Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரிப்பு: பலகோடி மக்களுக்கான எச்சரிக்கை! அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் பலகோடி மக்களுக்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது. இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18 புள்ளி 3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக அந்தாட்டிக்காவின் எல்பெரன்சாவில் அமைந்துள்ள ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது. முன்னர் 17 புள்ளி 5 டிகிரி செல்சியஸ்தான் குறைந்தபட்ச வெப்ப நிலையாக இருந்தது. பனி உருகுவதன் காரணமாக தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது. வெப்ப நிலை உயர்வதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். …

  2. பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், SOPA IMAGES நாளைக்கே நாம் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தினாலும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது நமக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரணப் பொருள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரிய தடையாக இருக்கும். அதுதான் பனை எண்ணெய் அல்லது பாமாயில். செப்டம்பர் 2015ல் பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மாதங்கள் முன்பாக, போர்னியொ மற்றும் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் மிக அதிகமான எண்ணிக்கையில் காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவின் வானத்தையே இருளடையச் செய்த இந்த நிகழ…

  3. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்கள் உள்ளன. இந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீனாவிடம் இருந்து $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டு இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரம் வழங்கும் முதல் கட்டம், மார்ச் 22, 2011 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ரா…

  4. மனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன? ஆனி மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினமாகும். 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'உயிர்ப் பன்மையத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. நிலைபேறான இயற்கை பேணப்பட வேண்டும் என்பது தொடர்பில் சில விடயங்களை விளக்குகிறார் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. http://www.nimirvu.org/search/label/பொருளாதாரம்

  5. யானையை பற்றி உங்களுக்கு தெரியுமா.? யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் . யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். இதனால் 350 கிலோ எடையை தூக்க முடியும். சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். ஒரு யானை ஒரு காட்டேயே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் மற்றும் குச்சிகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகளும், குச்சி களும் விதைக்கப்படும். ஒரு யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 – 500 விதைகள் விதைக்கும். ஒரு யானை🐘🐘 ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. ஒரு யானை🐘🐘 தன்…

  6. ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள். ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான நில அதிர்வு செயல்பாடு சிறிய தீவு சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும் பரவலான தூக்கமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், திங்கட்கிழமை நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஜூன் 21 ஆம் திகத…

  7. காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பாண்டிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர். குறித்த கடலரிப்பின் தாக்கம் தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீவன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருடன் உரையா…

  8. படத்தின் காப்புரிமை Getty Images Image caption முன்பு நினைத்ததைவிட கடல் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதாக சொல்கிறது புதிய ஆய்வு. பெட்ரோல் - டீசல் ஆகியவற்றை பயன்படுத்துவதால் வெளியாகும் வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமாக உறிஞ்சுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக நேச்சர் ஆய்வு சஞ்சிகையில் வெளியான புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருள்கள் வெளியிடும் மாசுகள், வெப்பம் ஆகியவை புவியை ஏற்கெனவே …

  9. நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்ப அளவு அதிகரித்திருக்கும் – ஐ.நா எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.நாவின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 பாகை செல்ஸியஸ் அதிகரித்துள்ளது. இதன்மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. பெற்றோலியப் பொருள்களை எரியூட்டுதல், கட்டமைப்பு…

  10. கிரீன்லாந்தின் பனிப்பகுதி (கிரீன்லாந்து தீவு, கிரீன்லாண்டிக்: செர்மெர்ஸ்யூக்) என்பது 1,710,000 சதுர கிலோமீட்டர் (660,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது, இது கிரீன்லாந்து நிலப்பரப்பில் சுமார் 80% ஆகும்.இது, அண்டார்க்டிக்கின் பனிப்பகுதிக்குப் அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய பனி அமைப்பு ஆகும். கிரீன்லாந்தின் பனிப்பகுதி வடக்கு-தெற்கு திசையில் சுமார் 2,400 கிலோமீட்டர் நீளமுடையதாக உள்ளது, அதன் மிகப்பெரிய அகலம் 1,100 கிலோமீட்டர் (680 மைல்) ஆகும்.இப்பகுதி 77 ° N என்ற அளவில் அதன் வடக்கு எல்லைக்கு அருகே .உள்ளது. இதன் பனி உயரம் 2,135 மீட்டர் (7,005 அடி) இதன் தடிமன் பொதுவாக 2 கிமீ (1.2 மைல்) க்கும் மேற்பட்டது மற்றும் அதன் மிக அடர்த்தியான பகுதியில் 3 கிமீ…

    • 0 replies
    • 675 views
  11. மீதேன் பிரச்சினை | எதிர்பாராத விளைவுகள் மீதேன் ஒரு எரிவாயு, இன்று வீடுகளில் சாதாரணமாகப் பாவனையிலுள்ள ஒரு பண்டம். அதனாற் பெறப்படும் நன்மைகளைப் போல அதன் தீமைகளை மக்கள் அறிந்திருப்பது குறைவு. இன்றய உலகின் இயற்கை அனர்த்தங்களுடன் இணைத்துப் பேசப்படும் வெப்பமாக்கப்படும் பூமி, வளி மண்டலம், சமுத்திரங்கள் அனைத்துக்கும் காரணமாயிருப்பதாகக் கருதப்படுவன கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (Greenhouse Gases). இதில் நீராவி, காபனீரொக்சைட் (CO2), மீதேன் (CH4), நைற்றஸ் ஒக்சைட்(nitrous oxide), ஓசோன் (ozone), குளோறோபுளோறோ கார்பன் (chlorofluorocarbons (CFCs)) ஆகியன அடங்கும். பூமி வெப்பமாகுதலுக்கும் இவ் வாயுக்களுக்கும் என்ன தொடர்பு? பகலில் சூரிய வெளிச்சத்தினால் பெறப்படும் வெப்பத…

  12. ந்தியாவில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்தித்து பேசுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். பின்னர் இதுபற்றி டுவீட…

    • 0 replies
    • 317 views
  13. மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு! வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் 5,4…

  14. உலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்து தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன. மனிதர்களின் வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது. இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர். கடந்த சில …

  15. உலக சுற்றுச்சூழல் தினம்: இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருப்பது ஏன்? நித்தின் ஸ்ரீவத்சவா பிபிசி AFP சென்ற ஆண்டின் குளிர் காலத்தில் இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூட்ப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர். அதிக காற்று மாசுபாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. "விஷவாயுக் கூடமாக" டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக மாசுபாடு மிக்க ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்…

  16. இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு பதிவானது. மனாடோவிலிருந்து தென்கிழக்கில் 185 கி.மீ தொலைவிலும் 24 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சுனாமி ஆரம்ப எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் வானிலை, புவி இயற்பியல் மற்றும் காலநிலை ஆய்வு நிறுவனம் (பி.எம்.கே.ஜி) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. http://athavannews…

  17. மூழ்கும் நகரங்கள் - சிஎன்என் பட்டியல் இந்தோனேசியா தனது தலைநகர் ஜகார்த்தா கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதால் தலைநகரை வேறு பகுதிக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து சிஎன்என் மூழ்கிக்கொண்டிருக்கும் முக்கிய நகரங்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. உலகில் மிக வேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம் ஜகார்த்தா என உலக பொருளாதார மன்றம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கடல்மட்டம் அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் அதிகளவிற்கு பயன்படுத்தப்படுவதாலும் இந்த நிலையேற்பட்டுள்ளது என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் Houstonநகரமும் கடலில் மூழ்கின்றது என சிஎன் என் குறிப்பிட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்ப…

  18. விதையே தேவையில்லங்க வெறும் இலை மட்டும் போதும் - மரம் வளர்ப்பில் வியக்க வைக்கும் கோயம்புத்தூர் விவசாயி

  19. ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் துருக்கியில் இறப்பு துருக்கியின் கொன்யா பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளன. துருக்கியின் கொன்யா பகுதியில் உள்ள டஸ் ஏரி அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். உவர் நீர் ஏரியான இங்கு ஏராளமான வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். வறண்டு கிடக்கும் இந்த ஏரியில் கடந்த இருவாரகாலமாக ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடக்கின்றன. டஸ் ஏரிக்கு நீர்வரக்கூடிய பகுதிகளை தடுத்து தங்கள் பகுதிக்கு பாசனத்திற்காக சிலர் தண்ணீரை திருப்பிக் கொண்டதால், ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு போயிருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஏரி தண்ணீரிலும் உவர் தன்மை பெரி…

  20. இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க, எடுத்துச்செல்லும் இடங்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கட்லரிகள், தட்டுகள் மற்றும் கிண்ணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பசுமைக் குழுக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றன. ஆனால் அதைச் செயல்படுத்த வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை என்று பிரிட்டிஷ் டேக்அவே தெரிவித்தது. எடுத்துச்செல்லும் பொருட்கள் விலை உயர்ந்ததாக மாறும், ஏனெனில் சிறிய நிறுவனங்கள் அதி…

  21. சிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி ''நாட்டில் மொத்தம், 1500 வகை பறவைகள் இருந்தன. 200 வகையான பறவைகள் தடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தற்போது, சிட்டுக்குருவியும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இவற்றை மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமை. குயவரான பெருமாள் என்பவரின் உதவியோடு சிட்டுக்குருவிகளுக்கு கூடு வடிவமைத்து, அதனை இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருகிறார் மருத்துவர் சாதனா. 2017ல் இவர் தொடங்கிய ‘சிட்டுக்குருவி மீட்பர்கள்‘ என்கிற சமூக குழு விழிப்புணர்வு அளித்தல், கூடுகள் விநியோகம், குருவிகளை மீட்டு விடுவித்தல் பணிகளை செய்கிறது. மனிதகுல நலனுக்காக சிட்டுக்குருவிகளை பாதுகாத்து, இயற்கையை பராமரிப்பது எனது கடமை என்கிறார் சாதனா. இயற…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கம், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வீரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்படும் ஓர் உயிரினம். ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற ரஜினியின் வசனம்கூட அத்தகைய கம்பீரத் தொனிக்காக வர்ணிக்கப்பட்டதுதான். ஆனால், உண்மையில் சிங்கம் சிங்கிளாக வராது, பெரும்பாலும் கூட்டமாகத்தான் வரும் என்கிறார் குஜராத்தின் கிர் காட்டில் உள்ள சிங்கங்களை ஆய்வு செய்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம். அதிலும் ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களே அதிகமாக வேட்டைக்குச் செல்லும…

  23. பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது ஓசோன் படலம் – ஐ.நா. அறிக்கை ஓசோன் படலம் தனது பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசோன் படலம் என்பது ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு ஆற்றல்மிக்க சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய சூரியனின் உயர் அதிர்வெண் புறஊதா ஒளியினை 93% முதல் 99% வரை இப்படலம் உட்கிரகிக்கிறது. அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட காரணிகளால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, குளோபல் வார்மிங் எனப்படும் புவி வளிமண்டல வெப்பம் அதிகரித்தது. இதைக்கட்டுப்படுத்த உறுதிபூண்ட உலக நாடுகள், கார்பன் வெளியேற்றத்…

  24. பட மூலாதாரம்,RAMESHWARAN படக்குறிப்பு, பூனைக்கண் பாம்பு கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொம்பேறி மூக்கன் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது, அதுகுறித்த மூடநம்பிக்கை நிறைந்த தவறான தகவல்களே. நஞ்சற்ற, மரத்தில் வாழக்கூடிய இந்தப் பாம்பு இனம், "மிகவும் ஆபத்தான நஞ்சுள்ள பாம்பு" என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. இப்படியாக நஞ்சற்ற பல பாம்புகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறான புரிதலைப் போக்க உதவுகிறது "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு. பாம்புகள், இயற்கைச் சமநிலையின் முக்கியமான ஓர் அங்கம். இருந்தாலும், அவற்றைப் பார்த்தால் மட்டுமல்ல, காதில் கேட்டாலே மனித மனதில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக பாம்புகள் ப…

  25. காலநிலை மாற்றம் - 2050 ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், நாடுகளையும் பிராந்தியங்களையும் அச்சுறுத்தக்கூடியதும் உலகளவில் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒரு அறிக்கையை கடந் தவாரம் வெளியிட்டிருந்தது. அவ் அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும். இது காலநிலை மாற்றங்கள், “சூறாவளி, வெள்ளம், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு” ஆகியவற்றின் விளைவாக இருப்பதுடன் இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் இனி வாழக்கூடியதான நிலையில் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.