Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன் September 30, 2018 1 Min Read உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுகின்ற பழக்கம் மனித இனத்திற்கே அதிகமுண்டு. உலகில் மனித நடவடிக்கைகளால் இயற்கை சூழல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. மனித நடவடிக்கையின் காரணத்தினால் பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்கின்ற அதே வேளை பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. இதில் சில வகையான தாவரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் நிலையில் க…

  2. காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரம் வீட்டில் காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற இரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இந்தநிலையில் அவற்றை தடுக்க அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். ‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதை வீட்டிற்குள் வளர்க்க முடியும். அந்த தாவரங்களின் இலை…

  3. இயற்கை விவசாயத்தில் புதுமுறை: மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி 10 மார்ச் 2021, 02:12 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிந்தலா வெங்கட் ரெட்டி "நைட்ரஜன், ஃபாஸ்பரஸ், சூப்பர், பொட்டாஷ் - அனைத்தும் மண்ணிலேயே உள்ளன. மழையில் நனைந்தால், மண்ணிலிருந்து வெளிப்படும் இனிய மணம் பயிருக்கு சிறந்த சுவையையும், பழங்களுக்கு இனிப்பையும் தருகிறது" என்று மண் மற்றும் தனது விளைபொருட்களின் பின்னால் உள்ள ரகசியத்தை விளக்குகிறார் வெங்கட் ரெட்டி. "2002 ஆம் ஆண்டில் மண்ணுடன் பரிசோதனை செய்யும் எண்ணம் எனக்கு வந்தது. எனக்கு தெரிந்த ஒருவரின்…

  4. தாவரங்கள் உண்மையில் மனிதர்களிடம் பேசுமா? அறிவியல் கூறுவது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் ஒவியராகவும் இருக்கும் லாரா பெலாஃபின், தன் செடியின் வேர்ப்பகுதிகளில் ஒரு மைக்கைப் பொருத்தி சோதனை செய்தார். மெலிதான, அதிகமான அதிர்வெண் கொண்ட க்ளிக் சத்தங்கள் கேட்டன. இந்த ஒலியின் அதிர்வெண்களை மாற்றுவதற்காக அவர் ஒரு மென்பொர…

  5. ‘உலகம் எரிகிறது’ – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு கடுமையான திட்டங்களை வகுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 25 அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 7000 பொதுமக்களும் கலந்துகொண்டனர். காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அதனை எதிர்த்து போராடவும் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் செயற்றிட்டங்களை வகுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ‘உலகம் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் நடைபெறாததைப் போன்று நாம் உள்ளோம்’ என்ற சுலோகம் அடங்கிய பதாதையை தாங்கியவாறு குறித்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்ப…

  6. படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation Image caption ஜூலியட் - செஹுன்கஸ் தவளை தவளைகளின் பல்வேறு இனங்கள் உள்ளன. டெல்மட்டோபிட்டே குடும்பத்தைச் சேர்ந்த செஹுன்கஸ் தவளையொன்று இந்த இனத்தை சேர்ந்த கடைசி தவளை என நம்பப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்போது தனிமையிலிருந்து அதற்கு விலக்கு கிடைக்கவுள்ளது. ரோமியோ என அறியப்படும் அத்தவளை, பொலிவியாவில் உள்ள நீர் வாழ் உயிரின கண்காட்சியகத்தில் பத்து ஆண்டுகளை தனிமையில் கழித்துள்ளது. தொலைதூர பொலிவியன் மழைக் காடுகளில் ஒரு குழு பயணம் மேற்கொண்டு இந்…

  7. மீதேன் பிரச்சினை | எதிர்பாராத விளைவுகள் மீதேன் ஒரு எரிவாயு, இன்று வீடுகளில் சாதாரணமாகப் பாவனையிலுள்ள ஒரு பண்டம். அதனாற் பெறப்படும் நன்மைகளைப் போல அதன் தீமைகளை மக்கள் அறிந்திருப்பது குறைவு. இன்றய உலகின் இயற்கை அனர்த்தங்களுடன் இணைத்துப் பேசப்படும் வெப்பமாக்கப்படும் பூமி, வளி மண்டலம், சமுத்திரங்கள் அனைத்துக்கும் காரணமாயிருப்பதாகக் கருதப்படுவன கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (Greenhouse Gases). இதில் நீராவி, காபனீரொக்சைட் (CO2), மீதேன் (CH4), நைற்றஸ் ஒக்சைட்(nitrous oxide), ஓசோன் (ozone), குளோறோபுளோறோ கார்பன் (chlorofluorocarbons (CFCs)) ஆகியன அடங்கும். பூமி வெப்பமாகுதலுக்கும் இவ் வாயுக்களுக்கும் என்ன தொடர்பு? பகலில் சூரிய வெளிச்சத்தினால் பெறப்படும் வெப்பத…

  8. உலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்து தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன. மனிதர்களின் வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது. இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர். கடந்த சில …

  9. யாழில்.புளியமரங்களை நட பணிப்பு adminDecember 12, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்ட…

  10. கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள். மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. ஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின. அதாவது, உலகின் மிகப் பெரிய விலங்குகளாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்த காலம். இந்த பேரழிவின் உயர் தெளிவுத்திறன் மிக்க தரவுகள் இங்கிலாந்து / அமெரிக்கா தலைமையிலான குழுவினரால் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. படத்தின் காப்புரிமைMAX ALEXANDER/B612…

    • 0 replies
    • 868 views
  11. சுற்றுச்சூழலைப் பாதுகாக்காவிடின், 15 - 20 வருடங்களில், நாடு பாலைவனமாக மாறுவதைத் தடுக்க முடியாதென, ஜனாதிபதி தெரிவித்தார். எனவே, சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய அக்கறையோடு, மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்கவும் நாடு பாலைவனமாக மாறுவதைத் தடுக்கவும், அனைவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென, ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். கண்டி மாநகரசபை எல்லைக்குட்பட்ட துனுமடலாவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலுள்ள ஃபைனஸ் மரங்களை அகற்றி, அதற்குப் பதிலாக அங்கு உள்நாட்டு வன வளர்ப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (06) அப்பிரதேசத்தில் இடம்பெற்றபோதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தூய்மையான பசுமை நகரைக் கட்டியெழுப்பி, உயிர்ப் பல்வகை…

    • 2 replies
    • 856 views
  12. தீவிரப் புயலாக மாறும் "ஃபனி.." சென்னையில் இன்றிரவு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நேற்று மாறியது. இதற்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபனி புயலின் திசை மற்றும் செயல்பாடு குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.ஏப்ரல் 30: அப்போது அவர் கூறுகையில் ஃபனி புயல் நேற்றைய தினம் புயலாக மாறியுள்ளது. இது வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி வடதமிழகம்- தென் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்.புயல் திசை: இதனால் வடதமிழகத்தில் மிதமான மழைக்க…

  13. மேற்கு ஜப்பானில் இருக்கும் நாரா பூங்கா அங்கே இருக்கும் மான்களுக்காகப் பிரபலமானது. 1880-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிக்கா வகை மான்கள் சுதந்தரமாகச் சுற்றித் திரியும். இந்தப் பூங்காவில் வழிபாட்டுத் தலங்களும் இருப்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். மான்கள் இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களில் 14 மான்கள் தொடர்ச்சியாக இறந்தன. அவற்றைப் பரிசோதித்தபோது வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பூங்காவுக்கு வருபவர்கள் sugar-free இனிப்பு பண்டங்களை மான்களுக்குக் கொடுப்பது வழக்கம். அதை விற்பனை செய்வதற்காகப் பூங்காவுக்கு அருகி…

    • 0 replies
    • 848 views
  14. உலக சுற்றுச்சூழல் தினம்: இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருப்பது ஏன்? நித்தின் ஸ்ரீவத்சவா பிபிசி AFP சென்ற ஆண்டின் குளிர் காலத்தில் இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூட்ப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர். அதிக காற்று மாசுபாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. "விஷவாயுக் கூடமாக" டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக மாசுபாடு மிக்க ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்…

  15. மெட் மெக்ராத் சூழலியல் ஊடகவியலாளர் படத்தின் காப்புரிமை Gett…

  16. படத்தின் காப்புரிமை M Niyas Ahmed மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. இயற்கையின் கண்ணியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதானே? அந்த தொடர்புதான் மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கப் போகிறது. அழியும் பூச்சி இனம் உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. குறிப்பாக சொல்லவேண்டுமானால் உலகில் உள்ள பூச்சி இனங்களில் …

  17. மேற்காசிய - கிழக்கு ஐரோப்பிய எல்லையில் உள்ள காகஸஸ் மலைத்தொடர்ப் பகுதியான ட்ரான்ஸ் காகேசியாவில் உள்ள நக்சிவன் (NAKHCHIVAN) என்ற இடம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது அஜர்பைஜானில் உள்ள தன்னாட்சிக் குடியரசுப் பகுதியாகும். ஆர்மீனியா, இரான் மற்றும் துருக்கியால் சூழப்பட்டுள்ள இது, முன்னாள் சோவியத் யூனியனின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அரிதாகவே உள்ளது. 80-130 கி.மீ அகலமுள்ள ஆர்மீனியாவின் ஒரு பகுதி அஜர்பைஜானைச் சேர்ந்த நக்சிவனை அதனிடமிருந்து பிரிக்கிறது. முழுவதும் பிற நாடுகளால் சூழப்பட்ட உலகின் மிகப் பெரிய எக்ஸ்க்லேவ் (ஒரு நாட்டின் ஒரு நிலப்பகுதி, முற்றிலும் அதனிடமிருந்து பிரிந்திருப்பது) இதுவ…

    • 1 reply
    • 839 views
  18. பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப் பெரிய ராட்சஸ உயிரினம் கண்டுபிடிப்பு.! வியப்பில் ஆழ்த்திய உருவம்.! பெருங்கடலில் மிதக்கும் இந்த நீண்ட, ஹிப்னாடிக் ஸ்ட்ரிங்கி விஷயம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இதன் உண்மையான அளவு என்ன என்று கேட்டால் நீங்கள் மிரண்டுவிடுவீர்கள். இப்படி ஒரு உயிரினம் பூமியில் இருக்கிறது என்றே பலருக்கும் தெரியாது. இதைச் சிலர் ஏலியன் உயிரினம் என்று குறிப்பிடுகிறார்கள், அது உண்மை தான ? உலகின் உயிர் வாழும் மிகப்பெரிய இந்த உயிரினத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. பூமியில் ஒளிந்திருக்கும் பல மர்மங்கள் பூமியில் இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத பல மர்மங்கள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் பெரும்பா…

  19. அமெரிக்காவில் நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்து 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இத்தகைய ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வர வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernew…

  20. படத்தின் காப்புரிமை Getty Images இயற்கையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை பாரீஸீல் நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது 'அறிக்கை' அல்ல மனித குலத்திற்கான 'எச்சரிக்கை'. அந்த அறிக்கையில் உள்ள சில முக்கிய தகவல்களை பிபிசியின் சூழலியல் செய்தியாளர் மேட் மெக்ராத் தொகுத்து தருகிறார். 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' இந்த அறிக்கையை தயாரித்த ஆய்வு குழுவிற்கு தலைமை வகித்த பேராசிரியர் சார் பாப் வாட்சன், 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' என்கிறார். …

  21. 15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம் ! அடப்பாவிகளா காத்தும் விற்பனைக்கு வந்திருச்சா !! டெல்லியில் கட்டணம் செலுத்தி தூய்மையான காற்றை சுவாசிக்கும் ஆக்சிஜன் பார் திறக்கப்பட்டு உள்ளது. 15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, தண்ணீர் என அனைத்தும் விற்பனைக்கு வந்து விட்டது. இனி காற்று மட்டும் தான் பாக்கி, விட்டால் அதுவும் விற்பனைக்கு வந்துவிடும் என்று கேலியாக பேசப்படுவதுண்டு. ஆனால் அது பேலி அல்ல அல்ல. உண்மைதான். ஆம் தலைநகர் டெல்லியில் தற்போது காற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி தற்போது மோசமான காற்றின் தரக் குறியீட்டு புள்ளி…

  22. இந்தியாவின் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (43). பொறியியலாளரான இவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, சிறிய தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், பிளாஸ்டிக்கிலிருந்து தினசரி 200 லிட்டர் பெற்றோல் தயாரித்து, ஒரு லிட்டர் 40 முதல் 50 ரூபாய் என உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இது குறித்து சதீஷ்குமார் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் அதனை டீசலாகவும் பெற்றோலாகவும் மாற்ற முடியும். இது, மிக எளிமையான செயல்முறை. இந்த செயல்முறைக்கு தண்ணீர் தேவையில்லை. இதன் மூலம் தண்ணீர் எதுவும் வெளியாகாது. அதே போல், வெக்யூமில் (Vaccum) நடைபெறும் இந்த முறையால் காற்ற…

    • 1 reply
    • 825 views
  23. 'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப் போகுது பாரு' - இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல, அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான். kallanai cauvery ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்குத் தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாகப் பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப் போக…

    • 0 replies
    • 822 views
  24. படத்தின் காப்புரிமை Getty Images Image caption சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு என உங்களுக்கு பிடித்த உணவுகள் இல்லாமல் போகும் பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகளுக்கோ, குளிர்பானங்களுக்கோ நாம் பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் மீன்கள், விலங்குகள் செத்துப் போகலாம். எனவே எதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும் காணாமல் போகலாம். ஏன் தெரியுமா? …

  25. Image caption அழிந்த தேவாலயம். கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே எடுத்துச் சொல்கின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.