Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. இது குளிர் காலம்..! ***************** பார்க்கின்ற மரமெல்லாம் பட்டதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் உயிர் இருந்து உறக்கமின்றி முளித்திருக்கும். அடுத்த சமர் வரவையெண்னி அரும்புவிட காத்திருக்கும் இழந்த இலையனைத்தும் இருமடங்காய் வளருமென்ற உறுதியுடன் நம்பித்தான் உள்ளுக்குள் உயிர் இருக்கும். இதைப்போலே… சோகங்கள் துக்கங்கள் சுற்றியெமைத் தாக்கினாலும் மனவுறிதி எமக்கிருந்தால் மரம்போலே துளிர் விடலாம் குளிரென்ன கோடையென்ன கொரோனாவே விலகியோடும். -பசுவூர்க்கோபி-

  2. நல்லதோர் வாழ்வு இருந்தது நல்லதோர் வாழ்வு ஒன்று இருந்தது ஒரு காலம் நாலு பேர் வந்து போயினர் நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் உறவுகள் வந்து போயினர் பிரியாமல் முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் அங்கு ஓர் பிரிவும் இல்லை அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை அழகான பனை இருந்தது அருகில் ஒரு வேம்பு நின்றது அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது கூவிப் பல பாடல் கேட்டது காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது பூவோடு கனவு இருந்தது கனவு மெய்ப்படக் காத்து இருந்தது பாட்டும் கேட்டது கூத்தும் கேட்…

    • 0 replies
    • 1k views
  3. "சிந்தை சிதறுதடி" "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  4. Started by uthayakumar,

    மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டு…

    • 6 replies
    • 1.8k views
  5. "மனமும் மனிதனும்" "மனமும் மனிதனும் போராடும் உலகில் கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான் தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான் மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!" "மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?" "உள்ளம் அலைபாயும் மனிதன் இவன் நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும் மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும் மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  6. "மூன்று கவிதைகள் / 14" 'புகைப்படக் கவிதை' தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும் மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ------------------------------------------- 'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு' மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே! கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே! [கந்தையா தி…

  7. என் உயிரானவள்..! ************** மின்னல் வந்த திசையைப்பார்த்தேன்-அவள் கண்கள் தெரிந்தது மேக முகில் அழகைப்பார்த்தேன்-அவள் கூந்தல் பறந்தது முல்லைப்பூவின் மலர்வைப்பார்த்தேன்-அவள் பற்கள் ஒளிர்ந்தது முழுமதியின் வரவைப்பார்த்தேன்-அவள் முகமே தெரிந்தது தேன் சொட்டும் பேச்சைக்கேட்டேன்-தமிழாய் பொழிந்தது தேசத்தின் முதல் பெண் இவழே.. என்னுயிரும் கலந்தது. அவள் வந்தபின்னாலே தமிழனானேன்-எனி ஆகுதியில் எரிந்தாலும் அழிவே இல்லை. -பசுவூர்க்கோபி-

  8. செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் …

    • 2 replies
    • 890 views
  9. "உயிரின் உயிரே!" "அன்பு கொண்டு .... அருகில் வந்தேன் ஆதரவு சொல்லி .... ஆனந்தம் தருவாயோ? இன்பம் மலர .... இருவரும் சேர்ந்தோம் ஈருடல் ஒன்றாக .... ஈரமான ரோசாவே உலகம் மறந்து .... உவகை கொண்டோமே!" "ஊமை விழியில் .... ஊர்வலம் சென்று எழுச்சி கொண்ட .... எம் காதலே ஏமாற்றாமல் இவனின் .... ஏக்கம் தணியாயோ? ஐம்புலனும் தேடும் .... ஐயமற்ற அழகியே ஒப்பில்லா என் .... உயிரின் உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  10. "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !" "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது மனிதனின் …

  11. Started by suvy,

    நெருப்பு. எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும் ஆலயத்தில் எரிந்தால் தீபம் அடுப்புக்குள் எரிந்தால் சமையல் அகல்விளக்கில் எரிந்தால் வெளிச்சம் யாகத்தில் எரிந்தால் அக்நி சிதையில் எரிந்தால் சாம்பல் அடிவயிற்றில் எரிந்தால் பசி ஆகாயத்தில் எரிந்தால் மின்னல் அடர்வனத்தில் எரிந்தால் கோரம் மூச்சில் எரிந்தால் ஏக்கம் சுருட்டில் எரிந்தால் போதை தொடரும் இருட்டில் எரிந்தால் பாதை தெரியும் விழியில் எரிந்தால் காதல் இடையில் எரிந்தால் காமம் மனசில் எரிந்தால் பாசம் ஈருடலில் எரிந்தால் பரவசம் எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......! …

    • 7 replies
    • 2.6k views
  12. வெடிசுமந்தோரே! -------------------- நீங்கள் தமிழ் ஈழத்தை மடிசுமந்தீர் ஆதலினால் வெடிசுமந்தீர்! நாம் உம்மை எம் மனம் சுமந்தோம்! தமிழ் ஈழத்தை அடைவதற்கு உங்கள் பெயர் சொல்லி உறுதி கொள்வோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி

    • 0 replies
    • 1.1k views
  13. என்னால் சுவாசிக்க முடியவில்ல-பா.உதயன் உலகுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் உலகப் போலீஸ்காரனின் உண்மை முகத்தை உலகம் கண்டுகொண்டது காறி துப்புகிறது மனிதம் இவன் முகத்தில் இனி யாருக்கு தேவை உன் உபதேசம் என்றே இனவாதம் மீண்டும் வெள்ளைத் திமிரோடு தான் இன்னும் இருக்கிறது நான் வேறு நீ வேறு என்று கழுத்தை நெரிக்கிறது கறுப்புச் சிறுவனும் வெள்ளைச் சிறுமியும் கை கோர்த்துப் போகும் கனவுகள் எல்லாம் இறந்து கிடக்கிறது மார்ட்டின் லூதரின் இறுதி மூச்சோடு. பா.உதயன் ✍️ one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. I …

    • 2 replies
    • 795 views
  14. அந்தாதிக் கவிதை / "உயிரோடு இணைந்தவளே!" "உயிரோடு இணைந்தவளே உடலோடு கலந்தவளே! கலந்த காதலால் இதயத்தில் மலர்ந்தவளே! மலர்ந்து மயக்கி இன்பம் கொட்டியவளே! கொட்டிய தேளிலும் கொடுமை கூடியவளே! கூடி மகிழ்ந்து பரவசம் தருபவளே! தருவதும் எடுப்பதும் உனது உரிமையே! உரிமை கொண்டு நெஞ்சில் உயர்ந்தவளே! உயர்ந்த எண்ணங்களால் சிந்தனையைத் தூண்டியவளே! தூண்டிய உணர்வுகள் எல்லையைத் தாண்டியும் தாண்டாமல் பிரியாமல் இணைந்தாளே உயிரோடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  15. எமது உடலின் சதைகளை மட்டும் உண்டு விட்டு எங்களின் எலும்புகளை எறிந்து விட்டு மதம் என்ற போர்வைக்குள் போய் ஒளிந்து கொள்கின்றன ஆண் ஆதிக்கம் என்னும் மனித மிருகங்கள் அன்பே சிவம் என்று அறியாதவர் ஆயிரம் முறை ஆண்டவனை தொழுது என்ன பயன் .

    • 1 reply
    • 992 views
  16. 'காதல் சிறகினிலே' காதல் சிறகினிலே ஒரு வெடிப்பு மோதல் தந்து தூர விலகுது! சாதல் கண்களில் அருகில் தெரியுது கூதல் காற்றும் நெஞ்சை வருடுது! காற்றின் கீதம் எனக்குப் புரியவில்லை வேற்று மொழியாக இதயத்தைத் தாக்குது! கூற்றவன் என்னைக் கட்டி அணைத்து கற்ற அறிவையும் மெல்ல அறுக்கிறான்! பிடிக்கும் என்று முத்தத்தால் கூறியவளே நடிக்கும் உன்னை நம்பியது எனோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1926 ['காதல் சிறகினிலே'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32650780024570556/?

  17. மரம் சொன்ன கதை..! அழகான மரங்கள் அழகான பூக்கள் அத்தோடு.. நாங்கள் தரும் பழங்களும் காய்களும் மட்டுமே உங்கள் கண்களுக்கும் வாய்க்கும் ருசிக்கிறது நீர் தேடி உணவு தேடி அலைகின்ற எங்கள் வேர்களை எவருக்குமே தெரிவதில்லை. அதுபோலத்தான் உங்கள்.. தாய் தந்தையரும் வேர்களே! மறந்திடாதீர்கள். -பசுவூர்க்கோபி-

  18. "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…

  19. Started by uthayakumar,

    அன்பாக பேசி அருகோடு இருப்பவர் போல் நடிப்பவர் எல்லாம் தங்கள் தேவை முடிந்தவுடன் உன்னை விட்டு விலகிவிடுவார்கள் உண்மைகளை மறைப்பதற்காக பல பொய்களை கூட சொல்லுவார்கள் இருந்தபோதும் பகைமைகளை வளர்த்துக்கொள்வதில் பயன் ஏதும் இல்லை வலிகளையும் துன்பங்களையும் பட்ட காயங்களையும் நினைத்து கொண்டு இருந்தால் வாழ்க்கை நகராது உண்மைகளை ஒரு நாள் இவர்கள் அறியும் பொழுது தாங்கள் கொட்டிய குப்பைகளை நினைத்து வருத்தப்படுவார்கள் பார்க்க வேண்டிய சந்தர்பங்களில் ஒரு புன்னகையோடு நகர்ந்து விடுங்கள் .

  20. தூங்கும் போதும் தூங்கி எழும்பும் போதும் எல்லா நேரமும் எப்பவும் இவளுக்கு இவள் மகன் நினைப்புத்தான் ஊர் உறங்கி கிடந்த மாலை ஒரு நாள் ஒருவருக்கும் தெரியாமல் இழுத்துப் போனார்கள் அன்று போனவன் போனவன் தான் இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு இன்று இவள் ஊரின் அம்மன் தேர் திருவிழா ஆண்டு தோறும் அந்த கற்பூர சட்டியை தலையில் வைத்தபடி அவனை இடுப்பில் அணைத்தபடி அந்த ஊரே அதிரும்படி அரோகரா சொன்னபடி அந்த அம்மன் தேர் பார்க்க அவனோடு சென்ற அந்த நாட்களின் நினைப்போடு எப்பவும் இவளுக்கு இவன் மகன் நினைப்பு தான் கடைசியாய் இவன் எடுத்த படத்தை காவியபடி தேடித்தேடி அலைந்து தெரு முழுக்கு கூவி திரிந்தும் எவனும் திரும்பி கூ…

  21. "மனதைத் திருடியவளே" "மனதைத் திருடியவளே என்னை மயக்கியவளே மன்றாடிக் கேட்கிறேன் திருப்பித் தந்துவிடு! மகிழ்வைத் தந்து விலகிப் போனவளே மஞ்சள் நிலாவில் தனிமையில் வாடுகிறேனே!!" "மஞ்சத்தில் உறங்கையில் கனவு விரியுது மகர தோரணம் பந்தலில் ஆடுது! மங்கல அரிசி காத்து கிடக்குது மணமகள் நீயோ அங்கு இல்லையே!!" "மழையும் புயலும் பழகி விட்டது மது வாசனையில் என்னை மறக்கிறேன்! மரணம் என்னை நெருங்க முன் மவுனம் களைத்து மடியைத் தாராயோ!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. ”முரட்டு மேதை என்பர் மேலோர்'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.” . . இது என் சுய தரிசனக் கவிதை. யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவனாக செயல்பட்ட நாட்க்களில் எழுதியது. ஒரு போராட்டத்தின்போது பல்கலைக்கழக தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி என்னை intellectual and Thug என திட்டினார். அவருக்கு பதிலாக எழுதி பல்கலைகழக மாணவர் மன்ற அறிவுப்பு பலகையில் ஒட்டிய கவிதை. தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது. .கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்- வ.ஐ.ச.ஜெயபாலன் -.முரட்டு…

    • 7 replies
    • 1.9k views
  23. ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!

    • 5 replies
    • 478 views
  24. உலகுக்கே சோறுதந்த ஊர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . புயலால் விழுந்தவரை மழை எறி மிதிக்கிறதே அயலும் தொலையும் ஆறு குளம் சேறாக தரை வீழ்ந்த மீனாய் என் தமிழ்சுற்றம் துடிக்கிறதே. ஊர்கூடி கடா வெட்டி உறவாடும் பேரூர்கள் சிறாருக்கும் பாலின்றி துணியின்றித் தவிக்கிறதே மாழையும் குளிர் காற்றும் வாளாய் சுழல்கிறதே உலகுக்குகே சோறு தந்த ஊர் பசித்துக் கிடக்கிறதே வங்கக் கடல் நடு நடுங்க மரீனாவைக் கடந்த புயல் எங்கென்று வாடிவாசல்சீமை ஏங்கி ஏங்கி அழுகிறதே

    • 1 reply
    • 1.3k views
  25. "சந்தேகம்" "சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு சரித்திரம் சொல்லும் இவைகளின் கதைகளை சகோதரர்களை பிரித்தது சில வரலாறுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது சில நிகழ்வுகள்" "எதிர்காலம் குறித்த சில சந்தேகங்கள் எல்லா உறவுகளில் எழும் ஐயப்பாடுகள் எதிர்பாராமல் விஸ்வரூபம் எடுக்கும் ஒருநாள் எல்லாம் மனநோயாக மனிதனை மாற்றிவிடும்" "சிலருக்கு ஏற்பட்ட சில பாதிப்புக்கள் சில தனி நபருடைய குணாதிசயங்கள் சிரசில் எடுத்த முன் எச்சரிக்கைகளை சிலவேளை சந்தேகமென அழைக்கச் சொல்லும்" "தவறாக சம்பவத்தை புரிந்து கொள்ளுதல் தகவல் சரிபார்க்காமல் சுயவிளக்கம் கொடுத்தல் தருண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.