சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
பிரேசிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதிசய வீடு பிரேசிலில் பெண் ஒருவர் ஆயிரக்கணக்கான அப்புறப்படுத்தப்பட்ட கண்ணாடி போத்தல்களைக் கொண்டு அழகான வீட்டை கட்டி முடித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த ஐவோன் மார்டின்ஸ் என்ற பெண், கணவரிடம் இருந்து பிரிந்து, கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரது குழந்தை உடல் நலக்குறைவால் இறந்தது. இதனால் ஐவோன் மார்டின்ஸ் கடும் மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுபட அவர் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி போத்தல்கள் குவிந்து கிடப்பதை கண்டார். அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார். 6 ஆயிரம் கண்ணாடி போத்தல்கள…
-
- 0 replies
- 394 views
-
-
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு 180 நாடுகள் இணக்கம்! பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு 180 நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. கடந்த 12 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நீண்டதொரு கலந்துரையாடலின் நிறைவிலேயே 180 நாடுகளைச் சேர்ந்த 1,400 பிரதிநிதிகள் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். அத்துடன், ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 1989ஆம் ஆண்டு கையெழுத்தான Basel ஒப்பந்தத்திலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மீள் சுழற்சி என்ற பெயரில் வளர்ந்த நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளை, வளர்ச்சியடையும் நாடுகளுக்கு ஏற்றுமத…
-
- 1 reply
- 768 views
-
-
பிளாஸ்டிக் மூடியை வைத்து பனிச்சறுக்கு செய்த காகம்: விஞ்ஞானிகளுக்குப் பயன்படும் யூட்யூப் காணொளிகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHESTER ZOO படக்குறிப்பு, இணைய காணொளிகள் யானைகளின் அறிவுத் திறனுக்கான கூடுதல் ஆதாரங்களை ஆய்வாளர்களுக்கு வழங்குகின்றன ஆசிய யானைகள், மயில் சிலந்திகள், ஸ்னோபால் என்றழைக்கப்படும் காக்கடூ பறவை ஆகியவற்றுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவையனைத்துமே இணைய காணொளிகளில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. இந்தக் காணொளிக…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
இந்தியாவின் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (43). பொறியியலாளரான இவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, சிறிய தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், பிளாஸ்டிக்கிலிருந்து தினசரி 200 லிட்டர் பெற்றோல் தயாரித்து, ஒரு லிட்டர் 40 முதல் 50 ரூபாய் என உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இது குறித்து சதீஷ்குமார் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் அதனை டீசலாகவும் பெற்றோலாகவும் மாற்ற முடியும். இது, மிக எளிமையான செயல்முறை. இந்த செயல்முறைக்கு தண்ணீர் தேவையில்லை. இதன் மூலம் தண்ணீர் எதுவும் வெளியாகாது. அதே போல், வெக்யூமில் (Vaccum) நடைபெறும் இந்த முறையால் காற்ற…
-
- 1 reply
- 838 views
-
-
பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்கள் கண்டுபிடிப்பு சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்களை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டுபிடித்தனர். இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுசூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை கூட உரு…
-
- 1 reply
- 366 views
-
-
-
கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 60 மில்லியன் சிகரெட் பட்ஸ்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. சிகரெட் பஞ்சுகளை உணவென்று தவறாக பறவைகள் எண்ணி தனது குஞ்சுகளுக்கு அளிக்கின்றன. படத்தின் காப்புரிமைKAREN MASON 'புகைப்பதைப் பகைப்போம்' அமெரிக்கா ப்ளோரிடா கடற்கரையில், ப்ளாக் ஸ்கிம்மர் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள்" என்றும் வலியுறுத்தி இருக்கிறார். படத்தின் காப்புரிமைKAR…
-
- 0 replies
- 402 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தடயவியல் ஆய்வு செய்யப்படும் சடலம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் ஆர்ச்சி அட்டாண்ட்ரில்லா பிபிசி வங்க சேவை 15 செப்டெம்பர் 2025 பெரும்பாலும் ஒருவர் இறந்தபிறகு அவரை புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்கு துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன. பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன. அறிவியலின்படி, ஒருவர் இறந்தபிறகு சடலத்தின் மீது பாக்டீரியாக்கள் வளருகின்றன. உடல் அழுகுவதற்கு முக்கிய காரணம் இதுத…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
புத்திசாலியான பிரான்ஸ் காகம் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்: சுத்தம் சுகம் தரும் என்ற வாசகங்கள், நாம் நமது சிறு பராயம் முதலிருந்தே அறிந்தவையாகும். உடல், உள சுத்தங்களைத் தாண்டி, நமது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். நாம் நடமாடித் திரியும் சுற்றாடலின் தூய்மையைச் சரிவரப் பேணும்போது தான், நம்முடைய உடல் மற்றும் உள தூய்மைகளும் சீராகப் பேணப்படுமென்பதே நிதர்சனமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில், சுற்றுப்புறச் சூழலின் தூய்மையானது, தற்காலத்தில் பெரிதும் பாதிப்படைந்த ஓர் இக்கட்டான நிலையிலேயே காணப்படுகின்றதென்பது, நாம் அனைவரும் பொதுவாகக் கண்டறிந்துகொண்ட உண்மையாகும். …
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
கடலாமை (Turtle) என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரை கூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள்.ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகு…
-
- 1 reply
- 731 views
-
-
புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர் தரன் ஸ்ரீ (ஸ்தாபகர், தலைவர், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்) யுடன் ஒரு உரையாடல். —- கருணாகரன் —- “பசுமையாக்கம்” என்ற எண்ணத்தோடு பசுமைச் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக – ஆனால் முறையாகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வரும் தரன் ஸ்ரீயுடன் இந்த உரையாடலைச் செய்துள்ளோம். தாயக விடுதலைப் போராட்டத்தில் மாணவப் பருவத்தில் இணைந்து செயற்பட்ட தரன் ஸ்ரீயின் இயற்பெயர், கணபதி ஸ்ரீதரன். போராட்ட வாழ்வின்போதுதான் அவருக்கு மரங்களின் மீதும் பசுமை மீதும் ஈர்ப்பும் அறிமுகமும் ஏற்பட்டது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார். சமூக அக்கறையும் இயற்கை மீதான நேசிப்பும் உள்ள பலருடைய பரிச்சயக் களமும் அனுபவ…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை ! ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிடில் நடைபெற்று வரும் 'உலக நாடுகள் காலநிலை மாநாட்டில்' ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio gutierrez), புவி வெப்பமடைதலுக்கு எதிராக எடுத்த சபதத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியளித்தார். உலகத்தில் அறிவியல் பூர்வமாக இருக்கும் ஞானமும், தொழில்நுட்ப அறிவும் புவி வெப்பமடைவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக அதற்கான நடவடிக்கை இல்லை. 2019, டிசம்பர் 2-13 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் 2015-பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறோம், கடல்நீர் உயர்வதால் பாதிக்கப்படும் …
-
- 0 replies
- 397 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption முன்பு நினைத்ததைவிட கடல் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதாக சொல்கிறது புதிய ஆய்வு. பெட்ரோல் - டீசல் ஆகியவற்றை பயன்படுத்துவதால் வெளியாகும் வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமாக உறிஞ்சுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக நேச்சர் ஆய்வு சஞ்சிகையில் வெளியான புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருள்கள் வெளியிடும் மாசுகள், வெப்பம் ஆகியவை புவியை ஏற்கெனவே …
-
- 0 replies
- 651 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சிமெண்ட் உற்பத்தி துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள். எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது. சிமெண்ட் பயன்பாடு இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். முதல் இரண்டு இடத்தில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
புவி வெப்பமயமாதல்: அதிகம் மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து என்று கூறும் ஓர் ஆய்வு மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் CRISTIAN ECHEVERRÍA சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீங்கே விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மரம் நடுவதற்காக கொடுக்கப்படும் நிதிச்சலுகைகளால் ஏற்படும் எதிர்வினை, பூமியின் பல்லுயிர் சூழலை குறைக்கும் என்றும், இவ்வாறு மரம் நடுவதால், கரியமில வாயு வெளியேற்றத்தை சமாளிப்பதில் மிகக்குறைந்த தாக்கமே இருக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. புதியதாக நடப்பட்டு வரும் காடுகள், எவ்வளவு கரியமில வாயுவை உள்ளிழுக்கும் என்று எடுக்கப்பட்டுள்ள கணக்கீடு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதாக மற்றொர…
-
- 1 reply
- 800 views
-
-
புவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா? Getty Images பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் "இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!" இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு எதிராக …
-
- 0 replies
- 498 views
-
-
பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் – ஆய்வில் தகவல்! 80 ஆண்டுகளில் பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் என அமெரிக்காவின் MIT ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துருவப்பகுதி அருகே பசுமை நிறத்திலும், பிற இடங்களில் வெளிர் நீல நிறுத்திலும் கடல் காட்சியளிப்பதால் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியின் தோற்றம் தற்போது நீல நிறத்தில் உள்ளது. இதில் கடல் வாழ் நுண்ணுயிரான பைடோப்லாங்டன் முக்கியப் பங்கு வகிக்கிறது. புவி வெப்ப மயமாதலின் காரணமாக இதன் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழிற்கல்வி நிறுவன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 21-ஆம் நூற்றாண்டு இறுதியில் 3 டிகிரி செல்சியஸ் வரை புவி வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்ப…
-
- 1 reply
- 567 views
-
-
பூமியின் அதிசய வரலாறு: 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன? ஜாரியா கோர்வெட் பிபிசி பியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புவியியல் வரலாற்றுப் பதிவேட்டில் இருந்து நூறு கோடி ஆண்டுகள் காணாமல் போய்விட்டன. இப்படிக் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இது எப்படி நடந்தது என்பதில் விஞ்ஞானிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. "சிகாகோ ட்ரிப்யூன்" என்ற பாரம்பரியம் மிக்க பத்திரிகையின் முதல் பக்கத்தில் 1869-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி "நடுங்கவைக்கும் விபரீதம்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்தது. …
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை BEDMACHINE/UCI/BAS Image caption டென்மென் பனிப்பாறை பகுதி பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதி எது என கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் (கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடல்கள் மற்றும் சமுத்திரங்களில் மட்டும் தான் இதை விட ஆழமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதி 20 …
-
- 1 reply
- 1.4k views
-
-
பூமியின் ஓசோன் படலத் துளை தானாக மூடியது - மீண்டும் உண்டாக வாய்ப்புண்டா? க படத்தின் காப்புரிமை Getty Images Image caption மோசமாக பாதிக்கும் கதிவீச்சில் இருந்து ஓசோன் படலம் பூமியைக் காக்கிறது பூமியின் வட துருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் சென்ற மாதம் கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவையகத்தின் (CAMS) ஆராய்ச்சியாளர்கள் த…
-
- 0 replies
- 627 views
-
-
பூமியின் காந்த வடதுருவம் ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிப்பு! பூமியின் காந்த வடதுருவம், ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விஸ்கன்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானி பிராட் சிங்கர் இதனைத் தெரிவித்துள்ளார். பூமியின் காந்த வடதுருவத்தின் அமைவிடம், கடந்த 1831ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் இருந்து ரஷ்யா நோக்கி, வேகமாக இடம்பெயர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். அண்மைக் காலங்களில், ரஷ்யாவின் சைபீரியா நோக்கி, ஆண்டுக்கு சராசரியாக, 54.7 கி.மீ., வேகத்தில் இது நகர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2020ஆம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல்படி, காந்த வட துருவ பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் தான் இரு…
-
- 0 replies
- 327 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, தேனீக்கள் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. ஐன்ஸ்டைன் இதைக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூட, தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. சர்வதேச அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மற்றும் பட்டினியை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை அ…
-
-
- 2 replies
- 534 views
- 1 follower
-
-
கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும். உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுபவை என்கிறது புதிய ஆய்வு ஒன்று. பெண்களைத் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர மனிதர்கள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள். பிரிட்டனில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிஃபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப் பெரிய ராட்சஸ உயிரினம் கண்டுபிடிப்பு.! வியப்பில் ஆழ்த்திய உருவம்.! பெருங்கடலில் மிதக்கும் இந்த நீண்ட, ஹிப்னாடிக் ஸ்ட்ரிங்கி விஷயம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இதன் உண்மையான அளவு என்ன என்று கேட்டால் நீங்கள் மிரண்டுவிடுவீர்கள். இப்படி ஒரு உயிரினம் பூமியில் இருக்கிறது என்றே பலருக்கும் தெரியாது. இதைச் சிலர் ஏலியன் உயிரினம் என்று குறிப்பிடுகிறார்கள், அது உண்மை தான ? உலகின் உயிர் வாழும் மிகப்பெரிய இந்த உயிரினத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. பூமியில் ஒளிந்திருக்கும் பல மர்மங்கள் பூமியில் இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத பல மர்மங்கள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் பெரும்பா…
-
- 0 replies
- 876 views
-