Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய உருக்கமான ஆடியோ வெளியீடு மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதிஸ்ரீ துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி(நாளை) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர், தற்கொலை ம…

  2. மதுரை அருகே கள்ளிக்குடி பெரிய உலகாணி எனும் கிராமத்தில் குண்டாற்றின் மேற்கரையில் எட்டாம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன், இளம் ஆய்வாளர் உதயகுமார் கூறியதாவது: கப்பலுாரில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைகழக உறுப்புக் கல்லுாரி இளநிலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவா் கண்ணன் மற்றும் அவரது துறைப் பேரராசிரியா் சங்கையா (தமிழ்த்துறை) கொடுத்த தகவலின் படியும் இக்கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெடுத்த சிலையை ஆய்வு செய்ததில் இந்த சிலை எட்டாம் நுாற்றாண்டினைச் சார்ந்த பாண்டியா் கால சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. இக்காலக்கணக்கீடானது சிற்பத்தின் தன்மை, அமைப்பு, அவற்றில் உள்ள ஆயுதங்க…

  3. கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட மக்கள் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நித்தியானந்தாவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். எனினும் குறித்த கைலாசா என்ற தனித்தீவு எந்த இடத்தில் இருக்கின்றது என சரியான தகவல் தெரியாமல் பொலிஸார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். இதனிடையே கைலாசா எனும் தனிநாட்டின் பிரதமர் தான்தான் என தெரிவித்தார். பின்னர், தனிக்கொடி, க…

  4. 'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்?' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்! நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாண…

  5. “தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இந்தியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால், 60 ஆண்டு காலத் திராவிட இயக்க ஆட்சியில் இந்தியை மட்டுமல்ல தமிழையும் சேர்த்து ஒழித்து இரட்டைக் கொலை செய்திருக்கிறார்கள்” - திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்படிச் சொன்னார். இதை அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கடுமையாக மறுத்திருக்கிறார். இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய வைகைச்செல்வன், “கடந்த 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியலில்தான் தமிழ் மொழியானது மிக உன்னதமான உயரத்தைத் தொட்டிருக்கிறது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, எழுத்துச் சீர்திருத்த…

  6. இரண்டாவது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு போராட்டம்

  7. வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..- செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது! தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்னும் குணமாகவில்லை என எஸ்.பி.சரண் குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்ற…

  8. ராஜீவ் கொலை வழக்கில் 7பேர் விடுதலை முடிவை எடுக்க அரசு கால தாமதம் – அற்புதம்மாள் குற்றச்சாட்டு ஏழுபேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றமே உறுதி செய்து 2 ஆண்டுகள் கடந்தும், தமிழக அரசு முடிவெடுக்காமல் தாமதிப்பதாக பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் 161இன்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு நேற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்வர் ஜ…

  9. `எல்லாரையும் நல்லா கொண்டு வரணும்!' பழங்குடி பிள்ளைகளுக்கு கலாவதி டீச்சரின் சேவை ``பழங்குடி கிராமங்களுக்கு நேர்ல போய், படிப்பை பாதியிலேயே விட்ட பசங்களக் கணக்கெடுத்து, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்துல சேர்த்துவிடுறேன். இந்த வருஷம்‌ மட்டும் 30 பேரை சேர்த்துவிட்டிருக்கேன்.'' மலையுச்சியில் இருந்தாலும் கூடலூர் மீது கல்வி வெளிச்சம் தற்போதுதான் மெல்ல படர்கிறது. இங்கு வாழும் பெரும்பாலான பழங்குடிகளுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் உயர் கல்வி என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் குறிப்பாகப் பணியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக…

  10. கடலூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து- எழுவர் உயிரிழப்பு! கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உட…

  11. தேமுதிகவை இந்த முறை கண்டிப்பா தெருவுலதான் விடப் போறாங்க... மைத்துனரால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பரிதாபம்..! விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள கார்ட்டூன் அரசியல் மன்றத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. தேமுதிகவின் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிஷ், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள கார்ட்டூன், திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. விஜயகாந்த் காலில் அரசியல் கட்சி தலைவர்கள் வீழ்ந்து கிடப்பது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. காலில் விழும் அரசியல் தலைவர் ஒருவரின் தோளில் மஞ்சள் துண்டு இருக்கிறது. அதாவது, விஜயகாந்த் காலில் கலைஞர் வீழ்ந்து கும்பிடுவது போல கார்ட்டூன் வரையப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்துள்ளார் சுதிஷ். …

  12. சசிகலா வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சொத்து முடக்கத்திற்கான அறிவித்தல் சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துக்களை முடக்கியதற்கான அறிவித்தலை வருமான வரித்துறையினர் ஒட்டினர். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 இலட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்ளூர் தனி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த தீர்ப்பை இரத்து செய்ததோடு, நான்கு…

  13. சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021 கடந்த இரண்டு தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட சீமானின் `நாம் தமிழர் கட்சி’ இந்த முறை என்ன செய்யப்போகிறது? தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆட்டங்களைத் தொடங்கிவிட்டன. பெரிய கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கலாம் என்பது முதல், தங்கள் கட்சிகளில் யாருக்கு சீட்டுக் கொடுக்கலாம் என்பதுவரை முதற்கட்ட முடிவுகளை எடுத்துவிட்…

  14. சமூக வலைதளத்தில் முகம் தெரியாமல் ஒளிந்து கொண்டு... விமர்சனம் செய்ய நினைப்பது கையாலாகாதனம்... அது ஒரு பொட்ட_தனம்... சொல்கிறார்.. பாஜகவின்_மதுவந்தி...!

  15. மு.ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக வீரப்பன் தொடர்பான இரு வேறு வழக்குகளில் கைது செய்யபட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை மனித நேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கோவை மத்திய சிறையில் மூவரும், மைசூர் சிறையில் நான்கு பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்றவர்களுக்கும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், எஞ்சியிருக்கும் காலத்தை அவர்களது குடும்பத்தினரோடு கழிக்க, மனித நேய அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என சிறைவாசிகள…

  16. தமிழகத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதேநேரம், வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துளள்ளார். இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்ட…

  17. தமிழீழ உணர்வாளர்கள் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.! அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளையதினம் இலங்கையின் வடமாகாணத்தில் இடம்பெறவுள்ள காணாமல் ஆககப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை மூன்று மணிக்கு ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மேற்படி போராட்டம் இடம்பெற்றது. இதில் உணர்வாளர்கள் பலர் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக தமது கண்டன கோசங்களை எழுப்பினார்கள். https://thamilkural.net/newskural/world/65565/

    • 1 reply
    • 621 views
  18. 2021-ல் தமிழக மந்திரிசபையில் பாஜக இடம்பெறுவது உறுதி... எல்.முருகன் திட்டவட்டம்.! சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக மந்திரி சபையில் பாஜக இடம்பெறுவது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ.க்களை இரட்டை இலக்கத்தில் அனுப்பி வைக்கும் வரை தனக்கு ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார். கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடரும் என அவர் தெரிவித்திருக்கிறார். எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டது முதல் அக்கட்சியை பரபரப்பாகவே வைத்து வருகிறார் எல்.முருகன். கந்தசஷ்டி கவசத்தில் தொடங்கி கோயில் திறப்பு வரை கிடைத்த வாய்ப்புகளையெல்லாம…

  19. தமிழ்நாடு: 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு - தனி மனிதரின் முயற்சியால் உருவான செழிப்பான காடு 28 ஆகஸ்ட் 2020, 01:16 GMT விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில் பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும் சரணாலயம் என்று அழைக்கப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி அரு…

  20. அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை DIPR தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணி தலைமை தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக ஒரு நிலைப்பாட்டிலும், மாநிலத்தில் ஆளும் அதிமுக வேறொரு நிலைப்பாட்டிலும் இருப்பதால், அந்த கூட்டணி தொடருமா என்ற குழப்பம் மீண்டும் எழுந்துள்ளது. தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவ்வப்போது அதிமுகவினரும், பாஜகவினரும் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு, அதிமுகவில் அடுத்த முதல்வர் என்ற சர்ச்சை, சில அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தால் தீவிரமானது. இந்திய சுதந்திர தினம் சென்னையில் கொண்டாடப்பட்ட நில…

  21. தேசிய அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற சிறந்த மாநிலமாக தமிழகம் தெரிவு! தேசிய அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் கொள்கைத் திட்டங்களை வகுக்கும் நிதி ஆயோக் அமைப்பு போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியலை தயாரித்துள்ளது. இதன்படி, கடலோர மாநிலங்களான குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. அரசு கொள்கை, வர்த்தக நிலைவரம், ஏற்றுமதிச் சூழல், ஏற்றுமதி செயற்பாடு ஆகிய 4 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், மாநிலங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மாநில அரசுகள் ஏற்றும…

  22. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு காணப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில் காணொளிகாட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “மருத்துவ துறையில் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்க 190 கோடி ரூபாயில் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி…

    • 0 replies
    • 434 views
  23. நன்று ரெண்டு: எத்தியோப்பியா கொண்டாடும் தமிழர்; நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர் ஓர் அற்புதமான 'பயோபிக்' சினிமா போல விரியும் டாக்டர் கண்ணன் அம்பலத்தின் அனுபவங்கள் மற்றும் கம்பூர் ஊராட்சியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்... டாக்டர் கண்ணன் அம்பலம் எத்தியோப்பிய நாட்டிலிருக்கும் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். 48 பாலங்கள், 28 இடங்களில் நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இவரை அந்நாட்டின் ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எத்தியோப்பியாவின் பென்னி குயிக் இவர்! "மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்துகம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். கு…

  24. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரியின் மரபணு (டி.என்.ஏ) ஆராய்ச்சிக்கு மத்திய,மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.3 கோடி கிடைக்காததால், ஆராய்ச்சிப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19 முதல் நடந்து வருகிறது. இதனை தமிழக தொல்லியல் துறையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணு பிரிவும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகளில…

  25. `தமிழக அரசின் தடை உத்தரவை மீறி, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம்’ என்று ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக பா.ஜ.க எடுத்துள்ளது. இது, கூட்டணிக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்தியுள்ளது. `விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியே தீருவோம்' என்று சூளுரைத்திருக்கிறது இந்து முன்னணி. சில மாதங்களாக அ.தி.மு.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் பா.ஜ.க., இந்த விவகாரத்திலும் மோதலை உருவாக்கி, `இந்துக்களின் நண்பன் நான்தான்’ என்ற அஜெண்டாவை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல்ரீதியாக இதன் தாக்கம் என்ன? …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.