச்சந்தையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது. குளோபல் பவர்ஹவுஸ் அதாவது சர்வதேச அளவில் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் பொருட்டு ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச், லண்டன் பங்குச்சந்தையை 39 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பும் தெரிவித்துள்ளது. தற்போது ஹாங்காங் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. எங்குத் திரும்பினாலும் மக்கள் போராட்டம், அரசு தலையீடு, பெரும் நிறுவனங்கல் முடக்கம், …
-
- 2 replies
- 730 views
-
-
எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட்: உலகிலேயே மிக அதிக கடன் வாங்கிய நிறுவனத்தால் அச்சத்தில் சீன பொருளாதாரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எவர்கிராண்ட் தன் கால்பந்தாட்ட அணிக்காக கட்டிக் கொண்டிருக்கும் புதிய விளையாட்டரங்கம் சீன நிறுவனமான எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் கடந்த சில காலமாக மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் இந்த வாரம் ஒரு முக்கிய சோதனையை எதிர்கொள்வதால் உலக பங்குச் சந்தைகள் எல்லாமே மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. உலகின் மிகவும் கடன்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான 'எவர்கிராண்ட்' இந்த வியாழக்கிழமை அதன் கடன் பத்த…
-
- 0 replies
- 726 views
- 1 follower
-
-
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு, ஆயிரம் மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு மக்களிடம் விசேட உரையொன்றை ஆற்றி, பிரதமர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தாக்குதல்களால்-ஆயிரம்-மில்லியன்-அமெ-டொலர்-நட்டம்/175-232465 உல்லாசத்துறை ஒரு முக்கிய வருமான துறையாக உள்ளது இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 9000 உல்லாசவிடுதி அறைகள் இலங்கையில் உள்ளன. தொடர்ந்தும் பலரும் தமது உல்லாச பிராயாணங்களை இரத்து செய்து வரு…
-
- 1 reply
- 717 views
-
-
ஹனோய் – ஒரு நாடு பொருளாதாரத்திலும் அரசியல் வலிமையிலும் உருவெடுக்கும்போது அந்நாட்டை ‘புலி’ என வர்ணிப்பார்கள். அந்த வகையில் ஆசியாவின் புதிய பொருளாதார வலிமைமிக்க நாடாக – புலியாக – வியட்னாமை வர்ணிக்கிறது கத்தார் தேசிய வங்கி. 2018-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்னாமின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது என்பதை பல அம்சங்கள் சுட்டிக் காட்டுகின்றன என வியட்னாம் நியூஸ் ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு உயர்வு கண்டு, இந்த ஆண்டு 7.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மிக விரைவான வளர்ச்சியாகும். வியட்னாமின் தொழில்துறை உற்பத்தி 13.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இதன்காரணமாக, 2017-இல் 17 விழு…
-
- 1 reply
- 710 views
-
-
தனக்கென ஒரு தனி வணிக சாம்ராஜ்யத்தையே கட்டமைத்த ஜாம்பவான் இன்று ஓய்வு பெறுகிறார்! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஜாக் மா. இன்று ஆன்லைன் வணிக உலகில் முன்னணி நிறுவனமாக உயர்ந்து நிற்கும் அலிபாபா நிறுவனத்தை 1999-ம் ஆண்டு 17 பேருடன் தொடங்கினார் இவர். அந்த 17 பேர் யார் தெரியுமா?...அனைவருமே இவரின் மாணவர்கள்தான். ஆம், இப்படி ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உண்டாக்குவதற்குமுன் இவர் ஒரு ஆசிரியர். சீனாவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வணிகம் பக்கம் திருப்பியதில் இவரின் பங்கு மிகப்பெரியது. சீனாவில் பலரும் டிஜிட்டலில் பணப்பரிவர்த்தனை செய்யத் தொடங்கியது இவரால்தான். சிறிய அடுக்குமாடிக்குடியிருப்பில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கிய இவரின் இன்றைய சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். இந…
-
- 0 replies
- 709 views
-
-
யாழ்.நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் திருவிழாவும் இலங்கைப் பொருளாதாரமும் உலகில் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார மற்றும்நாட்டு மக்களின் நன்மைகளினை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்பாடுகளினை தொடர்தேர்ச்சியாக செய்துவருவதனை நாம் பார்த்து வருகின்றோம். உதாரணமாக, உலகக் கிண்ண கிரிக்கெட், உலகக் கிண்ண கால்பந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போன்ற பெரிய அளவிலான நிகழ்வினை ஒவ்வொரு நாடும் தனது நாட்டினில் நடத்துவதற்கு போட்டி போட்டுக்கொன்று முன்வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதற்கு மிகமுக்கியக்காரணமாக இருப்பது அவ்வாறு நடாத்தும் எந்தவொரு நாட்டிக்கும் ஏற்படும் நேரடியான மற்றும் மறைமுகமான பல்வேறு பொருளாதார நன்மைகள் சொல்லிலடங்கா. அதேபோல ஒரு சந்தர்ப்பத்தினை ஒவ்வொரு வருடமும் எமது சிற…
-
- 1 reply
- 699 views
-
-
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றும் (27) வீழ்ச்சியடைந்தது. நேற்றைய நாளில், ஐ.அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய், 169.25 எனப் பதிவாகியது. நேற்று முன்தினம், 169.05 என்ற அதியுச்ச வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்த ரூபாய், இரண்டாவது தொடர்ச்சியான நாளாக, நேற்றும் வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி, ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், இவ்வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 1.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய், இம்மாதத்தில் மாத்திரம், 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இவ்வாண்டில், 10.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirro…
-
- 1 reply
- 698 views
-
-
'இத்தாலி எடுத்த முடிவு' கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது இத்தாலி. இதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். படத்தின் காப்புரிமை EPA இத்தாலி கீழ் அவையில் இப்போது 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 400ஆகக் குறைகிறது. அதுபோல செனட்டர்கள் எண்ணிக்கை 315லிருந்து 200ஆகக் குறையும். இதனை தம் தேர்தல் வாக்குறுதியாகக் கூறி இருந்தது ஃபைவ் ஸ்டார் இயக்கம். இது இப்போது ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கன் வகிக்கிறது. இதன் மூலமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ஈரோ பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது அக்கட்சி. ஆனால்,…
-
- 0 replies
- 690 views
-
-
பாகிஸ்தானுடன் போர் பதற்றம்.. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது.. பங்குச் சந்தையில் வீழ்ச்சி பாகிஸ்தான் எல்லைக்குள் விமானப்படை நுழைந்து தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இரு நாடுகளிடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் இயல்பாகவே இவ்வாறு ரூபாய் மதிப்பு சரிவடைந்து வழக்கம்தான். அதுதான் இன்றும் நடந்துள்ளது.அதேபோல பங்குசந்தையில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் நடுவே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக இவ்வாறு பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு 0.5% குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு,…
-
- 0 replies
- 683 views
-
-
கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா உள்பட அனைத்துநாடுகளையும் சீனா முந்தும்! அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியின் (IMF) தரவுகளைப் பயன்படுத்தி ப்ளூம்பெர்க் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, சீனாவிலிருந்து வரும் உலகளாவிய வளர்ச்சியின் விகிதம் 2021 இல் 26.8 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 27.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பொருளாதார அவுட்லுக் படி, இந்த ஆண்டு உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக சுருங்கும் என கணித்துள்ளது. அடுத்த ஆண்டு, இது 5.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது. அடுத்த ஆண்டு சீனா 8.2 சதவிகிதம் வளர்ச…
-
- 1 reply
- 676 views
-
-
கொவிட் - 19 காரணமாக ரூ. 30 பில்லியன் வருமானம் இழப்பு.! கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் வருமானம், நடப்பு நிதியாண்டின் நிறைவில் 30 பில்லியன் ரூபாயை இழக்கும் என, ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது 7 சதவீத வீழ்ச்சியெனவும் தெரிவித்துள்ளது. நாட்டின் மாபெரும் இரு தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களையும் இந்த நிறுவனப்பட்டியலிலிருந்து நீக்கும் பட்சத்தில், இந்த வருமான இழப்பு ரூ. 40 பில்லியனை விட அதிகமாகப் பதிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களைத் தெரிவு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டு …
-
- 0 replies
- 672 views
-
-
வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கையின் பொருளாதாரம்? 13 Views நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், 2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளது. கோவிட்-19 தாக்கத்திற்கு மத்தியில…
-
- 1 reply
- 669 views
-
-
சீனாவுடனான மோதலை நிறுத்துங்கள்: ட்ரம்பிடம் பிரபல பாதணி நிறுவனங்கள் வலியுறுத்தல் சீனாவுடனான அமெரிக்க வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு உலகின் மிகப்பெரிய பாதணி உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளன. மேலும், இதன் எதிரொலி நுகர்வோருக்கு பெரும் கேடு விளைவிப்பதாக அமையும் என்றும் குறித்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. உலகின் மிகப் பிரபலமான நைக் மற்றும் அடிடாஸ் உள்ளிட்ட 173 நிறுவனங்கள் கையொப்பமிட்டு இந்த கடிதம் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை கட்டணங்களை 25 வீதமாக அதிகரிக்கும் ஜனாதிபதியின் தீர்மானம் தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாக பாதிக்கும் என அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன…
-
- 3 replies
- 669 views
-
-
சியாடெல்: அமேசானின் நிறுவனரும் அதன் செயல் அதிகாரியுமான (சிஇஓ) ஜெப் பிஜோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழக்கிறார். பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பில்கேட்ஸ். ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியானது. இதில், அதனுடைய வருவாய் குறைந்துள்ளது. இதனால், பங்குகள் முதலீட்டில் சுமார் 7 பில்லியன் டாலர் (ரூ.49,619 கோடி) இழந்துள்ளார். கடந்த வியாழனன்று பிற்பகல் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அமேசானின் பங்குகள் விலை 7 சதவீதம் அளவுக்கு சரிந்தன. இதனால் அதன் நிறுவனர் ஜெப் பிஜோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராகக் குறைந்தது. (ரூ.7,36,500 கோடி) அதேவேளையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸின் …
-
- 0 replies
- 668 views
-
-
உலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா? வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி.! Rolls-royce இந்த பெயரைக் கேட்டாலே தேகம் எல்லா சில்லிடும். இந்த கம்பெனி தயாரிக்கும் இன்ஜின்களுக்கு உலகமே அடிமை எனலாம். அந்த அளவுக்கு இவர்களின் தரம் பேசும். ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) என்று சொன்ன உடனேயே பலருக்கு இந்த பிராண்டின் பிரம்மாண்ட சொகுசு கார்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வரலாம். ஆனால் இப்போது, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) கம்பெனியியே ரோல்ஸ் ராய்ஸ் கார்களைத் தயாரிப்பது இல்லை. பல வருடங்களுக்கு முன்பே உலகின் முன்னணி சொகுசு கார் கம்பெனியான பி எம் டபிள்யூ (BMW), ரோல் ராய்ஸ் மோட்டார் கார்களை வாங்கிவிட்டது. இப்போதைய ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) வியாபாரம் இப்போது ரோல்ஸ…
-
- 1 reply
- 667 views
-
-
தென் கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவ்யூ கூறுவதுதான் போரம் யூ டியூப் சேனலின் பணி. மழலை மாறாமல் இவர் கூறும் ரிவ்யூ கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உள்ளனர். இந்த சேனலில் போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர். தென் கொரியாவில் மிகவும் பிரபலமான இவர், யூ டியூப் ஸ்டாராக அனைவரின் மனதிலும் வலம் வருகிறார். போரமின் பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தை போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர். போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும் வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர். …
-
- 1 reply
- 664 views
-
-
AFC அதன் இரண்டாம் அடுக்கு மூலதனத்தை வலுப்படுத்த துணை நிதியை ரூ. 1 பில்லியனாக திரட்டியுள்ளது Alliance Finance Co PLC (AFC) இலங்கையின் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறையின் அபிவிருத்தியை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கும் அதற்கு உரிய வசதியை செய்வதற்கும் கம்பனியின் ஒழுங்குமுறை மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், அடுக்கு II மூலதனத்தில் 1 பில்லியன் ரூபாவை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. அடுக்கு II துணைக் கடனானது 5 வருட காலத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான Capital Alliance Ltd (CAL) மூலம் கட்டமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த AFC இன் பிரதித் தலைவரும் முகாமை…
-
- 0 replies
- 662 views
-
-
கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3 மாதங்களில் வெகுவாக குறையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 லட்சத்து 65 ஆயிரம் பேரல்களாக குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச எரிசக்தி முகமை, கடந்த மாதம் கணிக்கப்பட்டதில் இருந்து இது 30 சதவிகிதம் குறைவு என்றும் கூறியுள்ளது. இதனிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. Brent கச்சா எண்ணெயின் விலை 1 புள்ளி 3 சதவிகிதம் குறைந்து, பேரலுக்கு 55 …
-
- 1 reply
- 660 views
-
-
இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்..! நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று எமது பதிவில் அனைவருக்கும் பிடித்த இறால் வளர்ப்பு தொழிலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்…! இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும். பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட…
-
- 0 replies
- 657 views
-
-
காற்று வாங்கும் சைனா பஜார்.. தடுமாறும் சீனா.! உலகமே இன்று கொரோனாவால் அரண்டுபோய் கிடக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும், சீனா நினைத்திருந்தால், இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை சீனாவோடு அழித்திருக்கலாம் என்பது உண்மையே. கொரோனா சீனாவில் பரவிய ஆரம்ப காலத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டது.தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டன. உலகம் முழுக்க விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி உலகமே திரும்பி பார்க்கும் ஒரு நாடாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா இருந்தது குறிப்பிடத்…
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கையில் தளம் அமைக்கிறது சீனாவின் இன்னுமொரு நிறுவனம்! சினோபெக் எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த நிறுவனம் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் செயற்படவுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் ஊடாக கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு, எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்வதே எமது முக்கிய நோக்கமென சினோபெக் தெரிவித்துள்ளது. பிராந்திய நலன்களுக்காக இலங்கையை குறிவைத்து செயற்படுவதாதக விமர்சிக்கப்படும் ம…
-
- 0 replies
- 654 views
-
-
இலங்கையின் முருங்கை உணவுகள் சர்வதேச சந்தைக்கு சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முருங்கை சார்ந்த உணவு பொருட்களை சர்வதேச சந்தைக்கு விநியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஹம்பாந்தோட்டையில் ஏற்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த முதலீட்டாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளது. முருங்கை உணவு பொருட்கள் பலவற்றை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முருங்கை சூப், சோஸ் ஆகியவற்றை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் முருங்கை காய் மற்றும் விதைகளை பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முருங்கை விதைகளில் கொழுப்பை கட…
-
- 0 replies
- 654 views
-