தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10245 topics in this forum
-
`எல்லாரையும் நல்லா கொண்டு வரணும்!' பழங்குடி பிள்ளைகளுக்கு கலாவதி டீச்சரின் சேவை ``பழங்குடி கிராமங்களுக்கு நேர்ல போய், படிப்பை பாதியிலேயே விட்ட பசங்களக் கணக்கெடுத்து, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்துல சேர்த்துவிடுறேன். இந்த வருஷம் மட்டும் 30 பேரை சேர்த்துவிட்டிருக்கேன்.'' மலையுச்சியில் இருந்தாலும் கூடலூர் மீது கல்வி வெளிச்சம் தற்போதுதான் மெல்ல படர்கிறது. இங்கு வாழும் பெரும்பாலான பழங்குடிகளுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் உயர் கல்வி என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் குறிப்பாகப் பணியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக…
-
- 0 replies
- 508 views
-
-
கடலூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து- எழுவர் உயிரிழப்பு! கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உட…
-
- 0 replies
- 375 views
-
-
தேமுதிகவை இந்த முறை கண்டிப்பா தெருவுலதான் விடப் போறாங்க... மைத்துனரால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பரிதாபம்..! விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள கார்ட்டூன் அரசியல் மன்றத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. தேமுதிகவின் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிஷ், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள கார்ட்டூன், திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. விஜயகாந்த் காலில் அரசியல் கட்சி தலைவர்கள் வீழ்ந்து கிடப்பது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. காலில் விழும் அரசியல் தலைவர் ஒருவரின் தோளில் மஞ்சள் துண்டு இருக்கிறது. அதாவது, விஜயகாந்த் காலில் கலைஞர் வீழ்ந்து கும்பிடுவது போல கார்ட்டூன் வரையப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்துள்ளார் சுதிஷ். …
-
- 0 replies
- 538 views
-
-
சசிகலா வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சொத்து முடக்கத்திற்கான அறிவித்தல் சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துக்களை முடக்கியதற்கான அறிவித்தலை வருமான வரித்துறையினர் ஒட்டினர். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 இலட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்ளூர் தனி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த தீர்ப்பை இரத்து செய்ததோடு, நான்கு…
-
- 0 replies
- 458 views
-
-
சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021 கடந்த இரண்டு தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட சீமானின் `நாம் தமிழர் கட்சி’ இந்த முறை என்ன செய்யப்போகிறது? தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆட்டங்களைத் தொடங்கிவிட்டன. பெரிய கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கலாம் என்பது முதல், தங்கள் கட்சிகளில் யாருக்கு சீட்டுக் கொடுக்கலாம் என்பதுவரை முதற்கட்ட முடிவுகளை எடுத்துவிட்…
-
- 1 reply
- 684 views
-
-
சமூக வலைதளத்தில் முகம் தெரியாமல் ஒளிந்து கொண்டு... விமர்சனம் செய்ய நினைப்பது கையாலாகாதனம்... அது ஒரு பொட்ட_தனம்... சொல்கிறார்.. பாஜகவின்_மதுவந்தி...!
-
- 0 replies
- 471 views
-
-
மு.ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக வீரப்பன் தொடர்பான இரு வேறு வழக்குகளில் கைது செய்யபட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை மனித நேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கோவை மத்திய சிறையில் மூவரும், மைசூர் சிறையில் நான்கு பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்றவர்களுக்கும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், எஞ்சியிருக்கும் காலத்தை அவர்களது குடும்பத்தினரோடு கழிக்க, மனித நேய அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என சிறைவாசிகள…
-
- 0 replies
- 613 views
-
-
தமிழகத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதேநேரம், வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துளள்ளார். இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்ட…
-
- 0 replies
- 425 views
-
-
தமிழீழ உணர்வாளர்கள் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.! அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளையதினம் இலங்கையின் வடமாகாணத்தில் இடம்பெறவுள்ள காணாமல் ஆககப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை மூன்று மணிக்கு ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மேற்படி போராட்டம் இடம்பெற்றது. இதில் உணர்வாளர்கள் பலர் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக தமது கண்டன கோசங்களை எழுப்பினார்கள். https://thamilkural.net/newskural/world/65565/
-
- 1 reply
- 619 views
-
-
2021-ல் தமிழக மந்திரிசபையில் பாஜக இடம்பெறுவது உறுதி... எல்.முருகன் திட்டவட்டம்.! சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக மந்திரி சபையில் பாஜக இடம்பெறுவது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ.க்களை இரட்டை இலக்கத்தில் அனுப்பி வைக்கும் வரை தனக்கு ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார். கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடரும் என அவர் தெரிவித்திருக்கிறார். எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டது முதல் அக்கட்சியை பரபரப்பாகவே வைத்து வருகிறார் எல்.முருகன். கந்தசஷ்டி கவசத்தில் தொடங்கி கோயில் திறப்பு வரை கிடைத்த வாய்ப்புகளையெல்லாம…
-
- 0 replies
- 547 views
-
-
தமிழ்நாடு: 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு - தனி மனிதரின் முயற்சியால் உருவான செழிப்பான காடு 28 ஆகஸ்ட் 2020, 01:16 GMT விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில் பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும் சரணாலயம் என்று அழைக்கப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி அரு…
-
- 6 replies
- 1k views
-
-
அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை DIPR தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணி தலைமை தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக ஒரு நிலைப்பாட்டிலும், மாநிலத்தில் ஆளும் அதிமுக வேறொரு நிலைப்பாட்டிலும் இருப்பதால், அந்த கூட்டணி தொடருமா என்ற குழப்பம் மீண்டும் எழுந்துள்ளது. தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவ்வப்போது அதிமுகவினரும், பாஜகவினரும் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு, அதிமுகவில் அடுத்த முதல்வர் என்ற சர்ச்சை, சில அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தால் தீவிரமானது. இந்திய சுதந்திர தினம் சென்னையில் கொண்டாடப்பட்ட நில…
-
- 0 replies
- 623 views
-
-
தேசிய அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற சிறந்த மாநிலமாக தமிழகம் தெரிவு! தேசிய அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் கொள்கைத் திட்டங்களை வகுக்கும் நிதி ஆயோக் அமைப்பு போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியலை தயாரித்துள்ளது. இதன்படி, கடலோர மாநிலங்களான குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. அரசு கொள்கை, வர்த்தக நிலைவரம், ஏற்றுமதிச் சூழல், ஏற்றுமதி செயற்பாடு ஆகிய 4 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், மாநிலங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மாநில அரசுகள் ஏற்றும…
-
- 0 replies
- 394 views
-
-
இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு காணப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில் காணொளிகாட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “மருத்துவ துறையில் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்க 190 கோடி ரூபாயில் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி…
-
- 0 replies
- 431 views
-
-
நன்று ரெண்டு: எத்தியோப்பியா கொண்டாடும் தமிழர்; நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர் ஓர் அற்புதமான 'பயோபிக்' சினிமா போல விரியும் டாக்டர் கண்ணன் அம்பலத்தின் அனுபவங்கள் மற்றும் கம்பூர் ஊராட்சியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்... டாக்டர் கண்ணன் அம்பலம் எத்தியோப்பிய நாட்டிலிருக்கும் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். 48 பாலங்கள், 28 இடங்களில் நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இவரை அந்நாட்டின் ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எத்தியோப்பியாவின் பென்னி குயிக் இவர்! "மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்துகம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரியின் மரபணு (டி.என்.ஏ) ஆராய்ச்சிக்கு மத்திய,மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.3 கோடி கிடைக்காததால், ஆராய்ச்சிப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19 முதல் நடந்து வருகிறது. இதனை தமிழக தொல்லியல் துறையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணு பிரிவும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகளில…
-
- 0 replies
- 441 views
-
-
`தமிழக அரசின் தடை உத்தரவை மீறி, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம்’ என்று ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக பா.ஜ.க எடுத்துள்ளது. இது, கூட்டணிக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்தியுள்ளது. `விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியே தீருவோம்' என்று சூளுரைத்திருக்கிறது இந்து முன்னணி. சில மாதங்களாக அ.தி.மு.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் பா.ஜ.க., இந்த விவகாரத்திலும் மோதலை உருவாக்கி, `இந்துக்களின் நண்பன் நான்தான்’ என்ற அஜெண்டாவை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல்ரீதியாக இதன் தாக்கம் என்ன? …
-
- 1 reply
- 980 views
-
-
மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவு by : Dhackshala மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் …
-
- 3 replies
- 836 views
-
-
தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் Getty Images தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா? சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரைய…
-
- 1 reply
- 889 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவினை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீண்டும் ஆலையை திறக்குமாறும் கோரி உத்தரவு பிறப்பித்தது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில…
-
- 5 replies
- 986 views
-
-
சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், மதுராவயல் ஆலப்பாக்கம் அருகே உள்ளே அஷ்டலட்சுமி நகரில் சீமானின் வீட்டுக்கு எதிராக கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது இப்படி ஆள்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதற்காக சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்த…
-
- 0 replies
- 685 views
-
-
மூன்றாம் உலக நாடுகளிலும், இந்தியாலும் போன் பாவனை வளர்ந்த அளவுக்கு, கிரெடிட், டெபிட் காட் பாவனை வளராததால், மக்கள் அருகிலுள்ள முகவர்களிடம் சென்று பணத்தினை கொடுத்தால், அவர்கள் இலக்கத்தினை வாங்கி, ரீ-சார்ஜ் பண்ணி விடுவார்கள். பொதுவாக வெளிநாடுகளில் இருந்து போவோர், இதனை பாட்டரி சார்ஜ் போய் விட்டது.... அதுதான் ரீ-சார்ஜ் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இது பணம் ரீ-சார்ஜ். இப்படி தான் ஒரு இளம் பெண் ஒரு கடைக்கு ரீ-சார்ஜ் செய்ய சென்றுள்ளார். மயிலாடுதுறை: ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே அசிங்க அசிங்கமான வீடியோக்களை செல்போனுக்கு அனுப்பிவிட்டார் முகமது அப்ரிடி.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிளியனூர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு Facebook சங்கர் - கௌசல்யா ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கல…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5890 பேருக்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 120 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5,870 பேருக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3 இலட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த வாரங்களில் ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவான நிலையில் இன்று ஆயிரத்து 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொ…
-
- 0 replies
- 681 views
-
-
நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனக்கு 80 வயதாகும் நிலையில், தன் மகளை வேலூருக்கு சென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாக அந்…
-
- 0 replies
- 357 views
-