தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வடசென்னையில் களமிறக்கப்பட்ட கமாண்டோ படை வீரர்கள் வடசென்னை பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கமாண்டோ படை வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பதிவு: ஜூன் 26, 2020 05:26 AM சென்னை, தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னையில் வடசென்னை பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் போதிய விழிப்புணர…
-
- 1 reply
- 483 views
-
-
ஈழத் தமிழர்களை அழித்து ஒழிக்கும் செயல் இன்று நேற்றல்ல காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும். 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மதிக்க வேண்டும் என்று மதிமுக எம்.பி கணேசமூர்த்தி மக்களவையில் தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பேசிய கணேசமூர்த்தி கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் இனம் திட்டமிட்டு காலம் காலமாக அழிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சாலமன் பண்டாரநாயகே காலத்தில் இருந்தே இனப்படுகொலை தொடங்கிவிட்டது. ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக அறிவி…
-
- 0 replies
- 582 views
-
-
ஈழத்திற்கான மூன்றாம் கட்டப்போராட்டம்: தமிழக மாணவர்கள் அறிவிப்பு இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள். இவர்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி மே 12ஆம் திகதி அன்று காலை புறப்படுகின்றனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரிய…
-
- 0 replies
- 1.8k views
-
-
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜு பவுஞ்சூர் வெட்கடாபுரம் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சட்டதை அறிந்து எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் வந்து தீப்பற்றிய காரை அணைத்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அவர் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ ராஜு கூறுகையில், நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அப்போது கார் எரிந்து கொண்டிருந்தது. பின்னர் …
-
- 0 replies
- 328 views
-
-
சசிகலா - சீமான் சந்திப்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சசிகலாவைச் சந்தித்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை வாசத்துக்குப்பிறகு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. தமிழக எல்லையான ஓசூரிலிருந்து சென்னை வரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அவரின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதால், வெளியாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நாள்களுக்குப் பிறகு நேற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியில் வந்தார் சசிகலா. …
-
- 0 replies
- 794 views
-
-
போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றச்சாட்டு ''சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டினார். சென்னையில், நேற்று அண்ணாதுரை நினை விடத்தில், அஞ்சலி செலுத்த, தீபா சென்றார். அவரது காரை, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழி யில் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். தீபா ஆதரவாளர்கள், அவர்களுடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை அனுமதித் தனர்.இதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில், தீபா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கும், இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்து, தீபா …
-
- 0 replies
- 384 views
-
-
தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன! தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 1950 என்ற இலக்கத்தை பயன்படுத்தி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுற…
-
- 0 replies
- 280 views
-
-
தென்னிந்தியாவை சுற்றி வளைத்தது சீனா- டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை 23 Views தென்னிந்தியாவை சுற்றி வளைத்திருக்கிறது சீனா. இலங்கையில் சீனாவின் அரசியல் சாசனத்துக்குட்பட்ட இறையாண்மை பிரதேசத்தை சீனா பெற்று விட்டது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் அமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்திருக்கிறது. தமிழக எல்லையையொட்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களையும் சீனாவுக்கு தாரை வார்த்துள்ள சிங்கள அரசு, அவற்றை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியப் பாதுகாப்புக்…
-
- 0 replies
- 334 views
-
-
பி.ஜே.பி 'மிஷன் தமிழ்நாடு' - பன்னீர்செல்வம் பாணியில் எடப்பாடி பழனிசாமி! 'ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். அப்படித் தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் களேபரங்களைவைத்து தமது அரசியல் கூத்தை அரங்கேற்றி வருகிறது பி.ஜே.பி. அ.தி.மு.க சின்னம் பறிப்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்று தொடர்ந்து யார்க்கர் பந்துகளாக வீசி டி.டி.வி.தினகரனை அலறவைத்து வருகிறது பி.ஜே.பி. அதனின் பழைய விக்கெட் பன்னீர்செல்வம் என்றால், அதன் லேட்டஸ்ட் விக்கெட் எடப்பாடி பழனிசாமி. எந்த முதல்வர் பதவிக்காக அ.தி.மு.க-வைப் பிளந்துகொண்டு பன்னீர் பிரிந்தாரோ, …
-
- 0 replies
- 504 views
-
-
28 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தினார்களா? “அ.தி.மு.க-வில் ஏற்கெனவே இரண்டு அணிகளாகப் பி்ளவுபட்டுக் கிடக்கும் நேரத்தில் அ.தி.மு.க அம்மா அணியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ-க்கள் தனியாகக் கூட்டம் போட்டுள்ளார்கள்'' என்ற தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ''அப்படி ஒரு கூட்டம் நடைபெறவே இல்லை'' என சில எம்.எல்.ஏ-க்கள் மறுப்பும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளிலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதில், ஓ.பி.எஸ் அணியில் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தற்போது உள்ளனர். இது தவிர, 28 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார்கள். அதில், மூன்று பேர் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இந்நிலையில்…
-
- 0 replies
- 213 views
-
-
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்... தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க எடப்பாடி அரசு அதிரடி முடிவு? தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன. இந்த கடைகளை குடியிருப்புகளில் திறக்க அரசு முடிவு செய்தது.ஆனால் தமிழகம் முழுவதும் குடியிருப்புகளில் மதுபான கடைகளைத் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் கடைகள் தீ வைத்தும் எரிக்கப்பட்டுள்ளன.கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கை அகதி வி.எம்.பி.நேரு என்ற ஈழ நேரு திருச்சி அகதிகள் முகாமில் உள்ளார். அவரது விருப்பத்துக்கு மாறாக அரசு அவரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தடைவிதிக்க கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரித்து, ஈழ நேருவின் விவகாரத்தில் தற்போதய நிலையே நீடிக்க வேண்டும், அவரை நாடு கடத்த கூடாது. வழக்கில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து இலங்கை அகதி செந்தூரானை நாடு கடத்த தடை கோரி வக்கீல் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து, செந்தூரானை நாடு கடத்த தடை விதித்தது. இதை தொட…
-
- 0 replies
- 477 views
-
-
பெங்களூரு: நடிகரி ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதாக, அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யாநாராயணா, அரசியலில் ஊழலை அகற்றிடவே ரஜினிகாந்த் களமிறங்குவதாகவும், ஜூலை மாத இறுதியில் தனிக் கட்சி குறித்து ரஜினி அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறியுள்ளார். மேலும்,"ரஜினிகாந்த் அரசியலில் நுழைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அரசியலில் நுழைவது குறித்து அவரது தீவிர ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டுள்ளார். அனைவருமே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர்" என்று, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து சத்யநாராயணா கூறியுள்ளார். தனது அரசியல் பிரவேசம் குறித்து…
-
- 0 replies
- 352 views
-
-
மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்! - ‘திடுக்’ தினகரன் ‘‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுகிறார் திவாகரன். அவரது படத்தை எடுத்து வையும்” என்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய வேகத்தில், கழுகார் நம் முன் ஆஜரானார். ‘‘இது என்ன விவகாரம்? அவர்கள் குடும்பத்துக்குள் ஏதோ சமாதானப் படலம் நடந்ததாகவும் தகவல் பரவியதே?” என்ற கேள்வியைப் போட்டு தொடங்கி வைத்தோம்! ‘‘அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்று தினகரன் ஒரு பேட்டியில் அதிரடியாக மறுத்திருக்கிறாரே! ‘என்னிடம் இப்படி கேள்வி கேட்டிருந்தால், ‘நீர் அடித்து நீர் விலகுமா?’ என்று மட்டுமே பதில் சொல்லியிருப்பேன். முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் தினகரன். யார் என்ன செய்தாலும், இந்த ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா``- யாரைச் செல்கிறார் கமல்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைIKAMALHAASAN அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், ``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.`` எ…
-
- 0 replies
- 405 views
-
-
நிம்மதியை தந்த நீதிமன்ற உத்தரவுகள்! சசி குடும்பம் மட்டும் கதிகலக்கம் சென்னை உயர் நீதிமன்றமும், டில்லி சி.பி.ஐ., நீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகள், தமிழக அரசியல் கட்சிகளிடமும், பொது மக்களிடமும், நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.அக்., 4 வரை, ஆளும் கட்சியும், அடுத்த மாதம், 25ம் தேதி வரை, தி.மு.க.,வும் அமைதி காக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்தினருக்கு மட்டும், இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, தமிழக அரசியல்களத்தை, நாடே உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க முயன்றதினகரன் ஆதரவாளர்கள்,18 பேரின் எம்.எல்.ஏ., பதவியை, கட்சி தாவல் தடை…
-
- 0 replies
- 516 views
-
-
தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனிமை ஆக்கப்பட்டது எமக்கு கிடைத்த வெற்றி - சீமான் [Tuesday, 2014-03-18 12:47:55] தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தம¤ழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட…
-
- 0 replies
- 527 views
-
-
வைகோ | கோப்புப் படம் இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலங்களின் மீதும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் என்றும், தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்றும், மே மாதம் 27 ஆம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் …
-
- 1 reply
- 730 views
-
-
`துபாய் அரசு கற்றுக்கொடுத்த பாடம் இது!' - ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும் Chennai: நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்…
-
- 2 replies
- 919 views
-
-
இப்படிதான் இருந்தது ஐஸ் அவுஸ் சென்னை நகரம் பிறந்த நாள் கொண்டாடப்போகிறது. சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது. -தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன் விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர். பிறகு, கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது. இன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறை…
-
- 10 replies
- 5.9k views
-
-
கர்நாடகாவை சேர்ந்தவருக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி - வலுக்கும் எதிர்ப்பு பகிர்க அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சென்னையில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இன்றி மூன்று பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவால் இயங்கிவந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனும், ஆட்சிக்குழு சார்பில் சென்னை ஐஐட…
-
- 0 replies
- 502 views
-
-
"ஆ. ராசாவின் வாக்குறுதி நம்பிக்கை தரவில்லை" - போராட்டத்தை தொடரும் அன்னூர் விவசாயிகள் - என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை அன்னூர் தொழிற்பூங்காவுக்காக விவசாயிகள் நிலங்கள் பலவந்தமாக கையகப்படுத்தப்படாது என்று திமுக எம்.பி ஆ. ராசா அளித்த வாக்குறுதி நம்பிக்கை அளிக்கவில்லை என்றும் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் கூறியிருக்கிறார்கள், இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகள். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3,864 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
சென்னை: பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை (7ஆம் தேதி) அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தி.மு.க. மற்றும் பா.ம.க. வழக்கறிஞர்கள், இது தொடர்பாக மனுகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (6ஆம் தேதி) வந்தது. இதை விசாரித்த நீதிபதி, ''பள்ளி, கல்லூரிகள் நாளை (7ஆம் தேதி) வழக்கம்போல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார். மேலும், தமிழகத்த…
-
- 1 reply
- 654 views
-
-
இப்படியும் ஒரு தமிழரா ? ———————————— முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை. பூனா திரைப்படக் கல்லூரியின் பேராசிரியர்.சதீஷ் பகதூர் ‘திரைப்பட ரசனை’ பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார், அடையார் திரைப்படக் கல்லூரியில். வகுப்பு முடியும் தருணம் திடீரென்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அமெரிக்க நூலகத்தில் Dances of Siva என்றொரு செய்திப்படம் திரையிடப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் சென்று காணலாம் என்பதாக. அந்தப்படம் ஆனந்த குமாரசாமி பற்றியது. பார்த்து பிரமித்துப் போனோம். இப்படி ஒரு ஆய்வாளரா? என்பதற்கு மேல், நமக்கு இப்படிப்பட்ட கலாச்சார பொக்கிஷங்கள் இருக்கின்றானவா? ஆச்சரியம் கவிந்து எல்லாமும் மூடிப்போய் விட்டது. அப்போதிருந்த அரசியல் வெறியில் மீண்டும் அவர் பற்றி எதுவும் தேடவில்…
-
- 0 replies
- 930 views
-
-
மிஸ்டர் கழுகு: கொள்ளைக் கூட்டணி... கொந்தளிக்கும் ஐ.ஜி! “புதிய உத்தரவுகள், அதிர்வூட்டும் நியமனம், அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் என்று கடந்த சில நாள்களாக நீதிமன்றங்களை மையமாக வைத்தே, தமிழகம் பரபரப்பாக இருந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்தமர்ந்தார் கழுகார். “தினகரன் அணி இப்போது, கொஞ்சம் தெம்பாக இருப்பதாக நம் நிருபர்கள் கட்டுரை கொடுத்திருக்கிறார்களே’’ என்றபடி, கட்டுரையை அவர் முன்பாக வைத்தோம். ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோ போல ‘சர்சர்’ரென்று கண்களுக்கு முன்பாக அந்தக் கட்டுரை அடங்கிய பக்கங்களை வீசியவர், “18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா விசாரிக்கக் கூடாது என்பதில்தான் தினகரன் தரப்பு குற…
-
- 0 replies
- 928 views
-