சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
எரிமலை வெடிப்பை போல விழுந்த மின்னல். மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு guatemala. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது. இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் திகதி antigua நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது. எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல…
-
- 0 replies
- 594 views
-
-
மேற்கு ஜப்பானில் இருக்கும் நாரா பூங்கா அங்கே இருக்கும் மான்களுக்காகப் பிரபலமானது. 1880-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிக்கா வகை மான்கள் சுதந்தரமாகச் சுற்றித் திரியும். இந்தப் பூங்காவில் வழிபாட்டுத் தலங்களும் இருப்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். மான்கள் இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களில் 14 மான்கள் தொடர்ச்சியாக இறந்தன. அவற்றைப் பரிசோதித்தபோது வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பூங்காவுக்கு வருபவர்கள் sugar-free இனிப்பு பண்டங்களை மான்களுக்குக் கொடுப்பது வழக்கம். அதை விற்பனை செய்வதற்காகப் பூங்காவுக்கு அருகி…
-
- 0 replies
- 854 views
-
-
காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! உலகலாவியரீதியில் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரு நாள் வகுப்பறை பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் மீதான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுமார் 150 நாடுகளில் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா, அவுஸ்திரேலியா,பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். சுவீடனை சேர்ந்த 16 வயது மாணவியான கிரேடா துன்பேர்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட…
-
- 0 replies
- 506 views
-
-
இயற்கையை சீண்டியது போதும் ச.சேகர் காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியாகியும், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு இல்லையா அல்லது அவை தொடர்பில் அக்கறை இல்லையா என்பதைப் பற்றியே கேட்கத் தோன்றுகின்றது. ஆம், அண்மைக் காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தேறும் இயற்கை அழிவுச் சம்பவங்களை எடுத்துப் பார்த்தால், மனிதன…
-
- 1 reply
- 691 views
-
-
அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரிப்பு: பலகோடி மக்களுக்கான எச்சரிக்கை! அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் பலகோடி மக்களுக்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது. இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18 புள்ளி 3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக அந்தாட்டிக்காவின் எல்பெரன்சாவில் அமைந்துள்ள ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது. முன்னர் 17 புள்ளி 5 டிகிரி செல்சியஸ்தான் குறைந்தபட்ச வெப்ப நிலையாக இருந்தது. பனி உருகுவதன் காரணமாக தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது. வெப்ப நிலை உயர்வதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 256 views
-
-
பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், SOPA IMAGES நாளைக்கே நாம் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தினாலும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது நமக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரணப் பொருள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரிய தடையாக இருக்கும். அதுதான் பனை எண்ணெய் அல்லது பாமாயில். செப்டம்பர் 2015ல் பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மாதங்கள் முன்பாக, போர்னியொ மற்றும் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் மிக அதிகமான எண்ணிக்கையில் காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவின் வானத்தையே இருளடையச் செய்த இந்த நிகழ…
-
- 0 replies
- 243 views
-
-
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்கள் உள்ளன. இந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீனாவிடம் இருந்து $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டு இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரம் வழங்கும் முதல் கட்டம், மார்ச் 22, 2011 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ரா…
-
- 0 replies
- 263 views
-
-
மனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன? ஆனி மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினமாகும். 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'உயிர்ப் பன்மையத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. நிலைபேறான இயற்கை பேணப்பட வேண்டும் என்பது தொடர்பில் சில விடயங்களை விளக்குகிறார் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. http://www.nimirvu.org/search/label/பொருளாதாரம்
-
- 1 reply
- 483 views
-
-
யானையை பற்றி உங்களுக்கு தெரியுமா.? யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் . யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். இதனால் 350 கிலோ எடையை தூக்க முடியும். சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். ஒரு யானை ஒரு காட்டேயே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் மற்றும் குச்சிகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகளும், குச்சி களும் விதைக்கப்படும். ஒரு யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 – 500 விதைகள் விதைக்கும். ஒரு யானை🐘🐘 ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. ஒரு யானை🐘🐘 தன்…
-
- 0 replies
- 584 views
-
-
ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள். ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான நில அதிர்வு செயல்பாடு சிறிய தீவு சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும் பரவலான தூக்கமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், திங்கட்கிழமை நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஜூன் 21 ஆம் திகத…
-
- 0 replies
- 122 views
-
-
காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பாண்டிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர். குறித்த கடலரிப்பின் தாக்கம் தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீவன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருடன் உரையா…
-
- 1 reply
- 295 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption முன்பு நினைத்ததைவிட கடல் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதாக சொல்கிறது புதிய ஆய்வு. பெட்ரோல் - டீசல் ஆகியவற்றை பயன்படுத்துவதால் வெளியாகும் வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமாக உறிஞ்சுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக நேச்சர் ஆய்வு சஞ்சிகையில் வெளியான புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருள்கள் வெளியிடும் மாசுகள், வெப்பம் ஆகியவை புவியை ஏற்கெனவே …
-
- 0 replies
- 651 views
-
-
நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்ப அளவு அதிகரித்திருக்கும் – ஐ.நா எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.நாவின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 பாகை செல்ஸியஸ் அதிகரித்துள்ளது. இதன்மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. பெற்றோலியப் பொருள்களை எரியூட்டுதல், கட்டமைப்பு…
-
- 0 replies
- 272 views
-
-
கிரீன்லாந்தின் பனிப்பகுதி (கிரீன்லாந்து தீவு, கிரீன்லாண்டிக்: செர்மெர்ஸ்யூக்) என்பது 1,710,000 சதுர கிலோமீட்டர் (660,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது, இது கிரீன்லாந்து நிலப்பரப்பில் சுமார் 80% ஆகும்.இது, அண்டார்க்டிக்கின் பனிப்பகுதிக்குப் அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய பனி அமைப்பு ஆகும். கிரீன்லாந்தின் பனிப்பகுதி வடக்கு-தெற்கு திசையில் சுமார் 2,400 கிலோமீட்டர் நீளமுடையதாக உள்ளது, அதன் மிகப்பெரிய அகலம் 1,100 கிலோமீட்டர் (680 மைல்) ஆகும்.இப்பகுதி 77 ° N என்ற அளவில் அதன் வடக்கு எல்லைக்கு அருகே .உள்ளது. இதன் பனி உயரம் 2,135 மீட்டர் (7,005 அடி) இதன் தடிமன் பொதுவாக 2 கிமீ (1.2 மைல்) க்கும் மேற்பட்டது மற்றும் அதன் மிக அடர்த்தியான பகுதியில் 3 கிமீ…
-
- 0 replies
- 684 views
-
-
மீதேன் பிரச்சினை | எதிர்பாராத விளைவுகள் மீதேன் ஒரு எரிவாயு, இன்று வீடுகளில் சாதாரணமாகப் பாவனையிலுள்ள ஒரு பண்டம். அதனாற் பெறப்படும் நன்மைகளைப் போல அதன் தீமைகளை மக்கள் அறிந்திருப்பது குறைவு. இன்றய உலகின் இயற்கை அனர்த்தங்களுடன் இணைத்துப் பேசப்படும் வெப்பமாக்கப்படும் பூமி, வளி மண்டலம், சமுத்திரங்கள் அனைத்துக்கும் காரணமாயிருப்பதாகக் கருதப்படுவன கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (Greenhouse Gases). இதில் நீராவி, காபனீரொக்சைட் (CO2), மீதேன் (CH4), நைற்றஸ் ஒக்சைட்(nitrous oxide), ஓசோன் (ozone), குளோறோபுளோறோ கார்பன் (chlorofluorocarbons (CFCs)) ஆகியன அடங்கும். பூமி வெப்பமாகுதலுக்கும் இவ் வாயுக்களுக்கும் என்ன தொடர்பு? பகலில் சூரிய வெளிச்சத்தினால் பெறப்படும் வெப்பத…
-
- 1 reply
- 892 views
-
-
ந்தியாவில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்தித்து பேசுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். பின்னர் இதுபற்றி டுவீட…
-
- 0 replies
- 337 views
-
-
மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு! வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் 5,4…
-
- 0 replies
- 92 views
-
-
உலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்து தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன. மனிதர்களின் வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது. இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர். கடந்த சில …
-
- 2 replies
- 888 views
-
-
உலக சுற்றுச்சூழல் தினம்: இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருப்பது ஏன்? நித்தின் ஸ்ரீவத்சவா பிபிசி AFP சென்ற ஆண்டின் குளிர் காலத்தில் இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூட்ப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர். அதிக காற்று மாசுபாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. "விஷவாயுக் கூடமாக" டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக மாசுபாடு மிக்க ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்…
-
- 0 replies
- 867 views
-
-
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு பதிவானது. மனாடோவிலிருந்து தென்கிழக்கில் 185 கி.மீ தொலைவிலும் 24 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சுனாமி ஆரம்ப எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் வானிலை, புவி இயற்பியல் மற்றும் காலநிலை ஆய்வு நிறுவனம் (பி.எம்.கே.ஜி) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. http://athavannews…
-
- 0 replies
- 497 views
-
-
மூழ்கும் நகரங்கள் - சிஎன்என் பட்டியல் இந்தோனேசியா தனது தலைநகர் ஜகார்த்தா கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதால் தலைநகரை வேறு பகுதிக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து சிஎன்என் மூழ்கிக்கொண்டிருக்கும் முக்கிய நகரங்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. உலகில் மிக வேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம் ஜகார்த்தா என உலக பொருளாதார மன்றம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கடல்மட்டம் அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் அதிகளவிற்கு பயன்படுத்தப்படுவதாலும் இந்த நிலையேற்பட்டுள்ளது என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் Houstonநகரமும் கடலில் மூழ்கின்றது என சிஎன் என் குறிப்பிட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்ப…
-
- 0 replies
- 553 views
-
-
விதையே தேவையில்லங்க வெறும் இலை மட்டும் போதும் - மரம் வளர்ப்பில் வியக்க வைக்கும் கோயம்புத்தூர் விவசாயி
-
- 2 replies
- 437 views
-
-
ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் துருக்கியில் இறப்பு துருக்கியின் கொன்யா பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளன. துருக்கியின் கொன்யா பகுதியில் உள்ள டஸ் ஏரி அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். உவர் நீர் ஏரியான இங்கு ஏராளமான வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். வறண்டு கிடக்கும் இந்த ஏரியில் கடந்த இருவாரகாலமாக ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடக்கின்றன. டஸ் ஏரிக்கு நீர்வரக்கூடிய பகுதிகளை தடுத்து தங்கள் பகுதிக்கு பாசனத்திற்காக சிலர் தண்ணீரை திருப்பிக் கொண்டதால், ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு போயிருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஏரி தண்ணீரிலும் உவர் தன்மை பெரி…
-
- 0 replies
- 358 views
-
-
இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க, எடுத்துச்செல்லும் இடங்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கட்லரிகள், தட்டுகள் மற்றும் கிண்ணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பசுமைக் குழுக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றன. ஆனால் அதைச் செயல்படுத்த வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை என்று பிரிட்டிஷ் டேக்அவே தெரிவித்தது. எடுத்துச்செல்லும் பொருட்கள் விலை உயர்ந்ததாக மாறும், ஏனெனில் சிறிய நிறுவனங்கள் அதி…
-
- 1 reply
- 558 views
-
-
சிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி ''நாட்டில் மொத்தம், 1500 வகை பறவைகள் இருந்தன. 200 வகையான பறவைகள் தடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தற்போது, சிட்டுக்குருவியும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இவற்றை மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமை. குயவரான பெருமாள் என்பவரின் உதவியோடு சிட்டுக்குருவிகளுக்கு கூடு வடிவமைத்து, அதனை இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருகிறார் மருத்துவர் சாதனா. 2017ல் இவர் தொடங்கிய ‘சிட்டுக்குருவி மீட்பர்கள்‘ என்கிற சமூக குழு விழிப்புணர்வு அளித்தல், கூடுகள் விநியோகம், குருவிகளை மீட்டு விடுவித்தல் பணிகளை செய்கிறது. மனிதகுல நலனுக்காக சிட்டுக்குருவிகளை பாதுகாத்து, இயற்கையை பராமரிப்பது எனது கடமை என்கிறார் சாதனா. இயற…
-
- 1 reply
- 613 views
-