Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடல்மட்டம் விரைவாக உயர்கின்றது – லட்சக்கணக்கானோர் வாழ்விடங்களை இழக்கும் அபாயம் May 21, 2019 முன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். 2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீற்றருக்கும் குறைவான அளவே உயரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனைவிட இரண்டு மடங்கு உயருமென தற்போது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீற்றர் நிலம் , அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் நீரில் மூழ்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் …

    • 1 reply
    • 540 views
  2. தேசிய மரநடுகை தினத்தில் மரத்தை நட்டி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடிவிட்டு, பின்னர் மறந்து விடுகின்ற இன்றைய காலகட்டத்தில், வரட்சியை குறைப்பதற்காக இப் பிரதேசத்தில் இவ்வாறான மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்வந்தமை வரவேற்கத்தக்கதாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார். மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டம் நேற்று (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதி…

  3. கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் புதிய மணல் தீடை உருவாகியுள்ளது. இதை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கும், இலங்கைக்கும் இடையேயுள்ள கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் 5ஆவது தீடையுடன் இந்திய கடல் எல்லை முடிவடைகிறது. இந்த மணல் தீடைகள், பகல் முழுவதும் கடல்நீர் வற்றிய நிலையிலும், இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்தும் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட வட கிழக்கு பருவக் காற்றால் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, இராட்சத அலைகள் எழுந்தன. இதனால் வெளியேறிய க…

  4. இதுவரை உலகில் வாழ்ந்த மிகப் பெரிய பறவையை வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் அழித்தனரா என்ற கேள்வியை மடகாஸ்கரில் புதைபடிவ நிலையில் கண்டறியப்பட்டுள்ள அவற்றின் எலும்புகள் எழுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மடகாஸ்கரில் வாழ்ந்த யானைப் பறவைகள் வரலாற்று முந்தைய மனிதர்களால் உணவுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது கிடைத்துள்ள இந்தப் பறவையின் எலும்புகள், சுமார் 10,000 வருடங்களுக்கு முந்தியது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் கண்டறியப்படுவதற்கு முன்புவரை மனிதர்கள் இத்தீவுக்கு சுமார் 2,500 முதல் 4,000 வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. "இந்த ஆதாரங்கள் தற…

  5. காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை, எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடாத மழை, வெள்ளம், வரட்சி, நீர்ப்பற்றாக்குறை என, எதிர்மறையான அனைத்தையும் ஒருசேர நாம் அனுபவிக்கிறோம். இவற்றை வெறுமனே, வானம் பொய்த்ததென்றோ, எதிர்பாராத மழை என்றோ புறந்தள்ளவியலாதபடி, இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், சூழலை மாசாக்குதல், புவி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என, எமது பூமிப்பந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்களை, நாம் விடாது செய்து வருகிறோம். எமது எதிர்காலத் தலைமுறைக்கு, நாம் எவ்வாறான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்; நாம், எமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களது பேரப்பிள்ளைகளது எதிர்காலத்தையும் சேர்த்து, கேள்விக்குறியாக்கிக் கொண்டிரு…

    • 0 replies
    • 535 views
  6. கடல் நுரையால் ரம்மியமான காட்சி - எச்சரிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்.! தென் ஆப்பிரிக்கா, கேப்டவுன் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகத் திரண்டுள்ளது கடல் நுரை. கடல் அலைகளில் உருவாகியுள்ள நுரை காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு சாலை முழுவதும் பரவி, ரம்மியமான காட்சியை உருவாக்கியுள்ளது. வெள்ளைப் பனி படர்ந்து கிடப்பதைப் போல சாலை முழுவதும் பொங்கி வழியும் நுரையில் பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு வாரமாகவே பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. மணிக்கு 70 – 100 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடல் அலையும் 10 அடி உயரம் வரை எழுந்துள்ளது. இதனால் நகரில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. நகரிலிருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரசாய…

  7. கனடாவை... தடம்புரட்டிய, ‘பியோனா புயல்’: லட்சக்கணக்கான மக்களுக்கு, மின்தடை! அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக மாறியுள்ளது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கிய பியோனா புயல், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லேண்ட், பிரின்ஸ் எட்வர்ட் மற்றும் மாக்டலன் தீவுகளை கடுமையாக தாக்கியுள்ளது. புயல், மழையை தொடர்ந்து பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் தகவல் தொடர்பு, வீதி போக்குவரத்து உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இ…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, தேனீக்கள் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. ஐன்ஸ்டைன் இதைக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூட, தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. சர்வதேச அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மற்றும் பட்டினியை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை அ…

  9. டேவிட் ஸ்கூமன் அறிவியல் ஆசிரியர் படத்தின் காப்புரிமை Sams கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால்…

  10. கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன் November 25, 2018 1 Min Read கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. இதனால் நாங்கள் நிறைய கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம், நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம் சொல்லியும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என்றார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். ஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் சொன்னார் ஆனையிறவு பரந்தன் பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவு…

  11. உலக சுற்றுச்சூழல் தினம்: ஆர்டிக் பகுதியில் 20,000 டன் எண்ணெய் கசிந்ததால் மாபெரும் அச்சுறுத்தல் AFP இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த நாளில் இப்படி ஒரு மோசமான செய்தியைப் படிக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து அவசரநிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். கடந்த வெள்ளியன்று ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின்னுற்பத்தி நிலையத்தின் இயக்குநர் வியாசெஸ்லாவ் ஸ்டாரோஸ்டின் ஜூலை 31 வரை காவலில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மேல் வழக்கு ஏதும் பதிவ…

  12. பருவநிலை மாற்றம்: 50 ஆண்டுகளில் அதீத வெப்பநிலை: 300 கோடி பேரை பாதிக்கும் ஆபத்து மற்றும் பிற செய்திகள் Getty Images முன்னூறு கோடிக்கும் அதிகமானோர் 2070ஆம் ஆண்டில் "தாங்கிக் கொள்ள முடியாத" வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறையாவிட்டால் பலர் சராசரியாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ நேரிடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 6000 ஆண்டுகாலமாக மனிதர்களுக்கு பழகிவந்த ஒரு பருவநிலை சூழல் அடியோடு மாறும் என்பதையே இது காட்டுகிறது. இந்தியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கின் சில பகுதிகள், ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளத…

  13. காலநிலை மாற்றம்: "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்" பேட்ரிக் ஹ்யூக்ஸ் பருவநிலை, அறிவியல் பிரிவு, பிபிசி நியூஸ் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையை மூடி நிற்கும் பனிப்பாறைப் படலம் 2050 வாக்கில் இல்லாமலே அழிந்து போகும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ தனது அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உள்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று கூறிய…

  14. எறும்புத்திண்ணிகள்: உலகிலேயெ அதிகமாக வேட்டையாடப்படுவது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகளவில் அதிகப்படியாக கடத்தப்படும் ஒரு பாலூட்டி இனமாக பாங்கோலின்கள் என்று சொல்லக்கூடிய எறும்புத்திண்ணி உள்ளது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாங்கோலின் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்த பாங்கோலின்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. பாங்கோலின் தினத்தையொட்டி ட்ராஃபிக் என்ற அமைப்பு மற்றும் உலக வன உயிர் நிதியம் - இந்தியா ஆகியவை இணைந்து பாங்கோலின்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது குறித்த ஆய…

  15. நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று! எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை …

  16. வானிலை அறிவிப்பு: மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள் மழை பொழியுமா இல்லையா என்று கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான, லண்டனில் உள்ள டீப்மைண்ட் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் எக்செட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் மூலம் அடுத்த ஆறு மணி நேர…

  17. வலுவற்ற இலங்கையின் விவசாயக் கொள்கை நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட…

    • 0 replies
    • 517 views
  18. http://maridhasanswers.com/wp-content/uploads/2018/12/f-indonesia-forests-a-20160405-870x582.jpg விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு. இரண்டையும் குழப்பும் சமூகத்திற்கு என் இந்தப் பதிவு சமர்ப்பணம்: விவசாயம் – விவசாயி என்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் மாணவர்கள் இளையவர்கள் கவனத்திற்காக இந்தப் பதிவை வெளியிடுகிறேன். தவிர நான் விவசாயத்திற்கு எதிரானவனோ விவசாயிகளுக்கு எதிரானவனோ அல்ல. ஆனால், நிலத்தடி நீரைப் பாதுகாக்க, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை முறைப்படுத்த விரிவான திட்டத்துடன் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் முயற்சியை எடுத்த எடுப்பில் தவறாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அற்பன் நக்ஸல்வாதிகள், ப…

    • 0 replies
    • 516 views
  19. உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு! உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலுக்கு தேனீக்கள் பெரும்பங்காற்றுகின்றன. தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், மற்ற பூச்சிகள் கட்டுக்கடங்காத பசிக்குள்ளாகுமெனக் கவலைப்படுகின்றனர் ஆய்வாளர்கள். உலக வெப்பம் அதிகரிக்கும்போது அது பூச்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும். தாய்லாந்து விவசாயிகளுக்குப் பெரும் துன்பமான ஆண்டு 2016ஆம் ஆண…

  20. உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுவது ஏன்? இந்த ஆண்டு கருப்பொருள் என்ன? Getty Images உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. எந்த ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது? 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச் சூழல் தினம்: இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கம் …

  21. இதய நோய்: அதீத ரத்த அழுத்தத்தில் இருந்து ஒட்டகச் சிவிங்கிகள் எப்படித் தப்பிக்கின்றன? பாப் ஹோம்ஸ் அறிவியல் எழுத்தாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகவும் உயரமாக இருந்தாலும் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் உண்டாவதில்லை. உயரமாக இருப்பதால் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிக அதிகமான ரத்த அழுத்தம் தேவைப்படும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு வரும் வேறு உடல் உபாதைகளிலிருந்து அவை தப்பித்துவிடுகின்றன. இது எப்படி சாத்தியம்? ஒட்டகச் சிவிங்கி என்றாலே பலருக்கும் அதன் நீண்ட கழுத்துதான் நினைவுக்கு வரும். …

  22. எரிமலை குழம்பு கடலில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிவப்பு நிறத்திலான உருகிய பாறை குழம்பு நீரில் கலப்பதற்கு முன்னர் டெல்டா பகுதியாக உருவானது. 250மீட்டர் தூரத்திலிருந்து பாறைகள் விழுந்ததால் நெருப்பு புகை மண்டலம் உருவாகியது. எரிமலை குழம்பு கடலில் விழுந்தால் அந்த காட்சி பார்ப்பதற்கு அரிய காட்சியாக இருக்கலாம் ஆனால் அது அதிகம் விஷமாக மாறலாம். அந்த புகை விஷத்தன்மை வாய்ந்தது. இம்மாதிரியான சூழலில் மனிதர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை காப்பாற்றுவது எப்படி என உங்களுக்கு தெரியுமா? எரிமலை குழம்பு கடலில் நுழைந்தால் அத…

  23. கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது! தேவிபாரதி புவி வெப்பமயமாதல் சார்ந்த ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை மனித குலத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை போல் தெரிகிறது. மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பூமி சீக்கிரத்திலேயே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் எனக் கணித்ததை இப்போது ஐநாவின் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்னும் பன்னிரெண்டே ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1,5 டிகிரி செல்சியல் அளவுக்கு உயரும். இதன் விளைவுகள் மோசமானவை. வறட்சியாலும் வெள்ளப் பெருக்காலும் பல கோடி மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும், அதன் விளைவாகக் கடல் மட்டம் உயரும். கடல…

  24. பாறைக் கழுகின் காதலாட்டம் க. வி. நல்லசிவன் அது ஒரு அக்டோபர் மாத ஞாயிற்றுக்கிழமை. விடுமுறையாதலால் ஏதேனும் ஓர் இடத்திற்கு கானுலா செல்லலாம் என முடிவுசெய்திருந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் அல்லது பறவை சரணாலயங்கள் என வழக்கம்போல் செல்லாமல், வறண்ட நிலப்பகுதிகளில் உள்ள சிறிய குன்றுகள், பாறை சூழ்ந்த பகுதிகளைத் தேடிச்செல்ல நினைத்து, கோபிசெட்டிபாளையத்துக்கு அருகே உள்ள பெரிய பாறைகள் சூழ்ந்த, மரங்கள் அடர்ந்த நவமலைக் குன்றினைத் தேர்வுசெய்திருந்தோம். அங்கு ஏற்கெனவே பலமுறை கானுலா சென்றிருந்தாலும் பருவ மழைக்காலத்தில் அந்த இடம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கும் ஆர்வத்தோடு அதிகாலையில் புறப்பட்டோம். காலைக் கதிரவனின் பொன் நிற ஒளியும், ஊர்ப…

  25. படத்தின் காப்புரிமை Getty Images ஒரு பெருங்கடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க மிகப் பெரிய ஆய்வு திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆம், அட்லாண்டிக் பெருங்கடல், அதில் வாழும் உயிரினங்கள், அதிலுள்ள பவளப்பாறைகள் அனைத்தும் நலமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐ-அட்லாண்டிக் திட்டம் எனும் ஒரு சர்வதேச ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல்தான் இந்த கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல். பருவநிலை மாற்றமும், பெருங்கடல்களும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முப்பதுக்கும் மே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.