தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
தூத்துக்குடியை சீர்மிகு நகரமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சீர்மிகு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால் வசதி, பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்கும். நகரின் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு குறித்த கணக்கெடுப்பு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீல…
-
- 0 replies
- 446 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது மத்திய அரசு கைவிரிப்பு இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்த கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளதாக அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா…
-
- 3 replies
- 846 views
-
-
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இரத்து- தமிழக அரசு அறிவிப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் இரத்துச் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயற்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்பப் பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு …
-
- 0 replies
- 348 views
-
-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து தெரிவித்தது தொடர்பாக 25 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறும் போது:- ‘தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதுக்கு சமூக விரோ…
-
- 1 reply
- 467 views
-
-
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை- வெளியானது அறிக்கை by : Litharsan கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பயணிகளின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களூடாக தமிழ்நாட்டுக்கு வந்த பயணிகளிடமே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் வருகைதரும் பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறித்…
-
- 0 replies
- 763 views
-
-
சுர்ஜித் உயிரிழப்பின் எதிரொலி: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிடுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆழ்துளை மரணங்கள் தொடர்பாக ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தையான சுர்ஜித் பராமரிப்பின்றி திறந்த வெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.…
-
- 0 replies
- 348 views
-
-
பிரசாந்த் கிஷோர் - மு.க.ஸ்டாலின்: ஐ.டி நிறுவனத்தை நம்பி களம் இறங்கும் திமுக, என்ன காரணம்? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமு.க. ஸ்டாலின் தமிழகத்தில் வரவிருக்கிற 2021 சட்டமன்ற தேர்தலில் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பேக் நிறுவனம் திமுகவிற்கு தேர்தல் பணியாற்றவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலில் வெற்றியை பெற, பிரசாந்த கிஷோரின் ஆலோசனை பெற்று வெற்றிபெற்றுள்ள நி…
-
- 0 replies
- 599 views
-
-
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாற்றுத் திறனாளியான பதினொரு வயது சிறுமி ஒருவர் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 543 views
-
-
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புலியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக சீனாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்திலிருந்து கல்வி, வர்த்தகம், மற்றும் வேலைக்காக சென்றவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அரசு சீனாவில் உள்ள இந்தியர்களை மருத்துவ பரிசோதனை செய்து பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31 முதல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புலியூர், வெள்ளையபுரம், பழங்குளம், வில்லாரேந்தல் ஆகிய ஊர்களை …
-
- 0 replies
- 704 views
-
-
ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் மத்தியில் மதிக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) இந்தப் பேரணி இடம்பெற்றது. இந்த அமைதிப் பேரணி சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் …
-
- 0 replies
- 384 views
-
-
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005ம் ஆண்டு வரையிலான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ததில் குறைபாடு இருப்பதாக, மொத்தம் ரூ.66.22 லட்சம் அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து ரஜினி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரத்த தீர்ப்பாயம், எந்த ஆதாரமும், விசாரணையும் இல்லாமல் அபராதம் விதித்தகாக கூறி, ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரி ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கடந்த ஜன.,28 ல் வழக்கை திரும்பப் பெறுவதாக வருமான …
-
- 5 replies
- 1.5k views
-
-
‘மேன் வர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் காயம்?- சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனல் வழங்கும் மேன் வர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்ததாக வந்த தகவலை தொடர்ந்து அவர் சென்னை திரும்பியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்ப்பெற்ற டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்த அந்நிகழ்ச்ச்சியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பியர் கிரில்ஸுடன் ஏற்கெனவே பங்குபற்றியுள்ளனர். இந்நிலையில்…
-
- 4 replies
- 1.2k views
-
-
ரியாத்திலிருந்து சென்னை வந்த சவுதி அரேபியன் ஏா்லைன்ஸ் விமான சீட்டின் பின்பக்க பையில் ரூ.22.5 லட்சம் மதிப்புடைய 585 கிராம் தங்க நெக்லெஸ்கள், கம்மல்களை சுங்கச்சாவடி சோதனைக்கு பயந்து பயணி விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து போயிங் விமானம் ஒன்று நேற்று வந்தது. விமானம் நின்றவுடன் பயணிகள் இறங்கிச் சென்றவுடன் ஊழியர்கள் விமானத்தை ஆய்வு செய்தபோது ஒரு சீட்டின் முன் பக்கம் உள்ள கவரில் பெரிய பை ஒன்று இருந்தது. அதில் சிவப்புக்கலர் டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்று இருந்ததால் ஊழியர்கள் வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோய் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள், வெடிகுண்டு …
-
- 0 replies
- 478 views
-
-
நானும் ஒரு தீவிரவாதிதான்- சீமான் by : Yuganthini மக்களிடத்தில் முக்கியமான கருத்தை அல்லது கொள்கையை கொண்டு சேர்ப்பதால் நானுமொரு தீவிரவாதிதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் சீமான் மேலும் கூறியுள்ளதாவது, “ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுகிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் திட்டத்துக்கு மக்கள் கருத்து தேவையில்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் அவர்தான…
-
- 0 replies
- 766 views
-
-
துக்ளக்கை உங்க ரசிகர்களுக்கு குடுங்க.. உங்க படம் ஓடனும்னு மண்சோத்தை தின்னுட்டிருக்கான்.. சீமான் நச் "நான் என்ன சொல்றேன், முதல்ல அந்த துக்ளக்கை வாங்கி உங்க ரசிகர்களுக்கு எல்லாம் குடுங்க.. ஏன்னா அவன்தான் உங்க படம் ஓடனும்னு தரையில சோறு போட்டு தின்னுட்டு இருக்கான்.. நாங்க தட்டுல சாப்பிடும்போதே கண்ட கண்ட நோய் வந்துடுது!" என்று நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் சர்ச்சை பேச்சுக்கு சீமான் பதிலடி தந்துள்ளார். இன்னும் ரஜினி விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை.. ரஜினி என்றாலே கொதித்தெழுந்துவிடும் சீமான், இப்போதும் துக்ளக் விவகாரத்தை மதுரை பொதுக்கூட்டத்தில் கிண்டி, ரஜினியை விமர்சித்துள்ளார். சீமான் பேசியதில் இருந்து ஒருசில:"முரசொலி வெச்சிருக்கிறவர் திமுக... துக்ளக் வெச்சிருக்கிறவர் அ…
-
- 0 replies
- 550 views
-
-
அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து கண்டித்தார் முதலமைச்சர் அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார். இதன்போது பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக்கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக தமிழக அமைச்சர்கள் பலர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினர். அமைச்சர்கள் பலர் ரஜினிக்கு எதிராக விமர்சனம் செய்த நிலையில், அமைச்சர் ஒருவர் மட்டும் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாக ஆளும் கட்சியினரிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்கள் வெளியாகின. …
-
- 0 replies
- 405 views
-
-
-
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு சென்ற 11 மீனவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை படகு உடன் சிறைப்பிடித்தனர். காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 11 பேரும் ஆஜர்ப்படுத்தபட உள்ளனர். https://www.polimernews.com/dnews/98422/தமிழக-மீனவர்கள்-11-பேர்-கைது..!இலங்கை-கடற்படை-அட்டூழியம…
-
- 0 replies
- 445 views
-
-
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு மீண்டும் அறிவிப்பு ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது தேவையில்லை மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது இல்லை என்ற தங்கள் கொள்கை முடிவு வெளிப்படையானது எனவும் இதில் மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் குறித்த…
-
- 0 replies
- 465 views
-
-
பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்! மின்னம்பலம் இந்தியா முழுவதும் 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடாதிபதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷ…
-
- 13 replies
- 1.6k views
-
-
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020இல் நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைந்துள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், பலமுறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதாலும்…
-
- 0 replies
- 563 views
-
-
நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், அவரைப் பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்ரர்போலிடம் உதவி பெறும் வகையில் குஜராத் மாநில பொலிஸார் குற்றவியல் விசாரணைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதேசமயம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கோர்னர்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி, பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால் அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் குறித்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு எடுத்…
-
- 0 replies
- 473 views
-
-
சிறப்புக் கட்டுரை: ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்! மின்னம்பலம் ராஜன் குறை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில், பெரியார் பங்கேற்ற 1971ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழக ஊர்வலம் குறித்து சில பிழையான, மிகையான சித்திரிப்புகளைச் செய்தது பெரியாரிய இயக்கங்களின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. துக்ளக் பத்திரிகையைப் பாராட்டி பேசுமிடத்து அவர் பெரியாரின் இறை மறுப்பை நினைவுகூர்ந்து பேசியது, அந்த ஊர்வலம் குறித்து சமூக அமைதியைக் குலைக்கும்படி சித்திரித்த துக்ளக் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதை முன்னிட்டு என்றாலும், துக்ளக் பத்திரிகையின் வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சி காரணம் என்றெல்லாம் கூறியது புனைவு. அவருடைய உட்கிடக்கை பாரதீய ஜனதா ஆதரவு மேடையில் ப…
-
- 1 reply
- 2k views
-
-
சண்டைக்கோழியினால் கொல்லப்பட்ட இந்தியர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கோழிச்சண்டை தடைசெய்யப்பட்ட ஒரு விளையாட்டு. அப்படியிருந்தும், பலர் இந்த விளையாட்டில் கலந்துகொள்கிறார்கள். சண்டைக்கென்று வளர்க்கப்படும் சேவல்களின் கால்களில் கூரான சிறிய கத்தி கட்டப்பட்டிருக்கும். சண்டையின்பொழுது எதிர்ச் சேவல் இக்கத்தியினால் குத்தப்பட்டு கொல்லப்படும் வரைக்கும் சண்டை தொடரும். மிருகவதையினைக் காரணம்காட்டி இக்கோழிச் சண்டைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. சென்ற வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் இவ்வகையான கோழிச்சண்டை நிகழும் இடத்தில் ஒருவர் கோழியின் கத்தி வயிற்றைக் கிழித்ததினால் மரண்மடைந்திருக்கிறார். இரு சேவல்களும் சண்டையிடும் சிறிய வட்டத்தினுள் சேவல்களை நிற்கவைக்க போட்டி நடத்துனர் …
-
- 0 replies
- 903 views
-