Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவு by : Dhackshala மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் …

  2. தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் Getty Images தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா? சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரைய…

  3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவினை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீண்டும் ஆலையை திறக்குமாறும் கோரி உத்தரவு பிறப்பித்தது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில…

  4. சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், மதுராவயல் ஆலப்பாக்கம் அருகே உள்ளே அஷ்டலட்சுமி நகரில் சீமானின் வீட்டுக்கு எதிராக கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது இப்படி ஆள்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதற்காக சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்த…

  5. மூன்றாம் உலக நாடுகளிலும், இந்தியாலும் போன் பாவனை வளர்ந்த அளவுக்கு, கிரெடிட், டெபிட் காட் பாவனை வளராததால், மக்கள் அருகிலுள்ள முகவர்களிடம் சென்று பணத்தினை கொடுத்தால், அவர்கள் இலக்கத்தினை வாங்கி, ரீ-சார்ஜ் பண்ணி விடுவார்கள். பொதுவாக வெளிநாடுகளில் இருந்து போவோர், இதனை பாட்டரி சார்ஜ் போய் விட்டது.... அதுதான் ரீ-சார்ஜ் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இது பணம் ரீ-சார்ஜ். இப்படி தான் ஒரு இளம் பெண் ஒரு கடைக்கு ரீ-சார்ஜ் செய்ய சென்றுள்ளார். மயிலாடுதுறை: ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே அசிங்க அசிங்கமான வீடியோக்களை செல்போனுக்கு அனுப்பிவிட்டார் முகமது அப்ரிடி.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிளியனூர்…

  6. உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு Facebook சங்கர் - கௌசல்யா ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கல…

  7. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5890 பேருக்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 120 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5,870 பேருக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3 இலட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த வாரங்களில் ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவான நிலையில் இன்று ஆயிரத்து 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொ…

    • 0 replies
    • 683 views
  8. நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனக்கு 80 வயதாகும் நிலையில், தன் மகளை வேலூருக்கு சென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாக அந்…

  9. சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்- சீமான் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பு சீமான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்தபின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தி வந்தால் நிலவு வருவதை போல ஹிந்தி வந்தால் பிளவு வரும் என்று தெரிவித்தார். அத்துடன், ஹிந்தியை இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலம், ஹிந்தியைப் போல் தமிழையும் நாடெங்கும் படிக்கச் சொல்வா…

  10. "அம்மா கொவிட் -19" வீட்டு பராமரிப்பு திட்டம், நாளை ஆரம்பித்து வைக்கப்படுகின்றது இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கொவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கின்றார். இத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முககவசங்கள், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டும் இத்திட்…

  11. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை by : Benitlas நாடு முழுவதும் எதிர்வரும் 22ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி எதிர்வரும் 22ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா காரணமாக விநாயகர் சிலைகள் அமைக்க, வழிபட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்குமாறு இந்து அமைப்புகள் சில கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளி…

    • 0 replies
    • 602 views
  12. முதல்வர் வேட்பாளர் யார்?.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை.! சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. வரும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இப்போதே கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை முன்னிலைப்படுத்தியே சட்டசபைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது காலமாகிவிட்டதால் திமுக, அதிமுக ஆகிய கட…

  13. அமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்?- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினியும் முருகனும் உறவினர்களிடம் காணொளி தொடர்பாடல் மூலம் பேச அனுமதி கோரிய வழக்கு சென்னை உயநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியையும் முருகனையும் பேச அனுமதித்தால், பன்னோக்கு விசாரணை முகாமையின் விசாரணைக்கு இடையூறாக அமையும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளி…

  14. தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி விருதுநகர் கரோனா ஊரடங்கு ஊரை முடக்கினாலும் கருணை உள்ளங்களை முடக்கவில்லை. அப்படி கருணை உள்ளம் கொண்ட ஓர் ஆசிரியர் தான் ஜெயமேரி. அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் 'அருகாமைப் பள்ளி', என்றொரு திட்டத்தைத் தொடங்கி தான் வசிக்கும் பகுதியில் உள்ள தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வியை நற்பண்பை கொண்டு சேர்க்கிறார். அருகாமையில் ஒரு பள்ளி உருவான கதையை ஜெயமேரியிடம் கேட்டோம். "பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத நிலை. வீட்டிற்கு வெளியே வெயிலில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தந்தால் என்ன என்ற யோசனை ஓடிக் …

  15. ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? – கனிமொழி கேள்வி ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிள்ளார். தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனக்கு ஹிந்தி தெரியாததால், விமான நிலையத்தில் CISF அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு அந்த அதிகாரிநீங்கள் இந்தியரா ? என கேள்வி எழுப்பியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது? எனவும் கனிமொழி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். http://athavannews.com/ஹிந்தி-தெரிந்தால்-தான்-இ/

  16. லெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்! சென்னை, மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், முதற்கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தென்கொரியாவில் இருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட், சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறையின் சில சட்டப் பிரச்சினைகள் காரணமாக மணல…

  17. National Education Policy 2020 புதிய கல்விக் கொள்கை: உயர்கல்வியில் தமிழ் வழியில் படிக்கும் வாய்ப்பு என்னவாகும்? 31 ஜூலை 2020, 03:27 GMT புதிய கல்விக் கொள்கை - புத்தொளி வீசுகிறதா? புற்றில் இருந்து சீறுகிறதா? இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் முக்கியமான கூறுகளில் ஒன்றாக வாய்ப்புள்ள இடங்களில், ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழி அல்லது தாய்மொழி வழியாகவே கல்வி கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருதப்படுகிறது. பள்ளிக் கல்வியில் தாய்மொழிக் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி எவ்வாறு பயன்படுத…

  18. திமுக, அதிமுகவுக்கு அடுத்து... வியூகம் வகுக்கும் பாஜக! மின்னம்பலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6.47 சதவிகித வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 12.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை பாஜக பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளன. 2017இல் தங்களது பணியைத் தொடங்கிய இந்த அமைப்புகள் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரையில் பரவலாக காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. …

  19. உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! 2016 - உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு! solomon5050 3 years ago மடிந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி, தமிழனின் இன உணர்வை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் பணியினை தொடர்ந்து செய்து வந்தும், விவசாய பன்னைகளை ஆங்காங்கே கட்டி எழுப்பவேண்டும் என்ற நம்மாழ்வாரின் கனவினை நனவாக்க துடிப்புடன் செயல்பட்டு கொண்டும், இப்பொழுது நட…

  20. மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி வீழ்ந்துவிட்ட ஓர் இனம் தன் நிலையிலிருந்து மேல்நோக்கி முன்னேறி எழ வேண்டுமாயின் அது தன் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நம் முன்னவர்களின் புகழ்மிக்க வரலாற்றைத் தேடிப் போற்றுவதன் மூலமே நம்மை நாம் தேற்றிக்கொள்ளவும், இழிநிலையிலிருந்து மேம்படுதற்கான உந்துதலையும் பெற முடியும். வரலாற்றைத் தொலைத்து விட்ட எந்த ஓர் இனமும் வாழாது; வளராது! எனவே ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு மூ…

  21. தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி வரும் தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல் திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தில் மிகவும் எளியப் பின்புலத்தில் வறுமை, ஏழ்மையை எதிர்கொண்டு பசி, பட்டினியோடு காலங்களைக் கடத்தி தந்தையை இழந்தபோதும் தன்னம்பிக்கையை இழக்காது இலட்சியத்தில் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்து நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் தங்கை கோமதி மாரிமுத்து. அவரை விளையாட்டில் தோற்கடிக்க முடியாத நிலையில் திட்டமிட்ட சதிச்செயலாலும், பாகுபாட்ட…

  22. எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், பவுன்ராஜுக்கு கொரோனா மின்னம்பலம் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து கொரோனா உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு அமைச்சர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மூன்று எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நேற்று (ஆகஸ்ட் 5) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில…

  23. நன்றி லலிதாம்மா நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். தள்ளாத வயதிலும் தணியாத ஆர்வத்தோடு சமூக சேவைகளைச் செய்கிறார் லலிதாம்மா. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்... உடலும் மனமும் சோர்ந்து தன்னைக் கவனித்துக்கொள்ளவே பலரும் சிரமப்படும் 85 வயதிலும் சமூகசேவை செய்வதற்காக, காலையிலேயே கிளம்பிவிடுகிறார் லலிதாம்மா.அவரைப் பார்த்ததுமே மக்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். ஒவ்வொருவரையும…

  24. இராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு! இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ம…

  25. பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பிரியங்கா கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். சிவப்பிரகாசத்தின் மனைவி ஏ.பரிமளா ஆனத்தூர் அஞ்சல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்துவரும் நிலையில், அவரது இளைய மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.