Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை! by : Krushnamoorthy Dushanthini ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செயற்திட்டம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் திட்டம் ஏதும் இல்லை. 6 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குற…

    • 0 replies
    • 781 views
  2. தமிழகத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718ஆக அதிகரிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகள் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஊரடங்கும் அமுலில் உள்ளது. இருந்தபோதிலும் ஊரடங்கில் பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரசிஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைய…

  3. குற்றச்சாட்டு கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள்,மீனவர்கள் என வாழ்வாதாரமின்றி தவித்து வரும் சுமார் 1000 பேருக்கு பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து கொரோனா நிவாரண பொருட்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்தி பேசும் மாநிலங்களின் நலனில் மட்டும் கவனம் செலுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் தமிழகத்துக்கு மிக குறைந்த கொரோனா நிவாரண நி…

    • 0 replies
    • 489 views
  4. வாணியம்பாடியில் பழங்களைத் தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்து கடுமையாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையர்; வியாபாரிகளிடம் நேரில் மன்னிப்பு கோரினார் வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் நடந்து கொண்ட செயல் வருத்தமளிப்பதாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் விளக்கம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வாணியம்பாடியில் நேரக் கட்டுப்பாட்டுடன் சில தொழில்கள் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள…

  5. பணமிருக்கும் மனிதரிடம் மனமிருக்கவில்லை!- கரோனா நிவாரணப் பணியில் இருக்கும் எழுத்தாளர் வேதனை எங்கள் வேலை எழுதுவதோடு முடிவதல்ல, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தாளர்களில் ஒருவர் அ.முத்துகிருஷ்ணன். மதுரை யானைமலையை உடைப்பதற்கென்றே அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக 'பசுமை நடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பணியைத் தடுத்து நிறுத்தியவர். வாரந்தோறும் 'பசுமை நடை' எனும் பெயரில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியையும் செவ்வனே செய்து வருபவர். இந்த பொதுமுடக்கக் காலத்தில் அடித்தட்டு மக்கள் படும் …

  6. கொரோனா வைரஸினால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு – ஒரே நாளில் 798 பேருக்கு தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8,002 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் 4,273 பேர் அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 798 பேருக்கு…

    • 1 reply
    • 409 views
  7. மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு – 2000 கோடி ரூபாய் வழங்குமாறு பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய சிறப்பு நிதியாக உடனடியாக 2000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3ஆம் கட்டமாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதன்போது மத்திய அரசிடம் ஏற்கனவே கோரியிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள…

  8. சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பதிவு: மே 12, 2020 04:30 AM சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களைக்…

  9. வெளிமாநில தொழிலாளர்களை முகாம்களில் தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் by : Dhackshala வெளிமாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதுவரையில் அவர்களை முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், பட…

    • 0 replies
    • 413 views
  10. சென்னையில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில், பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட, 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆண் குழந்தைகள் 10 பேர் மற்றும், பெண் குழந்தைகள் 5 பேர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 529 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த 279 நபர்கள் அடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6535 ஆக உயர்ந்தது. http://athavannews.com/சென்னையில்-இன்று-ஒரேநாளி/

  11. மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் – ரஜினிகாந்த் மதுபான கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், மேலும் கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் மே 7 ஆம் திகதி திறக்கப்பட்டது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு நாட்கள் மதுபானக் திறக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான விற்பனையின்போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என அவசர வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சம…

  12. ஊழல் வழக்கில் இருந்து காத்துக்கொள்ள மிரண்டு ஓடிய எம்.ஜி.ஆர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் பொற்காலம், ஏழைகளுக்காக ஆட்சி நடத்தியவர் என புலங்காகிதம் அடைபவர்கள் பலர். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தும், அவரே முன்னின்று நடத்திய ஊழல்கள் பல. அவைகளை திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள். ஆதாரபூர்வமாக பல ஊழல்கள் வெளிவந்தாலும் அவை அப்படிறே மறக்கடிக்கப்பட்டன. புத்த பிரானின் வாரிசாக அவரை கட்டமைக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு எம்.ஜி.ஆர் முகமுடியை கிழிக்கிறது. இன்றைய இளைய சமூகம் அறிந்துக்கொள்ள...... 1982 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆ…

  13. மாநில அரசுக்கு மனசாட்சி இருக்கா? கமல் கோபம்! மின்னம்பலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் பசியையும், பட்டினியையும் பொறுத்துக்கொண்டு பல லட்சம் மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தங்கள் வீடுகளிலேயே இருந்து வந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவித்து வருகின்றனர். எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு மக்கள் பொறுமை காத்து வந்தனர். இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் நேற்று (மே 7) மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு அதிருப்தியும், கோபமும் வரவழைத்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவத…

  14. சென்னையில் கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழப்பு சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணித்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் நேற்று மட்டும் அங்கு 316 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 56 வயது முதியவர், 80 வயது மூதாட்டி ஆகியோர் இன்று உயிரிழந்தனர். இதேபோல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாம்பரத்தைச் சேர்ந்த 76 வயது முதியவரும் இன்று உயிரிழந்த நிலையில் சென்னையில் இன்று தற்போதுவ…

  15. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி! by : Benitlas அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. N-95 மருத்துவ முகக் கவசங்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது. கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வர்த்தகக் கடன் இலங்கையில் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் உயர்தர மருத்துவப் பொருட்களின் கொள்…

    • 0 replies
    • 430 views
  16. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிப்பு.. யார் யாருக்கு பொருந்தும்! தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது வரை 58 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 வயதாக அதிகரித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று …

    • 1 reply
    • 731 views
  17. சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறப்பு! தமிழகத்தில், சென்னை மற்றும் குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து ஏனைய இடங்களில், இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் 24ஆம் திகதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதாகக் கூறி டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கையாக கட்டுப்படுத…

  18. கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலையின்மை: இந்தியாவிலேயே புதுவை, தமிழகம் முதலிடம் அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் Getty Images வடமாநிலத் தொழிலார்கள் அதிக அளவில் வெளியேறியுள்ளதால் தொழில்கள் முடங்கியுள்ளது தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்க காரணமாகியுள்ளது. (கோப்புப்படம்) கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்துள்ளது. சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எக்கானமி (சி.எம்.ஐ.இ) என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில்…

  19. தணிகாசலம் கைது - கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தவரை கைது செய்தது போலீஸ் கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் க. தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார். இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். …

    • 2 replies
    • 710 views
  20. ரஜினியின் உதவி: தயாரிப்பாளர்கள் மத்தியில் மோதல்! மின்னம்பலம் ரஜினி எங்கு வந்தாலும், பேசினாலும் அது விவாதப் பொருளாக மாறி முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அது போன்று தான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் வழங்கப்படுவதாக இருந்த அரிசி - மளிகை சாமான்கள் விவகாரமாகி வீதிக்கு வந்துவிட்டது. இதனைத் தொலைக்காட்சிகள் தங்கள் செய்தி பசிக்கு இரையாக்கி ஒரே நேரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் குடும்ப தேவைக்கு அரிசி பருப்பு கூட வாங்க முடியாத வறுமையில் இருப்பதான தோற்றத்தை உலகம் முழுமையும் கொண்டு சேர்த்துள்ளது. கொரோனா காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கிவிட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வசதி படைத்த திரைத் துறையினரிடம் உதவ…

  21. வரியை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் மதுபான விலை உயர்கிறது! இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால் மதுபானத்தின் விலை உயர்கிறது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக சாதாரண வகை 180மிலி மதுபான போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை 180மிலி போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/வரிய…

  22. மே 17 வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு…! சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே தமிழத்தில் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது ம…

  23. கால்நடைகளுக்குத் தக்காளி: கடும் விலை சரிவால் பயிரிட்ட தொகை கூடக் கிடைக்காத விரக்தியில் விவசாயிகள் ஓசூர் பகுதியில் தக்காளி உற்பத்தி அதிகரித்த நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அவற்றை விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதால் மொத்த விலையில் ரூ.1க்கும் சில்லறை விலையில் ரூ.5க்கும் தக்காளி விலை சரிவடைந்துள்ளது. இதனால் பயிரிட்ட செலவு கூடக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கால்நடைகளுக்குத் தக்காளியை உணவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக தக்காளி, பீன்…

  24. `பிள்ளை மாதிரி வளர்த்த வாழையை வெட்டி அழிச்சிட்டீங்களே'- வனத்துறை செயலால் கதறும் பழங்குடிகள் ஆர்.குமரேசன் வெட்டிய வாழை காப்புக் காடுகளில் விவசாயம் செய்வதாகச் சொல்லி, வாழை விவசாயத்தை, வளர்த்தவர்களையே வெட்டச் சொல்லி அழித்திருக்கிறது வனத்துறை. ``அத்துவான காட்டுல வாழுற எங்களை இப்படி வதைக்கிறீங்களே... பிள்ளைக மாதிரி வளத்த வாழையை வெட்டுறீங்களே... எங்க வீட்டுல இன்னிக்கு அரைக்காபடி அரிசி இல்லை. கூலிக்கும் போகமுடியல. வாழையை வெட்டி எங்க குடும்பத்தையே அழிக்குற மாதிரி அழிச்சீட்டீங்களே... அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம்வரைக்கும் இங்கதானே வாழுறோம். இந்தப் பாரஸ்டுல தத்தெடுக்குறோம்... தத்தெடுக்குறோம்னு சொல்றீங்க. இதுதான் நீங்கத் தத்தெடுக…

  25. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை! மின்னம்பலம் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.